Showing posts with label திருக்குர்ஆன் கேள்வி பதில். Show all posts
Showing posts with label திருக்குர்ஆன் கேள்வி பதில். Show all posts

Sunday, October 7, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 17




161) நாம் நல்லுணர்வை எதன் மூலம் பெற முடியும்?

நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
திருக்குர்ஆன்  16:90

162) உறுதிப்பட்ட பாதம் எப்போது சறுகிப் போகும்?

உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப் போய் விடும். 

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால் தீங்கைச் சுவைப்பீர்கள். உங்களுக்குக் கடும் வேதனை கிடைக்கும். திருக்குர்ஆன்  16:94

163) யாரிடத்தில் இருப்பது தீர்ந்துவிடும்?

உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தோருக்கு அவர்கள் செய்து வந்த நல்லவற்றின் காரணமாக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம்.  திருக்குர்ஆன்  16:96

164) யாருடைய முயற்சிக்கு நன்றி செலுத்தப்டும்?

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். திருக்குர்ஆன்  17:19

165) மிகப் பெரிய தகுதிகளையும் சிறப்புகளையும் கொண்டது எது?

"அவர்களில் சிலரை விட சிலரை எவ்வாறு சிறப்பித்துள்ளோம்'' என்பதைக் கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப் பெரிய தகுதிகளும், மிகப் பெரிய சிறப்புக்களும் கொண்டது.
திருக்குர்ஆன்  17:21

166) ஷைத்தானின் உடன்பிறப்புகள் யார்?

விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.   திருக்குர்ஆன்  17:27

167) யாசகம் கேட்பவருக்கு எதையேனும் கொடுக்க முடியாத நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

(உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக!
திருக்குர்ஆன்  17:28

168) அழகிய முடிவு எது?

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. திருக்குர்ஆன்  17:35

169) இறைவனின் வெறுப்பிற்குரியது எது?

இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.
திருக்குர்ஆன்  17:38

170) நமக்கும் காபிர்களுக்கும் இடையே மறைக்கப்பட்ட திரையை ஏற்படுத்த என்ன வழி?

நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை ஏற்படுத்துகிறோம். திருக்குர்ஆன்  17:45

Tuesday, October 2, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 16



151) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன?

அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர். 

திருக்குர்ஆன்  15:44

152) எதிரிகள் பேசுவதன் மூலம் நமக்கு கலக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!  

திருக்குர்ஆன்  15:98

153) உயர்ந்த குணம் யாரிடத்தில்உள்ளது?

மறுமையை நம்பாதோருக்கு தீய குணம் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கோ உயர்ந்த குணம் உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  

திருக்குர்ஆன்  16:60

154) பொறுமையாளர்களுக்கு எது சிறந்தது?

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

திருக்குர்ஆன்  16:126

155) மனிதர்களுக்கு நோய் நிவாரணம் எதில் உள்ளது?

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. 

திருக்குர்ஆன்  16:69

156) தெரிந்ததற்குப் பின் எதையும் தெரியாதவராக யார் ஆகுவார்?

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்  16:70

157) யுகமுடிவு நேரத்தின் நிகழ்ச்சி எந்த நேரத்திற்குள் நடந்துவிடும்?

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்  16:77

158) நாம் நன்றி செலுத்துவற்காக நமக்கு அல்லாஹ் எவற்றையெல்லாம் தந்தான்?

நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். 

திருக்குர்ஆன்  16:78

159) அல்லாஹ் அவனது அருட்கொடுகளை நமக்கு ஏன் முழுமைப்படுத்தினான்?

நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.  

திருக்குர்ஆன்  16:81

160) வேதனைக்கு மேல் வேதனை யாருக்கு அதிகமாக்கப்படும்?

(நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

திருக்குர்ஆன்  16:88

Monday, October 1, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 15





141) யூசுப் நபிக்கு எதைவிடச் சிறைச்சாலை விருப்பமானதாக இருந்தது?

"என் இறைவா! இப்பெண்கள் (விபச்சாரத்திற்கு) அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்'' என்றார்.  திருக்குர்ஆன்  12:33

142) அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைக்க நமக்கு என்ன வேண்டும்?

"இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.  திருக்குர்ஆன்  12:108

143) யாருடைய கழுத்தில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது?

நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன்  13:5

144) மின்னலும் மேகமும் எதற்காக உருவாக்கப்ட்டது?

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.

திருக்குர்ஆன்  13:12

145) நுரையை அல்லாஹ் எதற்கு உதாரணமாக காட்டுகிறான்?

வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.

திருக்குர்ஆன்  13:17

146) குர்ஆனை உண்மை என்று அறிந்தவர் தீமையை எவ்வாறு தடுப்பார்?

நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.  திருக்குர்ஆன்  13:22

147) மூஸா நபி  வழங்கப்பட்ட சான்றுகள் யாருக்கு பலனளிக்கும்?

"உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்வீராக! அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவூட்டுவீராக!'' என்று மூஸாவை நமது சான்றுகளுடன் அனுப்பினோம்.

♦அதில் ஒவ்வொரு பொறுமையாளருக்கும்,
♦நன்றி செலுத்துவோருக்கும் சான்றுகள் உள்ளன.  திருக்குர்ஆன்  14:5

148) நரகவாசிகளுக்கு நரகத்தில் எந்த திசையிலிருந்து மரணம் வரும்?

அதை (சீழ் நீரை) மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது. திருக்குர்ஆன்  14:17

149) முஃமின்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எதன் மூலம் நிலைப்படுத்துகிறான்?

நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

திருக்குர்ஆன்  14:27

150) ஜின்கள் எப்படிப்பட்ட நெருப்பால் படைக்கப்பட்டார்கள்?

கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.

திருக்குர்ஆன்  15:27

Saturday, September 29, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 14




131) சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம் எதை வாங்குகிறான்?

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின்

♦உயிர்களையும்,
♦செல்வங்களையும்

சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். 

திருக்குர்ஆன்  9:111

132) யாருடைய முகங்களில் இருளும் இழிவும் ஏற்படாது?

நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன்  10:26

133) செவிமடுக்கும் சமுதாயத்திற்கு எதில் சான்று உள்ளது?

இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன்  10:67

134) இஸ்ராயீலின் மக்கள் எது வரையிலும் முரண்படவில்லை?

இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம்.

அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.

திருக்குர்ஆன்  10:93

135) பெருமிதமும் கர்வமும் காெள்ளாதவர்கள் யார்?

அவன் பெருமிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.  

திருக்குர்ஆன்  11:11

136) நபியின் உள்ளம் எதனால் சங்கடப்படும்?

"இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

திருக்குர்ஆன்  11:12

137) வலிமைக்கு மேல் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்?

"என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்!'' (எனவும் கூறினார்.)

திருக்குர்ஆன்  11:52

138) இறைவனிடம் அடையாளமிப்பட்டது எது?

(லூத் நபி வாழ்ந்த சமுதாயத்தினர் அழிக்கப்பட்ட ஊர்) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.  

திருக்குர்ஆன்  11:83

139) மறுமையில் ஃபிர்அவ்னின் சபையினரை நரகத்திற்கு யார் அழைத்து செல்வார்?

கியாமத் நாளில்அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான். அவர்களை நரகிற்கு அழைத்துச் செல்வான். சென்றடையும் அந்த இடம் மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன்  11:98

140) தீமைகளை அழிக்கக்கூடியது எது?

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.  

திருக்குர்ஆன்  11:114

Friday, September 28, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 13



121) நாம் என்ன செய்தால் அல்லாஹ் நமக்கு தெளிவை வழங்குவான்?

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான்.

 உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். 

அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.  

திருக்குர்ஆன்  8:29

122) நம்முடைய பலம் எப்போது அழிந்து போகும்?

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். 

திருக்குர்ஆன்  8:46

123) திடீரென்று உடன்படிக்கையை முறித்தால் எத்தனை மாதங்கள் அவகாசம் கொடுக்கனும்?

(இணை கற்பிப்போரே!) நான்கு மாதங்களுக்கு இப்பூமியில் (மக்காவில்) சுற்றித் திரியுங்கள்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது என்பதையும், (தன்னை) மறுப்போரை அல்லாஹ் இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

 திருக்குர்ஆன்  9:2

124) இணைகற்பி்ப்போர் நம்மிடம் அடைக்கலம் கேட்டால் நாம் ஏன் அடைக்கலம் கொடுக்கனும்?

