பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…
صحيح
الجامع الصغير وزيادته
(الفتح الكبير)
ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள்
இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்பானி
புத்தகமாக டவுன்லோடு செய்ய
ஃகா (خ) எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
அல் ஃகா (الخ) என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
தால் (د) எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
அல் தால் (الذ) என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
செய்யது காமித்
6381653548
இஸ்தப்ரக் பதிப்பகம்
syedhameedh@gmail.com
الخاء எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
3205. அல்லாஹ்வின் இரக்கம்
خابَ عَبْدٌ وخَسِرَ لم يجعل الله تعالى في قلبه رحمةً للبشر
அம்ரு இப்னு ஹபீப் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹுத் தஆலா தனது இதயத்தில் மனிதர்கள் மீது (ரஹ்மத் எனும்) இரக்கத்தை ஏற்படுத்தவில்லையெனில் அடியார்கள் அனைவரும் நஷ்டமும் இழப்பும் அடைந்திருப்பார்கள்.
ஹஸன் தரமானது
ஆதாரம் : மஃரிபதுஸ் ஸஹாபா 5125இ அல் குனா வல் அஸ்மா 971இ ஃபைழுல் கதீர் 3873.
சிறு குறிப்பு
இந்த ஹதீஸ் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. அல்லாஹ்வின் ரஹ்மத் மட்டும் இல்லையென்றால் நாம் இவ்வுலகில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்போம். நாம் புரியும் பல பாவங்களுக்காக நாம் அழிக்கப்பட்டிருப்போம்.
ஆனால் இவற்றிலிருந்தெல்லாம் நம்மை தற்காத்தது அல்லாஹ்வின் ரஹ்மத்துதான். அந்த ரஹ்மத்துதான் நமது பாவங்களை மன்னிக்கச் செய்கிறது. நம்மீது அல்லாஹ்வின் அருட்கொடைகளை பொழியச் செய்கிறது. ஏனெனில் அல்லாஹ்வின் கருணை அளவற்றது.
3206. காலித் பின் வலித் ரலி
خَالِدُ بْنُ الْوَلِيدِ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ
அப்துல்லாஹ் இப்னு ஜாபர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
காலித் இப்னு வலீத் ரலி அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாளாவார்.
ஆதாரம் முஸ்னது அஹமது 43இ திர்மிதீ 3846
சிறு குறிப்பு
நபித்தோழர்களில் காலித் பின் வலீத் ரலி முக்கியமானவர் ஆவா்.
இவர் ஹிஜ்ரி 8ம் ஆண்டுதான் இஸ்லாத்தை ஏற்றார். அதற்கு முன்புவரை இஸ்லாத்தை எதிர்த்தார். இவர் குதிரைப் படை வீரராரகவும் போர்க்கலையில் சிறந்த ஞானமிக்கவராகவும் திகழ்ந்தார். உஹுதுப் போரில் முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவை வழங்கினார்.
இஸ்லாத்தை ஏற்ற பின்னர் முஸ்லிம்களின் படைத்தளபதியாக மாறி பல போர்க்களங்களில் பங்கேற்றார்கள். முஅத்தா யுத்தத்தில் முஸ்லிம்களின் ரத்தம் சிந்தப்படாமல் பாதுகாத்தார்கள். அபூபக்கர் ரலியின் ஆட்சியிலும் உமர் ரலி ஆட்சியின் முதல் பகுதியிலும் இவர்களே படைத்தளபதியாக திகழ்ந்தார்கள். பல போர்க்களங்களில் வெற்றிவாகை சூடினார்கள். ரோம பாசரீகர்களை கதிகலங்க வைத்தார்கள். இவர்களின் பெயர்களைக் கேட்டாலே எதிரிகள் நடுங்கினர். அந்த அளவிற்கு வீரமாக திகழ்ந்தார்கள். ஆகவேதான் அவர்களை அல்லாஹ்வின் போர்வாள் என்று நபியவர்கள் அழைத்தார்கள்.
3207. காஃபிர்களுக்கு எதிரான வாள்
خَالِدُ بْنُ الْوَلِيدِ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ سَلَّهُ اللَّهُ عَلَى المشركين
அபூபக்கர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
இணைவைப்பாளர்களுக்கு எதிராக உருவப்பட்ட அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாளாக காலித் பின் வலீத் ரலி இருக்கிறார்கள்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 43
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3206ல் இடம்பெற்றுள்ளது.
3208. காலித் ரலி சிறந்தவர்
خَالِدُ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ ونعم فتى العشيرة
அபூஉபைதா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
காலித் இப்னு வலீத் ரலி அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாளாவார். மேலும் அவர் அவரது குலத்தின் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : அஹ்மது 16869இ முஸன்னப் இப்னு அபீ ஷைபா 32930
சிறுகுறிப்பு
காலித் இப்னு வலீத் (ரலி) பனூ மக்ஸூம் (குரைஷி குலம்) குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தனது குலத்திலேயே மிகவும் திறமையான போர்வீரராக விளங்கினார். அவரது தைரியமும்இ யுத்தத் திறமையும் மிக உயர்வானவை. அதைப்போல் நல்லறங்கள் மிக்கவராகவும் திகழ்ந்தார்கள்.
3209. இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்தல்
خَالِفُوا الْمُشْرِكِينَ، أَحْفُوا الشَّوَارِبَஇ وأوفِّرُوا اللِّحَى،
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். மீசையை கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 5892இ ஸஹீஹ் முஸ்லிம் 434
சிறுகுறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மார்க்கமாகும். இது வானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட மார்க்கம். மற்ற அனைத்து மார்க்கங்களும் மனிதர்களால் பூமியில் உருவாக்கப்பட்டவையாகும். ஆதலால்தான் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே சரியான மார்க்கமாக திகழ்கிறது. இதைப் பின்பற்றுபவர் முஸ்லிம் என்று அழைக்கப்படுவார். இதைப் புறக்கணிப்பவர்கள் இணைவைப்பாளர்கள் என்றும் இறைமறுப்பாளர்கள் என்றும் அழைக்கப்படுவர்.
எனவே ஒரு முஸ்லிம் மற்ற காஃபிர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் மாற்றமாக நடக்க வேண்டும்.
இணைவைப்பாளர்கள் மீசையை வளர்த்து தாடியை வளரவிடுவார்கள். அதற்கு மாற்றமாக ஒரு முஸ்லிம் மீசையை கத்தரித்து தாடியை வளரவிட வேண்டும். இதன்மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் தனித்துவமாக திகழ வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் மீசையை வளர்ப்பதன்மூலம் பல தீமைகள் ஏற்படும். சாப்பிடும்போது பல அசுத்தங்கள் உணவோடு ஒட்டிக் கொள்வதற்கு அது வாய்ப்பாக அமையும். அதைப்போல் தாடியை வளரவிடுவதால் பல உலக நன்மைகள் ஏற்படுவதாக பல அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
3210. யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்
خَالِفُوا الْيَهُودَ فَإِنَّهُمْ لاَ يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلاَ خِفَافِهِمْ
ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். அவர்கள் செருப்புகளையோ காலணிகளையோ அணிந்து கொண்டு தொழுவதில்லை.
ஆதாரம் : அபூதாவூது 652இ பஸ்ஸார் 3480
சிறு குறிப்பு
யூதர்களும் காஃபிர்கள்தான். ஏனெனில் அவர்கள் இறுதி இறைத்தூதரான முஹம்மது நபியை ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு மாற்றமாக ஒரு முஸ்லிம் நடக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் அவர்கள் காலம்காலமாக நபிமார்களுக்கு மாற்றமாக நடப்பதையே ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகவேதான் நாம் அவர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
அந்தவகையில் யூதர்கள் செருப்பணிந்து தொழமாட்டார்கள். அவர்களுக்கு மாற்றம் செய்யும்விதமாக நாம் செருப்பணிந்து தொழ வேண்டும். இருந்தபோதிலும் இது கட்டாயமில்லை. எப்போதாவது வாய்ப்புக் கிடைத்தால் செருப்பணிந்து தொழ வேண்டும். ஆனால் அதில் அசுத்தம் எதுவும் இருக்கக் கூடாது. சுத்தமான நிலையிலுள்ள செருப்பை அணிந்தே நாம் தொழ வேண்டும்.
3211. மக்கா வெற்றி
خَبَّرَنِي رَبِّي أَنِّي سَأَرَى عَلاَمَةً فِي أُمَّتِي فَإِذَا رَأَيْتُهَا أَكْثَرْتُ مِنْ قَوْلِ : سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فقد رأيتها { إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ { وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ழூ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} " .
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
என் சமுதாயத்தார் தொடர்பாக நான் ஓர் அடையாளத்தைக் காண்பேன் என்றும்இ அதைக் காணும்போது ஸுபஹானல்லாஹி வபி ஹம்திஹி அஸ்தஃக்பிருல்லாஹ வ அதூபி இலைஹி என்ற தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை (மக்கா வெற்றியை) நான் கண்டுவிட்டேன்.
(இறைவன் எனக்கு அறிவித்த அத்தியாயமாவது): அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துஇ மேலும்இ அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக; மேலும்இ அவனிடமே பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரலை ஏற்பவனாக இருக்கிறான் (110:1-3).
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 837.
சிறுகுறிப்பு
வெற்றியையும் தோல்வியையும் வழங்குபவன் இறைவனே. இறைவன் நமக்கு வெற்றியை வழங்கும் போது நாம் நமது நிதானத்தை இழந்துவிடக்கூடாது. அந்நேரத்தில் பெருமையடிக்கக்கூடாது. இறைவனை பெருமைப்படுத்த வேண்டும். ஏனெனில் நமக்கு அந்த வெற்றியை வழங்கியவன் அவன்தான். ஆகவே அவனைத்தான் நாம் புகழ வேண்டும். அதைத்தான் அல்லாஹ்வும் முஹம்மது நபிக்கு கற்றுத்தருகிறான்.
முஹம்மது நபியின் பிறந்த இடம் மக்கா. இஸ்லாத்தை போதித்தார்கள் என்பதற்காக மக்கத்து காஃபிர்கள் அவர்களை மக்காவை விட்டும் விரட்டினார்கள். இறுதியில் அல்லாஹ் முஹம்மது நபிக்கு மக்கா வெற்றியை வழங்கினான். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இறைவனை புகழுமாறும் அவனை துதிக்குமாறும் அவனிடத்தில் பாவமன்னிப்பு கோருமாறும் இறைவன் கட்டளையிட்டான். அவ்வாறே நபிகளாரும் செய்தார்கள். இதைப்போல்தான் நாமும் நடந்து கொள்ள வேண்டும்.
3212. நிர்வாணம் கூடாது
خُذْ عَلَيْكَ ثَوْبَكَ وَلاَ تَمْشُوا عُرَاةً " .
மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உனது ஆடையை எடுத்து உடுத்திக் கொள். (ஒருபோதும்) நிர்வாணமாக நடக்காதே
ஆதாரம் : அபூதாவூது 4016
சிறுகுறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்கத்தைப் போதிக்கும் மார்க்கமாகும். ஒழுக்கத்தில் முக்கியமானது ஆடை ஒழுக்கமாகும். அதுதான் மனிதனை மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆகவேதான் இஸ்லாம் ஆடை விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. நிர்வாணமாக இருப்பதை வன்மையாக கண்டித்திருக்கிறது.
3213. குர்ஆனை யாரிடம் கற்பது
خُذُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍஇ وَأُبَىِّ بْنِ كَعْبٍஇ وَمُعَاذٍ بْنِ جَبَلٍ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான்கு பேரிடத்திலிருந்து குர்ஆனைக் (கற்றுக்) எடுத்துக் கொள்ளுங்கள். (அவர்களாவது) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதுஇ உபை இப்னு கஅப்இ முஆத் இப்னு ஜபல் மற்றும் அபூஹூதைபாவின் முன்னாள் அடிமையான ஸாலிம்.
ஆதாரம் : பஸ்ஸார் 1526இ ஹாகிம் 4999இ ஸஹீஹ் முஸ்லிம் 4862இ ஸஹீஹ் புகாரி 3808இ 4999இ ஜாமிஉத் திர்மிதீ 3810
சிறுகுறிப்பு
மேற்கூறிய நான்கு பேர்களும் திருமறைக் குர்ஆனை நன்கு மனனம் செய்து கற்றிருந்தார்கள். இவர்களல்லாத மற்ற சஹாபாக்களும் குர்ஆனை கற்றிருந்தாலும் அவர்கள் அனைவரைவிடவும் இந்த நான்கு பேர் இதில் புலமையோடு செயல்பட்டார்கள். ஆகவேதான் குர்ஆனை கற்றுக் கொள்ளும் விஷயத்தில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டுகிறார்கள். ஆகவே நாம் எந்த விஷயத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் அதில் புலமைத்துவம் மிக்கவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
3214. பாக்கியத்துஸ் ஸாலிஹாத்
خُذُوا جُنَّتَكُمْ مِنَ النَّارِ ؛ قولوا : سبحان الله ، والحمد الله ، ولا إله إلا الله ، والله أكبرஇ فإنهن يأتين يوم القيامة مقدمات، ومعقبات، ومُجنِّبات، وهُنَّ الباقيات الصالحات
அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நரகிலிருந்து காக்கும் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். (அந்த கேடயமாவது) ஸுப்ஹானல்லாஹ்இ வல்ஹம்துலில்லாஹ்இ வலா இலாஹ இல்லல்லாஹுஇ வல்லாஹு அக்பர் (ஆகும். இவற்றை நீங்கள்) கூறுங்கள். கியாமத் நாளில் உங்களது முன்புறமும் பின்புறமும் இந்த வாக்கியங்கள் வந்து பாதுகாப்புடன் உங்களை அழைத்துச் செல்லும். இதுவே நிலைத்து நிற்கும் பாக்கியம் நிறைந்த நல்லமலாகும்.
ஆதாரம் : நஸாஈயின் சுனனுல் குப்ரா 10684.
சிறுகுறிப்பு
திக்ர் எனும் இறைநினைவிற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. இந்த ஹதிஸில் நான்கு திக்ருகளை நபியவர்கள் கற்றுத் தருகிறார்கள்.
ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்)
அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்)
லா இலாஹ இல்லல்லாஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
அல்லாஹு அக்பர் (அலலாஹ் மிகப்பெரியவன்)
இந்த நான்கையும் நாம் கூறி வந்தால் இந்த வார்த்தைகள் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
3215. விபச்சாரத்திற்கான தண்டனை
خُذُوا عَنِّي خُذُوا عَنِّي قَدْ جَعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلاً الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ وَنَفْىُ سَنَةٍ وَالثَّيِّبُ بِالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ ".
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் (பெண்களாகிய) அவர்களுக்கு ஒரு (நீதியான) வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் அவர்களுக்கு நூறு சாட்டையடிகள் வழங்கப்பட்டு ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால்இ நூறு சாட்டையடிகள் வழங்கப்பட்டு கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 3489.
சிறுகுறிப்பு
இந்த ஹதீஸில் நபியவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை குறிப்பிடுகிறார்கள்.
திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடிகள் வழங்கப்பட்டு ஓராண்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும்.
திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்கள் மரணிக்கின்ற வரையிலும் அவர்களுக்கு கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
3216. இஷா தொழுகையை தாமதப்படுத்துதல்
خُذُوا مَقَاعِدَكُمْ ، إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَأَخَذُوا مَضَاجِعَهُمْ وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ وَلَوْلاَ ضَعْفُ الضَّعِيفِ وَسَقَمُ السَّقِيمِ ، وحَاجَةٌ ذَوِي الْحَاجَةِ، لأَخَّرْتُ هَذِهِ الصَّلاَةَ إِلَى شَطْرِ اللَّيْلِ "
அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
(தொழுகைக்கான) உங்களது இடத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மற்ற மக்கள் அனைவரும் தொழுதுவிட்டுஇ (உறங்குவதற்காக) தங்களது படுக்கையறைக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் நீங்களோ தொழுகைக்காக காத்திருக்கிறீர்கள். நீங்கள் தொழுகைக்காக காத்திருக்கும் வரை தொழுகையில் ஈடுபட்ட நன்மையைப் அடைந்துக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் பலவீனர்களாகி உங்களது பலவீனத்திற்காகவோஇ நோயாளிகளாகி உங்களின் நோயிற்க்காகவோஇ தேவையுடைவர்களாகி உங்களின் தேவைக்காகவோ விழித்திருக்கவில்லை. (மாறாக தொழுகைக்காகவே விழித்திருக்கிறீர்கள்) ஆகவே (இதன் நன்மையை கருத்தில் கொண்டு) பாதி இரவுவரை (இஷா) தொழுகையை தாமதப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
ஆதாரம் : அபூதாவூது 422
சிறு குறிப்பு
இந்த ஹதீஸில் இஷா தொழுகை குறித்தே நபியவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் உண்டு. எல்லாத் தொழுகைகளையும் ஆரம்ப நேரத்தில் தொழுவதே சிறந்தது. இஷாவைத் தவிர. இஷாவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட அதன் இறுதி நேரத்தில் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத்தரும். அதைத்தான் இதில் நபியவர்கள் விளக்குகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் நாம் தொழுகைக்காக காத்திருக்கும் காலமெல்லாம் தொழுத நன்மையை பெற்றுக் கொண்டேயிருப்போம்.
3217. இயன்ற இபாதத்களில் ஈடுபடுதல்
خُذُوا مِنَ العِبادة مَا تُطِيقُونَ؛ فَإِنَّ اللَّهَ لَا يسامُ حَتَّى تسأموا
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உங்களால் இயன்ற அளவிற்கு வணக்க வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஏனெனில்இ நிச்சயமாக! நீங்கள் சலிப்படையாத வரையில் அல்லாஹ்வும் (நன்மைகளை வாரி வழங்குவதில்) சலிப்படையமாட்டான்.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 1970
சிறுகுறிப்பு
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில்இ அதிகமாக செய்வதைவிட தொடர்ச்சியாக செய்வதுதான் அதிக மதிப்புமிக்கது. ஏனெனில் அவற்றைத்தான் அல்லாஹ் விரும்புவான்.
ஆகவே நாம் சில இபாதத்களை அளவுக்கு அதிகமாக செய்து விரைவிலேயே அதன்மீது சலிப்படைந்துவிடக்கூடாது. குறைவாக செய்தாலும் தொடர்ச்சியாக செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
3218. இயன்ற நற்செயல்களை செய்தல்
خُذُوا مِنَ العَمَلِ ما تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لا يَمَلُّ حَتَّى تملوا
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உங்களால் இயன்ற அளவிற்கு நற்செயல்களை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக நீங்கள் சலிப்படையாத வரையில் அல்லாஹ்வும் (நன்மைகளை வாரி வழங்குவதில்) சலிப்படையமாட்டான்.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 5861
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3218ல் இடம்பெற்றுள்ளது. அதில் வணக்க வழிபாடு என்று உள்ள இடத்தில் இங்கு நற்செயல்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆக வணக்க வழிபாடாக இருந்தாலும் பிற நற்செயல்களாக இருந்தாலும் அவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதில் சலிப்பு ஏற்படாதவகையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
3219. மார்க்கத்தில் தளர்வு உண்டு
خُذُوا يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى تَعْلَمُ الْيَهُودَ وَالنَّصَارَى أَنَّ فِي دِينِنَا فُسْحَةٍ
அபூ உபைதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே) நீங்கள் விளையாடுங்கள். நமது மார்க்கத்தில் தளர்வு உண்டு என்பதை யூதர்களும் கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளட்டும்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 3530
சிறு குறிப்பு
இந்த சம்பவம் பெருநாள் தினத்தன்று நடந்ததாகும். பெருநாள் அன்று எத்தியோபியர்கள் ஈட்டி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நபியவர்கள்இ அவர்களது விளையாட்டை அனுமதித்து அவற்றை ஊக்கப்படுத்தினார்கள்.
இதன்மூலம் இஸ்லாமிய மார்க்கம் இறுக்கமான மார்க்கம் அல்ல என்பதையும் இலகுவான மார்க்கம் என்பதையும் நபியவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
3220. மாதவிடாயை சுத்தம் செய்தல்
خُذِي فِرْصَةً مِنْ مِسْكٍ فَتَطَهَّرِي بِهَا
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
(மாதவிடாய் ஏற்பட்டுள்ள) நீ கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்துஇ அதைக்கொண்டு (உன்னை) சுத்தம் செய்து கொள்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 314
சிறு குறிப்பு
மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு மாதம் மாதம் ஏற்படும் ஒரு நிலையாகும். இது ஒரு வித அசுத்தமாகும். மாதவிடாய் உள்ள நிலையில் ஒரு பெண் தொழக்கூடாது. நோன்பு நோற்கக்கூடாது. ஏனெனிலா மாதவிடாய் ரத்தம் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே மாதவிடாய் நின்றதும் கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அது அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் நீக்கி சுத்தத்தையும் நறுமணத்தையும் வழங்கும்.
3221. கணவரின் செல்வத்திலிருந்து தேவைக்கு எடுத்தல்
خُذِي مِنْ مَالِهِ بِالْمَعْرُوفِ مَا يَكْفِيكِஇ وَيَكْفِي بَنِيكِ"
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
(உனது கணவரின் செல்வத்திலிருந்து) உனக்கும் உனது பிள்ளைகளுக்கும் போதுமான அளவை நியாயமான முறையில் எடுத்துக் கொள்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 3530
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் ஆண்களின் பொறுப்புகளையும் பெண்களின் பொறுப்புகளையும் தனித்தனியாக சுட்டிக்காட்டுகிறது.
வீட்டையும் கணவனின் செல்வத்தையும் குழந்தையும் பராமரிப்பது மனைவியின் பொறுப்பாகும். குடும்பத்திற்கு தேவையான அளவு பொருளாதாரத்தை வழங்குவது கணவனின் மீதுள்ள கடமையாகும்.
ஒரு கணவன் தனது மனைவிக்கு போதுமான அளவு பொருளாதாரம் வழங்கவில்லையானால் கணவினின் பொருளாதாரத்திலிருந்து தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ள நபி (ஸல்) அனுமதி வழங்கியுள்ளார்கள்.
3222. தற்பெருமைக்கான தண்டனை
خَرَجَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فِي حُلَّةٍ لَهُ يَخْتَالُ فِيهَا فَأَمَرَ اللَّهُ الأَرْضَ فَأَخَذَتْهُ فَهُوَ يَتَجَلْجَلُ فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதன் தனது கீழ் ஆடையை (நீளமாக) அணிந்து ஆணவத்துடன் நடந்து சென்றான். ஆகவே அவனை விழுங்குமாறு பூமிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அதனால் அவன் பூமிக்குள் புதையுண்டான். மறுமைநாள் வரையிலும் அவன் அதில் மூழ்கிக் கொண்டே செல்வான்.
ஆதாரம் : திர்மிதீ 2491இ ஸஹீஹ் புகாரி 3485இ 5789. முஸ்லிம் 4241
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் மனிதக் குணங்களை பண்படுத்தும் மார்க்கமாகும். ஆகவேதான் பெருமை என்ற மோசமான குணத்தை இஸ்லாம் எதிர்க்கிறது. ஒரு முஃமினிடம் பெருமை என்பது அறவே இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது.
இப்லீஸ் வானுகலத்திலிருந்து கீழுலகத்திற்கு அனுப்பப்பட்டதற்கு இந்த பெருமையே காரணமாகும். அவன் அல்லாஹ்விடத்தில் பெருமையடித்தான். ஆகவே அல்லாஹ் அவனை விரட்டியடித்தான். பெருமை என்பது ஒரு மனிதனை உயர்த்தாது. மாறாக அது அவனை தாழ்த்தும்.
மூஸா நபி காலத்தில் பெருமையடித்துத் திரிந்த காரூன் என்பவனை அல்லாஹ் பூமியில் புதையச் செய்தான். அதைப்போல் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதுபோல்இ பெருமையோடு கரண்டைக்குக் கீழே ஆடையணிந்து சென்றவனையும் இறைவன் பூமிக்குள் புதையச் செய்தான். கியாமத் நாள் வரையிலும் அவன் பூமிக்குள் சென்றுகொண்டே இருப்பான். இதுதான் பெருமையடித்தவர்களின் நிலை. பெருமை என்பது ஒருவனை தாழ்த்துமேயொழிய ஒருகாலும் அது உயர்த்தாது.
3223. நபியின் பிறப்பு தூய்மையானது
خَرَجْتَ مِنْ لَدُنْ آدَمُ ، مِنْ النِّكَاحِ غَيْرُ السَّفَّاحِ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் ஆதம் (நபி)யிலிருந்து உருவானவன். திருமணத்தின் மூலம் முறையாகப் பிறந்தவன். தவறான முறையில் பிறந்தவன் அல்ல.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 4728
ஹஸன் தரத்திலானது. (இதன் அறிவிப்பாளர்களில் முஹம்மது பின் ஜாஃபரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் ஆவர்.)
சிறு குறிப்பு
இதில் நபியவர்கள் தனது பிறப்பின் தூய்மையை எடுத்துரைக்கிறார்கள். திருமணம் என்ற தூய்மையான முறையில்தான் தான் பிறந்தேன் என்பதை இதன் மூலம் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
3224. நபியின் பிறப்பு தூய்மையானது
خَرَجْتُ مِن نِكاحٍ، ولَمْ أخْرُجْ مِن سِفاحٍ
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் திருமணத்தின் மூலம் முறையாகப் பிறந்தவன். தவறான முறையில் பிறந்தவன் அல்ல.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 4728
ஹஸன் தரத்திலானது.
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3224 ல் இடம்பெற்றுள்ளது.
3225. நபியின் பரம்பரை தூய்மையானது
خَرَجْتُ مِنْ نِكَاحٍ وَلَمْ أَخْرُجْ مِنْ سِفَاحٍ مِنْ لَدُنْ آدَمَ إِلَى أَنْ وَلَدَنِي أَبِي وَأُمِّي இ لَمْ يُصِبْنِي مِنْ سِفَاحِ الْجَاهِلِيَّةِ شَيْءٌ
அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் திருமணத்தின் மூலம் முறையாகப் பிறந்தவன். தவறான முறையில் பிறந்தவன் அல்ல. ஆதம் நபியில் தொடங்கி எனது தாயும் தந்தையும் என்னைப் பெற்றெடுக்கும் வரையிலும் ஜாஹிலிய்ய காலத்தின் எவ்வித தவறான முறைகளின் பாதிப்பும் என்னைத் தொடவில்லை.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 4728இ ஆஜூரி அவர்களின் ஷரீஆ 957.
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3224 ல் இடம்பெற்றுள்ளது.
