1) பணிவுடையோர் எப்படி நம்புவார்கள்?
(பணிவுடையோர் யாரெனில்)
♦ தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும்,
♦ அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும்
அவர்கள் நம்புவார்கள்.
திருக்குர்ஆன் 2:46
2) உலக மக்கள் அனைவரைவிடவும் யாரை அல்லாஹ் மேன்மைபடுத்தினான்?
இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!
திருக்குர்ஆன் 2:47.
இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலகத்தாரை விட உங்களைச் சிறப்பித்திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!
திருக்குர்ஆன் 2:122
3) பனூ இஸ்ரவேலர்களை ஏன் இடிமுழக்கம் தாக்கியது?
"மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்' என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது.
திருக்குர்ஆன் 2:55
இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். "அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.
திருக்குர்ஆன் 4:153
4) பனூ இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானதற்கு என்ன காரணம்?
அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள்.
♦ அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும்,
♦ நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம்.
♦ மேலும் பாவம் செய்து,
♦ வரம்பு மீறிக்கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 2:61
5) பனூ இஸ்ரவேலர்களில் எழுதத்தெரியாதவர்கள் எவற்றை தெரிந்து கொள்ளவில்லை?
அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 2:78
6) இவ்வுலக வாழ்க்கையில் பனூ இஸ்ரவேலர்கள் எவ்வாறு இழிவை பெற்று கொணடார்கள்?
வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை.
திருக்குர்ஆன் 2:85
7) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? எதனால்?
அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள்.
திருக்குர்ஆன் 2:90
8) பள்ளிவாசல்களில் எப்படி நுழைய வேண்டும்?
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?
♦ பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
திருக்குர்ஆன் 2:114
9) அல்லாஹ்வின் முகம் எங்கே உள்ளது?
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:115
10) மனிதர்களுக்கு தலைவராக அல்லாஹ் யாரை ஆக்கினான்?
இப்ராஹீம் நபியை
திருக்குர்ஆன் 2:124
ReplyDelete20 பனூ இஸ்ரவேல் சமுகத்திற்கு யாரினால் முதல் குழப்பம் ஏற்பட்டது?