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன்  9:6

125) அசுத்தமானவர்கள் யார்?

இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. 

திருக்குர்ஆன்  9:28

126) திருப்திபடுத்த தகுதியானவர்கள் யார்?

உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்.

 அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வும், அவனது தூதருமே திருப்திப்படுத்தத் தகுதி படைத்தவர்கள்.  

திருக்குர்ஆன்  9:62

127) கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை கருதினர்?

கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். 

கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்  9:99

128) இரண்டு தடவை தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் யார்?

உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

திருக்குர்ஆன்  9:101

129) யாரை அல்லாஹ் மன்னிக்கக்கூடும்?

மற்றும் சிலர் தமது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். நல்ல செயலை, மற்றொரு தீய செயலுடன் கலந்து விட்டனர். அவர்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும். 

திருக்குர்ஆன்  9:102

130) நமது உள்ளத்தை எது பலப்படுத்தும்?

தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது.

திருக்குர்ஆன்  11:120

Thursday, September 27, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 12




111) சனிக்கிழமை மீன் பிடிக்க சென்றவர்களுக்கு அறிவுரை கூறியவர்கள் ஏன் அறிவுரை கூறினார்கள்?

"அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர்.

♦ அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும்,

♦ அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

திருக்குர்ஆன்  7:164

112) சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயத்தை திருத்துவதற்காக அல்லாஹ் எதன் மூலம் சோதித்தான்?

அவர்களைப் பூமியில் பல கூட்டத்தினராகப் பிரித்தோம். அவர்களில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு அல்லாதோரும் அவர்களில் உள்ளனர்.

அவர்கள் திருந்துவதற்காக அவர்களை நல்லவை மூலமும், தீயவை மூலமும் சோதித்தோம். 

திருக்குர்ஆன்  7:168

113) தன்னை சீர்படுத்த என்ன வழி?

யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.  

திருக்குர்ஆன்  7:170

114) யாரை நாய்க்கு உதாரணமாக சொல்லிக்காட்டுகிறான்?

நாம் நாடியிருந்தால் அதன் (குர்ஆன் வசனங்கள) மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். 

திருக்குர்ஆன்  7:176

115) கால்நடைகளை விட வழி கெட்டவர்கள் யார்?

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.  

திருக்குர்ஆன்  7:179

116) அல்லாஹ் துணைவியை எதற்கு படைத்தான்?

"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான். 

திருக்குர்ஆன்  7:189

117) ஷைத்தானின் தாக்கத்தை யார் சுதாரிப்பார்கள்?

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.  

திருக்குர்ஆன்  7:201

118) அல்லாஹ் எதை சீர்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்?

உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்! 

திருக்குர்ஆன்  8:1

119) பத்ரு யுத்தத்தில் அல்லாஹ் ஏன் மழையை பொழியச் செய்தான்?

தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.

திருக்குர்ஆன்  8:11

120) மக்களிடம் நன்மை இருப்பதை அறிந்தால் அல்லாஹ் என்ன செய்வான்?

அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான்.   

திருக்குர்ஆன்  8:23

Wednesday, September 26, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 11




101) ஆதம் நபியிடமும் ஹவ்வா (அலை)யிடமும் ஷைத்தான் செய்த சத்தியம் என்ன?

"நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.

 திருக்குர்ஆன்  7:21

102) வானத்தின் வாசல்கள் யாருக்காக திறக்கப்படாது?

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.

திருக்குர்ஆன்  7:40

103) சொர்க்க நரகத்தில் அறிவிப்பாளர் உண்டா?

"எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள். அவர்கள் "ஆம்' என்பர். 

"அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார். 

திருக்குர்ஆன்  7:44

104) குருட்டுக்கூட்டமாக இருந்த சமுதாயம் எது?

ஆயினும் அவரைப் (நூஹ் நபியை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர். 

திருக்குர்ஆன்  7:64

105) அல்லாஹ்வின் வேதனை எந்த நேரங்களில் வரும்?

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகலில் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?  