மேலும் முஹம்மது நபியின் ஒட்டுமொத்த பரம்பரையும் தூய்மையான முறையில்தான் பிறந்திருக்கிறது. அவர்களது மூதாதையர்களில் யாரும் விபச்சாரத்தின் மூலம் பிறக்கவில்லை என்பதை இதன்மூலம் நபியவர்கள் அறிவிக்கிறார்கள்.
3226. லைலத்துல் கத்ர் இரவு
خَرَجْتُ وأنا أريد أن أُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رجلان فاختلجت مني، فَاطْلُبُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ : فِي سَابِعَةٍ تَبْقَى ، أو تَاسِعَةٍ تَبْقَى ، أو خَامِسَةٍ تَبْقَى
உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் உங்களுக்கு லைலத்துல் கத்ரு இரவைப் பற்றி கூற விரும்பி வெளியே வந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். அதனால் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நீங்கள் (ரமலானின்) கடைசி பத்து இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள். (அதிலும் குறிப்பாக) இருபத்தொன்றாவது இரவில் அல்லது இருபத்தி மூன்றாவது இரவில் அல்லது இருபத்தி ஐந்தாவது இரவில் தேடிக்கொள்ளுங்கள்.
ஆதாரம் : தயாலிஸி 3904இ ஸஹீஹ் புகாரி 2021இ 2023
சிறு குறிப்பு
லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். ஏனெனில் அந்த இரவில்தான் திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அந்த இரவில் நின்று வணங்கினால் நம் முன்பாவங்கள் மன்னிக்கப்படும்.
அந்த இரவு எது? என்பது குறித்து நபியவர்களால் குறிப்பிட்டு அறிவிக்கப்படவில்லை. ரமலானின் கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் அவற்றைத் தேடிக்கொள்ளுமாறு நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
3227. கியாமத் நாளின் அடையாளங்கள்
الْخُرُوجَ الْآيَاتِ بَعْضَهَا على أَثَرهَا بَعْضُ ، يتتابعن كما تَتَابَعُ الخَرَزِ في النظام
அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
கோர்க்கப்பட்ட மணிகளின் கயிறுகள் அறுந்தால்இ அவைகளின் மணிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறுவது போல கியாமத் நாளின் அடையாளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறிவரும்.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 4271
சிறு குறிப்பு
கியாமத் நாள் என்பது உலக அழிவு நாளைக் குறிக்கும். உலகம் அழிக்கப்படுவதற்கு முன்னால் சில அடையாளங்களை இறைவன் ஏற்படுத்துவான். அவற்றில் பத்து பெரிய அடையாளங்களும் பல சிறிய அடையாளங்களும் உண்டு. ஒரு அடையாளம் வெளிப்பட ஆரம்பித்துவிட்டால் அடுத்தடுத்த அடையாளங்கள் தொடர்ச்சியாக வெளிப்படும். தற்காலத்தில் பல சிறிய அடையாளங்கள் வெளிப்பட்டுவிட்டது.
3228. நோன்பின் சிறப்பு
خِصَاءَ أُمَّتِي الصِّيَامُ .....
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நோன்பானது எனது உம்மத்தை (இச்சைகளிலிருந்து பாதுகாக்கும்) கேடயமாகும்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 6612.
சிறுகுறிப்பு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது பருவமடைந்த ஆண் பெண்கள் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும். நோயாளிகள்இ பயணிகள்இ மாதவிடாய் நிலையிலுள்ள பெண்கள்இ கர்ப்பிணிகள்இ பால்குடித் தாய்மார்கள் போன்றவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைவரும் நோன்பு நோற்க வேண்டும்.
இந்த நோன்பு இச்சைகளிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கிறது. அதனால்தான்இ திருமணம் முடிக்கத் தகுதிவாய்ந்தவர் பொருளாதார வசதியைப் பெறவில்லையெனில் அவர்கள் தங்களது கற்புகளைப் பாதுகாப்பதற்காக நோன்பு நோற்குமாறு நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
3229. நற்குணமும் மார்க்க விளக்கமும்
خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ
அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நயவஞ்சகர்களிடம் இரு குணங்கள் ஒன்று சேராது. அவை நற்பண்புகள் மற்றும் மார்க்கத்தில் விளக்கம் பெறுதல் ஆகும்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 2684
சிறுகுறிப்பு
நயவஞ்சகம் எனும் இரட்டை வேடம் போடும் பண்பு மிக மோசமான பண்பாகும். ஆகவேதான் இஸ்லாம் அதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நயவஞ்சகர்களுக்கு ஜனாஸா தொழுகை வைக்கக்கூடாது என்றும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கக்கூடாது என்றும் அல்லாஹ் கூறியிருக்கிறான்.
மேலும் நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள் என்றும் நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நயவஞ்சகத்தின் குணங்கள் நம்மிடத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால்இ நாம் நற்குணங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் மார்க்கத்தில் விளக்கம் பெற்றவர்களக மாற வேண்டும்.
நற்குணமும் மார்க்க விளக்கமும் அதிகரிக்க அதிகரிக்க நயவஞ்சகத்தின் பண்புகள் நம்மைவிட்டும் விலகிச் செல்லும்.
3230. இரண்டு நற்குணங்கள்
خَصْلَتَانِ لاَ يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ ألا وهُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ فَتِلْكَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
இரண்டு நற்குணங்கள் உள்ளன. அவற்றைப் பெற்றிருப்பவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருக்கமாட்டார். அந்த நற்குணங்கள் மிகவும் எளிமையானவை. ஆனால் அவற்றை மிகச் சிலர்தான் பெற்றிருப்பர்.
அவையாவன :
ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸுபஹானல்லாஹ் என்று பத்து தடவையும் அல்ஹம்துலில்லாஹ் என்று பத்து தடவையும் அல்லாஹு அக்பர் என்று பத்து தடவையும் கூறுதல் ஆகும். (இந்த மூன்று திக்ரையும் சேர்த்து) நமது நாவால் கூறியது நூற்றி ஐம்பது தடவைகள்தான். ஆனால் மீஸான் (எனும் நன்மைகளை அளக்கும்) தராசிலோ அவை ஆயிரத்து ஐநூறாக கணக்கிடப்பட்டு இருக்கும்.
நீங்கள் உறங்குவதற்காகச் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று முப்பத்தி நான்கு தடவையும் அல்ஹம்துலில்லாஹ் என்று முப்பத்தி மூன்று தடவையும் ஸுபஹானல்லாஹ் என்று முப்பத்தி மூன்று தடவையும் கூறினால் உங்களது நாவால் கூறியது நூறாக இருக்கும். ஆனால் மீஸான் தராசிலோ அது ஆயிரமாகக் கணக்கிடப்பட்டு இருக்கும்.
மேற்கூறிய இரண்டு நற்குணங்கள் மூலமாக நமக்கு கிடைப்பது இரண்டாயிரத்து ஐநூறு நன்மைகள். ஆகவே உங்களில் யார்தான் பகலிலும் இரவிலும் இரண்டாயிரத்து ஐநூறு தீமைகள் புரிகிறார்கள்?
ஆதாரம் : அபூதாவூது 5065இ ஜாமிஉத் திர்மிதீ 3410இ இப்னு மாஜா 926இ அஹமது 6910.
சிறுகுறிப்பு
இஸ்லாத்தில் திக்ர் எனும் இறைநினைவிற்கு ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் நினைவு கூறுமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
அந்தவகையில்இ ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்இ உறங்குவதற்கு முன்னும் மேற்கூறிய திக்ருகளை ஓதினால் நாம் ஏராளமான நன்மைகளை கொளனளையடிக்கலாம்.
ஒவ்வொரு தொழகைக்குப் பிறகு
ஸுபஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்) பத்து தடவைகள்
அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்) பத்து தடவைகள்
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) பத்து தடவைகள் கூற வேண்டும்.
ஒரு தொழுகைக்கு மொத்தம் முப்பது தடவைகள் ஆகும். ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் தொழுவது கடமை.
ஆக 5ழூ30 ஸ்ரீ 150 தடவைகள் ஆகும்.
ஆனால் இறைவனோ இவற்றை பத்தால் பெருக்கி 1500 நன்மைகளை வழங்குவான்.
அதைப்போன்றுதான் உறங்குவதற்கு முன்னர் ஓதுவதும்.
3231. தாவூத் நபியின் தனிச்சிறப்பு
خُفِّفَ عَلَى دَاوُدَ الْقُرْآنُ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ، فَيَقْرَأُ الْقُرْآنَ من قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ، وَلاَ يَأْكُلُ إِلاَّ مِنْ عَمَلِ يَدِهِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
தாவூத் (நபிக்கு) இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகன(மான குதிரையை பயணத்திற்கு) தயார் செய்யும் படி (தம் பணியாளர்களிடம்) உத்திரவிடுவார்கள். உடனேஇ அதற்குச் சேணம் பூட்டப்படும். வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே அவர்கள் இறைவேதத்தை ஓதி விடுவார்கள். (அதைப்போல்) தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து மட்டும்தான் அவர்கள் உண்பார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3417.
சிறுகுறிப்பு
இதில் தாவூத் நபியின் இரண்டு சிறப்புகள் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் இறைவேதத்தை லேசாக ஓதிவிடுவார்கள். மிக வேகமாக ஓதி முடித்துவிடுவார்கள். அதற்காக அவசரம் அவசரமாக ஓதமாட்டார்கள். நன்கு புரிந்து கொண்டே ஓதுவார்கள். அதைப்போல் அவர்களின் கிராஅத்தும் மிக அருமையாக இருக்கும். அவர்களது குரல் வளம் இனிமையாக இருக்கும்.
தாவூத் நபி ஒரு அரசராக இருந்தாலும் தனது கையால் உழைத்து உண்ணும் பழக்கத்தையே கொண்டிருந்தார்கள். அரசாங்க சொத்துக்களை தனது சொந்த வாழ்க்கைக்குப் பயன்படுத்தமாட்டார்கள். இதன்மூலம் உழைத்து உண்பதின் அவசியத்தை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்.
3232. குர்ஆனும் ஸுன்னாவும்
خَلَّفْتُ فِيكم شيئين لنْ تَضِلُّوا بعدهما : كِتابَ الله وسنتي، وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَىَّ الْحَوْضَ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உங்களிடம் நான் இரண்டு (பொக்கிஷங்களை) விட்டுச் செல்கிறேன். அவற்றிலுள்ளவற்றின் அடிப்படையில் நடந்துவரும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்). மற்றொன்று ஸுன்னத் (எனும் ஹதீஸ்) ஆகும். நீங்கள் ஹவ்ளுல் கவ்ஸரை அடையும் வரை அவையிரண்டும் பிரிக்கப்படாது.
ஆதாரம் : பஸ்ஸார் 8993இ ஹாகிம் 319இ அல் அகிலியின் ழுஅஃபாவுல் கபீர் 2ஃ250.
சிறுகுறிப்பு
‘இஸ்லாத்தின் மூலாதாரங்கள் குர்ஆனும் நபிமொழியும்தான்’ என்பதை இந்த ஹதீஸின் மூலம் நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததாக உள்ளது. குர்ஆனை மட்டும் எடுத்து நபிவழியை புறக்கணித்தால் அது வழிகேட்டை நோக்கி இட்டு செல்லும். அதைப்போல் நபிமொழியை மட்டும் எடுத்து குர்ஆனை புறக்கணித்தால் அதுவும் வழிகேட்டை நோக்கி இட்டுச் செல்லும். இரண்டையும் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். கியாமத் நாள் வருகின்ற வரையிலும் குர்ஆனும் நபிமொழியும் இணைந்ததாகவே இருக்கும்.
3233. ஆதம் நபியின் உயரமும் தோற்றமும்
خَلَقَ اللَّهُ آدَمَ على صورته ، وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ، ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ النفر - وهم نفر مِنَ الْمَلاَئِكَةِ، جلوس - فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فإنها تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ فذهب فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ. فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِஇ فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، في طوله سِتُّونَ ذِراعاً، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ».
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை தன்னுடைய சாயலில் படைத்தான். அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு (அல்லாஹ் ஆதம் நபியிடம்)இ 'நீங்கள் சென்று அந்த மலக்குமார்களின் குழுவிற்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டு (அதைக் கற்றுக்) கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்' என்று சொன்னான்.
(அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் மலக்குமார்களின் குழுவிற்கு சென்று)இ 'அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி பொழியட்டும்) என்று கூறினார்கள்.
அதற்கு மலக்குமார்கள்இ அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹ் ('உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் பொழியட்டும்') என்று பதில் கூறினார்கள்.
வரஹ்மத்துல்லாஹ் (‘அல்லாஹ்வின் கருணையும் உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை மலக்குமார்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவேஇ (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் அனைவரும் ஆதம்(அலை) அவர்களின் சாயலைப் பெற்றுத்தான் நுழைவார்கள். அவர்கள் அனைவரும் அறுபது முழம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உயரத்திலும்இ அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன'
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3326.
சிறுகுறிப்பு
அல்லாஹ் ஆதம் நபியை படைத்ததும் அவர்களுக்கு இட்ட முதல் கட்டளைஇ ‘மலக்குமார்களுக்கு ஸலாம் கூற வேண்டும்’ என்பதாகும். ஆகவே ஸலாம் கூறுதல் என்பது மிக முக்கியமான வழிபாடாகும்.
நபிகள் நாயகம் ஸலாமைப் பரப்புங்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே அறிந்தாேருக்கும் அறியாதோருக்கும் நாம் ஸலாம் கூற வேண்டும்.
ஆதம் நபிஇ ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறினார்கள். அதற்கு மலக்குமார்கள் வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் என்று பதில் கூறினார்கள். எனவே நாம் சிறந்த முறையிலேயே பதில் ஸலாம் கூற வேண்டும்.
வ அலைக்கும் ஸலாம் என்று கூறினால் பத்து நன்மைகள் கிடைக்கும். வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறினால் இருபது நன்மைகள் கிடைக்கும். வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறினால் முப்பது நன்மைகள் கிடைக்கும். ஆகவே நாம் முடிந்த அளவிற்கு முழுமையாக பதில் ஸலாம் கூற வேண்டும்.
3234. சொர்க்கவாதிகளும் நரகவாதிகளும்
خَلَقَ اللَّهُ آدَمَ ، فَضَرَبَ كَتِفَهُ الْيُمْنَى فَأَخْرَجَ ذُرِّيَّةً بَيْضَاءَ كَأَنَّهُمُ اللبنُ ، ثمَّ ضَرَبَ كَتِفَهُ الْيُسْرَى فَخْرَجَ ذُرِّيَّةً سَوْدَاءَ كَأَنَّهُمُ الْحُمَمُ قَالَ : هؤلاء في الْجَنَّةِ وَلَا أُبَالِي ، وهؤلاء في النَّارِ وَلَا أُبَالِي
அபூதர்தா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். பின்னர் அவர்களது வலது தோளில் அடித்துஇ அதிலிருந்து பால் போன்ற வெள்ளை நிற சந்ததிகளை வெளியாக்கினான். பின்னர் அவன் அவர்களது இடது தோளில் அடித்துஇ அதிலிருந்து சூடான நிலக்கரி போல கருப்பு நிற சந்ததிகளை வெளியாக்கினான். (பின்னர்) அல்லாஹ் கூறினான்: (ஆதம் நபியின் வலது தோளிலிருந்து வெளிப்படுத்திய பால் போன்ற வெள்ளையர்கள்) சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் சொர்க்கத்தில் நழைவதால் என்னுடைய கஜானாவில் எதுவும் காலியாகிவிடுமோ என்று) எனக்கு கவலையில்லை. (ஏனெனில் அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்து இன்பங்களை அனுபவிப்பதால் என்னிடமுள்ள எதுவும் குறையப்போவதில்லை). (அதைப்போல் ஆதம் நபியின் இடது தோளிலிருந்து வெளிப்படுத்திய கருப்பானவர்கள்) நரகத்தில் நுழைவார்கள். (அவர்கள் நரகத்தில் நுழைவதாலும்) எனக்கு கவலையில்லை.
ஆதாரம் : முஸ்னது அஹமது 27488இ பஸ்ஸார் 4143
சிறு குறிப்பு
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அவனது விருப்பப்படிதான் அனைத்தும் நடக்கும். அவனது கஜானாவை எதுவும் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.
அல்லாஹ் சொர்க்கவாதிகளையும் நரகவாதிகளையும் ஏற்கனவே படைத்துவிட்டான் என்பதையும் இந்த ஹதீஸ் அறிவிக்கிறது.
இந்த ஹதீஸை வைத்துஇ வெள்ளையாக இருப்பவர்கள் சொர்க்கவாதிகள் என்றும் கருப்பாக இருப்பவர்கள் நரகவாதிகள் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் இவ்வுலகிலுள்ள நமது நிறத்திற்கும் அல்லாஹ் படைக்கும்போது நாம் பெற்ற நிறத்திற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.
3235. அல்லாஹ் எதை எதை எப்போது படைத்தான்
خَلَقَ اللَّهُ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ ، وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الْأَحَدِ ، وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الِاثْنَيْنِ ، وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلَاثَاءِ ، وَخَلَقَ النُّورَ يَوْمَ الْأَرْبِعَاءِ ، وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ ، وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلَام بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِي آخِرِ الْخَلْقِ ، فِي آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
"அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். ஞாயிற்றுக்கிழமையன்று மலைகளை அதில் படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்"
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 5379இ நஸாஈயின் சுனனுல் குப்ரா 11392.
3236. அல்லாஹ்வின் அன்பு
خَلَقَ الله مِائَةَ رَحْمَةٍ، ، فوضع رَحْمَةً وَاحِدَةً، بين خلقه. يتراحمون بها، وخبأ عنده مائة إلا واحدة .
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹ் நூறு ரஹ்மத்தை (அன்பைப்) படைத்தான். அவற்றில் ஒன்றை மட்டும் தனது படைப்புகளுக்கு வழங்கினான். அதைக் கொண்டே அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த ஒரு அன்பைத் தவிர மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது அன்பை தன்னிடத்தில் மறைத்து வைத்துள்ளான்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 5312இ ஸஹீஹ் புகாரி 6469.
சிறுகுறிப்பு
அல்லாஹ் மனிதர்கள்மீது அளவற்ற அன்பை பொழியக்கூடியவன். அல்லாஹ்வின் ரஹ்மத்தை நம்மால் கணக்கிட இயலாது. அந்த அளவிற்கு அது விசாலமானது. இந்த பூமியிலுள்ள மனிதர்கள்இ விலங்கினங்கள்இ பறவைகள் என்று அனைத்து ஜீவராசிகளும் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த அன்பை சேர்த்து அதை ஒரு அன்பாகக் கணக்கிட வேண்டும். (இதுவே சாத்தியமற்றது) அதைப்போன்ற 99 மடங்கு அதிகமான அன்புகள் அல்லாஹ்விடத்தில் உள்ளது.
3237. யஹ்யா நபியும் ஃபிர்அவ்னும்
خلق الله يحيى بن زكريا في بطن أمه مؤمناً، وخلق فرعون في بطن أُمه كافراً» .
இப்னு மஸ்ஊது ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹ்இ ஜகரிய்யாவின் மகன் யஹ்யா (அலை) அவர்களை அவரது தாயின் வயிற்றில் இருக்கும்போதே முஃமினாகப் படைத்தான். ஃபிர்அவ்னை அவனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே காஃபிராக (இறைமறுப்பாளனாகப்) படைத்தான்.
ஆதாரம் : தபரானி (10ஃ276) (10543)இ
ஹஸன் தரத்தில் அமைந்தது.
சிறுகுறிப்பு
இறைவன் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கக்கூடியவன். அவனது நாட்டம் தான் நடக்கும். அவனது நாட்டத்தை மிஞ்சக்கூடியது எதுவும் இல்லை.
அந்தவகையில் இறைவன் யஹ்யா நபியை அவர்களது தாயின் வயிற்றில் வைத்தே முஃமினாக பிறக்கச் செய்தான்
ஃபிர்அவ்னை அவனது தாயின் வயிற்றில் வைத்தே காஃபிராக படைத்தான்.
3238. மலக்குஇ ஜின் மற்றும் ஆதம் நபி எதைக் கொண்டு படைக்கப்பட்டார்கள்
خُلِقَتِ الْمَلاَئِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மலக்குமார்கள் ஔியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலை) உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 5722.
3239. கை மற்றும் கால் விரல்களுக்கு இடையில் கழுவுதல்
خَلِّلْ أَصَابِعِ يَدَيْكَ وَرِجْلَيْكَ
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
"(நீங்கள் உளூ செய்யும் போது) உங்கள் கைகளின் விரல்களுக்கும் கால்களின் விரல்களுக்கும் இடையில் நன்கு கழுவுங்கள்."
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 39
சிறுகுறிப்பு
ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்வது கட்டாயக்கடமையாகும். உளூ செய்யாமல் தொழுதால் அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அதைப்போல் உளூவை சிறந்த முறையிலும் செய்ய வேண்டும். கை விரல்களின் இடுக்குகளுக்குள்ளும் கால் விரல்களின் இடுக்குகளுக்குள்ளும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
3240. ஐந்து செயல்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகள்
خمس بخمس، ما نقض قوم العهد إلا سُلِّطَ عليهم عدوهم، وما حكموا بغير ما أنزل الله إلا فشا فيهم الفقر، ولا ظهرت فيهم الفاحشة إلا فشا فيهم الموت، ولا طففوا المكيال إلا منعوا النبات وأخذوا بالسنين، ولا منعوا الزكاة إلا حبس عنهم القطر»
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஐந்து (செயல்பாடுகளால்) ஐந்து (விளைவுகள் ஏற்படும்).
1. ஒரு கூட்டம் (சமூகம்) அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட தங்கள் உடன்படிக்கையை முறித்துவிட்டால்இ அல்லாஹ் அவர்களுக்கு எதிராக விரோதிகளை சாட்டிவிடுவான். (அந்த எதிரிகள் அவர்களிடமுள்ளதை கைப்பற்றிக் கொள்வார்கள்.)
2. அவர்களின் (ஆட்சித் தலைவர்கள்) அல்லாஹ்வின் சட்டங்களைப் புறக்கணித்து அதுவல்லாத வேறு முறையில் ஆட்சி செய்ய ஆரம்பித்தால்இ அவர்கள் வறுமையில் விழுந்துவிடுவார்கள்.
3. அவர்கள் (விபச்சாரம் போன்ற) அருவருப்பான செயல்களை செய்து வந்தால்இ (கொள்ளை நோய் போன்ற நோய்கள் பரவி) மரணம் அதிகரிக்கும்.
4. அவர்கள் அளவு நிறுவையில் மோசடி செய்தால்இ அவர்கள் விவசாயத்தில் பாதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு பஞ்சம் ஏற்படும்.
5. அவர்கள் (பொருளியல் கடமையான) ஜகாத்தை மறுத்துவிட்டால்இ மழை பொழிவது நின்றுவிடும்.
ஆதாரம் : இப்னுமாஜா 4019
சிறுகுறிப்பு
நாம் இவ்வுலகில் அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்தால் இவ்வுலகிலேயே அதற்கான தண்டனையை அல்லாஹ் வழங்குவான் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கிறது.
3241. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடத்தில் காட்ட வேண்டிய ஐந்து நற்குணங்கள்
خَمْسٌ تَجِبُ لِلْمُسْلِمِ عَلَى أَخِيهِ : رَدُّ السَّلاَمِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ.
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடத்தில் காட்ட வேண்டிய ஐந்து நற்குணங்கள் உள்ளது. அவை
ஸலாமுக்கு பதிலுரைத்தல்
தும்மியவருக்குப் பதிலளித்தல்
விருந்தழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்
நோயாளியை நலம் விசாரித்தல்
ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லுதல்
ஆதாரம் : சுனன் அபூதாவூது 5030இ ஸஹீஹ் புகாரி 1240.
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களை சமூகமாக வாழுமாறு கற்றுத்தருகிறது. ஒரு மனிதன் பிற மனிதர்களை சார்ந்து வாழக்கூடியவனாகவே அமைக்கப்பட்டிருக்கிறான். அந்த வகையில் ஒரு மனிதன் பிற மனிதர்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை நபியவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஒரு மனிதர் சந்திக்கும்போது மகிழ்ச்சியாக ஸலாம் கூறினால் நாமும் மகிழ்ச்சியோடு பதில் ஸலாம் கூற வேண்டும். அவர் மகிழ்ச்சியாக விருந்து ஏற்பாடு செய்தால் அந்த விருந்தழைப்பை நாமும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மனிதர் தும்மிய பின் அல்ஹம்துலில்லாஹ் கூறினால் யர்கஹகுமுல்லாஹ் என்று அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அதைப்போல் நோயாளியாக இருந்தால் அவரது நோயை விசாரிக்கச் செல்ல வேண்டும். இறந்தால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும்.
3242. கடமையான தொழுகையை நிறைவேறறுவதின் சிறப்பு
خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ عزَّ وجلَّ ، مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلاَّهُنَّ لِوَقْتِهِنَّ وَأَتَمَّ رُكُوعَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ
உபாதா இப்னு சாமித் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹ் (முஸ்லிமான தனது அடியார்கள்மீது) ஐந்து (நேரத்) தொழுகைகளை கடமையாக்கியுள்ளான். யார் தங்கள் உளூவை நன்றாகச் செய்து சரியான நேரத்தில் தொழுகிறார்களோஇ மேலும் தொழுகையில் குனிந்து (ருகூஉ செய்து)இ பணிந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவரை மன்னிப்பான் என்பதற்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். யாராவது அவ்வாறு செய்யவில்லை என்றால்இ அல்லாஹ்வின் தரப்பில் அவருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவன் விரும்பினால் அவரை மன்னிக்கலாம். மேலும் அவன் விரும்பினால் அவரை தண்டிக்கலாம்.
ஆதாரம் : சுனன் அபூதாவூது 425
சிறுகுறிப்பு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமானது தாெழுகயாகும். தொழுகைதான் ஒரு மனிதனை முஸ்லிமா காஃபிரா என்று வேறுபடுத்திப் பார்க்கும் அம்சமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுவது பருவமடைந்த ஆண் பெண் மீது கட்டாயக்கடமையாகும். அவ்வாறு நாம் தொழுதால் அல்லாஹ் நமது பாவத்தை மன்னித்துவிடுவான். அதற்கு அல்லாஹ் உத்திரவாதம் அளிக்கிறான்.
