141) யூசுப் நபிக்கு எதைவிடச் சிறைச்சாலை விருப்பமானதாக இருந்தது?
"என் இறைவா! இப்பெண்கள் (விபச்சாரத்திற்கு) அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்'' என்றார். திருக்குர்ஆன் 12:33
142) அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைக்க நமக்கு என்ன வேண்டும்?
"இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம். திருக்குர்ஆன் 12:108
143) யாருடைய கழுத்தில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது?
நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 13:5
144) மின்னலும் மேகமும் எதற்காக உருவாக்கப்ட்டது?
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
திருக்குர்ஆன் 13:12
145) நுரையை அல்லாஹ் எதற்கு உதாரணமாக காட்டுகிறான்?
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 13:17
146) குர்ஆனை உண்மை என்று அறிந்தவர் தீமையை எவ்வாறு தடுப்பார்?
நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. திருக்குர்ஆன் 13:22
147) மூஸா நபி வழங்கப்பட்ட சான்றுகள் யாருக்கு பலனளிக்கும்?
"உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்வீராக! அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவூட்டுவீராக!'' என்று மூஸாவை நமது சான்றுகளுடன் அனுப்பினோம்.
♦அதில் ஒவ்வொரு பொறுமையாளருக்கும்,
♦நன்றி செலுத்துவோருக்கும் சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 14:5
♦நன்றி செலுத்துவோருக்கும் சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 14:5
148) நரகவாசிகளுக்கு நரகத்தில் எந்த திசையிலிருந்து மரணம் வரும்?
அதை (சீழ் நீரை) மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது. திருக்குர்ஆன் 14:17
149) முஃமின்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எதன் மூலம் நிலைப்படுத்துகிறான்?
நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.
திருக்குர்ஆன் 14:27
150) ஜின்கள் எப்படிப்பட்ட நெருப்பால் படைக்கப்பட்டார்கள்?
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:27
No comments:
Post a Comment