திருக்குர்ஆன்  7:98

106) சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அல்லாஹ்விடத்தில் செய்த பிரார்த்தனை என்ன?

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.  

திருக்குர்ஆன்  7:126

107) இஸ்ராயீலின் மக்கள் பொறுமையை மேற் கொண்டதால் இறைவன் வழங்கிய பரிசு என்ன?

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. 

திருக்குர்ஆன்  7:137

108) மூஸா நபியின் சமுதாயம் காளை மாட்டை வணங்கியதற்கு பிறகு அல்லாஹ்விடத்தில் செய்த பிரார்தனை என்ன?

தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்'' என்றனர்.

திருக்குர்ஆன்  7:149

109) மூஸா நபி தூர் மலையிலிருந்து கொண்டு வந்த பலகையில் என்ன எழுதி இருந்தது?

மூஸாவுக்குக் கோபம் தணிந்த போது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில் இறைவனை அஞ்சுவோருக்கு அருளும், நேர்வழியும் இருந்தது. 

திருக்குர்ஆன்  7:154

110) குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்டவர்களை அல்லாஹ் ஏன் சோதித்தான்?

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. 

அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

திருக்குர்ஆன்  7:163

Tuesday, September 25, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 10




91) ஒவ்வொரு செய்திக்கும் எது உள்ளது?

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

திருக்குர்ஆன்  6:67

92) உறுதியான நம்பிக்கையாளராக இப்றாகிம் நபியை அல்லாஹ் எதன் மூலம் மாற்றினான்?

உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

திருக்குர்ஆன்  6:75

93) இறைவன் எதை கொண்டு அனைத்து பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்?

என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?'' 

 திருக்குர்ஆன்  6:80

94) அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவைகளை நான் எப்படி அஞ்ச முடியும் என்று எதை வைத்து இப்றாகிம் நபி கூறினார்கள்?

"அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?'' (என்றும் அவர் கூறினார்.)

திருக்குர்ஆன்  6:81

95) அச்சமில்லா நிலை யாருக்கு உள்ளது?

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். 

 திருக்குர்ஆன்  6:82

96) வேதக்காரர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை என்று அல்லாஹ் கூற காரணம் என்ன?

"எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை'' என்று அவர்கள் கூறியதால் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. " 

திருக்குர்ஆன்  6:91

97) எதை கவனித்தால் நன்மையாக ஆகும்?

"உங்கள் இறைவனிடமிருந்து சான்றுகள் உங்களிடம் வந்து விட்டன. அதைக் கவனிப்போருக்கு அது நன்மையாகும். அதைப் பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும். நான் உங்களுக்குக் காவலன் அல்லன்'' (என்று கூறுவீராக)  

திருக்குர்ஆன்  6:104

98) மனித ஜின் ஷைத்தான்கள் ஏமாற்றுவதற்காக என்ன செய்வார்கள்?

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். 

திருக்குர்ஆன்  6:112

99) அல்லாஹ்வின் வார்த்தைகள் எதனால் நிறைந்துள்ளது?

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. 

திருக்குர்ஆன்  6:115

100) முழுமையான சான்று யாருக்குரியது?

"முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான். 

திருக்குர்ஆன்  6:149

Monday, September 24, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 9



81) சத்தியங்களை முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன?

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.

(இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்!  

 திருக்குர்ஆன்  5:89

82) மிகப் பெரும் சாட்சியம் எது?

"மிகப் பெரும் சாட்சியம் எது?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். 

 திருக்குர்ஆன்  6:19

83) சுமப்பதில் மிகவும் கெட்டது எது?

தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது. 

திருக்குர்ஆன்  6:31

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன்  16:25

84) இறைவனை அஞ்சுவோருக்கு எது சிறந்தது?

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?  

திருக்குர்ஆன்  6:32

85) யாரால் பதிலளிக்க முடியும்?

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

  திருக்குர்ஆன்  6:36

86) மனிதர்களைப் போன்று பறவைகளிலும் சமுதாயங்கள் உள்ளனவா?

பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே.

   திருக்குர்ஆன்  6:38

87) முன் சென்ற சமுதாயங்கள் இறைனுக்கு பணிவதற்காக இறைவன் என்ன செய்தான்?