3243. கடமையான தொழுகையை நிறைவேறறுவதின் சிறப்பு
خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ فَمَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ
உபாதா இப்னு சாமித் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹ் (முஸ்லிமான) தன் அடியார்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளை விதித்திருக்கிறான். அவற்றில் எதையும் இழக்காமல்இ அவற்றை இழிவாகக் கருதாமல் யாராவது அவற்றை நிறைவேற்றினால்இ அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாக உத்தரவாதம் அளிக்கிறான். யாராவது அவற்றை நிறைவேற்றவில்லை என்றால்இ அல்லாஹ் அத்தகைய நபருக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டான். அவன் நாடினால் அவரைத் தண்டிக்கலாம் அல்லது சொர்க்கத்தில் அனுமதிக்கலாம்.
ஆதாரம் : சுனன் அபூதாவூது 1420இ சுனனுந் நஸாஈ 461.
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3243ல் இடம்பெற்றுள்ளது. நாம் நமது தொழுகையை இறைவன் காட்டித்தந்த அடிப்படையில் பணிவோடு தொழ வேண்டும். அவ்வாறு தொழுதால் அவன் நமது பாவத்தை மன்னித்து விடுவான்.
3244. கொல்லப்பட வேண்டிய ஐந்து விஷ ஜந்துக்கள்
خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْحَيَّةُ وَالْغُرَابُ الأَبْقَعُ وَالْفَارَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஹரம் என்ற புனித எல்லைக்குள்ளும் மற்ற பகுதிகளிலும் காெல்லப்பட வேண்டிய ஐந்து (விஷ) ஜந்துக்கள் உள்ளன. (அவற்றைக் கொல்வதால் குற்றமில்லை) அவை
பாம்பு
புள்ளிகள் கொண்ட காகம் நீர்க்காகம்
எலி
வெறிநாய்
பருந்து
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1198(2254)
சிறுகுறிப்பு
மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் மேற்கண்ட ஐந்து பிராணிகளை நாம் கொல்ல வேண்டும். அவற்றை மக்காவில் வைத்து கொன்றாலும் தவறில்லை. ஏனெனில் இந்த விஷ ஜந்துக்களை விட மனித உயிர்களே புனிதமானது. அவற்றைக் காப்பதற்கே நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
3245. கொல்லப்பட வேண்டிய ஐந்து விஷ ஜந்துக்கள்
خَمْسٌ قتلهن حِلِّ فِي الْحَرَمِ : الْحَيَّةُ وَالْعَقْرَبُ، والحدأة والْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ.
அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஜந்து (விஷ ஜந்துக்களை) ஹரம் எனும் புனித எல்லைக்குள் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறது.
பாம்பு
தேள்
பருந்து
எலி
வெறிநாய்
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3314. நஸாஈ 2887
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3244ல் இடம்பெற்றுள்ளது.
3246. கொல்லப்பட வேண்டிய ஐந்து விஷ ஜந்துக்கள்
خَمْسٌ كُلُّهُنَّ فَوَاسِقُ يُقْتَلْنَ المحرم، ويُقْتَلْنَ فِي الْحَرَمِ : الْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، والحيَّةُ ، وَالْكَلْبُ الْعَقُورُ وَالْغُرَابُ، .
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஐந்து பிராணிகளில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக் கூடியவையே. ஆகவே அவற்றை 'ஹரம்' எனும் புனித எல்லைக்குள்ளும் மற்ற பகுதிகளிலும் கொன்றாலும் குற்றம் ஏதுமில்லை.
எலிஇ
தேள்இ
பாம்புஇ
வெறிஇ நாய்இ
காகம் ஆகியன தாம் அவை.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3314. திர்மிதீ 837
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3244ல் இடம்பெற்றுள்ளது.
3247. பரிகாரம் இல்லா ஐந்து விஷயங்கள்
خمس ليسَ لَهُنَّ كفَّارة : الشِّرْكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ بِغَيْرِ حَقٍّ وبهتُ المُؤمن، والْفِرَارَ مِنَ الزَّحْفِ ويَمِينِ صَبْرٍ يَقْتَطِعُ بِهَا مالاً بِغَيْرِ حَقٍّ
அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஐந்து விஷயங்களுக்கு பாவப்பரிகாரம் இல்லை :
அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுஇ
அநியாயமாக ஒரு ஆன்மாவைக் கொல்வதுஇ
ஒரு விசுவாசியைப் பற்றி அவதூறு பேசுவதுஇ
போரிலிருந்து தப்பி ஓடுவதுஇ
அநியாயமாக பிறர் சொத்தை எடுத்துக் கொள்வதற்கு உறுதிமொழி எடுத்தல்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 8737
ஹஸன் தரத்தில் அமைந்தது.
சிறுகுறிப்பு
மேற்கூறிய ஐந்து விஷயங்களும் பெரும்பாவமாகும். நற்செயல்கள் செய்வது பெரும்பாவத்திற்கு பரகாரிமாக அமையாது என்பதையே இந்த ஹதீஸ் அறிவிக்கிறது.
நாம் செய்யும் நற்செயல்களால் சின்ன சின்ன பாவங்கள் மன்னிக்கப்படும். ஆனால் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படாது. நமது பெரும்பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால் அதற்காக வருந்த வேண்டும். இனிமேல் அந்த பாவத்தில் ஈடுபடமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். மேலும் அந்த பாவத்திற்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்தால் அல்லாஹ் பெரும்பாவத்தையும் மன்னிப்பான்.
3248. கொல்லப்பட வேண்டிய ஐந்து விஷ ஜந்துக்கள்
خمس منَ الدَّوابِّ كلُّهنَّ فاسق، يُقتلن في الحرم : الْغُرَابُ، وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ، والْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஐந்து வகையான விலங்குகளும் கொடியவையாகும். அவை ஹரம் ஹரம் எனும் புனித எல்லைக்குள்ளும் கொலை செய்யப்பட வேண்டும். அவை
காகம்
பருந்து
தேள்
எலி
வெறிநாய்
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 2256
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3244ல் இடம்பெற்றுள்ளது.
3249. கொல்லப்பட வேண்டிய ஐந்து விஷ ஜந்துக்கள்
خَمْسٌ مِنَ الدَّوَابِّ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ
இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
இஹ்ராமில் இருப்பவர்இ தீங்கிழைக்கக்கூடிய ஐந்து விஷ ஜந்துக்களை கொல்வதினால் அவர்கள் மீது குற்றமில்லை. அவை
காகம்
பருந்து
தேள்
எலி
வெறிநாய்
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 2260
சிறுகுறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3244ல் இடம்பெற்றுள்ளது.
3250. இயற்கை மரபுகள் ஐந்து
خَمْسٌ مِنَ الْفِطْرَةِ الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஃபித்ரா எனும் இயற்கை மரபுகள் ஐந்தாகும்.
விருத்தசேதனம் செய்வது.
மர்ம உறப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது
மீசையைக் கத்தரிப்பது.
நகங்களை வெட்டுவது.
அக்குள் முடிகளை அகற்றுவது
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 6297.
சிறுகுறிப்பு
மேற்கூறிய ஐந்து விஷயங்களும் சுத்தம் தொடர்பானதாகும். இஸ்லாம் தூய்மையை அதிகமாக போதிக்கிறது. தூய்மை ஈமானில் பாதி என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்தவகையில் அழுக்குகளை ஏற்படுத்தும் தேவையற்ற முடிகளை களைந்து உடல்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3251. ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய ஐந்து கடமைகள்
خَمْسٌ مِنْ حَقِّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ رَدُّ التَّحِيَّةِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَشُهُودُ الْجِنَازَةِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَتَشْمِيتُ الْعَاطِسِ إِذَا حَمِدَ اللَّهَ " .
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து உள்ளன.
ஸலாம் எனும் வாழ்த்துச் சொல்லுக்குப் பதில் அளித்தல்இ
(விருந்து) அழைப்பை ஏற்றுக்கொள்வதுஇ
ஜனாஸா எனும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதுஇ
நோயாளிகளை (நலம் விசாரிப்பதற்காகப்) பார்ப்பதுஇ
ஒருவர் தும்மிய பின் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்) என்று கூறினால் அவருக்கு மறுமொழி(யாக யர்ஹகுமுல்லாஹ் (அல்லாஹ் உமக்கு கருணை புரிவானாக) என்று) கூறுதல்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 2445இ சுனன் இப்னுமாஜா 1435
சிறுகுறிப்பு
இதுபற்றி குறிப்பு 3241ல் இடம்பெற்றுள்ளது.
3252. சொர்க்கத்தில் சேர்க்கும் ஐந்து செயல்கள்
خمسٌ مَنْ عَمِلَهَنَّ فِي يَوْمٍ كَتَبَهُ الله مِنْ أهْلِ الجَنَّةِ: مَنْ صامَ يَوْمَ الجُمُعَةِ ورَاحَ إِلَى الجُمُعَةِ وعادَ مَرِيضاً وَشَهِدَ جَنازَةً وأعْتَقَ رَقَبَةً
அபூ சயீத் அல் குத்ரி ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
வாரத்தின் ஒரு நாளில் ஐந்து செயல்களை செய்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இறைவனால் பதிவு செய்யப்படுவார் :
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பவர்இ
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குச் செல்பவர்இ
நோயாளியை (நலம் விசாரிப்பதற்காகப்) பார்ப்பவர்இ
ஜனாஸா எனும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர் மற்றும்
ஒரு அடிமையை விடுவிப்பவர்.
ஆதாரம் : அபூ யஃலா 1044இ இப்னு ஹிப்பான் 2771.
சிறு குறிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்பது தடுத்திருக்கிறார்கள். வியாழன்இ வெள்ளி அல்லது வெள்ளிஇ சனி என்று இரண்டு நாட்கள் சேர்த்து வைக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தனித்து நோன்பு நோற்பது கூடாது.
அதைப்போல் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுவது பருவமடைந்த ஆண்கள் மீது கடமையாகும்.
நோயாளியை நலம் விசாரிப்பதும்இ ஜனாஸாவில் கலந்து கொள்வதும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் உள்ளவையாகும்.
அடிமையை விடுதலை செய்வது மிகப்பெரும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.
மேற்கூறிய ஐந்து காரியங்களையும் ஒரே நாளில் செய்தால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராக பதிவு செய்யப்படுவார்.
3253. சொர்க்கத்தில் சேர்க்கும் ஐந்து செயல்கள்
خمسٌ مَنْ فعل واحِدةً مِنْهُنَّ كان ضامناً على الله : من عاد مريضاً، أو خرج غازياً، أو دخل على إمامه يُريد تعزيره وتوقيره، أو قعد في بيته فسلم الناس منه ، وسلم من الناس.
முஆத் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஐந்து செயல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செய்பவர்களுக்கு இறைவன் (சொர்க்கத்திற்கான) உத்தரவாதத்தை அளிப்பான்:
நோயாளியை (நலம் விசாரிப்பதற்காக)ப் பார்ப்பவர்இ அல்லது
(இறைவனின் பாதையில் ஜிஹாத் எனும்) போருக்கு செல்பவர்இ அல்லது
தனது இமாமை (ஆட்சித் தலைவரை) ஆதரிக்கவும் கண்ணியப்படுத்தவும் விரும்பி அவரை நோக்கி சென்றவர் அல்லது
தனது வீட்டில் அமர்ந்து (மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது.) மக்கள் அவரிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.
மேலும் அவர் மக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 22146
சிறுகுறிப்பு
நோயாளியை நலம் விசாரிப்பது ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்
ஜிஹாத் எனும் அறப்போரில் கலந்து கொள்வதும் மிகப்பெரும் நல்லமலாகும். அப்போரில் மரணித்தால் ஷஹீத் எனும் அந்தஸ்து கிடைக்கும். ஷஹீதுகளுக்கு மண்ணறை கேள்விகணக்குகள் கிடையாது. அவர்கள் நேரிடையாக சொர்க்கத்தில் நுழைவார்கள்.
ஆட்சித்தலைவருக்கு கட்டுப்படுவது அவசியமாகும். ஆட்சித்தலைவருக்கு எதிராக கிளர்ச்சி செய்வது தடை செய்யப்பட்டதாகும். மார்க்கத்திற்கு முரணாக நடக்குமாறு ஏவாத வரையில் ஆட்சியாளின் அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்படுவது கட்டாயமாகும். ஆட்சியாளரை கண்ணியப்படுத்துவது நல்லமலாகும்.
நம்மால் பிற மக்களுக்கு தீங்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிமின் கையாலும் நாவாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக ஒருவர் தனது வீட்டில் அடைந்து கிடப்பதே சிறந்ததாகும்.
3254. ஐந்து நிலைகளில் ஏதேனும் ஒன்றில் இறப்பவர் ஷஹீதாவார்
خَمْسٌ مَنْ قُبِضَ فِي شَىْءٍ مِنْهُنَّ فَهُوَ شَهِيدٌ : الْمَقْتُولُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْغَرِقُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَبْطُونُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَطْعُونُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالنُّفَسَاءُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ
உக்பா இப்னு ஆமிர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
ஐந்து நிலைகளில் ஏதேனும் ஒன்றில் இறப்பவர் ஷஹீதாவார்:
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுபவர் ஷஹீதாவார்இ
அல்லாஹ்வின் பாதையில் (நீரில்) மூழ்கி இறப்பவர் ஷஹீதாவார்இ
அல்லாஹ்வின் பாதையில் வயிற்று நோயால் இறப்பவர் ஷஹீதாவார்.
அல்லாஹ்வின் பாதையில் தொற்று நோயால் இறந்தவர் ஷஹீதாவார்இ
அல்லாஹ்வின் பாதையில் பிரசவித்தின் போது இறக்கும் பெண் ஷஹீதாவார்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 5733இ அஹ்காமுல் ஜனாயிஸ் 38இ சுனனுந் நஸாயீ 3163.
3255. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஐந்து மறைவான விஷயங்கள்
خمس لا يَعْلَمُهُنَّ إلا الله : إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى ٱلْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِى نَفْسٌۭ مَّاذَا تَكْسِبُ غَدًۭا ۖ وَمَا تَدْرِى نَفْسٌۢ بِأَىِّ أَرْضٍۢ تَمُوتُ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌۢ⭘
புரைதா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஐந்து மறைவான விஷயங்கள் உள்ளன. அவை :
அல்லாஹ்வுக்கு மட்டுமே (உலக அழிவு) நேரத்தைப் பற்றிய அறிவு இருக்கிறதுஇ
அவனே மழையை இறக்குகிறான். (மழை எப்போது பொழியும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்)
கர்ப்பப்பைகளில் உள்ளதை அவன் மட்டுமே அறிவான்.
நாளை எதை சம்பாதிக்கப்போகிறோம் என்பதை எந்த ஆன்மாவும் அறியாது. (அல்லாஹ்வுக்கு மட்டுமே அது தெரியும்)
எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை எந்த ஆன்மாவும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ்வே நன்கறிந்தவனும் ஞானமிக்கவனுமாவான். (அல் குர்ஆன் - 31 : 34)
ஆதாரம் : முஸ்னது அஹமது 23036இ பஸ்ஸார் 4409
சிறுகுறிப்பு
கருவறையில் இருப்பது ஆணாஇ பெண்ணா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும்
ஒவ்வொரு மனிதனும்இ நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை அறியமாட்டார்கள். நாளை என்பது மனிதனுக்கு நிச்சயமில்லாது.
ஒவ்வொரு மனிதனும்இ எப்போது மரணிப்போம்? எந்த இடத்தில் வைத்து மரணிப்போம்? என்பதை அறியமாட்டார்கள்
மழை பொழியுமா? பொழியாதா என்பதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்
உலகம் எப்போது அழியும்? என்பதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
3256. இரவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை
خروا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ المساء؛ فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ
ஜாபிர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள்
(இருட்டத் தொடங்கும்) மாலை வேளையில் (உங்கள் உணவுப்) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) கட்டி வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு பூட்டி விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் உங்களோடு) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில்இ (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்கின்றன. (ஆகவே அவற்றால் உங்கள் உணவுப் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்) மேலும்இ நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில்இ தீங்கிழைக்கக் கூடியது (விளக்கின்) திரியை இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3316.
சிறுகுறிப்பு
இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்னால் உணவுப் பாத்திரத்தையும் தண்ணீர் பாத்திரத்தையும் மூடி வைக்க வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில்தான் கறப்பான்பூச்சிஇ பள்ளி போன்ற சில நோய் ஏற்படுத்தும் உயிரினங்கள் சுற்றிவரும். அவைகள் நமது உணவுக்குள் விழுந்துவிட்டால் அதில் நோய் ஏற்படும். ஆகவே இரவு நேரத்தில் அனைத்தையும் மூடி வைப்பது நல்லதாகும்.
அதைப்போல் இரவு நேரத்தில் சிறு குழந்தைகளையும் வெளியில் அனுப்பக்கூடாது. அவர்களை வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
3257. கிலாஃபத் ஆட்சி எது வரையில் இருக்கும்
خِلاَفَةُ النُّبُوَّةِ ثَلاَثُونَ سَنَةً ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ مَنْ يَشَاءُ
ஸஃபீனா ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நபிவழி அடிப்படையிலான கிலாஃபத் ஆட்சி முப்பது வருடங்கள் நீடிக்கும். பின்னர் அல்லாஹ் தான் நாடியோர்களுக்கு மன்னர் எனும் ஆட்சிப் பதவியை வழங்குவான்.
ஆதாரம் : அபூதாவூது 4646
சிறுகுறிப்பு
கிலாஃபத் எனும் நபிவழியிலான ஆட்சி முப்பது வருடங்கள் நீடிக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். அந்தவகையில்
அபூபக்கர் ரலி 2 வருடங்கள் மூன்று மாதங்கள் 10 நாட்கள்
உமர் ரலி 10 வருடங்கள் ஆறு மாதங்கள் எட்டு நாட்கள்
உஸ்மான் ரலி 11 வருடங்கள் பதினோரு மாதங்கள் ஒன்பது நாட்கள்
அலீ ரலி நான்கு வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஏழு நாட்கள் ஆட்சி செய்தார்கள்.
3258. சிறந்த ஆட்சியாளர்
" خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ".
அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜய் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உங்கள் ஆட்சித் தலைவர்களில் சிறந்தவர்கள் யாரெனில்இ (குடிமக்களாகிய) நீங்கள் (ஆட்சியாளராகிய) அவர்களை நேசிப்பீர்கள். (அதைப்போல்) அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீர்கள். அவர்களும் உங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.
உங்கள் ஆட்சித்தலைவர்களில் கெட்டவர்கள் யாரெனில்இ நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களை சபிப்பீர்கள். அவர்கள் உங்களை சபிப்பார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 3778.
சிறு குறிப்பு
மார்க்கம் பற்றியும் உலக காரியங்கள் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். மனிதர்கள் சமூகமாக இருப்பதால் அவர்களுக்கு ஆட்சியும் தலைமையும் அவசியம். ஆகவேதான் நபியவர்கள் ஆட்சி பற்றியும் ஆட்சியாளர் பற்றியும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேற்கண்ட நபிமொழியில் சிறந்த ஆட்சியாளர் யார்? கெட்ட ஆட்சியாளர் யார்? என்பதை நபியவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களை நேசிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். தனது குடிமக்களின் நலன்களுக்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
நபியவர்கள் மதினாவின் ஆட்சியாளராக இருந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களை அதிகமாக நேசிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ‘மக்களால் தனக்கு தீங்கு நேர்ந்தபோதும்இ கோபம் கொள்ளாமல் மக்கள் மீது அன்பு செலுத்தக்கூடியவராக இருந்தார்கள்.’
ஒருமுறை மக்கள் நபியவர்களிடம் வந்து தர்மப் பொருட்களை எடுத்தார்கள். அப்போது நபியவர்களை தெரியாமல் முள்மரத்தில் தள்ளிவிட்டார்கள். அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாமல் என்னிடத்தில் எவ்வளவு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் உங்களுக்குத் தந்துவிடுவேன். நான் கஞ்சனாக இருக்கமாட்டேன் என்று கூறினார்கள். (பார்க்க புஹாரி 2821) இதுபோன்று ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களை நேசிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
ஒருமுறை மதினாவில் பஞ்சம் ஏற்பட்டது. பருவ மழை பாெய்த்து. ஒரு மனிதர் நபியவர்களிடத்தில் வந்து முறையிட்டார். நபியவர்கள் மழைக்காக பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் மழை பெய்தது. (பார்க்க புஹாரி 933) அதைப்போல ஒருமுறை மதினாவில் காய்ச்சல் பரவியது. பல சஹாபாக்கள் காய்ச்சலினால் வேதனையடைந்தார்கள். அப்போது நபியவர்கள் ‘மதினாவை விட்டும் காய்ச்சல் நீங்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தார்கள். இவ்வாறு பல சந்தர்பங்களில் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதுபோன்று ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களின் நலனிற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அதுபோல குடிமக்களும் ஆட்சியாளர்களை நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளருக்காக பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
ஆட்சியாளர்களும் மனிதர்கள்தான். அவர்களிடத்திலும் சில தவறுகள் ஏற்படும். அதை தக்க முறையில் அவர்களிடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆட்சியாளருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆட்சியாளர் தெளிவான இறைமறுப்பில் ஈடுபடாதவரை அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்யக்கூடாது.
ஆட்சியாளர் தனது கடமைகளையும் குடிமக்களின் உரிமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். குடிமக்களும் தங்களது கடமைகளையும் ஆட்சியாளர்களின் உரிமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அமைதி ஏற்படும்.
3259. ஒழுக்கத்தின் சிறப்பு
خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا.
இப்னு உமர் ரலி அறிவிப்பதாவது : நபி (ஸல்) கூறினார்கள் : நல்லொழுக்கத்தில் சிறந்தவராக இருப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 3759
சிறு குறிப்பு
மனிதனை சிறந்தவனாக்கும் அனைத்து வழிமுறைகளையும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அதில் தலையாயது நல்லொழுக்கம்தான். ஒரு முஃமின் தன்னால் முடிந்தவரை நல்லொழுக்கத்தை பேணக்கூடியவனாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் நபியவர்களின் சிறப்புகளைப் பற்றிக் கூறும் போதுஇ ‘உண்மையில் நீங்கள் மகத்தான நற்குணம் கொண்டவராக இருக்கிறீர்கள்’ என்று கூறுகிறான்.
நபியவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்டவார்த்தை பேசுபவராக இருந்ததில்லை என்றும் மக்களிலேயே அவர்கள்தான் மிகவும் நற்குணமுடையவர்களாக திகழ்ந்தார்கள் என்றும் சஹாபாக்கள் சான்று பகிர்கிறார்கள்.
நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள் (பார்க்க் முஸ்னது அஹமது)
பிறரிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுதல்இ இரக்கம் காட்டுதல்இ உறவுகளைப் பேணுதல்இ நல்ல வார்த்தைகள் பேசுதல்இ பொறுமையாக இருத்தல் என்று ஏராளமான நற்குணங்கள் உள்ளன. அவற்றை நாம் நம்மால் முடிந்த அளவிற்கு பூரணமாக நிறைவேற்ற முயல வேண்டும்.
3260. சிறந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
خِيَارُكُمْ أَحَاسِنَكُمْ أَخْلاَقًا الموَطَّؤونَ أكنافًا، و شرارُكم الثَّرْثَارُونَ الْمُتَفَيْهِقُونَ، الْمُتَشَدِّقُونَ
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் மக்களிடத்தில் அன்பாகவும் பழகுபவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அதிகம் பேசுபவர்களும் வதந்திகளை பரப்புபவர்களும் திமிர் பிடித்தவர்களுமே எனது சமுதாயத்தில் கெட்டவர்கள் ஆவர்.
ஆதாரம் : முஸ்னது ஹாரிஸ் 849இ முஸ்னது அஹமது 17278
சிறு குறிப்பு
ஒழுக்கக் குணம் முஸ்லிம்களுக்கு இன்றியமையா குணமாகும். ஒரு முஸ்லிம் தனது சிந்தனைஇ சொல்இ செயல் ஆகிய மூன்றிலும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
அன்புஇ பாசம்இ பொறுமைஇ இரக்கம்…. போன்றவை சிந்தனையின் ஒழுக்கத்திற்கு உதாரணமாகும்.
நல்ல வார்த்தைகள் பேசுவதுஇ பிறருக்கு ஆறுதல் கூறுவதுஇ சிறந்த அறிவுரைகள் வழங்குவதுஇ சலாம் கூறுவது…. போன்றவை சொற்களின் ஒழுக்கத்திற்கு உதாரணமாகும்.
பிறருக்கு உதவி செய்தல்இ வழி தெரியாதவருக்கு வழியைக் காட்டுதல்இ பசித்தவருக்கு உணவளித்தல்இ நோயாளியை சந்தித்தல்.. போன்றவை செயல்களின் ஒழுக்கத்திற்கு உதாரணமாகும்.
மக்களிடத்தில் அன்பாகவும் பாசமாகவும் பழகக்கூடியவராக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் முஸ்லிம்களிடத்தில் அன்பு செலுத்தக்கூடியவராக அவர் இருக்க வேண்டும்.
அதுபோல் ஒரு முஸ்லிம் கெட்ட விஷயங்களிலிருந்து விலகியிருக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். அதிகமாக பேசுவதும் தேவையற்று பேசுவதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் முடிந்த அளவிற்கு தனது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
ஏனெனில் கெட்ட வார்த்தை பேசுவதும் அவதூறுகள்இ வதந்திகள் போன்றவற்றில் ஈடுபடுவதும் நமக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அவை தீயவர்களின் குணங்களாகும்.
ஆகவேதான் ‘ஒரு முஸ்லிம் பேசினால் நல்லதையே பேச வேண்டும். இல்லையெனால் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்’ என்று நபியவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
3261. கடனை சிறந்த முறையில் அடைத்தல்
خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً لِلدَيْنِ
அபீ ஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் :(தான் வாங்கிய) கடனை சிறந்த முறையில் திருப்பி அடைப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 2390இ திர்மிதீ 1316.
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் கடன் வாங்குவதை அனுமதித்திருக்கிறது. ஆனால் அவற்றை வலியுறுத்தவில்லை. ஒரு முஃமின் தன்னால் முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
ஒருவேளை கடன் வாங்கினாலும் அவற்றை எவ்வளவு சீக்கிரம் அடைக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்க முயல வேண்டும். ஏனெனில் நபியவர்கள் கடனைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
கடன் வாங்கி அடைக்காமல் மரணித்தவருக்கு நபியவர்கள் ஜனாஸா தொழுகையை நடத்தமாட்டார்கள். ஒரு மனிதன் ஷஹீதாக மரணித்தாலும் அவர் கடன் வாங்கி அடைக்காமல் இறந்திருந்தால் அது மன்னிக்கப்படாது என்று நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
ஆக கடன் வாங்கும் விஷயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதுபோல் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் போது சிறந்த முறையில் செலுத்த வேண்டும். நபியவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். அவற்றை திரும்பக் கொடுக்கும் போது சற்றுக் கூடுதலாகக் கொடுத்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு கடனை பெற்றோமோ அதைவிட சற்று கூடுதலாக திரும்பக்கொடுப்பது சிறந்தது.
