Tuesday, October 2, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 16



151) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன?

அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர். 

திருக்குர்ஆன்  15:44

152) எதிரிகள் பேசுவதன் மூலம் நமக்கு கலக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!  

திருக்குர்ஆன்  15:98

153) உயர்ந்த குணம் யாரிடத்தில்உள்ளது?

மறுமையை நம்பாதோருக்கு தீய குணம் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கோ உயர்ந்த குணம் உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  

திருக்குர்ஆன்  16:60

154) பொறுமையாளர்களுக்கு எது சிறந்தது?

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

திருக்குர்ஆன்  16:126

155) மனிதர்களுக்கு நோய் நிவாரணம் எதில் உள்ளது?

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. 

திருக்குர்ஆன்  16:69

156) தெரிந்ததற்குப் பின் எதையும் தெரியாதவராக யார் ஆகுவார்?

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்  16:70

157) யுகமுடிவு நேரத்தின் நிகழ்ச்சி எந்த நேரத்திற்குள் நடந்துவிடும்?

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்  16:77

158) நாம் நன்றி செலுத்துவற்காக நமக்கு அல்லாஹ் எவற்றையெல்லாம் தந்தான்?

நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். 

திருக்குர்ஆன்  16:78

159) அல்லாஹ் அவனது அருட்கொடுகளை நமக்கு ஏன் முழுமைப்படுத்தினான்?

நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.  

திருக்குர்ஆன்  16:81

160) வேதனைக்கு மேல் வேதனை யாருக்கு அதிகமாக்கப்படும்?

(நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

திருக்குர்ஆன்  16:88

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...