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்.

அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம். 

 திருக்குர்ஆன்  6:42

88) யாருக்கு அனைத்து பொருட்களின் வாசல்களும் திறக்கப்பட்டன?

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.

திருக்குர்ஆன்  6:44

89) யாரை விரட்டக்கூடாது என்று இறைவன் கூறுகிறான்?

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! 

அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன்  6:52

90) அல்லாஹ் பகலில் நம்மை ஏன் எழுப்புகிறான்?

அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான்.

நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான்.
உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.  

திருக்குர்ஆன்  6:60

Sunday, September 23, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 8




71) அல்லாஹ்வை குறை கூற மனிதர்களுக்கு எந்த வாய்பும் கிடைக்கக்கூடாது என்பதற்காக அல்லாஹ் என்ன செய்தான்?

தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை (அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.  

திருக்குர்ஆன்  4:165

72) தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலத்தில் வேதக்காரர்களுக்கு அல்லாஹ் யாரை தூதராக அனுப்பினான்?

தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். 

 திருக்குர்ஆன்  5:19

73) அல்லாஹ் யாரிடமிருந்து வணக்கத்தை ஏற்றுக் கொள்வான்?

"(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.  

திருக்குர்ஆன்  5:27

74) நமக்கு அல்லாஹ் தந்திருப்பவற்றிலிருந்து நம்மை சோதிப்பதற்காக அல்லாஹ் நம்மை என்ன செய்தான்?

அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) 

 திருக்குர்ஆன்  5:48

75) இஸ்லாத்தை விட்டு மாறியோருக்காக அல்லாஹ் வேறொரு சமுதாயத்தை கொண்டு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.

அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். 

திருக்குர்ஆன்  5:54

76) அல்லாஹ் முஹம்மது நபியை யாரிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்களிக்கிறான்?

அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.

 திருக்குர்ஆன்  5:67

77) இவ்வுலகில் சோதனையே ஏற்படாது என்று எண்ணியவர்களை அல்லாஹ் என்ன செய்தான்?

எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர். இதனால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். 

திருக்குர்ஆன்  5:71

78) மர்யமை அல்லாஹ் எவ்வாறு புகழ்கிறான்?

அவரது (ஈஸாவின்) தாய் உண்மையாளர். 

திருக்குர்ஆன்  5:75

79) நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களில் கடுமையான பகைவர்களாகவும் நெருக்கமான நேசர்களாகவும் யார் இருக்கிறார்கள்?

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்!

"நாங்கள் கிறித்தவர்கள்'' எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம். 

திருக்குர்ஆன்  5:82

80) கிறிஸ்தவர்கள் குர்ஆனை செவுயுற்று உண்மையை அறிந்து கொண்டால் என்ன செய்வார்கள்?

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.

  திருக்குர்ஆன்  5:83

Friday, September 21, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 7




61) மிகச்சிறந்த நண்பர்கள் யார்?

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், 

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள்.

அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.  

திருக்குர்ஆன்  4:69

62) ஷைத்தானின் சூழ்ச்சி எப்படிப்ட்டது?

ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.  

திருக்குர்ஆன்  4:76

63) பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்?

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன்  4:83

64) அழகிய விஷயங்களை பரிந்துரை செய்பவருக்கு என்ன உள்ளது?

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது.

தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது.

அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். 

 திருக்குர்ஆன்  4:85

65) நமக்கு யாரேனும் வாழ்த்து சொன்னால் நாம் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.  

திருக்குர்ஆன்  4:86

66) நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரை தவறுதலாக கொலை செய்தால் என்ன தண்டனை?

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது.

நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.  

திருக்குர்ஆன்  4:92

67) அல்லாஹ்வை குறைவாக திக்ரு செய்பவர்கள் யார்?

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்.அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

 திருக்குர்ஆன்  4:142

68) தீய சொல்லை வெளிப்படையாக யார் கூறலாம்?

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். 

திருக்குர்ஆன்  4:148

69) பொறுமையாக இருப்பது யாருக்கு எளிது?

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

திருக்குர்ஆன்  2:45

70) அல்லாஹ் யூதர்களுக்கு தூய்மையானவற்றை ஏன் ஹராமாக்கினான்?