3262. நீண்ட ஆயுளும் நல்லொழுக்கமும்
خِيارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا، و أَحْسَنُكُمْ أَخْلَاقًا
அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : நீண்ட காலமும் ஒழுக்கத்தோடும் வாழ்பவர் உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : பஸ்ஸார் 8559இ இப்னு ஹிப்பான் 484
சிறு குறிப்பு
ஒழுக்கத்தோடு வாழ்வது இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும். ஆகவேதான் இஸ்லாத்தில் ஒழுக்கத்தின் சிறப்புகள் பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
நமது ஒழுக்கம் அதிகரிக்க அதிகரிக்க இறைவனின் நெருக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஒரு மனிதன் இவ்வுலகில் நீண்ட காலம் ஒழுக்கத்தாேடு வாழ்ந்தால் அவன் இறைவனை அதிகமாக நெருங்கிவிடுவான்.
நமது ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க நமது ஒழுக்கத்தின் அளவும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு சிறப்பு ஏற்படும்.
3263. நீண்ட ஆயுளும் நல்லமலும்
خِيارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمارًا، وأَحْسَنُكُمْ أَعْمالًا
ஜாபிர் ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : நீண்ட காலம் நல்லமல்கள் செய்து வாழ்பவர் உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 7212
சிறு குறிப்பு
3262 ல் இடம்பெற்ற ஹதீஸும் இந்த ஹதீஸும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறது.
நல்ல செயல்பாடுகளைச் செய்து அதிகமான வருடங்கள் இந்த பூமியில் வாழ்ந்து வந்தால் நமது சிறப்புகள் அதிகரிக்கும்.
நாம் ஒரு நல்ல காரியங்களைச் செய்கிறோம். அதற்குண்டான கூலிகள் நமக்கு வழங்கப்படும். அதுபோல நாம் செய்யும் நற்காரியங்களைப் பார்க்கும் மற்றவர்களும் அதே நல்ல காரியத்தைச் செய்தால் அவர்கள் செய்ததற்கான கூலியும் நமக்கு வழங்கப்படும். ஆக ஒரே காரியத்திற்காக நமக்கு இரண்டு விதமான கூலிகள் வழங்கப்படும்.
நாம் செய்ததற்கான கூலி மற்றும் நம்மை பார்த்து மற்றவர்கள் செய்ததற்கான கூலி ஆகிய இரண்டு கூலிகள் நமக்கு கிடைக்கும்.
நாம் நீண்ட வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்து பல நல்லறங்கள் செய்தால் அந்த நன்மையும் அதை யாரெல்லாம் பார்த்து செய்து வருகிறார்களோ அவர்களுடைய கூலிகளும் நமக்கு வழங்கப்படும். இதனால் நமது சிறப்புகள் மேலும் மேலும் உயரும்.
3264. தொழுகையில் சிறந்து விளங்குபவர்
خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلاَةِ
இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : தோள்கள் பணிந்த நிலையில் இறைவனை தொழுது வருபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : அபூதாவூது 672
ஹஸன் தரத்தில் அமைந்தது.
சிறு குறிப்பு
தொழுகை இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சமாகும். இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாம் தூணாக இந்த தொழுகையே உள்ளது. தொழுகைதான் வணக்க வழிபாடுகளின் தாய்.
ஒருவனிடத்தில் தொழுகை இல்லையென்றால் அவனுடைய ஈமான் ஆட்டம் கண்டுவிடும். அதனால்தான் நபியவர்கள்இ ‘முஃமின்களுக்கும் காஃபிர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தொழுகைதான்’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். மறுமையில் கேட்கப்படும் கேள்விகளில் முதல் கேள்வியாக இந்த தொழுகையே இருக்கும்.
இந்த தொழுகையை பணிவோடும் மென்மையாகவும் நிறைவேற்றக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். நம்மை பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக தொழாமல் அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் நாம் தொழ வேண்டும். தொழுகையில் இத்தகைய இஹ்சான் கட்டாயமாகும்.
இந்த தொழுகையின் மூலம் நமக்கு பெருமையோ அகந்தையோ ஏற்பட்டுவிடக்கூடாது. இதன்மூலம் நமக்கு பணிவுதான் அதிகரிக்க வேண்டும்.
அதைப்போல் அவசரம் அவசரமாகவும் தொழுகையை நிறைவேற்றக் கூடாது. நிதானமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவசரமாக தொழுவது தொழுகையை திருடுவதாக அமையும் என்று நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
3265. மனைவியிடத்தில் சிறந்தவர்
خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : உங்கள் பெண்களிடத்தில் (தன் மனைவியிடத்தில்) சிறந்தவராக இருப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : சுனன் இப்னு மாஜாஇ 1622இ 1978
சிறு குறிப்பு
பெண்களுக்கான உரிமையை சரியாகவும் நிறைவாகவும் வழங்கும் மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாத்தில் பெண்களின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸில் மனைவியிடத்தில் கருணையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.
ஒரு கணவன் தனது மனைவியை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். அவன் உண்பது போன்று மனைவிக்கு உண்ண கொடுக்க வேண்டும். அவன் உடுத்துவது போன்று அவளுக்கும் உடுத்த ஆடைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். வீட்டு வேலைகளில் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவ வேண்டும்.
பெண்களிடத்தில் சில பிழைகள் ஏற்படும். அவற்றைப் பாெறுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்கள் விலா எழும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் சிறு தவறுகளை புறக்கணித்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
3266. குடும்பத்தாரிடத்தில் சிறந்தவர்
خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ
அபூ கப்ஷா அல் அன்மாரி ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : தனது குடும்பத்தாரிடத்தில் சிறந்தவராக இருப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 3895இ தபரானி 22ஃ341
சிறு குறிப்பு
இந்த ஹதீஸும் மனைவியிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஏனெனில் மனைவி என்பவள் தனது தாயைஇ தந்தையைஇ சகோதரர்களை விட்டுவிட்டு தனது கணவனிற்காக வருகிறாள். தனது உடலின் சிறு பகுதிகள்கூட வெளியே தெரியாமல் மறைத்து வைத்து பாதுகாத்தவள் தனது கணவனிற்கு தனது முழு உடலையும் அர்ப்பணிக்கிறாள்.
தனது கணவனின் மூலம் உண்டாகும் குழந்தையை தனது வயிற்றில் சுமக்கிறாள். பின் மரண வலியை அனுபவித்து பிள்ளையை பெற்றெடுக்கிறாள். அதன் பிறகு பாலூட்டுகிறாள். இந்த மூன்று நிலைகளிலும் தனது உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்கிறாள்.
ஆகவே கணவன்மார்கள் இதையெல்லாம் மனதிற் கொண்டு தங்களது மனைவிகளிடத்தில் அன்பாகவும் இரக்க குணத்தோடும் நடந்துகொள்ள வேண்டும்.
குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்வது முஸ்லிம்களின் கடமையாக உள்ளது.
தாய் தந்தையை நல்ல முறையில் பேணி வாழ வேண்டும். அவர்கள் வயது முதிர்ந்த நிலையிலிருந்தால் அவர்களிடத்தில் கூடுதல் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தரும் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நல்ல வார்த்தைகளையே அவர்களிடம் கூற வேண்டும். சிறந்த பணிவிடைகளை அவர்களுக்கு செய்ய வேண்டும்.
நமது குழந்தைகளிடமும் அன்போடும் இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மார்க்கத்தை சரியான முறையில் போதிக்க வேண்டும். தவறிழைக்கும் போது அவர்களை கண்டிக்க வேண்டும்.
3267. மார்க்க அறிவைப் பெற்றவர்
خِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا
அபூ ஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : உங்களில்
அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின் மார்க்க அறிவைப் பெற்றிருந்தால் அப்போதும் அவர்கள் சிறந்தவர்களாயிருப்பார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 3374.
சிறு குறிப்பு
இந்த நபிமொழி அறிவின் சிறப்பைப் பற்றி எடுத்துரைக்கிறது.
ஒரு மனிதர் காஃபிராகவும் அவர்களது மக்களிடத்தில் மதிப்பிற்குரியவராகவும் இருக்கிறார். அவர் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால் அவரின் மதிப்பு மேலும் உயரும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு மனிதன் பிறப்பின் மூலமாக சிறப்பை பெற முடியாது. அவன் பெற்றிருக்கும் அறிவின் மூலமாகத்தான் அவனால் சிறப்பை பெற முடியும்.
மார்க்கம் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு இன்றியமையாதது. கல்வியின் சிறப்புகள் இஸ்லாத்தில் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. முதன்முதலாக இறக்கப்பட்ட இக்ரஃ சூரா கல்வியின் சிறப்பை பறைசாற்றுகிறது. அல்லாஹ் திருமறையில் கல்வியாளர்களை சிறப்பித்துக் கூறியுள்ளான்.
கல்வி கற்பது முஸ்லிம்களுக்கு கட்டாயக்கடமை என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் கல்வி இல்லாமல் ஒருவனால் வணக்க வழிபாடுகளை சரியாக நிறைவேற்ற முடியாது.
அக ஒரு முஸ்லிம் தன்னால் இயன்ற அளவு கல்வி கற்க முயற்சி செய்ய வேண்டும்.
3268. குர்ஆனை கற்று கற்பிப்பவர்
خياركم مَنْ تَعَلَّمَ القُرآنَ وعَلَّمَهُ.
உஸ்மான் இப்னு அஃப்ஃபான் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : குர்ஆனைத் தாமும் கற்று அதை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 5028.
அலீ பின் அபீதாலிப் ரலி அறிவிக்கும் செய்தி திர்மிதீ 2909இ சஅது இப்னு அபீவக்காஸ் ரலி அறிவிக்கும் செய்தி இப்னு மாஜா 177 ல் இடம்பெற்றுள்ளது.
சிறு குறிப்பு
இறைவன் மனிதர்களுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் தலையாயது திருமறைக் குர்ஆன் ஆகும்.
திருமறைக் குர்ஆனில் மனிதர்களுக்குத் தேவையான முக்கியமான அறிவுரைகளை இறைவன் வழங்கியுள்ளான். ஒரு மனிதன் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கு திருமறைக் குர்ஆன் மிகவும் அவசியமாகும்.
ஆக திருமறைக் குர்ஆனை ஒரு முஸ்லிம் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிலுள்ளபடி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
‘நபியவர்களின் குணாதிசயங்கள் திருமறைக் குர்ஆனாகவே இருந்தது’ என்று அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள். திருமறைக் குர்ஆனாகவே நபியவர்கள் வாழ்ந்தார்கள். அதுபோல ஒவ்வொரு முஸ்லிமும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
திருமறைக் குர்ஆனை நாம் கற்றுக் கொண்டதோடு பிற மக்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதில் முதல் முன்னுரிமை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். நமது வீட்டிலுள்ளவர்களுக்கு திருமறைக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அது போல மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
3269. பெயர்களில் சிறந்தது
خَيْرُ أَسْمَائِكُمْ عَبْدُ الَّلهِ، و عَبْدُ الرَّحْمنِ، وَ الحَارِثُ
அபூ சப்ரா யசீத் இப்னு மாலிக் அல் ஜஅஃபி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்கள் பெயர்களில் சிறந்தது அப்துல்லாஹ்இ அப்துர் ரஹ்மான் மற்றும் அல் ஹாரிஸ் ஆகியவையாகும்.
ஆதாரம் : முஸ்னது அபீ யஃலா 739ஃ2
சிறு குறிப்பு
ஒரு மனிதனை அடையாளப்படுத்தக்கூடியதாக பெயர்கள் உள்ளது. ஆகவே முஸ்லிம்கள் சிறந்த பெயர்களையே சூட்ட வேண்டும்.
அதிலும் இறைவனின் அடிமை என்று பாெருள்படும் பெயர்கள் சிறந்த பெயர்களாகும். அப்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று அர்த்தம். அப்துர் ரஹ்மான் என்றால் அருளாளனின் அடிமை என்று அர்த்தம். இரண்டும் இறைவனின் அடிமை என்ற அர்தத்தை தருவதாகும். இப்படிப்பட்ட பெயர்களை சூட்டுவது சிறந்ததாகும்
அதுபோல அல்ஹாரிஸ் என்ற பெயர் உழவன் என்ற அர்தத்தைத் தரும். இதுபோன்ற சிறந்த பெயர்களை நாம் சூட்ட வேண்டும்.
3270. நண்பர் மற்றும் அண்டை வீட்டாரிடத்தில் சிறந்தவர்
خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللهِ خَيْرُهُمْ لِجَارِهِ.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) கூறினார்கள் : தனது தோழர்களிடத்தில் சிறந்தவராக இருப்பவரே அல்லாஹ்விடத்தில் சிறந்த தோழராக இருப்பார். தனது அண்டை வீட்டாரிடத்தில் சிறந்தவராக இருப்பவரே அல்லாஹ்விடத்தில் சிறந்த அண்டை வீட்டாராக இருப்பார்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 1944
சிறு குறிப்பு
மனிதனுக்கு தோழமை என்பது மிகவும் அவசியமாகும். நபியவர்கள் தோழமையைப் பற்றி நிறைய வலியுறுத்தியிருக்கிறார்கள்.
:ஒரு மனிதன் தனது நண்பனின் மார்க்கத்தில்தான் இருப்பான்’ என்றும் ஆகவே ‘அவன் தனது நண்பனை நல்ல முறையில் தேர்வு செய்ய வேண்டும்’ என்றும் நபியவயர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆகவேதான் நல்ல நண்பனுக்கு கஸ்தூரி கடை வைத்திருப்பவனையும் கெட்ட நண்பனிற்கு கொல்லப்பட்டறை வைத்திருப்பவனையும் நபியவர்கள் உதாரணமாக கூறியிருக்கிறார்கள்.
அந்தவகையில் ஒரு முஃமின் நல்லவர்களையே தனது நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும்.
அதுபோல நாமும் நமது நண்பர்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். நமது நண்பர்களை சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். ஒன்றாக தொழுகைக்கு செல்வதுஇ பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
நாம் எந்த அளவிற்கு நமது நண்பர்களிடத்தில் சிறந்தவராக இருக்கிறோமோ அந்த அளவிற்கு அல்லாஹ்விடத்திலும் சிறந்தவராக இருப்போம்.
அதுபோல நமது அண்டை வீட்டாரிடத்திலும் நாம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் ஜிப்ரீல் அலை மூலமாக நபியவர்களுக்கு அண்டை வீட்டாரைக் குறித்து அதிகமாக வலியுறுத்தியிருக்கிறான்.
‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்’ என்று நபியவர்கள அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அந்த வகையில் நாம் நம் அண்டைவீட்டாரிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டால் இறைவனின் நெருக்கத்தைப் பெறலாம்.
3271. சிறந்த இடமும் மோசமான இடமும்
خَيْرُ الْبقاعِ الْمَسَاجِدُ، وَشَرُّ الْبقَاعِ الأَسْوَاقُ
இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : (அல்லாஹ்வின் பார்வையில்) சிறந்த இடம் மஸ்ஜிதாகும். மிக மோசமான இடம் கடைத் தெருவாகும்.
ஆதாரம் : இப்னு ஹிப்பான் 1599
ஹஸன் தரத்தில் அமைந்தது.
சிறு குறிப்பு
ஒரு மனிதனின் செயல்பாடுகளில் மிகமிகச் சிறந்தது இறை நினைவும் இறைவணக்கமுமாகும். இறைவணக்கத்தை நிறைவேற்றும் இடமாகவும் இறைவனை நினைவூட்டும் இடமாகவும் பள்ளிவாசல்கள் உள்ளன. மேலும் பள்ளிவாசல்கள் மன அமைதியை ஏற்படுத்தும் ஒரு இடமாகவும் உள்ளது. ஆகவேதான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த இடமாக பள்ளிவாசல்கள் உள்ளன.
பல பள்ளிவாசல்களை நபிமார்களே கட்டியிருக்கிறார்கள். முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளிவாசல் கஅபதுல்லாஹ்வாகும். அதை இப்ராஹிம் நபியும் இஸ்மாயில் நபியும் புணர்நிர்மாணம் செய்தார்கள். நபியவர்கள் காலத்திலும் கஅபத்துல்லாஹ் இடித்து கட்டப்பட்டது. அதில் நபியவர்கள் பங்கேற்றார்கள்.
நபியவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு சென்றதும் செய்த முதல் காரியம் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை கட்டியதாகும். இதற்காக நபியவர்கள் செங்கற்களை சுமந்து சென்றிருக்கிறார்கள்.
அதனால்தான் ‘யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆக ஒரு முஸ்லிம் தன்னால் முடிந்த அளவிற்கு பள்ளிவாசலிற்கு சென்று இறைநினைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கு குர்ஆன் ஓதுதல்இ கற்றல்இ கற்பித்தல்இ பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
அதுபோல இறைவன் பார்வையில் மிக மோசமான இடமாக கடைத் தெரு உள்ளது. ஏனெனில் கடைவீதி என்பது ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் ஒரு இடமாக உள்ளது. இங்கு பொய்களும் மோசடிகளும் ஏமாற்றுக்களும் அதிகம் நடைபெறும். ஷைத்தானின் தூண்டுதல் இங்கு அதிகம் ஏற்படும்.
3272. தாபிஈன்களில் சிறந்தவர்
خيرُ التَّابِعِينَ أُوَيْسُ
அலீ இப்னு அபீதாலிப் ரலி அறிவித்தார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் (அல் கர்னி) ஆவார்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 4970
சிறு குறிப்பு
உவைஸ் அல் கர்னி என்பவர் முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் இவர் முஹம்மது நபியை சந்தித்ததில்லை. ஆதலால் இவர் தாபிஈன்களைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவரைப் பற்றி நபியவர்கள் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.
இவரின் தனிச்சிறப்பம்சம் என்னவெனில்இ இவர் தனது தாயிற்கு சிறந்த முறையில் பணிவிடை செய்யக்கூடியவராக இருந்தார். ஆதலால் இவரது பிரார்த்தனைக்கு இறைவன் சிறப்புகளை வழங்கினான். இவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு ஒன்றைக் கூறினால் அதை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்றும் இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றி வைப்பான் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆகவே நாம் நமது பெற்றோர்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டால் நாமும் சிறந்தவர்களாக மாறுவோம். நம்முடைய பிரார்த்தனைக்கும் இறைவன் சிறப்புகளை வழங்குவான்.
3273. சிறந்த குதிரை
خيرُ الخيلِ الأَدْهَمُ ، الأَقْرحُ الأَرْثَمُ ، المحجَّلُ ثلاثٍ؛ مُطلقُ اليمينِ ، فإن لم يكن أَدْهمَ فكَمِيتٌ على هذه الشِّيَةِ
அபூ கதாதா ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : குதிரைகளில் சிறந்தது கருப்பு நிறத்தில் அமைந்த குதிரையாகும். அதன் நெற்றியில் வெள்ளைப் பொட்டு இருக்கும். மேல் உதடு மற்றும் மூக்கில் வெண்மையிருக்கும். நெற்றியில் வெண்மையும்இ ஜமூன்றுஸ கால்களில் சில வெள்ளை நிறமும் கொண்ட கருப்பு குதிரை அடுத்த சிறந்த குதிரையாகும். அதன் வலது காலின் ஒன்றில் வெண்மை இருக்காது. குதிரை கருப்பு நிறத்தில் இல்லை என்றால்இ குமைத் என்ற குதிரை சிறந்ததாகும். (அதாவது காதுகளில் கருமையும் உடல்களில் சிவப்பும் கொண்ட குதிரை)
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 1696
சிறு குறிப்பு
நபிகள் நாயகத்தின் காலத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளது. இந்த போர்களில் குதிரைக்கு முக்கிய பங்குண்டு. போர்க்களத்தில் குதிரை வீரர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள். ஆதலால்தான் நபியவர்கள் குதிரையின் சிறப்பம்சத்தை விளக்குகிறார்கள். எப்படிப்பட்ட குதிரைகள் போருக்குத் தகுந்த சிறந்த குதிரைகள் என்பதை நபியவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
நபியவர்கள் குதிரைகளை பல்வேறு தரங்களாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
முதல் தரம் : கருப்பு நிறத்தில் அமைந்த குதிரை. நெற்றியில் ஒரு வெள்ளைப் பொட்டு இருக்கும். மேல் உதட்டிலும் மூக்கிலும் வெண்மை இருக்கும். மற்ற அனைத்துப் பகுதிகளும் கருப்பு நிறமாயிருக்கும்.
இரண்டாம் தரம் : இதுவும் கருப்பு நிறத்தில் அமைந்த குதிரைதான். இதன் நெற்றியி் வெண்மை இருக்கும். வலது கால் ஒன்றைத் தவிர மற்ற மூன்று கால்களிலும் சிறிது வெண்மை இருக்கும்.
மூன்றாம் தரம் : காதுகள் மட்டும் கருப்பு நிறத்தில் அமைந்து உடலின் மற்ற பாகங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்த குதிரை. இதற்கு குமைத் என்று பெயர்.
நபியவர்கள் போர்க்குதிரைகளை இவ்வாறு தரம்பிரித்திருக்கிறார்கள்.
இவ்வாறுதான் ஒரு முஃமின் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அனைத்திலும் சிறந்த விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
3274. சிறந்த துஆ
خَيْرُ الدُّعَاءِ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : பிரார்த்தனைகளில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் பிரார்த்தனையாகும். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எந்தவொரு இணையும் இல்லை. அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது. அனைத்து புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து படைப்புகளின் மீதும் ஆற்றல்மிக்கவனாக இருக்கிறான்.) என்று நானும் எனக்கு முன்னர் வாழ்ந்த நபிமார்களும் கூறிய வார்த்தைகள்தான் நீங்கள் கூறும் வார்த்தைகளில் சிறந்ததாகும்.
ஆதாரம் : ஜாமித் திர்மிதீ 3585
ஹஸன் தரத்தில் அமைந்தவை
சிறு குறிப்பு
ஹஜ்ஜின் கிரியையகளில் ஒன்று அரஃபாவில் கூடுவதாகும். ஹஜ்ஜிற்கு சென்றிருக்கும் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9ல் அரஃபாவில் ஒன்று கூடுவார்கள். அரஃபாவில் சிறிது நிமிடமாவது தங்க வேண்டும். அப்போதுதான் ஹஜ் கடமை நிறைவேறும்.
ஹாஜிகள் அரஃபாவில் ஒன்று கூடும் நாள் அரஃபா நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் இறைவனுக்கு விருப்பமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நோன்பு நோற்பது முந்தைய ஓராண்டு மற்றும் பிந்தைய ஓராண்டின் பாவத்தைப் போக்கக்கூடியதாகும்.
அதைப்போல் அரஃபா நாளில் பிரார்த்தனை செய்வது சிறந்த பிரார்த்தனையாகும். இந்நாளில் நாம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இறைவனிடம் அதிகமாக பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்.
பிரார்த்தனையின் வாசகங்களில் சிறந்ததுஇ ‘லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ என்ற வாசகமாகும். இதை முடிந்த அளவு அனைவரும் மனனம் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
3275. சிறந்த ரிஸ்க்
خَيْرُ الرِّزْقِ الكَفَافُ
ஸியாது இப்னு ஜுபைர் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இல்லாமல் தன்னிறைவு கொள்ளத்தக்க வகையில் போதுமான அளவு இருக்கும் வாழ்வாதாரமே சிறந்த வாழ்வாதாரமாகும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1903
ஹஸன் தரத்தில் அமைந்தது
சிறு குறிப்பு
அதிகமான செல்வம் இருப்பதும்இ குறைவான அளவு செல்வம் இருப்பதும் இறைவனின் சோதனையாகும். அதிகமான செல்வம் வழங்கப்பட்டவர்இ பெருமை மற்றும் கஞ்சத்தனம் போன்ற தீய குணங்களிலிருந்தும் தவிர்ந்திருக்க வேண்டும். தானதர்மங்களில் அதிகம் ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும். வீண்விரயங்களிலிருந்து விலகியிருக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
குறைவான செல்வம் வழங்கப்பட்டவர்இ யாசகம் கேட்பதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படும் மற்ற தீய எண்ணங்களிலிருந்தும் தவிர்ந்திருக்க வேண்டும்.
அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல் போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டவருக்கு சோதனைகள் குறைவு. ஆகவேதான் நபியவர்கள் இதை சிறந்த வாழ்வாதாரம் என்று கூறியிருக்கிறார்கள்.
3276. சிறந்த சாட்சி
خيرُ الشَّهَادَةِ مَا شَهِدَ بِه صَاحِبُهَا قَبْلَ أَنْ يُسْأَلَهَا
ஸைத் பின் காலீத் அல் ஜுஹானி ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : சாட்சி கூறுங்கள் என்று கேட்கப்படாமலே (உண்மைக்கு ஆதரவாக) தாமாக முன்வந்து கூறப்படும் சாட்சிதான் சிறந்த சாட்சியாகும்.
ஆதாரம் : இப்னு ஹிப்பான் 5079
சிறு குறிப்பு
ஷஹாதத் எனும் சாட்சி கூறுதல் மிக முக்கியமான செயல்பாடாகும். ஒரு மனிதன் முஸ்லிமாக ஆவதற்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸுலுல்லாஹ்’ என்ற சாட்சியத்தை வழங்க வேண்டும்.
அதுபாேல் வழக்கொன்றில் ஒரு மனிதர் பிறரின் நிர்பந்தத்தினாலோ அல்லது தானாக முன்வந்தோ சாட்சியமளிப்பது அந்த வழக்கின் தீர்ப்பிற்கு மிக முக்கியமானதாகும்.
ஆகவேதான் சாட்சி விஷயத்தில் இஸ்லாம் சில விதிகளை வகுத்துள்ளது. கடன் பத்திரங்கள் எழுதும் போது இரண்டு ஆண்களை சாட்சிகளாக ஏற்படுத்திக் காெள்ள வேண்டும் என்று இறைவன் வழிகாட்டுகிறான். இரண்டு ஆண்கள் கிடைக்கவில்லையென்றால் ஒரு ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சிகளாக்குமாறு கூறுகிறான்.
தங்களது மனைவிமார்கள் ஒழுக்கக்கேடான காரியத்தில் ஈடுபட்டார்கள் என்று ஒருவர் குற்றம் சாட்டினால் அதை நிரூபிக்க நான்கு சாட்சிகள் அவசியம் என்று குர்ஆன் கூறுகிறது.
