மறுமை நாளின் மன்னிப்பு :
இவ்வுலகில் நாம் செய்த அனைத்து செயல்களும் ஒன்றுவிடாமல் இறைவனுடைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறிது முதல் பெரிது வரையிலான அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் செய்த செயல்களுக்காக இறைவன் நம்மை பிடித்தால் நம்முடைய நிலைமை மோசம்தான்.
ஆகவே மறுமை நாளில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று துஆ கேட்பது அவசிமாகிறது.
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
தமிழில் :ரப்பன ஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன
யவ்ம யகூமுல் ஹிஸாப்
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! திருக்குர்ஆன் 14:41
No comments:
Post a Comment