♦ யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும்,

♦ அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும்,

♦ வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும்,

♦ மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும்
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். 

திருக்குர்ஆன்  4:161

Thursday, September 20, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 6


51) அறிவாளிகள் அல்லாஹ்வை எவ்வாறு திக்ரு செய்வார்கள்?

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள்.

வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.

"எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அறிவாளிகள் கூறுவார்கள்)  

திருக்குர்ஆன்  3:191

52) அல்லாஹ்வின் விருந்து எது?

தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

திருக்குர்ஆன்  3:198

53) நம்பிக்கை கொண்டோர் சகிப்புத்தன்மையில் எப்படி இருக்க வேண்டும்?

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்குளை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன்  3:200

54) நாம் நம்முடைய மனைவியை வெறுத்தால் அதில் அல்லாஹ் எதை வைத்திருப்பான்?

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன்  4:19

55) திருமணம் செய்பவர் எப்படிப்பட்ட உடன்படிக்கையை எடுக்கிறார்?

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன்  4:21

56) அல்லாஹ் நமக்கு ஏன் சட்டங்களை எளிதாக்க விரும்புகிறான்?

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான். 

திருக்குர்ஆன்  4:28

57) நல்ல பெண்கள் யார்?

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர்.

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். 

திருக்குர்ஆன்  4:34

58) மனைவியுடன் சண்டை வரும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால்

♦ அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்!
♦ அவர்களை அடியுங்கள்! 

அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன்  4:34

59) ஷைத்தானின் நண்பர்கள் யார்?

♦ அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது
♦ மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைுத்தானின் நண்பர்கள்).

 யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.

திருக்குர்ஆன்  4:38

60) மிகச்சிறந்த நிழலில் யார் நுழைவார்?

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். 

மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.

திருக்குர்ஆன்  4:57


Wednesday, September 19, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 5




41) அருள் எங்கே உள்ளது?

"நேர்வழி அல்லாஹ்வின் வழியே' என்று கூறுவீராக!

"அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது;

தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்' என்றும் கூறுவீராக! 

திருக்குர்ஆன்  3:73

42) நாம் எப்போது நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டோம்?

நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். 

திருக்குர்ஆன்  3:92

43) பாக்கியம் பொருந்தியதாக ஆக்கப்பட்ட பள்ளிவாசல் எது?

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

திருக்குர்ஆன்  3:96

44) எப்படிப்பட்ட சமுதாயம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 

 திருக்குர்ஆன்  3:104

45) வேதமுடையோரில் சிலர் எதை செய்ததால் நேரான சமுதாயமாக மாறினார்கள்?

அவர்கள் அனைவரும் சமமாக இல்லை. வேதமுடையோரில்நேரான சமுதாயமும் உள்ளது.

♦ அவர்கள் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்;

♦ஸஜ்தாச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன்  3:113

46) காபிர்களின் சூழ்ச்சி நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க நாம் என் செய்ய வேண்டும்?

♦ நீங்கள் சகித்துக் கொண்டு

♦ (இறைவனை) அஞ்சினால்

அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

திருக்குர்ஆன்  3:120

47) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் எங்கே உயிருடன் உள்ளனர்?

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர்.

திருக்குர்ஆன்  3:169

48) காபிர்களை அல்லாஹ் உடனடியாக தண்டிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறான்?

"(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது' என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.

திருக்குர்ஆன்  3:178

49) கஞ்சத்தனம் செய்வோருக்கான தண்டனை என்ன?

அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். 

திருக்குர்ஆன்  3:180

50) உறுதிமிக்க காரியங்கள் எது?

♦ நீங்கள் சகித்துக் கொண்டு
♦ (இறைவனை) அஞ்சினால்

அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

   திருக்குர்ஆன்  3:186

♦ என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு!
♦ நன்மையை ஏவு! தீமையைத் தடு!
♦ உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! 

அது உறுதிமிக்க காரியமாகும். 

திருக்குர்ஆன்  31:17

♦யார் பொறுமையை மேற்கொண்டு ♦மன்னிக்கிறாரோ

அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும். 

திருக்குர்ஆன்  42:43

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...