அதுபோல் பொய் சாட்சியத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. ‘ஒரு மனிதன் பொய் சாட்சி கூறுவது பெரும்பாவமாகும்’ என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்தவகையில்இ சாட்சி கூற வாருங்கள் என்று அழைக்கப்படாமல் ஒருவர் தானாக முன்வந்து உண்மைக்கு ஆதரவாக சாட்சி கூறினால் அதுதான் சிறந்த சாட்சி என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
3277. சிறந்த சாட்சியாளர்
خَيْرُ الشُّهُودِ مَنْ أَدَّى شَهَادَتَهُ قَبْلَ أَنْ يُسْأَلَهَا
ஸைத் பின் காலீத் அல் ஜுஹானி ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : சாட்சி கூறுங்கள் என்று கேட்கப்படாமலே (உண்மைக்கு ஆதரவாக) தாமாக முன்வந்து சாட்சி கூறுபவர்தான் சாட்சியாளர்களில் சிறந்த சாட்சியாளராகும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 3542. இப்னு மாஜா 2364
சிறு குறிப்பு
ஒரு சிறந்த முஸ்லிம் நீதிக்கு சாட்சி கூறக்கூடியவனாக இருக்க வேண்டும். அந்த சாட்சி தனது பெற்றோருக்கோஇ பிள்ளைகளுக்கோஇ மனைவிக்கோஇ இன்ன பிற உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும் அவன் உண்மைக்கு சாட்சியளிக்கக் கூடியவனாக திகழ வேண்டும்.
ஏழைகளுக்கு ஒரு மாதிரியும் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் சாட்சியமளிக்கக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக சாட்சி கூற வேண்டும்.
உண்மையை நாம் அறிந்தால் அந்த உண்மைக்கு ஆதரவாக நாம் சாட்சி கூற வேண்டும். சாட்சி கூறுவதை மறுக்கக்கூடாது.
யார் ஒருவர் தானாக முன்வந்து நீதிக்கு சாட்சி கூறுகிறாரோ அவர்தான் சிறந்த சாட்சியாளராவார்.
3278. சிறந்த எண்ணிக்கையினர்
خَيْرُ الصَّحَابَةِ أَرْبَعَةٌ، وَخَيْرُ السَّرَايَا أَرْبَعُمِائَةَ، وَخَيْرُ الْجُيُوشِ أَرْبَعَةُ آلَافٍ، وَلَنْ تُهْزَمَ اثْنَا عَشَرَ أَلْفًا مِنْ قِلَّةٍ
இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிறந்த எண்ணிக்கையிலான தோழர்கள் நான்கு பேர் ஆவார்கள். சிறந்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரிவினர் நானூறு பேர் ஆவார்கள். சிறந்த எண்ணிக்கையிலான படைவீரர்கள் நான்காயிரம் பேர் ஆவார்கள். பன்னிரண்டாயிரம் பேர் கொண்ட படைகள் சிறய எண்ணிக்கை கொண்ட படைகளால் வெல்லப்படாது.
ஆதாரம் : சுனன் அபூதாவூது 2611இ திர்மிதீ 1555
(இது முர்ஸல் வகையைச் சேர்ந்த ஹதீஸ் என்று இமாம் அபூதாவூது கூறுகிறார்கள். இதை ஆரம்பத்தில் இமாம் அல்பானி ஸஹீஹ் என்று அறிவித்தார்கள். பின்னர் ஹிதாயத்து ரவா 3885 ல் பலவீனமானது என்று அறிவித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிப்பான் பின் அலீ என்பவர் பலம் குன்றியவர்)
சிறு குறிப்பு
எண்ணிக்கையை விட எண்ணங்களே முக்கியமானது. அதற்காக எண்ணிக்கை அவசியமில்லை என்று அர்த்தமாகாது. ஒவ்வொரு காரியத்தை நிகழ்த்துவதற்கும் சில எண்ணிக்கையிலான நபர்கள் அவசியம்.
இறைவன் மனிதர்களுக்கு சில உறவு முறைகளை ஏற்படுத்தி தந்திருக்கிறான். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் நட்பு. நண்பர்கள் மூலமாக பல காரியங்களை சாதிக்க முடியும். நபிகள் நாயகம் அவர்கள் தன்னை நபியாக ஏற்றுக் கொண்டவர்களை தோழர்கள் என்றே அழைத்தார்கள். அவர்களைக் கொண்டே பல்வேறு காரியங்களை நபியவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். ஆகவேதான் இஸ்லாமிய மார்க்கம் நட்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு மனிதனுக்கு குறைந்தது நான்கு தோழர்களாவது இருக்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன்பிறகு நபியவர்கள் போர்ப் படைகளில் சிறந்த எண்ணிக்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு இராணுவப் படையில் பல பிரிவுகள் இருக்கும். காலாட்படைஇ குதிரைப்படைஇ அம்பெய்யும் வீரர்களின் படைகள்இ யானைப்படைகள் என்று பல பிரிவுகள் இருக்கும். இந்த ராணுவப் படைப்பிரிவில் குறைந்த பட்சம் நானூறு வீரர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அது சிறந்த படையணியாக செயல்படும்.
அது போல் மொத்த ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் நான்காயிரமாக இருக்க வேண்டும். நான்காயிரம் படைவீரர்களைக் கொண்ட படைகள் சிறந்த ராணுவப் படைகளாகும்.
பன்னிரண்டாயிரம் ராணுவத்தினர் இருந்தால் அந்தப் படைகளை வெல்வது கடினமாகும் என்று நபியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன்மூலம் நபியவர்கள் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அதைப்போல வெறும் எண்ணிக்கை மட்டும் வெற்றியை முடிவு செய்யாது. தூய்மையான ஈமான் வேண்டும். பத்ரு போர்க்களத்தில் முன்னூறுக்கும் சற்று அதிகமான சஹாபாக்கள் அவர்களைவிட மூன்று மடங்கு அதிகமான காஃபிர்களை வென்றார்கள். ஹுனைன் யுத்தத்தில் பத்தியிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள். அதிக எண்ணிக்கை ஏற்படுத்திய பெருமிதத்தால் ஆரம்பத்தில் சறுக்கல்கூள சந்தித்தார்கள். நிறைய இழப்புகள் ஏற்பட்டது. பின்னர்தான் வெற்றி பெற்றார்கள். ஆக எண்ணிக்கையோடு தூய்மையான ஈமானும் மிக மிக அவசியமாகும்.
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) உம்மு தனீன் பட்டணத்தை நோக்கி படை நகர்த்தினார். இந்நகரம் நைல் நதியோரம் அமைந்துள்ளது. இங்கும் ரோமானியர்களுடன் பெரும் சண்டை நடைபெற்றது. அப்போது அமீருல் முஃமினீன் அவர்களிடம் உதவிப்படை வேண்டி அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) கடிதம் எழுதினார். நான்காயிரம் வீரர்கள் அடங்கிய உதவிப்படையை உமர் (ரலி) அனுப்பி வைத்தார். அவர்களில் ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி)இ அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி)இ உப்பாதா இப்னுஸ் ஸாமித் (ரலி)இ மஸ்லமா இப்னுல் மக்லித் (ரலி) போன்றோரும் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வீரர் களுக்கு நிகரானவர்களாக இருந்தனர்.
அந்த உதவிப் படையை அனுப்பி வைத்த உமர் (ரலி)இ அமர் இப்னுல் ஆஸுக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார் ''இப்போது உம்முடன் பனிரெண்டாயிரம் வீரர்கள் இருக்கின்றனர். அறிந்துகொள்ளுங்கள்! பனிரெண்டாயிரம் வீரர்கள் அடங்கிய படை தோல்வியுறாது." (அத்தவ்லதுல் இஸ்லாமிய்யா ஃபீ அஸ்ரில் குலஃபாவுர் ராஷிதீன்)
3279. சிறந்த மஹர்
خيرُ الصَّداقِ أيسَرُه
உக்பா இப்னு ஆமிர் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : மாப்பிள்ளையால் கொடுப்பதற்கு எளிமையாக உள்ள மஹர்தான் சிறந்த மஹராகும்.
ஆதாரம் : புலூகுல் மராம்இ அபூதாவூது 2117இ இர்வாஉ கலீல் 6ஃ344
சிறு குறிப்பு
திருமணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். மற்ற விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளில் திருமணமும் ஒன்றாக திகழ்கிறது. ஆதலால்தான் இஸ்லாம் திருமணத்திற்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
‘திருமணம் செய்து கொள்ளாதவன் தன்னை சார்ந்தவன் அல்லன்’ என்ற நபியவர்களின் கூற்று திருமணத்தின் முக்கியத்திற்கு போதுமானதாகும்.
அதுமட்டுமில்லாமல் திருமணம்தான் சமுதாயத்தின் அடித்தளமாக விளங்குகிறது. ஆகவேதான் இஸ்லாமிய மார்க்கம் திருமணத்தை எளிமையாக்குவதை வலியுறுத்துகிறது.
ஆதலால்தான்இ ‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரக்கத் நிறைந்த திருமணம்’ என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போதுதான் ஏழைகளும் எளிமையாக திருமணம் செய்து கொள்வார்கள்.
திருமணத்திற்காக இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் செலவினங்கள் இரண்டாகும். அவற்றில் ஒன்று பெண்ணிற்கு வழங்கப்படும் மஹர் எனும் மணக்கொடை. இரண்டாவது வலீமா விருந்து. இவையிரண்டும் ஆணின் மீது சுமத்தப்படிருக்கிறது.
இதில் பெண்ணானவள் தான் மணக்கவிருக்கும் ஆணிடமிருந்து குறைவான மஹரைப் பெற்றுக் கொள்வதில் திருப்தியடைய வேண்டும். அவ்வாறு திருப்தியடைந்தால் அந்த மஹ்ரில் இறைவனின் அபிவிருத்தி அதிகம் ஏற்படும். அதுதான் சிறந்த மஹராகவும் இருக்கும்.
3280. சிறந்த தர்மம்
خَيْرُ الصَّدَقَةِ ما أَبْقَتْ غِنًى اليَدُ العُلْيا خيرٌ مِنَ اليَدِ السُّفْلَى ، و ابْدَأْ بِمَنْ تَعُولُ
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல் கூறினார்கள்: (முழு செல்வத்தையும் அழித்துவிடாமல்) தனக்கு போதுமான அளவு செல்வத்தை எடுத்து (விட்டு மற்றவற்றை) தர்மம் செய்வதுதான் சிறந்த தர்மமாகும். (தர்மம் வழங்கும்) உயர்ந்த கையானது (தர்மம் பெறும்) தாழ்ந்த கையைவிட சிறந்தது. நீங்கள் உங்களது நெருக்கமான உறவினர்களிடமிருந்து தர்மம் செய்வதை ஆரம்பம் செய்யுங்கள்.
ஆதாரம் : தர்கீப் வ தர்ஹீப் 2ஃ66இ தபரானி 12726 (12ஃ148)
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் தானதர்மங்களை அதிகம் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம் ஒவ்வொரு நாளும் தனது ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். தர்மம்தான் ஒரு மனிதனை சிறந்தவனாகவும் நரகத்திலிருந்து காக்கக்கூடியதாகவும் ஆக்கும். அதனால்தான் சஹாபாக்கள் அதிகமதிகமாக தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதைப்போல் தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு மனிதன் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிடக்கூடாது. தனக்குப் போதுமான அளவைப் பெற்றுக் கொண்டு மீதமிருப்பவற்றை தர்மம் செய்வதே சிறந்தது என்று நபியவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஏனெனில் ஒரு மனிதன் தனது அனைத்து சொத்துக்களையும் தர்மம் செய்துவிட்டு பிறகு அவரே தர்மம் பெற வேண்டிய நிலையில் சென்றுவிடக்கூடாது. ஆகவேதான் இஸ்லாமிய மார்க்கம் தனக்குத் தேவையானவற்றை எடுத்துவிட்டு பிறகு தர்மம் செய்யுமாறு வலியுறுத்துகிறது.
எப்போதும் தர்மம் வழங்கும் கைதான் சிறந்ததாக இருக்கும். ஆகவே ஒரு முஸ்லிம் எப்போதும் தர்மம் வழங்கக்கூடிய நிலையில்தான் இருக்க வேண்டும். தர்மம் பெறக்கூடிய நிலையை விட்டும் தவிர்ந்திருக்க முயற்சிக்க வேண்டும்.
அதைப்போல் நமது தர்மத்தை நமது நெருங்கிய உறவினர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இதன்மூலம் இரண்டு கூலிகள் நமக்குக் கிடைக்கும். ஒன்று தர்மம் செய்ததற்கான கூலி. மற்றொன்று உறவினர்களை பேணியதற்கான கூலி.
3281. சிறந்த தர்மம்
خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى ، وَابْدَأْ بِمَنْ تَعُولُ.
அபூ ஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல் கூறினார்கள்: (முழு செல்வத்தையும் இழந்துவிடாமல்) தேவைக்குப் போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்த தர்மமாகும். உங்களுக்கு நெருக்கமான உறவினர்களிடமிருந்து தர்மம் செய்வதை நீங்கள் ஆரம்பம் செய்யுங்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 1427இ 1428.
சிறு குறிப்பு
நமது தேவைக்குப் போக எஞ்சியதை தர்மம் செய்வதுதான் சிறந்த தர்மம் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்காக நமது தேவைகளை ஆடம்பரமாக ஆக்கிக் கொள்ளக்கூடாது. எந்த அளவிற்கு நமது தேவைகளை சுருக்கிக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு நமது தேவைகளை சுருக்கிக் கொள்ள வேண்டும்.
அதுபோல் ஒரு மனிதன் தனது பெற்றோர்இ மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு செலவழிக்க வேண்டும். இது அவன்மீது கடமையாகும். இதற்காகவும் ஒருவன் தனது செல்வத்தை சேகரித்து வைக்க வேண்டும். தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்களுக்கு போக மிதமுள்ளதை தர்மம் செய்வதுதான் சிறந்த தர்மமாகும்.
3282. அல்லாஹ்வின் திக்ரு
خَيْرُ الْعَمَلِ اَنْ تُفَارِقَ الدُّنْيَا وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ
அப்துல்லாஹ் பின் பஸ்ர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள : உங்களுடைய நாவு அல்லாஹ்வின் நினைவால் நனைந்திருந்த நிலையில் இவ்வுலகை விட்டு நீங்கள் பிரிந்தால் உங்களது செயல்தான் மிகச் சிறந்த செயல்களாகும்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 3375. அஹமது 17716இ மிஷ்காதுல் மஸாபீஹ் 2270
சிறு குறிப்பு
ஒரு மனிதனுடைய உள்ளம் அமைதியடைந்து நிம்மதியாக இருப்பதற்கு இறைநினைவு அவசியமாகும். ஏனெனில் இறைநினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். அதைப்போல மறுமையிலும் நாம் வெற்றி பெறுவதற்கு இறை நினைவு அவசியமாகும்.
அதுமட்டுமில்லாமல் ‘ஒரு மனிதன் இறைவனை நினைவு கூர்ந்தால்தான் அவன் உயிருள்ளவனாக கருதப்படுவான்’ என்றும் ‘இறைவனை நினைவு கூராதவன் உயிரில்லாதவனைப் போன்றவன்’ என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதனால்தான் இறைவன் தன்னை அதிகமதிகம் நினைவு கூறுமாறும் நின்ற நிலையிலும்இ அமர்ந்த நிலையிலும்இ படுத்த நிலையிலும் அவனை நினைவு கூறுமாறும் அறிவுறுத்துகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைவு கூறக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்.
ஆக ஒரு முஸ்லிம் தன்னால் முடிந்த அளவிற்கு இறைவனை அதிகமதிகம் நினைவு கூறக்கூடியவனாக இருக்க வேண்டும். அதிலும் மரண நேரத்தில் அதிகமாக நினைவு கூற வேண்டும். இறைவனை நினைவு கூர்ந்த நிலையில் மரணிப்பது மிகப்பெரும் பாக்கியமாகும்.
3283. நேர்மையாக உழைத்து உண்ணல்
خَيرُ الكَسبِ كَسبُ يَدَيِ العامِلِ إذا نَصَحَ
அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : தனது கையால் நேர்மையாக உழைத்து பெறப்படும் ஆதாயமே சிறந்த ஆதாயம் ஆகும்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 8412
ஹஸன் தரத்தில் அமைந்தது
சிறு குறிப்பு
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்திருக்கிறான். இஸ்லாத்தில் வியாபாரம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. தாவூத் நபியவர்கள் தனது கையால் உழைத்து உண்ணக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். தனது கையால் உழைத்து உண்பதே சிறந்தது என்று நபியவர்கள் நவின்றிருக்கிறார்கள்.
அதைப்போன்று வியாபாரத்திற்கென்று சில சட்டதிட்டங்களையும் மார்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது.
வியாபாரத்தில் ஏமாற்றக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்யக்கூடாது. கலப்படம் செய்யக்கூடாது. தான் விற்கும் பொருளில் குறைகள் இருந்தால் அவற்றை விற்பவருக்கு கூற வேண்டும். இவ்வாறு பல கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதிக்கிறது.
அதுபோல நேர்மையாக சம்பாதிப்பதை மார்க்கம் வலியுறுத்துகிறது. நேர்மையான முறையில் சம்பாதித்து பெறப்படும் லாபத்தில்தான் இறைவனின் பரக்கத் ஏற்படும். இறைவனின் பரக்கத் இருந்தால்தான் அவற்றின் மூலம் பலன் கிட்டும். ஆக நாம் நேர்மையான முறையில் நமது வியாபாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
3284. சிறந்த வார்த்தைகள்
خَيْرُ الْكَلَامِ أَرْبَعٌ ؛ لاَ يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
சம்ரா பின் ஜுன்துப் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : நான்கு வார்த்தைகள் (அல்லாஹ்விடத்தில்) சிறந்த வார்த்தைகளாகும். அவற்றில் எதைக் கொண்டு நீங்கள் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. (ஏனெனில் நான்கு வார்த்தைகளும் முக்கியமான வார்த்தைகள்தான். அவையாவன). சுபஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்)
அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்விற்கே எல்லா புகழும்)
லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை)
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்)
ஆதாரம் : இப்னு மாஜா 3811இ ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 836
சிறு குறிப்பு
இறைவனை திக்ரு செய்வதற்கு எண்ணற்ற வார்த்தைகள் உள்ளது. நிறைய வார்த்தைகளை நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அவற்றில் மிக மிக முக்கியமான வார்த்தைகளாக மேற்கூறிய நான்கு வார்த்தைகள் உள்ளன. இவற்றை நன்கு மனனம் செய்து அடிக்கடி உச்சரிக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.
3285. விசாலமான சபைகள்
خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا
அபூ சயீத் அல் குத்ரி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : விசாலமான சபைகள் சிறந்த சபைகளாகும்
ஆதாரம் : அபூதாவூது 4820
சிறு குறிப்பு
சபைகள் பல நோக்கங்களுக்காக கூட்டப்படும்.
அவற்றில் இறைவனை நினைவு கூறும் சபைகளில் அமர்ந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் அந்த சபைகளுக்கு மலக்குமார்கள் வருகை தருவார்கள். அந்த சபைகளில் கலந்து கொள்பவர்களை மலக்குமார்களிடத்தில் இறைவன் புகழ்ந்து கூறுவான்.
அதைப்போல் இஸ்லாமிய அரசை நல்ல முறையில் நடத்துவதற்கு ஆலோசனை சபைகள் அவசியம். ஏனெனில் இஸ்லாமிய ஆட்சித் தலைவர் அனைத்திலும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்.
ஆகவேதான் சஹாபாக்களிடம் ஆலோசனை கேட்குமாறு அல்லாஹ் நபியவர்களுக்கு கட்டளையிடுகிறான்.
இவ்வாறு பல்வேறு நோக்கங்களுக்காக சபைகள் கூட்டப்படும். இத்தகைய சபைகள் விசாலமாக இருப்பது சிறப்பிற்குரியதாகும்.
ஏனெனில் விசாலமான சபைகளில் பலரும் கலந்து கொள்ள முடியும். கலந்து கொள்பவர்கள் நெருக்கிக் கொண்டு அமராமல் சவுகரியமான முறையில் அமர்வார்கள். இதனால் சபை கூடியதன் நோக்கம் நிறைவேறும்.
3286. சிறந்த முஸ்லிம்
خَيْرُ الْمُسْلِمِيْنَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி கூறியதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : யாருடைய கையாலும் நாவாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்தான் சிறந்த முஸ்லிமாவார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 10
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மனிதத்தன்மையை கற்றுத்தருகிறது. பூமியில் அமைதியை ஏற்படுத்தும் வழிமுறைகளை போதிக்கிறது.
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு சகோதரன் ஆவார். உடம்பில் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் அதனால் மற்ற உறுப்புக்களும் வேதனையை அனுபவிப்பதுபோல் ஒரு முஸ்லிமுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்ற முஸ்லிம்களும் அதனால் வருந்த வேண்டும் என்று நபியவர்கள் போதித்திருக்கிறார்கள்.
மேலும் ஒரு முஸ்லிம் தனது நாவால் பிற முஸ்லிம்களுக்கு தொல்லைகள் வழங்கக்கூடாது. பொய்இ அவதூறுஇ வதந்திஇ புறம்இ கேலி போன்ற தீய குணங்களை பிற முஸ்லிம்களின் மீது பயன்படுத்தக்கூடாது. நமது நாவைக் கொண்டு பிற முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதுபோல ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களுக்கு தனது கையாலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது. பிறரை அடிக்கக்கூடாது. பிறருக்கு நோவினைகளை ஏற்படுத்தக்கூடாது. நாம் நமது கைகளைக் கொண்டு மற்ற முஸ்லிம்களை பாதுகாக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
3287. ஒழுக்கத்தில் சிறந்தவர்
خَيْرُ النَّاسِ أَحْسَنُهُمْ خُلُقًا
இப்னு உமர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : ஒழுக்கத்தில் சிறந்தவராக இருப்பவர்தான் மனிதர்களில் சிறந்தவராக இருப்பார்.
ஆதாரம் : தபரானி 13326 (12ஃ354)
சிறு குறிப்பு
ஒழுக்கத்தின் சிறப்பு பற்றி 3259இ 3260ல் குறிப்பிடப்பட்டுள்ளது
3288. தலைமுறைகளில் சிறந்தவர்கள்
خَيْرُ النَّاسِ الْقَرْنُ الَّذِي أَنَا فِيهِ ثُمَّ الثَّانِي ثُمَّ الثَّالِثُ
ஆயிஷா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : சிறந்த தலைமுறையினர்இ எனது நூற்றாண்டைச் சேர்ந்தவர் (களான சஹாபாக்கள்) ஆவர். அதன் பிறகு இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களான தாபிஈன்கள் சிறந்தவர்கள் ஆவர். அதன் பிறகு மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களான தபஉத் தாபிஈன்கள் சிறந்தவர்கள் ஆவர்.
ஆதாரம் : ஹஸன் தரத்தில் அமைந்தவை.
ஸஹீஹுல் புகாரி 6695 ல் இடம்பெறும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.
சிறு குறிப்பு
இஸ்லாத்தை ஏற்ற நிலையில் நபியவர்களைப் சந்தித்தவர்கள் சஹாபாக்கள் ஆவர். இவர்கள் நபியவர்கள் உயிரோடிருக்கும் காலத்தில் வாழ்ந்தவர்கள். இஸ்லாத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்கள். இவர்களில் பலர் தங்களது உயிர்களையும்இ உடலுறுப்புகளையும்இ பொருளாதாரங்களையும்இ உறவுகளையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.
சஹாபாக்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக இறைவன் தனது திருமறையில் அறிவித்திருக்கிறான். இதுவே அவர்களின் சிறப்புக்கு போதியதாகும்.
இவர்கள் நபியவர்களிடமிருந்து நேரிடையாக மார்க்கத்தைக் கற்றிருக்கிறார்கள். அதனால் ஈமானிலும்இ அமலிலும்இ நேர்மையிலும்இ நீதியிலும் சிறந்து விளங்கினார்கள். ஆகவேதான் இவர்களை சிறந்த தலைமுறையினர் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
சஹாபாக்களுக்கு அடுத்து சிறந்த தலைமுறையினர் தாபிஈன்கள் ஆவர். இவர்கள் சஹாபாக்களை சந்தித்தவர்கள். சஹாபாக்களிடமிருந்து இஸ்லாத்தை கற்றுக் கொண்டவர்கள். இவர்களும் மார்க்கத்திற்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
அடுத்து சிறந்த தலைமுறையினர் தபஉ தாபிஈன்கள் ஆவர். இவர்கள் தாபிஈன்களிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள். இவர்களும் மார்க்கத்திற்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்துள்ளார்கள்.
3289. மனிதர்களுக்கு நன்மை செய்பவர்கள்
خَيْرُ النَّاسِ أَنْفَعَهُمْ لِلنَّاسِ
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : பிற மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களே இறைவனிடத்தில் சிறந்த மனிதர்களாவார்கள்.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 5787
ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
சிறு குறிப்பு
ஒரு முஸ்லிம் பிற மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
பூமியில் இருப்பவர்கள் மீது நீங்கள் கருணை காட்டினால் வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்று இறைவன் கூறுகிறான்.
ஆக ஒரு முஃமின் தனது அறிவால்இ உடலால்இ பொருளால் பிறருக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
பிற மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க வேண்டும். வழி தெரியாதவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். கடனில் அவதிப்படுபவருக்கு கடனை அடைக்க உதவ வேண்டும்.
ஆறுதல் தேவைப்படுபவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் கூற வேண்டும். பாதைகளில் கிடக்கும் பாெருட்களை அகற்ற வேண்டும். மரம் நட வேண்டும். இதுபோன்று பல நன்மைகளை செய்ய வேண்டும்.
3290. கடனை சிறந்த முறையில் அடைப்பவர்
خَيْرُ النَّاسِِ خَيْرُهُمْ قَضَاءً
இர்பாழ் இப்னு சாரியா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : வாங்கிய கடனை சிறந்த முறையில் திருப்பி வழங்குபவரே மனிதர்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 1318இ அபூதாவூது 3316இ சுனனுந் நஸாஈ 4617இ இப்னு மாஜா 2285
சிறு குறிப்பு
இது பற்றி 3261ல் இடம்பெற்றுள்ளது.
3291. இதயமும் நாவும்
خَيْرُ النَّاسِِ ذُو الْقَلْبِ المَخْمُومُ واللِّسَانِ الصَّادِقِ ، قِيلَ : مَا الْقَلْبُ الْمَخْمُومِ ؟ قَالَ : هُوَ التَّقِيُّ النَّقِيُّ الَّذِي لَا إِثْمَ فِيهِ وَلاَ بَغْيَ ولا حَسَدَ . قِيلَ : فَمَنْ عَلَى أثَرِهِ ؟ قال : الَّذي يَشْنَأُ الدُّنْيَا ، ويُحِبُّ الآخِرةَ . قِيلَ : فمَنْ عَلَى أثَرِهِ ؟ قال : مُؤمِنٌ في خُلُقٍ حَسَنٍ
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : அடக்கமான இதயமும் உண்மையான நாவும் கொண்டவர் மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவர். அடக்கமான இதயம் என்றால் என்ன? என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது. தக்வாவும் தூய்மையும் கொண்ட இதயமே அடக்கமான இதயமாகும். இத்தகைய இதயம் கொண்டவரிடத்தில் பாவமோஇ வரம்பு மீறலோஇ பொறாமையோ ஏற்படாது என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். யாரிடத்தில் இத்தகைய நிலைமை இருக்கும்? என்று கேட்கப்பட்டது. இவ்வுலகத்தை வெறுத்து மறுமையை விரும்புபவர்களிடத்தில் இத்தகைய தன்மைகள் இருக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். அதன்பிறகு யாரிடத்தில் இத்தகைய நிலைமை இருக்கும் என்று கேட்கப்பட்டது. நல்ல ஒழுக்கத்தைக் கொண்டிருக்கும் முஃமின்களிடத்தில் இத்தகைய தன்மைகள் இருக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : இப்னு மாஜா 4216
சிறு குறிப்பு
இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்புகள் இரண்டு.
ஒன்று இதயம்.
மற்றொன்று நாவு.
இந்த இரண்டும்தான் ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆதலால் ஒரு முஸ்லிம் இந்த இரண்டிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் தனது இதயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அந்த இதயத்தை தக்வாவைக் கொண்டு நிரப்ப வேண்டும். பாவம்இ வரம்பு மீறல்இ பொறாமைஇ பெருமை போன்ற கெட்ட எண்ணங்களை விட்டும் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.
ஒரு மனிதன் பாவம் செய்தால் அவனது இதயத்தில் கரும்புள்ளி ஏற்படும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். பாவத்தை அதிகரிக்க அதிகரிக்க கரும்புள்ளியும் பெரியதாகும். இதனால் இதயம் அசுத்தமாகும். ஆகவே ஒரு மனிதன் பாவத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.
அதுபோல நமது நாவையும் பேணி பாதுகாக்க வேண்டும். ஏனெனில் ஒரு மனிதனை நரகத்தில் நுழைவிக்கக்கூடியதாக நாவு உள்ளது என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
புறம் பேசுதல்இ அவதூறு கூறுதல்இ பொய் சொல்லல்இ கேலி கிண்டல் செய்தல்இ வதந்திகளை பரப்புதல்இ ஆபாசமான வார்த்தைகளை கூறுதல் போன்ற தீய விஷயங்களிலிருந்து நமது நாவைப் பேணி பாதுகாக்க வேண்டும்.
நமது இதயத்தை தூய்மையாகவும் நாவை பேணுதலுடனும் வைக்க வேண்டும் என்றால்இ நாம் இவ்வுலகின் அற்ப இன்பத்தை வெறுக்கக்கூடியவர்களாகவும் மறுமையின் நிரந்தர இன்பத்தை விரும்பக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் நம்மிடமுள்ள நல்ல ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க வேண்டும். நற்குணங்களில் சிறந்து விளங்க வேண்டும். இத்தகைய தன்மைகளை கைக்கொண்டால் நமது நாவையும் இதயத்தையும் தூய்மையாக வைத்திருக்கலாம்.
3292. சோதனையான காலத்தில் ஒதுங்கி வாழ்பவர்
خَيْرِ النَّاسِ في الفِتَنِ رَجُلٌ آخِذٌ بِعِنَانِ فَرَسِهِ خلفَ أَعْدَاءِ اللهِ يُخِيفُهُمْ و يُخِيفُونَهُ ، أوْ رجلٌ مُعْتَزِلٌ في بادِيَتِه ، يُؤَدِّي حقَّ اللهِ الذي عليهِ
இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : சோதனையான காலகட்டங்களில் கடிவாளமிடப்பட்ட தனது குதிரையில் ஏறி இறைவனின் எதிரிகளைத் துரத்திச் சென்று அவர்களை பயமுறுத்துபவர்கள் மற்றும் எதிரிகளால் பயமுறுத்தப்படுபவர்கள் ஆகியோர் அந்த காலகட்டங்களில் வாழும் மனிதர்களிலேயே சிறந்தவர்கள் ஆவர். அல்லது சாேதனையான காலகட்டங்களில் பாலைவனங்களில் ஒதுங்கி இறைவனுக்கு செலுத்த வேண்டிய உரிமைகளை சரியாக நிறைவேற்றுபவர் மனிதர்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 3838இ முஸ்னது அஹமது 2116இ சுனனுந் நஸாஈ 2569இ திர்மிதீ 1652
சிறு குறிப்பு
கியாமத் நாள் நெருங்க நெருங்க குழப்பங்களும் சோதனைகளும் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த காலகட்டங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
ஒரு இஸ்லாமியன் பூமியில் குழப்பத்தை நீக்க முயற்சிக்க வேண்டும். அமைதியை ஏற்படுத்த பாடுபட வேண்டும்.
அந்த வகையில் இறைமறுப்பாளர்களால் பூமியில் குழப்பங்கள் ஏற்படும் போது ஒரு இஸ்லாமிய வீரன் அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய புறப்பட வேண்டும். அதற்காக தனது குதிரையை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு யார் அநியாயத்தை தட்டிக் கேட்க கிளம்பிச் செல்கிறாரோ அவர் சிறந்தவராக இருப்பார்.
ஒரு மனிதனுக்கு யுத்தம் செய்வதற்கான வசதிவாய்ப்புகள் இல்லையென்றால் தனிமையில் ஒதுங்கி இறைவனை வழிபடக்கூடியவனாக இருக்க வேண்டும். இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். குழப்பங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். குகைவாசிகளான இளைஞர்கள் இவ்வாறுதான் குகைகளில் தஞ்சம் அடைந்தார்கள். அதுபோல நாமும் மலை உசசிகளிலோ பாலைவனங்களிலோ ஒதுங்கி இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டும்.
3293. சிறந்த தலைமுறையினர்
خَيْرُ النَّاسِ قَرْنِيஇ ثُمَّ الثاني، ثُمَّ الثَالِثُ، ثُمَّ يجيء قَوْمٌ لَا خَيْرَ فِيْهِمْ
இப்னு மஸ்ஊத் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது நூற்றாண்டைச் சேர்ந்த சஹாபாக்கள்தான் மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவார்கள். அதன் பிறகு சிறந்தவர்கள் அடுத்த தலைமுறையினரான தாபிஈன்கள் ஆவர். அதன் பிறகு சிறந்தவர்கள் அதற்கடுத்த தலைமுறையினரான தபஉ தாபிஈன்கள் ஆவர். அதன்பிறகு எத்தகைய நன்மைகளும் இல்லாத மோசமான மக்கள் வருவார்கள்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 3859இ தபரானி 10058.
ஹஸன் தரத்தில் அமைந்தது
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3288ல் இடம்பெற்றுள்ளது.
3294. சிறந்த தலைமுறையினர்
خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثمَّ يَأْتِي مِن بَعْدِهِم قومٌ يَتَسَمَّنُونَ ويُحِبُّونَ السِّمَنَ يُعطونَ الشَّهادةَ قَبْلَ أن يُسْأَلُوهَا
இம்ரான் இப்னு ஹுசைன் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : எனது நூற்றாண்டைச் சேர்ந்த சஹாபாக்கள் மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவார்கள். அதன் பிறகு சிறந்தவர்கள் சஹாபாக்களைப் பின்பற்றி நடந்த தாபிஈன்கள் ஆவர். அதன் பிறகு சிறந்தவர்கள் தாபிஈன்களைப் பின்பற்றி நடந்த தபஉதாபிஈன்கள் ஆவர். பின்னர் அவர்களுக்குப் பிறகு கொழுத்தவர்களாகவும்இ கொழுப்பை விரும்புகிறவர்களாகவும் ஒரு மக்கள் வருவார்கள். சாட்சியமளிக்குமாறு அவர்களிடம் கேட்பதற்கு முன்பே முந்திக்கொண்டு சாட்சியமளிப்பார்கள்.
ஆதாரம் : இமாம் சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4021இ ஸஹீஹ் திர்மிதீ 2302இ ஸஹீஹ் புகாரி 2652
சிறு குறிப்பு
நபியவர்களின் சமூகத்தில் சிறந்தவர்கள் முதல் தலைமுறையினரான சஹாபாக்கள் ஆவர். அதற்கு அடுத்து சிறந்தவர்கள் தாபிஈன்கள். அதற்கு அடுத்து சிறந்தவர்கள் தபஉ தாபிஈன்கள்.
இந்த மூன்று சிறந்த தலைமுறைகளிடத்தில் இறையச்சம் அதிகமாக இருந்திருந்தது. இவர்கள் அதிகமான நற்பண்புகளில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள். வணக்க வழிபாடுகளை சரிவர நிறைவேற்றினார்கள். ஜிஹாதில் ஈடுபட்டார்கள். நம்பிக்கைக்குரியவர்களாக திகழ்ந்தார்கள். இவர்களிடத்தில் தீய பண்புகள் குறைவாகவே காணப்பட்டன. நற்பண்புகள் அதிகமாக இருந்தது. இவர்களைப் போன்று நாமும் இருக்க வேண்டும்.
இவர்களுக்குப் பிறகு மோசமான மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் அதிகம் உண்டு கொழுத்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்தில் நற்பண்புகள் காணப்படாது. சோம்பேறித்தனம் மிகைத்திருக்கும். அவர்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. வெறும் வாய்ச்சவடால் விடுபவர்களாக இருப்பார்கள். நல்லமல்களில் ஈடுபடமாட்டார்கள். இத்தகைய மக்களைப் போன்று நாம் இருக்கக்கூடாது.
3295. சிறந்த தலைமுறையினர்
خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ
இப்னு மஸ்ஊத் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது நூற்றாண்டைச் சேர்ந்த சஹாபாக்கள் மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவார்கள். அதன் பிறகு சிறந்தவர்கள் சஹாபாக்களைப் பின்பற்றி நடந்த தாபிஈன்கள் ஆவர். அதன் பிறகு சிறந்தவர்கள் தாபிஈன்களைப் பின்பற்றி நடந்த தபஉதாபிஈன்கள் ஆவர். பின்னர் ஒரு (கெட்ட) தலைமுறையினர் தோன்றுவார்கள். அவர்களுடைய சத்தியம் அவர்களது சாட்சியத்தை முந்தும். அவர்களுடைய சாட்சியம் அவர்களது சத்தியத்தை முந்தும். (அதாவது பொய் சாட்சியம் வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்)
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 2652
சிறு குறிப்பு
மூன்று சிறந்த தலைமுறைகள் பற்றிய குறிப்பு 3288 மற்றும் 3294ல் இடம்பெற்றுள்ளது.
கெட்ட மக்களைப் பொறுத்தவரைஇ அவர்கள் பொய் சாட்சியம் வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். பொய் சொல்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதைவிட அதிகமாக பொய் சாட்சியம் சொல்வது கண்டிக்கப்பட்டுள்ளது. பொய் சாட்சியத்தை பெரும்பாவமாக நபியவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இத்தகைய பொய் சாட்சியம் வழங்குவதிலிருந்து ஒரு முஸ்லிம் விலகியிருக்க வேண்டும்.
3296. நீண்ட ஆயுளும் நல்லமல்களும்
خَيْرُ النَّاسِ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ
அப்துல்லாஹ் இப்னு பஸ்ர் ரலி அறிவிப்பவதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : நீண்ட காலம் நல்லமல்கள் செய்து வாழ்பவர் மனிதர்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஸஹீஹ் தர்கீப் 3364
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3262 மற்றும் 3263 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது.
3297. நல்லவர்களும் தீயவர்களும்
خير النَّاسِ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ وشَرٌّ النَّاسِ، مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ
அபூபக்ரா நாஃபிஃ இப்னு ஹாரிஸ் ரலி அறிவிப்பவதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : நீண்ட காலம் நல்லமல்கள் செய்து வாழ்பவர் மனிதர்களில் சிறந்தவர் ஆவார். நீண்ட காலம் கெட்ட செயல்கள் செய்து வாழ்பவர் மனிதர்களில் தீயவர் ஆவார்.
ஆதாரம் : திர்மிதீ 2330இ முஸ்னது அஹமது 20437
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3262 மற்றும் 3263 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது.
3298. சிறந்த மனைவி
خيرُ النِّساء الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلاَ تُخَالِفُهُ فِي نَفْسِهَا وَمَالِهَا بِمَا يَكْرَهُ
அபூ ஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பவளாகவும்இ அவனது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாகவும்இ தன்னுடைய காரியங்களிலும் கணவரின் சொத்து சார்பான விஷயங்களிலும் கணவனுக்கு பிடிக்காத விதங்களில் நடந்து கொள்ளாமல் இருக்கும் மனைவியே பெண்களில் சிறந்தவள் ஆவாள்.
ஆதாரம் : சுனனுந் நஸாஈ 3221இ இர்வாஉல் கலீல் 1786
சிறு குறிப்பு
சிறந்த மனைவியின் பண்புகளை இந்த நபிமொழியில் நபியவர்கள் விளக்குகிறார்கள்.
ஒரு மனைவியானவன் கணவன் தன்னை பார்க்கும் போது அவனை மகிழ்விப்பவளாக இருக்க வேண்டும். அதற்காக தன்னை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். சிரித்த முகத்துடன் கணவனை சந்திக்க வேண்டும்.
கணவனின் கட்டளை மார்க்கத்திற்கு முரண்படாமல் இருக்கும்பட்சத்தில் கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பவளாக இருக்க வேண்டும். கணவனின் கட்டளையை புறக்கணிக்கக் கூடாது.
கணவனுக்கு பிடிக்காத விதத்தில் தனது நடத்தையை அமைத்துக் கொள்ளக் கூடாது.
கணவனுக்குப் பிடிக்காத விதத்தில் கணவனது சொத்துக்களை செலவழிக்கக்கூடாது.
இந்த நான்கு பண்புகளும் உள்ள மனைவிகள்தான் சிறந்த பெண்கள் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
3299. சிறந்த மனைவி
خيرُ النِّساءِ مَن تَسُرُّكَ إذا أبْصَرْتَ، و تُطِيعُكَ إذا أمَرْتَ، و تَحْفَظُ غَيْبَتَكَ في نَفْسِهَا وَ مَالِكَ
அப்துல்லாஹ் இப்னு சலாம் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பவளாகவும்இ அவனது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாகவும்இ (கணவன் இல்லாத நேரங்களில்) தன்னையும் கணவனின் சொத்துக்களையும் சிறந்த முறையில் பாதுகாக்கும் மனைவியே பெண்களில் சிறந்தவள் ஆவாள்.
ஆதாரம் : இப்னு ஹஸ்ம் 10ஃ334இ ஸஹீஹ் நஸாயீ 3231
சிறு குறிப்பு
இது பற்றிய குறிப்பு 3298ல் உள்ளது.
3300. சிறந்த திருமணம்
خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ
உக்பா இப்னு ஆமிர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : எளிய முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணமாகும்.
ஆதாரம் : அபூதாவூது 2117
சிறு குறிப்பு
இது பற்றிய குறிப்பு 3279ல் இடம்பெற்றுள்ளது.
3301. சிறந்த சமுதாயத்தினர்
خيرُ أُمَّتِي القَرْنُ الذي بُعِثْتُ فيه، ثُمَّ الذين يَلونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهمْ، ثُمَّ يَخْلُفُ قَومٌ يُحِبُّونَ السِّمانَةَ، يَشهدُونَ قَبْلَ أنْ يُسْتَشهَدُوا
அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : எனது சமுதாயத்தில் சிறந்தவர்கள் நான் எத்தகைய மனிதர்களிடத்தில் அனுப்பப்பட்டுள்ளேனோ அந்த தலைமுறையைச் சேர்ந்த சஹாபாக்கள் ஆவார்கள். அதன் பிறகு சிறந்தவர்கள் சஹாபாக்களைப் பின்பற்றி நடந்த தாபிஈன்கள் ஆவர். அதன் பிறகு சிறந்தவர்கள் தாபிஈன்களைப் பின்பற்றி நடந்த தபஉதாபிஈன்கள் ஆவர். பின்னர் உண்டு கொழுப்பதை நேசிப்பவர்கள் தோன்றுவார்கள். சாட்சியமளிக்க வாருங்கள் என்று அழைக்கப்படாமலேயே அவர்கள் சாட்சியமளிக்க வருவார்கள்.
ஆதாரம் : ஜாமிஉல் உலூம் வல் ஹிகம் 2ஃ477இ ஸஹீஹ் முஸ்லிம் 4959
சிறு குறிப்பு
மூன்று சிறந்த தலைமுறைகள் பற்றிய குறிப்பு 3288இ 3294 மற்றும் 3295 ல் இடம்பெற்றுள்ளது.
3302. கிழக்குப் பிரதேசங்களில் சிறந்தவர்
خيرُ أهْلِ الْمِشْرِقِ عَبدُ القَيْسِ
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : கிழக்குப் பிரதேச மக்களில் சிறந்தவர்கள் அப்துல் கைஸ் (குலத்தினர்) ஆவார்.
ஆதாரம் : அல் பஸார் 5310
சிறு குறிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு குலத்தினரையும்இ பலவித மனிதர்களையும் ஆராய்ந்து பார்ப்பவர்களாக இருந்தார்கள். ஏதாவதொரு குலத்தினரிடத்தில் அல்லது மனிதரிடத்தில் ஒரு நற்பண்புகளை அவர்கள் கண்டால் அதை பிற மக்களுக்கு எடுத்துரைப்பார்கள். அவர்களிடத்திலிருந்து அந்த நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ளுமாறு ஊக்குவிப்பார்கள்.
அந்த வகையில்தான் அப்துல் கைஸ் குலத்தினரை நபியவர்கள் புகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மதீனாவிற்கு கிழக்குப் பகுதியிலுள்ள பஹ்ரைன் பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள். இவர்கள் ரபீஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
பிற பகுதியைச் சேர்ந்த மற்ற மக்களெல்லாம் பல்வேறு காரணத்திற்காக இஸ்லாத்தை ஏற்றார்கள். ஆனால் இவர்களோ நபியவர்களின் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றார்கள். முழு விருப்பத்தோடும் முழுமனதாகவும் இஸ்லாத்தை ஏற்றார்கள். அதனால்தான் நபியவர்கள் இவர்களைப் புகழந்தார்கள்.
இந்த குலத்தினர் நபியவர்களை இரண்டுமுறை வந்து சந்தித்தார்கள். அப்போது அவர்களை நபியவர்கள் சிறந்த முறையில் வரவேற்றார்கள்.
ஒரு முறை அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் நபியவர்களிடம் வந்துஇ நாங்கள் வசித்து வரும் பஹ்ரைனிலிருந்து மதீனாவிற்கு வரும் பகுதி ஆபத்து நிறைந்ததாக உள்ளது. வழப்பறி கொள்ளையர்களின் அட்டூளியங்கள் அதிகமாக உள்ளது. போர் தடைசெய்யப்பட்ட நான்கு புனித மாதங்களில் மட்டும் தான் எங்களால் மதீனாவிற்கு வரமுடியும். ஆகவே நீங்கள் எங்களுக்கு இஸ்லாத்தை கற்றுத்தாருங்கள். நாங்கள் அவற்றை எங்கள் பகுதியிலுள்ளவர்களுக்குக் கற்பிக்கிறோம் என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் அவர்களுக்கு மார்க்க சட்டத்தை கற்பித்தார்கள்.
இந்த சந்திப்பு லுஹர் தொழுகைக்குப் பின்னர் அஸர் நேரம் வரை நடைபெற்றது. இதனால் நபியவர்கள் லுஹர் தொழுகையின் பின் சுன்னத்களை தொழவில்லை. அஸர் தொழுகை முடிந்த பின்னர்தான் லுஹரின் பின் சுன்னத்களை நபியவர்கள் தொழுதார்கள். அந்த அளவிற்கு நபியவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரிற்கு முன்னுரிமை வழங்கினார்கள்.
அதைப்போலஇ மஸ்ஜிதுந் நபவிக்கு அடுத்ததாக பஹ்ரைனின் ஜுவாஸா எனும் கிராமத்தில் அமைந்த அப்துல் கைஸ் மஸ்ஜிதில்தான் ஜும்ஆ நடத்தப்பட்டது. (பார்க்க புகாரி 892)
இந்த பழங்குடியினரில் மூத்தவரான அல் முன்திர் பின் அம்ர் ரலியைப் பார்த்து நபியவர்கள் புகழந்து கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறியதாவது : அல்லாஹ் விரும்பும் இரண்டு குணங்கள் உங்களிடம் உள்ளன. ஒன்று சகிப்புத்தன்மை. மற்றொன்று நிதானம்.
இந்த நற்குணங்கள் அப்துல் கைஸ் குலத்தினரிடத்தில் காணப்பட்டது. இந்த நற்பண்புகளை நாமும் பின்பற்ற வேண்டும்.
3303. பேரீத்தம் பழங்களில் சிறந்தது
خَيْرُ تَمْرَاتِكُمُ البَرْنِيُّ يُذهِبُ الدَّاءَ وَلَا دَاءَ فِيْهِ
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள். உங்கள் பேரீத்தம்பழங்களில் சிறந்தது பர்னீ எனும் பேரீத்தம் பழமாகும். அது நோயை நீக்குகிறது. அதில் எந்த நோயும் இல்லை.
ஆதாரம் : அல் ழுஅஃபா அல் கபீர் 3ஃ206இ ஹாகிம் 7450
இது ஹஸன் தரத்தில் அமைந்தது.
சிறு குறிப்பு
பர்னீ பேரீத்தம் பழம் அப்துல் கைஸ் குலத்தினர் சாப்பிட்டு வந்த பேரீத்தம் பழம் ஆகும். தற்போதும் மதீனாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த பேரீத்தம் பழமாக பர்னீ உள்ளது. இவற்றில் பல வகைகள் உள்ளது. இது சில நோய்களுக்கு மருந்தாக உண்ணப்படுகிறது. ஆரோக்கியத்தை வேண்டியும் இதை உண்டு வருகிறார்கள். இந்த பழத்தில் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. ஆகவேதான் நபியவர்கள் இதை சிறப்பித்து கூறியிருக்கிறார்கள்.
3304. ஆடைகளில் சிறந்தது
خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ، ألْبِسُوهَا أَحْيَاءَكُم، و كَفِّنُوا فِيْهَا مَوتاكُم
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். உங்களில் உயிரோடிருப்பவர்கள் அந்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களில் மரணித்தவர்களுக்கும் வெள்ளை ஆடைகளைக் கொண்டு கஃபனிடுங்கள்.
ஆதாரம் : அபூதாவூத் 3878இ திர்மிதீ 994இ தபரானி 13100 (12ஃ276)
சிறு குறிப்பு
இரண்டு நோக்கங்களுக்காக ஆடைகள் அணியப்படுகிறது. ஒன்று மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைப்பதற்கு. மற்றொன்று தங்களை அலங்கரத்திக் கொள்வதற்கு. இவ்விரண்டு நோக்கங்களையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
அவற்றில் மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைப்பது கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. அலங்காரம் செய்வதை விரும்பத்தக்கதாக இஸ்லாம் ஆக்கியிருக்கிறது. இதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அந்தவகையில்தான் காவி நிறத்தைத் தவிர மற்ற வண்ண ஆடைகள் அணிவதை நபியவர்கள் அனுமதித்திருக்கிறார்கள். இவற்றில் வெள்ளை நிறத்தையுடைய ஆடைகளை சிறந்த ஆடையாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்னவெனில்இ வெள்ளை நிறம் பார்ப்பதற்கு மன அமைதி தரும். அது தூய்மையானதாக இருக்கும். ஏனெனில் அதில் சிறிது அழுக்குப்படிந்தாலும் வெளிப்படையாகத் தெரியும். மற்ற வண்ண ஆடைகளில் அவ்வாறு தெரிவதில்லை. இஸ்லாமிய மார்க்கம் தூய்மையை அதிகமாக வலியுறுத்துகிறது. ஆகவேதான் நபியவர்கள் வெள்ளை ஆடையை சிறந்த ஆடை என்று கூறியிருக்கிறார்கள்.
அதுபோல இறந்தவர்களுக்கு கஃபனிடும்போதும் வெள்ளை ஆடைகளை பயன்படுத்துமாறு நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இறந்த உடல்களுக்கு கண்ணியம் வழங்குவதை மார்க்கம் கற்றுத்தருகிறது. அவர்களை நறுமணம் கலந்த தண்ணீரில் குளிப்பாட்டுமாறு போதிக்கிறது. அந்த வரிசையில் சிறந்த ஆடையான வெள்ளை நிற ஆடையில் கஃபனிடுமாறு கட்டளையிடுகிறது.
3305. சுருமாக்களில் சிறந்தது
خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ فَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، و الْبَسُوا أحياءَكُم، و خَيْرَ أَكْحَالِكُمُ الإِثْمِدُ، يُنْبِتُ الشَّعْرَ ويَجْلُو الْبَصَرَ
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். உங்களில் உயிரோடிருப்பவர்கள் அந்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களில் மரணித்தவர்களுக்கு வெள்ளை ஆடைகளைக் கொண்டு கஃபனிடுங்கள். உங்கள் கண்களுக்கான சிறந்த சுருமா இஸ்மித் (ஆண்டிமனி) ஆகும். அது பார்வையை பலப்படுத்துகிறது. முடியை வளர்க்கிறது.
ஆதாரம் : அபூதாவூத் 3878இ 4061இ திர்மிதீ 994இ இப்னு மாஜா 3497இ 3566இ அஹமது 2479இ 3342இ சுனனுந் நஸாஈ 5113இ
சிறு குறிப்பு
கண்களுக்கு சுருமா அணிவதை நபியவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏனெனில் சுருமாக்கள் கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்.
இஸ்லாமிய மார்க்கம் உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு வலியுறுத்துகிறது. ஆராேக்கியம் என்பது இறைவனின் அருட்கொடை என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கண்ணின் ஆரோக்கியத்தை சுருமாக்கள் பாதுகாப்பதால் சுருமாக்களை பயன்படுத்துமாறு நபியவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய சுருமாக்களில் சிறந்ததாக இஸ்மித் என்ற கல்லிலிருந்து பெறப்படும் சுருமா உள்ளது. இது ஹிஜாஸ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த கல் அழுக்கு இல்லாமல் மினுமினுப்பாக இருக்கும். இது பார்வையை மேம்படுத்தும். கண்ணின் ஔியை அதிகரிக்கச் செய்யும். மேலும் கண் இமைகளில் உள்ள முடியை வளரச் செய்யும். தூங்கும் போது இந்த சுருமாக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
3306. அன்சாரிகளில் சிறந்த இல்லம்
خَيْرُ دِيَارِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : அன்சாரிகளுடைய வீடுகளில் சிறந்த வீடு பனூ நஜ்ஜார் குலத்தாரின் வீடுகளாகும்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 5300இ சுனனுத் திர்மிதீ 3912
சிறு குறிப்பு
நபியவர்கள் ஒவ்வொரு குலத்தாரையும் உன்னிப்பாக கவனிக்கக்கூடியவராக இருந்திருக்கிறார்கள். ஒரு குலத்தாரிடத்தில் ஏதேனும் சிறப்பான நற்பண்புகள் தென்பட்டால் அவற்றை பாராட்டுவார்கள். அந்த நற்பண்புகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அந்த குலத்தாரை ஊக்கப்படுத்துவார்கள். மற்ற குலத்தாரும் அவற்றை பின்பற்றுமாறு வழிகாட்டுவார்கள்.
அந்தவகையில் நபியவர்கள் அன்சாரிகளில் பனூ நஜ்ஜார் குலத்தாரின் வீடுகளை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்கள்.
நபியவர்கள் மதினாவிற்கு வந்ததும் பனூ நஜ்ஜாரின் இல்லங்களில்தான் தங்கினார்கள். அவர்கள் வசித்து வந்த இடத்தில்தான் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை கட்டினார்கள்.
ஏனெனில் பனூ நஜ்ஜார் குலத்தினர் நபியின் பாட்டனாரான அப்துல் முத்தலிபின் தாய்வழி மாமன்களாவர். ஆகவேதான் அவர்களது இல்லங்களில் தங்கி அவர்களை நான் கவுரவப்படுத்துகிறேன் என்று நபியவர்கள் கூறினார்கள்.
3307. பனூ அப்தில் அஷ்ஹல்
خَيْرُ الأَنْصَارِ بَنُو عَبْدِ الأَشْهَلِ
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : அன்சாரிகளுடைய வீடுகளில் (இரண்டாவது) சிறந்த வீடு பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் வீடுகளாகும்.
ஆதாரம் : ஸஹீஹ் திர்மிதீ 3913இ ஸஹீஹ் புகாரி 5300.
சிறு குறிப்பு
அன்சாரிகள் இஸ்லாத்திற்கு செய்த சேவைகள் அளப்பெரியது. அவர்கள் தங்களது உடலாலும் பொருளாதாரத்தாலும் நிறைய தியாகங்களை புரிந்துள்ளார்கள். நபிகள் நாயகத்திற்கும்இ மக்காவைச் சேர்ந்த முஸ்லிம்களான முஹாஜிரீன்களுக்கும் எண்ணற்ற உதவிகள் செய்துள்ளனர். ஆகவேதான் இவர்களுக்கு அன்சாரிகள் (உதவியாளர்கள்) என்று அல்லாஹ் பெயர் சூட்டினான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்காக முஸ்அப் இப்னு உமைர் ரலியை மதீனாவிற்கு அனுப்பினார்கள். முஸ்அப் இப்னு உமைர் ரலியின் பிரச்சாரத்தினால் இஸ்லாத்தை ஏற்றவர்களில் முதலாமவர் சஅத் இப்னு முஆத் ஆவார். இவர் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தைச் சார்ந்த தலைவர். இந்த குலத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையாகவே நற்குணமுள்ளவர்களாக திகழ்ந்தார்கள். உசைத் இப்னு ஹுழைர்இ அப்பாத் இப்னு பிஷ்ர் போன்ற அன்சாரிகள் இந்த குலத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆகவேதான் நபியவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தை சிறந்தவர்கள் என்று கூறினார்கள்.
3308. மார்க்கத்தில் சிறந்தது
خيْرُ دِينِكُمُ الْوَرَعُ
சஅது இப்னு அபீவக்காஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள். உங்களது (இஸ்லாமிய) மார்க்கத்தில் சிறந்தது இறையச்சமாகும்.
ஆதாரம் : ஷுஅபுல் ஈமான் 5751இ ஸஹீஹ் தர்கீப் 68இ ஹாகிம் 317இ இமாம் தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 3960இ சுயூதியின் ஜாமிஉஸ் ஸகீர் 5846இ
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் இறையச்சத்தை அதிகமாக வலியுறுத்துகிறது. இறையச்சம் இருந்தால்தான் ஒருவன் முஸ்லிமாக இருப்பான். இறையச்சம் என்றால்இ இறைவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகியிருத்தல் மற்றும் அவன் கடமையாக்கிய விஷயத்தை கடைபிடித்தல் ஆகும்.
இஸ்லாம் அனுமதிக்கப்பட்டதையும் தடை செய்யப்பட்டதையும் நமக்கு விளக்கியிருக்கிறது. இவையிரண்டிற்கும் இடைபட்ட சில காரியங்களும் உள்ளன. ஒரு இறையச்சவாதி சந்தேகத்திற்கிடமானவற்றின் பக்கம் நெருங்கக்கூடாது.
3309. எளிமை
خيْرُ دِينِكُمْ أيْسَرُهُ
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : எளிமையாக நடப்பதுதான் உங்களது (இஸ்லாமிய) மார்க்கத்தில் சிறந்ததாகும்.
ஆதாரம் : அதபுல் முஃப்ரத் 260 இமாம் தபரானியின் முஅஜமுஸ் ஸகீர் 1066இ முஸ்னது அஹமது 15978இ முஸ்னது தயாலீஸி (2ஃ628)
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் எளிமையை விரும்பக்கூடிய மார்க்கமாகும். வணக்க வழிபாட்டிலும் எளிமையைப் பேணுமாறுதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அதனால்தான் இரவு முழுவதும் நின்று வணங்குவேன் என்றும்இ திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் தினமும் நோன்பு நோற்பேன் என்றும் சபதம் எடுத்தவர்களை நபியவர்கள் கண்டித்தார்கள்.
அதிகமான வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதைவிட குறைவாக செய்தாலும் நிறைவாக செய்யும் வணக்கவழிபாடுதான் சிறந்தது என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
முடிந்த அளவிற்கு எளிமையான விஷயத்தையே மேற்கொள்ளக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.
உலக காரியங்களிலும் எளிமையையே தேர்வு செய்ய வேண்டும். எளிமையாக நடைபெறும் திருமணம்தான் அதிக பரக்கத் நிறைந்த திருமணம் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். எளிமையான திருமணம்தான் சிறந்த திருமணம் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆக ஒரு முஸ்லிம் தன்னால் முடிந்த அளவிற்கு எளிமையையே தேர்வு செய்ய வேண்டும்.
3310. வரிசைகளில் சிறந்தது
خَيرُ صُفوفِ الرِّجالِ أوَّلُها، وشرُّها آخرُها، وخَيرُ صفوفِ النِّساءِ آخرُها، وشرُّها أوَّلُها
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : (ஜமாஅத் தொழுகையில்) ஆண்களுக்கான வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் மோசமானவை கடைசி வரிசையாகும். பெண்களுக்கான வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் மோசமானது முதல் வரிசையாகும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 749இ அபூதாவூது 678இ ஸஹீஹ் இப்னு ஹுஸைமா 181ஃ3இ முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 5110இ அல் பஸ்ஸார் 7073.
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்க விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துகிறது. ஆண்களும் பெண்களும் வழிதவறாமல் இருப்பதற்கான வழிவகைகளை கற்றுத்தருகிறது.
அந்தவகையில் தொழுகையில் ஆண்களும் பெண்களும் கலந்துவிடாதவாறு வரிசைகளை ஒழுங்குப்படுத்துகிறது.
ஆண்கள் வரிசை இமாமுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அதன்பிறகு சிறுவர்கள் வரிசை இருக்க வேண்டும். அதன் பிறகு பெண்கள் வரிசை இருக்க வேண்டும். இவ்வாறு தொழுகையின் வரிசைகளை நபியவர்கள் ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள்.
அவற்றில் ஆண்களுக்கான வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். ஏனெனில் முதல் வரிசையில் மலக்குகள் இருப்பார்கள். இவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ்வின் அருளை வேண்டி மலக்குகளும் துஆ செய்வார்கள். முதல் வரிசையில் நின்று தொழுபவருக்குக் கிடைக்கும் நன்மைகள் அளப்பெரியது. அவற்றை மறுமையில்தான் உணரமுடியும். ஆக ஆண்கள் முடிந்த அளவிற்கு முதல் வரிசையில் நின்று தொழுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்காக போட்டி போட வேண்டும்.
அதைப்போல் பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதைவிட தங்களது வீடுகளில் தொழுவதுதான் சிறந்தது. பள்ளிவாசலில் நடைபெறும் ஜமாஅத் தொழுகையில் பெண்கள் கலந்து கொண்டால் அவர்களின் வரிசையில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் கெட்டது முதல் வரிசையாகும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதாவது ஆண்களைப் போன்று பெண்கள் முதல் வரிசைக்காக போட்டி போடக்கூடாது. முதல் வரிசையில் இடமில்லையென்றால் அடுத்த வரிசையில் நின்று கொள்ள வேண்டும். முதல் வரிசைக்காக முண்டியடிக்கக்கூடாது. இதுதான் பெண்களுக்கு சிறந்ததாகும்.
3311. பெண்கள் எங்கு தொழுவது சிறந்தது
خيرُ صَلَاةِ النِّسَاءِ فِي قَعْرِ بُيوتِهنَّ
முஃமின்களின் அன்னை உம்மு சலமா ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெண்கள் அவர்களுடைய வீடுகளின் உட்பகுதியில் (தனி அறையில்) தொழுவதுதான் அவர்களுக்கு (மிகவும்) சிறந்ததாகும்.
ஆதாரம் :அபூதாவூது 570இ முஸ்னது அஹமது 26584இ 26612இ இப்னு குஸைமா 1683இ ஹாகிம் 756இ அபூ யஃலா 7025இ
சிறு குறிப்பு
பெண்கள் பள்ளிவாசலில் வந்து தொழுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் மசூதியில் தொழ விரும்பினால் அதை தடுக்கும் உரிமை கணவனுக்குக்கூட கிடையாது என்று நபியவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இருந்தபோதிலும் பெண்கள் பள்ளிவாசலில் வந்து தொழுவதைவிட அவர்களது வீடுகளில் தொழுவதுதான் சிறப்பிற்குரியது. அவர்களின் வீடுகளில்கூட முற்றத்தில் தொழுவதைவிட தனி அறைக்குள் தொழுவது சிறப்பு வாய்ந்தது. அவர்களது வீட்டில் அவர்களுக்கு தோதுவாக உள்ள இடங்களில் தொழ வேண்டும். இதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது. அதிக நன்மையைப் பெற்றுத்தரும்
3312. நல்லொழுக்கம்
خَيْرُكُم إِسْلَامًا أَحَاسِنُكُم أَخْلَاقًا إِذَا فَقُهُوا
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : இஸ்லாத்தை நீங்கள் நன்கு புரிந்து கொண்டால்இ உங்களில் நற்குணம் கொண்டவர்களே இஸ்லாத்தில் சிறந்தவர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 10068இ அதபுல் முஃப்ரத் 218இ இப்னு ஹிப்பான் 91
சிறு குறிப்பு
நற்குணத்தைப் பற்றிய குறிப்பு 3259 மற்றும் 3260 ல் இடம்பெற்றுள்ளது.
3313. கடனை திருப்பி செலுத்துபவர்
خَيْرُكمْ خَيْرُكمْ قَضَاءً
இர்பாழ் இப்னு சாரியா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : வாங்கிய கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்தபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : சுனனுந் நஸாஈ 4619இ இப்னு மாஜா 2286இ இர்வாஉ கலீல் 5ஃ224இ
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3261ல் உள்ளது.
3314. குடும்பத்தாரிடத்தில் சிறந்தவர்
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي،
ஆயிஷா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : தங்களது குடும்பத்தாரிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார். நான் எனது குடும்பத்தாரிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்பவனாவேன்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 3895இ தாரமி 2260இ இப்னு மாஜா 1977இ இப்னு சஅதின் தபகாதுல் குப்ரா 10522இ பஸ்ஸார் 5196இ இமாம் ஷவ்கானியின் ஃபத்ஹுல் கதீர் 1ஃ635இ இப்னு ஹிப்பான் 4177.
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3265 மற்றும் 3366 லா இடம்பெற்றுள்ளது.
3315. நபியின் குடும்பத்தாரிடத்தில் சிறந்த முறையில் நடத்தல்
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِي مِن بَعْدِي
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : எனக்குப் பிறகு எனது குடும்பத்தாரிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்பவர் உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஹாகிம் 5359இ அபீ யஃலா 5924இ இப்னு அபீ ஆஸிமின் சுன்னா 1414இ ஹைஸமியின் மஜ்மஉஸ் ஸவாயித் 9ஃ177
இது ஹஸன் தரத்தில் அமைந்தவையாகும்.
சிறு குறிப்பு
நபியின் குடும்பத்தாரிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்வது சிறப்பிற்குரியது. இந்த நபிமொழியை கேள்விபட்டதும் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி தனது ஒரு தோட்டத்தை நான்கு லட்சத்திற்கு விற்று அதை நபியின் மனைவிமார்களிடையே பங்கிட்டார்கள்.
ஆகவே நாம் நபியின் குடும்பத்தினரை நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
3316. மனைவியிடத்தில் நல்ல முறையில் நடத்தல்
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِلنِّسَاءِ
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்கள் பெண்களிடத்தில் சிறந்த முறையில் நடப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : முஸ்தத்ரக் ஹாகிம் 7533இ ஸஹீஹ் தர்கீப் 1925
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3265 மற்றும் 3366 லா இடம்பெற்றுள்ளது.
3317. சிறந்த தலைமுறையினர்
خيرُكم قَرْنِي، ثُمَّ الذين يلُونَهم، ثُمَّ الذين يَلُونَهم، ثُمَّ يكونُ بعدَهم قومٌ يخونونَ ولا يُؤْتَمنونَ، وَيَشهدونَ ولَا يُسْتَشْهَدُونَ، وَيَنذُرونَ ولَا يُوَفُّونَ، وَيَظْهَرُ فيهمُ السِّمَنُ
இம்ரான் இப்னு ஹுசைன் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : எனது சமுதாயத்தில் சிறந்தவர்கள் எனது தலைமுறையைச் சேர்ந்த சஹாபாக்கள் ஆவார்கள். அதன் பிறகு சிறந்தவர்கள் சஹாபாக்களைப் பின்பற்றி நடந்த தாபிஈன்கள் ஆவர். அதன் பிறகு சிறந்தவர்கள் தாபிஈன்களைப் பின்பற்றி நடந்த தபஉதாபிஈன்கள் ஆவர். பின்னர் ஒரு தலைமுறையினர் வருவார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை யாரும் நம்பமாட்டார்கள். சாட்சியமளிக்க வாருங்கள் என்று அழைக்கப்படாமலேயே சாட்சியமளிக்க வருவார்கள். நேர்ச்சை செய்வார்கள் ஆனால் அவற்றை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களது வயிறு பெருத்து தொந்தி விழுந்திருக்கும்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 6695இ ஸஹீஹ் முஸ்லிம் 4960
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3288இ 3294 மற்றும் 3295 ல் இடம்பெற்றுள்ளது.
3318. உணவளித்தலும் சலாம் கூறுதலும்
خَيْرُكُمْ مَنْ أَطْعَمَ الطَعَامَ، وَردَّ السَّلَامَ
சுஹைப் ரலி அறிவித்திருப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : பசித்தவர்களுக்கு உணவளிப்பவரும் சலாமை பரப்புபவரும் உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 23971இ இப்னு சஅதின் தபகாதுல் குப்ரா 3614.
ஹஸன் தரத்தில் அமைந்தது.
சிறு குறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் பிறர் நலம் நாடுவதை வலியுறுத்துகிறது.
‘பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுபவர்களுக்கு வானத்தில் உள்ள அல்லாஹ் கருணை காட்டுவான்’ என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பிற மக்கள் மீது கருணை காட்டுவதில் உணவளிப்பது முதலிடத்தை வகிக்கும். ஆகவேதான் பசித்தவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது.
பிறருக்கு உணவளிப்பதில் சஹாபாக்கள் சிறந்து விளங்கினர். அபூதல்ஹா - உம்மு சுலைம் தம்பதியினர் தனது விருந்தினருக்கு உணவளித்துவிட்டு தானும் தனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்திருக்கின்றனர். அவர்களை சிறப்பித்து இறைவன் திருமறை வசனத்தை அருளியிருக்கிறான்.
மேலும் ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்றது என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆகவே ஒரு முஸ்லிம் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உணவளிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.
அதுபோல சலாம் கூறுவதையும் மார்க்கம் அதிகம் வலியுறுத்தியுள்ளது. அல்லாஹ் ஆதம் நபிக்கு இட்ட முதல் கட்டளை மலக்குமார்களிடம் சென்று சலாம் கூற வேண்டும் என்பதுதான். மலக்குமார்கள்தான் ஆதம் நபிக்கு பதில் சலாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.
ஒரு முஸ்லிம் அதிகமாக சலாம் உரைக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.
தனது சொந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் அடுத்தவர் வீட்டிற்குள் செல்வதாக இருந்தாலும் சலாம் கூறிவிட்டு நுழைய வேண்டும்.
கணவன் மனைவி சந்திக்கும் பொழுதெல்லாம் சலாம் கூறி சந்திப்பை தொடங்க வேண்டும்.
வீட்டைவிட்டு வெளியே சென்றாலும் சந்திப்பவர்களிடத்தில் சலாம் கூறி உரையாடலைத் தொடங்க வேண்டும்.
அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுவது சிறந்த பழக்கமாகும்.
3319. குர்ஆனை கற்பவரும் கற்பிப்பவரும்
خَيرُكم مَن تعلَّمَ القرآنَ وعلَّمَه
அலீ இப்னு அபீதாலிப் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : குர்ஆனைத் தாமும் கற்று அதை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 2907இ 2909இ சுனன் அபூதாவூது 1452இ ஸஹீஹுல் புகாரி 5027இ முஸ்னது அஹமது 1317இ இமாம் நஸாஈயின் சனனுந் கபீர் 8037இ இப்னு மாஜா 211இ தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 6ஃ256.
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3268 ல் உள்ளது.
3320. சிறந்தவரும் மோசமானவரும்
خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ، وَشَرُّكُمْ مَنْ لَا يُرْجَى خَيْرُهُ وَلَا يُؤْمَنُ شَرُّهُ.
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : யாருடைய நன்மைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்களோஇ யாருடைய தீமைகளை விட்டும் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவர்தான் உங்களில் சிறந்தவர் ஆவார். யாரிடத்திலிருந்து மக்கள் நன்மையை எதிர்பார்க்கவில்லையோஇ யாருடைய தீமையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இல்லையோ அவரே உங்களில் கெட்டவர் ஆவார்.
ஆதாரம் : சுனன் அத் திர்மிதீ 2263இ முஸ்னது அஹமது 8812இ இப்னு ஹிப்பான் 527இ பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 11266.
சிறு குறிப்பு
ஒரு முஸ்லிம் தனது கரத்தாலும் நாவாலும் பிற முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து மற்றவர்கள் நன்மையை எதிர்பார்க்கும் விதமாக நம்முடைய செயல்பாடுகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். நமது நற்பண்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்தவர்களாக இருப்போம்.
இதற்கு மாறாக மற்றவர்களுக்கு நோவினை தரக்கூடியவர்களாக நாம் இருக்கக்கூடாது. நம்மால் பிறருக்கு எந்த தொல்லைகளும் ஏற்பட்டுவிடக்கூடாது. நம்மைப் பார்த்து பிறர் பயந்தால் நாம் இறைவனிடம் மோசமானவர்களாக மாறிவிடுவோம்.
3321. இறைவன் வழங்கிய சிறந்த விஷயம்
خَيرُ مَا أُعْطِيَ النَّاسُ خُلُقٌ حَسَنٌ
உஸாமா பின் ஷாரிக் ரலா அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : (இறைவனால்) மனிதர்களுக்கு வழங்கப்படக்கூடியவற்றில் சிறந்த விஷயம் நற்குணமாகும்.
ஆதாரம் : இப்னு மாஜா 3436இ முஸ்னது அஹமது 18477இ அபூதாவூது 3855இ திர்மிதீ 2038இ முஸ்தத்ரக் ஹாகிம் 421.
சிறு குறிப்பு
நற்குணத்தைப் பற்றிய குறிப்பு முன்னால் இடம்பெற்றுள்ளது.
3322. சிறந்த நீரும் மோசமான நீரும்
خَيْرُ مَاءٍ عَلَى وَجْهِ الْأَرْضِ مَاءُ زَمْزَمَ فيه طعامُ الطُّعمِ وشفاءُ من السُّقمِ وشرُّ ماءٍ على وجهِ الأرضِ ماءٌ بوادي بَرَهُوتَ بقُبَّةٍ حَضَرَمَوْتَ كرِجلِ الجرادِ من الهوام، تُصبِحُ تتدفَّقُ وتُمسي لا بَلالَ فيها
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : பூமிலிருக்கும் நீரில் மிகச்சிறந்த நீர் ஸம்ஸம் நீராகும். அது பசிக்கு உணவாகவும் நோய்க்கு மருந்தாகவும் பயன்படும். பூமியிலுள்ள நீரில் மோசமானது ஹழர மவுத்தின் வாதி பர்ஹூத்தில் உள்ள நீராகும். அதன் (கிணறானது) வெட்டுக்கிளிகளின் கால் போன்று இருக்கும். காலையில் அதில் தண்ணீர் பாயும். மாலையில் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும்.
ஆதாரம் : தர்கிப் வ தர்ஹீப் 2ஃ200இ தபரானி 11167 (11ஃ98)
சிறு குறிப்பு
நபியவர்கள் இந்த நபிமொழியில் சிறந்த நீரைப் பற்றியும் கெட்ட நீரைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள்.
சிறந்த நீர் ஜம்ஜம் நீராகும். இந்த நீர் அன்னை ஹாஜர் மற்றும் இஸ்மாயில் (அலை) யின் காலத்தில் மக்காவில் வைத்து உருவாக்கப்பட்ட நீரூற்றாகும். இது வற்றாத நீரூற்றாக உள்ளது. இந்த நீரில் மருத்துவ குணம் உள்ளது. மேலும் பசிக்கு உணவாகவும் இந்த நீர் செயல்படும். அபூதர் அல் கிஃபாரி ரலி ஏறத்தாழ ஒருமாதகாலம் ஜம்ஜம் நீரை மட்டுமே குடித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் எடையும் கூடியது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த நீராக ஜம்ஜம் நீர் உள்ளது.
3323. ரத்தம் குத்தி எடுத்தல்
خَيْرُ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ
சம்ரா பின் ஜுன்துப் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்களுக்கான சிறந்த சிகிச்சை முறை ரத்தம் குத்தி எடுத்தலாகும்(ஹிஜாமா).
ஆதாரம் : அபூதாவூது 3857இ அஹமது 20225இ பஸ்ஸார் 4530இ தபரானி 6784 (7ஃ185)இ ஸஹீஹ் முஸ்லிம் 3215இ தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 3ஃ170இ திர்மிதீ 2047இ ஹாகிம் 7472.
சிறு குறிப்பு
நபிகள் நாயகத்தின் காலத்தில் ஹிஜாமா எனும் ரத்தம் குத்தியெடுக்கும் பழக்கம் இருந்தது. நபியவர்கள் ரத்தம் குத்தி எடுத்திருக்கிறார்கள். நோன்பு காலங்களிலும் இஹ்ராம் அணிந்திருந்த நிலையிலும் ஹிஜாமா செய்திருக்கிறார்கள். ஹிஜாமாவை தொழிலாக செய்தவர்களும் நபியவர்கள் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
ஹிஜாமாவில் நோய் நிவாரணம் இருப்பதாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் இது கெட்ட ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. அதன்பிறகு புது ரத்தம் மீண்டும் உடலில் உற்பத்தியாகிவிடும். இதனால் உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
ஆகவேதான் மற்ற அனைத்து சிகிச்சை முறைகளைவிடவும் ஹிஜாமா சிகிச்சை சிறந்ததாக உள்ளது.
3324. ரத்தம் குத்தி எடுத்தலும் வெண்கோஷ்டமும்
خَيرُ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ وَالْقُسْطُ الْبَحْرِيُّ، لَا تُعَذِّبُوا صِبْيَانَكُمْ بِالْغَمْزِ مِنَ الْعُذْرَةِ
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்களுக்கான சிறந்த சிகிச்சை ரத்தம் குத்தி எடுத்தலும் (ஹிஜாமா) வெண்கோஷ்டமுமாகும். உங்கள் குழந்தைகளுக்கு சாக்கு போக்கு சொல்லி (தவறான சிகிச்சையளித்து) துன்பம் கொடுக்காதீர்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 5696இ முஸ்னது அஹமது 12064இ நஸாயின் சுனனுந் கபீர் 7582இ அபீ யஃலா 3850
சிறு குறிப்பு
வெண்கோஷ்டம் என்பது ஒருவகை தாவரமாகும். இதன் கிழங்கு இஞ்சி போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இதை வேக வைத்து சாப்பிடுவது நோய் நிவாரணத்தை வழங்கும். இந்தியாவில் இவை மருத்துவத்திற்காக விதைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் வேர்ப் பகுதி காய்ச்சல்இ சொறிஇ ஆஸ்துமாஇ குடல் அழற்சி மற்றும் குடல் புழுக்கள் போன்ற நோய்களுக்கு மருந்தாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது
நாம் மருத்துவத்தில் சிறந்த கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் அதற்குண்டான மருந்தை பயன்படுத்த வேண்டும். இது விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளை மருத்துவத்தில் இணைக்கக்கூடாது.
சில நோய்களுக்கு சூடு வைக்கும் பழக்கம் உள்ளது. சூடு வைத்தால் நோய் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. இது தவறானது. இவ்வாறு நாம் இருக்கக்கூடாது.
3325. பயணிக்க சிறந்த இடம்
خيرَ مَا رُكِبَتْ إِليهِ الرَّواحِلُ مَسُجِدِي هَذا، والْبَيْتُ العَتِيْقُ
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : யாத்ரீகர்கள் பயணிக்க சிறந்த இடம் எனது இந்த பள்ளிவாசலும் (மஸ்ஜிதுந் நபவி) பழமையான வீடும்தான் (கஅபதுல்லாஹ்).
ஆதாரம் : முஸ்னது அஹமது 14824இ ஸஹீஹ் தர்கீப் 1206இ தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 1ஃ225இ நஸாயின் சுனனுந் கபீர் 11347இ ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1616இ
சிறு குறிப்பு
நமது சமுதாயத்திற்கு இந்த பூமி முழுவதும் தொழுமிடங்களாக ஆக்கப்பட்டுள்ளது. நாம் வசிக்கும் இடத்தில் பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டு அங்கு தொழுகையை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் அதிக நன்மையை எதிர்பார்த்து வேறு எந்த பள்ளிவாசலிற்கும் பயணம் செய்யக்கூடாது என்று நபியவர்கள் தடை விதித்துள்ளார்கள். ஆனால் மூன்று பள்ளிக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.
அவை கஅபத்துல்லாஹ்இ மஸ்ஜிதுந் நபவி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.
கஅபத்துல்லாஹ் மக்காவில் அமைந்துள்ளது. இதுதான் உலகில் முதன்முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசலாகும்.
மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் மதீனாவில் அமைந்துள்ளது. இதை நபியவர்கள் கட்டினார்கள்.
3326. இறந்த பின் மனிதன் விட்டுச் செல்வதில் சிறந்தது
خَيْرُ مَا يُخَلُّفُ الْإِِنْسَانَ بَعْدَهُ ثلاثٌ : وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ، وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا، وَعِلْمٌ يُنتفَعُ بِهِ مِنْ بَعْدِهِ
இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : ஒரு மனிதன் (இறந்த) பிறகு அவன் விட்டுச் செல்வதில் சிறந்த விஷயங்கள் மூன்றாகும். அவையாவனஇ
பெற்றோருக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை.
2) தொடர்ந்து நடைபெற்றுவரும் தொண்டு நிறுவனம்.அதன்மூலம் தரமம் செய்த நன்மைகள் நிரந்தரமாக கிடைக்கும்.
3) அவருக்குப் பின்னுள்ளவர்களுக்கு பயனளிக்கும் விதமாக விட்டுச் சென்ற கல்வி.
ஆதாரம் : இப்னு மாஜா 241இ இப்னு குசைமா 2495இ இப்னு ஹிப்பான் 93
ஹஸன் தரத்தில் அமைந்தது
சிறு குறிப்பு
ஒரு முஸ்லிம் தான் உயிரோடு வாழும் போது தனக்கு நிறைய நன்மைகளைச் சேர்த்து வைக்க வேண்டும். அதுதான் சொர்க்கத்தில் நம்மைக் கொண்டு செல்ல உதவும். அதுதான் ஒரு மனிதனுடைய உண்மையான சொத்தாக இருக்கும்.
அதுபோலஇ ஒரு மனிதன்இ தான் இறந்தபின்பும் தனக்கு நன்மைகள் வந்து கொண்டிருக்கும் விதமாக சில காரியங்களை செய்ய வேண்டும். அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் அவருக்கான நன்மைகள் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அவற்றில் மூன்று விஷயங்கள் சிறந்ததாக உள்ளன. அவை
நமக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை. நாம் நமது குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். இஸ்லாம் காட்டித்தந்த அடிப்படையில் வளர்க்க வேண்டும். நாம் இறந்ததற்குப் பிறகு நமக்காக பிரார்த்தனை செய்யக்கூடிய விதத்தில் அவர்களை பழக்க வேண்டும். அவ்வாறு நமது குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்தால் அதன்மூலமாகவும் நமக்கு நன்மைகள் வந்து கொண்டே இருக்கும்.
நிரந்தர தர்மம் செய்ய வேண்டும். சில தர்மங்கள் சில நொடிகளில் முடிந்துவிடும். சில தர்மங்கள் சில வருடங்கள் நீடிக்கும். சில தர்மங்கள் பல்லாண்டு காலம் நீடித்து நன்மைகளை விளைவிக்கும். ஒரு முஸ்லிம் அனைத்து விதமான தர்மங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் காெள்ள வேண்டு்ம். அதிலும் நிரந்தர தர்மத்தைப் பெற்றுத் தரும் காரியத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தல்இ நீர்நிலைகள்இ அணைகள் கட்டுதல்இ மரம் நடுதல்… இதுபோன்ற பல்வேறு காரியங்கள் நிரந்தர தர்மத்தைப் பெற்றுத்தரும்.
நாம் கற்றுக் கொண்ட கல்வியை பிற மக்களுக்குப் போதிக்க வேண்டும். நம்மிடமிருந்து கற்றுக் கொண்ட மாணவர்கள் அவர்களது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். இவ்வாறு நாம் கற்றுக் கொடுத்தக் கல்வி பல்வேறு தலைமுறைகளுக்கு தொடர்ச்சியாக சென்று கொண்டே இருக்கும். இதன்மூலம் நாம் மரணித்த பின்பும் நமக்கு நன்மைகள் வந்து கொண்டே இருக்கும்.
3327. பெண்களுக்கான சிறந்த தொழுமிடம்
خيرُ مَساجدِ النِّساءِ قَعرُ بُيوتِهنَّ.
உம்மு ஸல்மா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : பெண்களுக்கு சிறந்த தொழுமிடங்கள் அவர்களது வீடுகளுக்குள் இருக்கின்றது.
ஆதாரம் : முஸ்னது ஷுஐபு 26542இ ஹாகிம் 756இ முஸ்தத்ரக் ஹாகிம் 851இ முஸ்னது அஹமது 26584இ இப்னு குசைமா 1683
சிறு குறிப்பு
இது பற்றிய குறிப்பு 3311ல் இடம்பெற்றுள்ளது.
3328. உலகத்துப் பெண்களில் சிறந்தவர்கள்
خَيرُ نِسَاءِ الْعَالَمِينَ أربَعٌ : مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உலகத்துப் பெண்களில் சிறந்தவர்கள் நான்கு பேர்கள். மரியம் பின்து இம்ரான்இ கதீஜா பின்து குவைலித்இ ஃபாத்திமா பின்து முஹம்மது மற்றும் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா ஆவர்.
ஆதாரம் : சுனனுத் திர்மிதீ 3878இ முஸ்னது அஹமது 12414இ சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4072இ
சிறு குறிப்பு
உலகத்தில் எத்தனையோ பெண்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்களில் மிகச்சிறந்த நான்கு பேரை நபியவர்கள் நமக்கு பட்டியலிடுகிறார்கள். அவர்களாவது
முதலாமவர் மரியம் பின்து இம்ரான். இவர்களைப் பற்றிய வரலாறு திருமறையில் இடம்பெற்றுள்ளது. மரியம் பிறந்ததும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலில் நேர்ந்து விடப்பட்டார்கள். எந்த ஆணும் மரியம் பின்து இம்ரானை தொட்டதில்லை. அதற்கு அவர்களும் அனுமதித்ததில்லை. அந்த அளவிற்கு இவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள். மேலும் இறைவனின் மீது தவக்குல் எனும் நம்பிக்கையை வைத்தவர்களாக இருந்தார்கள். இறைவனின் அற்புதத்தால் ஈஸா நபியைப் பெற்றெடுத்தார்கள்.
கதீஜா பின்து குவைலித். இவர்கள் முஹம்மது நபியை மணந்து கொண்ட முதல் மனைவி. இவர்கள் மூலமாக முஹம்மது நபிக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். முஹம்மதை நபியாக ஏற்றுக்கொண்ட முதல் மனிதர் இவர்கள்தான். நபியவர்களுக்கு அவர்களின் நபித்துவ காலகட்டங்களால் ஆறுதலாகவும் துணையாகவும் நின்றவர்கள். இதற்காக பல்வேறு துயரங்களை தாங்கிக் கொண்டார்கள்.
ஃபாத்திமா பின்து முஹம்மது. இவர்கள் நபியவர்களின் அன்பு மகள். இவர்களும் மார்க்கத்திற்காக பல்வேறு தியாகங்களை புரிந்திருக்கிறார்கள். முஹம்மது நபிக்கு காஃபிர்களால் ஏற்பட்ட சிரமத்தை நீக்க பாடுபட்டிருக்கிறார்கள். ஒருமுறை முஹம்மது நபி தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது காஃபிர்களில் ஒருவன் ஒட்டகக் குடலை சஜ்தா செய்த நிலையிலிருந்த நபியின் மீது வைத்தான். இதனால் நபியவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அப்போது ஃபாத்திமா ரலிதான் இந்த ஒட்டகக் குடலை அகற்றினார்கள். உஹதுப் போரில் நபியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தோடியது. ஒரு பாயை எரித்து அதன் சாம்பலை வைத்து ரத்தம் வழிவதை ஃபாத்திமா ரலிதான் நிறுத்தினார்கள். இவ்வாறு மார்க்கத்திற்காக பல்வேறு தியாகங்கள் புரிந்துள்ளார்கள்.
ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா. ஃபிர்அவன் என்பவன் கொடுங்கோலன். தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டவன். அவனது மனைவியான ஆசியா அம்மையார் மூஸா நபியின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்களை துன்புறுத்தப்போவதாக ஃபிர்அவ்ன் கொக்கரித்தான். அப்போதுஇ ‘எனக்கு இவ்வுலக மாட மாளிகைகள் வேண்டாம். சொர்க்கத்து இல்லங்களே போதும்’ என்று இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். இந்த அளவிற்கு இஸ்லாத்திற்காக தனது கணவனை எதிர்த்த வீர மங்கையாக ஆசியா அம்மையார் திகழ்கிறார்.
3329. குறைஷி பெண்கள் சிறந்தவர்கள்
خَيرُ نِساءٍ رَكِبْنَ الإِبِلَ؛ صالِحُ نساءِ قُريشٍ، أحْناهُ على ولَدٍ في صِغَرِهِ، و أرْعاهُ على زوْجٍ في ذاتِ يدِهِ
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களில் சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களாவர். ஏனெனில் அவர்கள் தங்களது குழந்தைகள்மீது அதிக அக்கறையுடையவர்கள் மற்றும் தனது கணவனது செல்வத்தைப் பாதுகாப்பவர்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 3434இ 5082இ ஸஹீஹ் முஸ்லிம் 4946இ முஸ்னது அஹமது 16929இ
சிறு குறிப்பு
ஒரு மனைவியின் கடமைகளில் முக்கியமானது தங்களது குழந்தைகளை சரியான முறையில் வளர்த்தல் மற்றும் கணவனின் செல்வத்தை பாதுகாத்தலாகும். இவ்விரண்டும்தான் மனைவியின் முக்கிய பொறுப்புக்கள். இவற்றில் குறைஷிகள் திறம்பட செயல்பட்டார்கள். ஆகவேதான் அவர்களை நபியவர்கள் சிறந்தவர்கள் என்கிறார்கள்.
3330. பெண்களில் சிறந்தவர்கள்
خَيرُ نِسائِكُم الوَلُودُ الوَدُودُ، و المُواسِيةُ المُواتِيةُ إذا اتَّقَيْنَ اللهَ، و شَرُّ نِسائِكُم المُتَبَرِّجاتُ المُتخَيِّلاتُ، و هُنَّ المُنافِقاتُ لا يَدخُلُ الجَنَّةَ مِنهُنَّ إلا مِثلُ الغُرابِ الأَعْصَمِ
அபூ உதைனா அல் சதாபி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் பாசமும் (அதிகமாக குழந்தைகளைப் பெற்றெடுக்கும்) வளமும் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் இறைவனுக்குப் பயந்து நடப்பார்கள் கணவனிற்கு ஆறுதல் அளிப்பார்கள். மேலும் உங்கள் பெண்களில் கெட்டவர்கள் (மஹ்ரமல்லாத ஆண்கள் முன்னிலையில் தனது அழகை வெளிப்படுத்தி) ஆடம்பரமாக நடப்பவர்கள். பெருமையடிப்பவர்கள். அவர்கள் நயவஞ்சகர்கள். கருப்பான காகங்களுக்கு மத்தியில் வெள்ளை இறக்கைகள் அல்லது வெள்ளை காகங்கள் இருப்பது (எப்படி அரிதானதோ) அதைப் போன்றவர்கள் தவிர அதிகமான பெண்கள் சொர்க்கம் செல்லமாட்டார்கள்.
ஆதாரம் : பைஹகியின் சுனனுன் குப்ரா 13478இ சுயூதியின் ஜாமிஉஸ் ஸகீர் 4076
சிறு குறிப்பு
இந்த நபிமொழியில் சிறந்த மனைவியின் பண்பு நலன்களை நபியவயர்கள் பட்டியிலிடுகிறார்கள். அவையாவன
கணவன் மீது பாசம் கொள்ளுதல். ஒரு மனைவி தனது கணவனை நேசிக்கக்கூடியவளாக இருக்க வேண்டும். அவன்மீது அன்பு செலுத்தக்கூடியவளாக இருக்க வேண்டும்.
அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முயற்சிக்க வேண்டும். குழந்தை செல்வத்தை விரும்பக்கூடியவளாக இருக்க வேண்டும்.
இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும். இறையச்சம்தான் அனைத்து நன்மைகளின் தாயாக உள்ளது. ஆகவே பொதுவெளியிலும் தனிமையிலும் இறையச்சத்தைக் கடைபிடிக்கக் கூடியவளாக இருக்க வேண்டும்.
கணவனிற்கு ஆறுதல் அளிக்க வேண்டும். கணவன் சோர்வடையும் போது அவனை ஊக்கப்படுத்த வேண்டும். கணவனிற்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
கெட்ட பெண்களின் பண்புகளாவது :
கணவனிற்கு மட்டும் காட்ட வேண்டிய தனது அழகை பிறருக்கு வெளிக்காட்டுதல்.
பெருமையடித்துத் திரிதல். ஒரு பெண் பணிவானவளாக இருக்க வேண்டும். தனது கணவனிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெருமையடிப்பவர்களை இறைவன் விரும்பமாட்டான்.
3331. பெண்களில் சிறந்தவர்கள்
وَخَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَஇ وَ خَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ.
அலீ ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : (அன்றைய காலத்தில் உலகப்) பெண்களில் சிறந்தவராக மர்யம் பின்து இம்ரான் இருந்தார். (இன்றைய காலத்து) பெண்களில் சிறந்தவராக கதீஜா பின்து குவைலித் இருக்கிறார்.
ஆதாரம் : திர்மிதீ 3877இ ஸஹீஹ் புகாரி 3815இ ஸஹீஹ் முஸ்லிம் 4815இ முஸ்னது அஹமது 1109இ நஸாஈயின் சுனனுந் குப்ரா 8354.
சிறு குறிப்பு
இது பற்றிய குறிப்பு 3328ல் இடம்பெற்றுள்ளது.
3332. ரத்தம் குத்தியெடுக்க சிறந்த நாட்கள்
خَيرُ يَومٍ تَحْتَجِِمُوْنَ فِيْهِ سَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى وَعِشْرِينَ. وَمَا مرَرْتُ بِمَلَإٍ مِنَ الْمَلَائِكَةِ لََيْلَةَ أُسْرِيَ بِي، إلَّا قَالُوا: عَلَيْكَ بِالْحِجامَةِ يَا مُحَمَّدُ.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : ஹிஜாமா எனப்படும் ரத்தம் குத்தியெடுத்தலுக்கு சிறந்த நாட்கள் பிறை பதிழனழுஇ பத்தொன்பது மற்றும் இருபத்தி ஒன்று ஆகும். ஒரு இரவில் மலக்குமார்கள் என்னை பயணத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது என்னிடத்தில்இ முஹம்மதே ரத்தம் குத்தியெடுப்பதை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது
ஆதாரம் : திர்மிதீ 2053இ முஸ்னது அஹமது 3316இ ஹாகிம் 7473இ 7476இ பைஹகியின் முஹ்தஸர் 20019.
இது ஹஸன் தரத்தில் அமைந்தது
சிறு குறிப்பு
ரத்தம் குத்தியெடுத்தல் பற்றிய குறிப்பு 3323 இடம்பெற்றுள்ளது.
ரத்தம் குத்தியெடுப்பதை பிறை 17இ 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் மேற்கொள்வதை சிறந்ததாக நபியவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
3333. சிறந்த நாள்
خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمَ الْجُمُعةِ، فِيْهِ خُلِقَ آدمُ، وَ فِيْهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَ فِيْهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُوْمُ السَّاعَةُ إِِلَّا فِيْ يَوْمِ الْجُمعةِ
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அன்றுதான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேறினார்கள். வெள்ளிக்கிழமையில்தான் உலக அழிவுநாளும் ஏற்படும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1548
சிறு குறிப்பு
இறைவன் படைத்த அனைத்து நாட்களும் சிறந்த நாட்கள்தான். அவற்றில் நல்ல நாள்இ கெட்ட நாள் என்ற பிரிவு கிடையாது. இருந்தபோதிலும் மற்ற நாட்களைவிட வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாக உள்ளது. அதற்கான காரணம்இ
வெள்ளிக்கிழமைதான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அவர்கள்தான் மனித குலத்தின் மூல தந்தை. அவர்கள் மூலமாகத்தான் மனிதர்கள் பல்கிப் பெருகியிருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமையில்தான் ஆதம் நபி சொர்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள்.
ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி இறைவனின் கட்டளையை மீறியதால் வெள்ளிகிழமை தினத்தில் சொர்க்கத்திலிருந்து ஆதம் நபியும் ஹவ்வாவும் வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிறகு இருவரும் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து விடுபட்டார்கள்.
இந்த உலகம் ஒரு நாள் அழிக்கப்படும். அது வெள்ளிக்கிழமையில்தான் ஏற்படும்.
3334. சிறந்த நாள்
خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُهْبِطَ وَفِيهِ تِيبَ عَلَيْهِ وَفِيهِ قُبِضَ وَفِيهِ تَقُومُ السَّاعَةُ مَا عَلَى وجهِ الأَرْضِ مِنْ دَابَّةٍ إِلاَّ وَهِيَ تُصْبِحُ يَوْمَ الْجُمُعَةِ مُسِيخَةً حَتَّى تَطْلُعَ الشَّمْسُ شَفَقًا مِنَ السَّاعَةِ إِلاَّ ابْنُ آدَمَ وَفِيهِ سَاعَةٌ لاَ يُصَادِفُهَا عَبْدٌ مُؤْمِنٌ وَهُوَ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ شيئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهَا
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : சூரியன் உதிக்கும் நாளில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அன்றுதான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அன்றுதான் (அவர்கள் பூமிக்கு) அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் பாவமன்னிப்பு கோரினார்கள். அன்றுதான் அவர்கள் இறந்தார்கள். இந்த நாளில்தான் நேரம் தொடங்கும். வெள்ளிக்கிழமை காலையிலிருந்து சூரியன் உதிக்கின்ற வரை மறுமைநாள் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கத்தும். மனிதனைத் தவிர. அந்த நாளில் ஒரு நேரம் உள்ளது. அதில் மனிதர்கள் அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
ஆதாரம் : அபூதாவூது 1046இ நஸாயீ 1430இ ஜாமிஉத் திர்மிதீ 488
சிறு குறிப்பு
இதுபற்றிய குறிப்பு 3333ல் இடம்பெற்றுள்ளது.
அதிகப்படியான குறிப்பு
ஆதம் நபி மரணித்தது வெள்ளிக்கிழமையில்தான். இறைவன் மனிதர்களின் இவ்வுலக வாழ்வின் முடிவையும் வெள்ளிக்கிழமையில்தான் அமைத்துள்ளான்.
ஆகவேதான் பூமியிலுள்ள அனைத்து உயிரிகளும் வெள்ளிக்கிழமை வந்தால் பயத்தோடு காணப்படும். ‘இன்று மறுமைநாள் வந்துவிடுமோ’ என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து உயிரினங்களும் பயப்படும். சூரியன் உதிக்கின்ற வரையிலும் அவைகளிடத்தில் பயம் தொற்றியிருக்கும். மனிதன் மட்டும் பயமில்லாமல் இருப்பான். ஆனால் ஒரு முஃமின் அவ்வாறு இருக்கக்கூடாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு முஃமினும் பயப்படக்கூடியவனாக இருக்க வேண்டும்.
அதைப்போல இறைவன் வெள்ளிக்கிழமைக்கு வேறொரு சிறப்பையும் வைத்துள்ளான். அதுதான் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நேரமாகும். வெள்ளிக்கிழமையின் ஒரு சிறிது நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆகவே வெள்ளிக்கிழமையில் ஒரு முஃமின் அதிகமாக பிரார்த்தனை செய்யக்கூடியவனாக இருக்க வேண்டும்.
3335. நபியின் தேர்வு
خُيِّرْتُ بَيْنَ الشَّفَاعَةِ وَبَيْنَ أَنْ يَدْخُلَ شَطرَ أُمَّتِي الْجَنَّةَ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ.......
அப்துல்லாஹ் பின் உமர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : ஷஃபாஅத் எனப்படும் பரிந்துரை செய்தல் அல்லது எனது சமூகத்திலிருந்து பாதி பேரை சொர்க்கத்தில் நுழைவித்தல் ஆகிய இரண்டு தேர்வுகள் எனக்கு வழங்கப்பட்டது. நான் ஷஃபாஅத்தை தேர்வு செய்தேன்.
ஆதாரம் : இப்னு அபீ ஆஸிமின் சுன்னா 791இ இப்னு மாஜா 4311இ 4317இ ஜாமிஉத் திர்மிதீ 2441
சிறு குறிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் இரண்டு விஷயங்கள் தேர்விற்காக வைக்கப்பட்டால் அவற்றில் சிறந்ததை தேர்வு செய்வார்கள்.
ஒரு முறை பால்இ தேன் மற்றும் மது ஆகிய மூன்றும் தேர்விற்காக நபியவர்களிடம் வழங்கப்பட்டது. அவற்றில் பாலை நபியவர்கள் தேர்வு செய்தார்கள். ஏனெனில் தேன் மற்றும் மதுவைவிட பால்தான் மிகச்சிறந்தது. ஆகவேதான் பாலை தேர்வு செய்தார்கள். எது மிகச் சிறந்ததோ அதற்கு முன்னுரிமை வழங்குவது நபியின் பழக்கம்.
அந்த வகையில் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் விருப்ப உரிமையை வழங்குகிறான். அவற்றில் ஷஃபாஅத்தை நபியவர்கள் தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் இதன்மூலம் அதிகம் பேரை நரகத்திலிருந்து வெளியேற்றலாம் என்று நபியவர்கள் நினைத்தார்கள். இது நபியவர்கள் நமது சமுதாயத்தின் மீது வைத்திருக்கும் நேசத்தை வெளிப்படுத்துகிறது.
فصل في المحلى بـ (ال) من هذا الحرف
அல் ال எனும் குறிப்புச் சொல்லைக் கொண்டு الخاء எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
3336. பொருளாருக்கு தர்மம் செய்த நன்மை உண்டு
الخازن المسلم الأمين الذي يُعطي ما أمر به كاملاً موفّراً طيبة به نفسه فيدفعه إلى الذي أمر له به ؛ أحد المتصدقين
அபூ மூஸா அல் அஷ்அரி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நம்பிக்கைக்குரிய முஸ்லிம் பொருளாளர் தனக்கு கட்டளையிடப்பட்டபடி முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் உரியவருக்கு (பொருளாதாரத்தை) வழங்கினால் அவர் தர்மம் செய்தவர்களில் ஒருவராகக் கருதப்படுவார்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1857
சிறுகுறிப்பு
இஸ்லாமிய மார்க்கம் நன்மைகளை வாரி வழங்கும் மார்க்கமாகும். ஒரு மனிதர் நன்மையான காரியங்களை செய்தால் அவருக்கு நன்மைகள் வழங்கப்படுவதைப் போன்று நன்மையை செய்யுமாறு ஏவினாலும் நன்மைகள் வழங்கப்படும். அதுபோல ஒரு பொருளாளர் தனது பொறுப்பிலுள்ள பணத்தை உரியவருக்கு வழங்கினால் அவருக்கு தர்மம் செய்த நன்மைகள் வழங்கப்படும்.
உதாரணமாக ஒருவர் நாட்டின் நிதியமைச்சராக இருக்கிறார். அவர் தனது நாட்டிலுள்ள பொருளாதாரத்தைக் கொண்டு பத்து கோடி செலவில் ஒரு பாலம் கட்டினால் அவருக்கு பத்து கோடி ரூபாய் தர்மம் செய்த நன்மைகள் வழங்கப்படும்.
ஜகாத் பணத்தை வசூலித்து விநியோகிக்கும் பொறுப்பாளராகள் 100 கோடி ரூபாய் வசூலித்து அதை.உரிய முறையில் விநியோகித்தால் அவர் 100 கோடி ரூபாய் தர்மம் செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3337. தாய்மாமா வாரிசாவார்
الخال وارث
அல் மிக்தாம் அபீ கரீமா அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
(வாரிசு இல்லாதவருக்கு) தாய்வழி மாமா வாரிசாக இருப்பார்.
ஆதாரம் : அபூதாவூது 2899இ இப்னு மாஜா 2738
3338. வாரிசு இல்லாதவருக்கு தாய்மாமா வாரிசாவார்
الخال وارث من لا وارث له
உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
வாரிசு இல்லாதவருக்கு தாய்வழி மாமா வாரிசாக இருப்பார்.
ஆதாரம் : திர்மிதீ 2104
சிறுகுறிப்பு
ஒரு மனிதனுடைய சொத்துக்கு வாரிசாக அவனதுஃஅவளது தாய்இ தந்தைஇ கணவன்ஃமனைவிஇ பிள்ளைகள் ஆகியோர் வாரிசாக இருப்பார்கள். ஆண் பிள்ளை இல்லையெனில் வாரிசுதாரராக சகோதர சகோதரிகளும் வருவார்கள். இவ்வாறு முதல்தர வாரிசுதாரர்கள் ஒருவருக்கு இல்லையெனில் அவரது வாரிசாக தாய்மாமா இருப்பார்.
3339. தாயின் சகோதரி
الحالة بمنزلة الأم
பராஉ இப்னு ஆஸிப் ரலி மற்றும் அலீ ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
தாயின் சகோதரி தாயின் அந்தஸ்தைப் பெற்றவள் ஆவாள்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 2699
3340. தாயின் சகோதரி
الخالة والدة
முஹம்மது அல் பாகிர் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
தாயின் சகோதரியும் தாயைப் போன்றவள்தான்
ஆதாரம் : இப்னு ஸஅதின் தபகாத் 26ஃ4
3341. கிலாஃபத் ஆட்சி
الخلافة بعدي في أُمَّتِي ثلاثون سنة، ثم ملك بعد ذلك
ஸஃபீனா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
எனது சமூகத்தில் கிலாஃபத் ஆட்சி முப்பது வருடங்கள் இருக்கும். அதன்பிறகு மன்னராட்சி ஏற்படும்.
ஆதாரம் : ஜாமாஉத் திர்மிதீ 2226இ சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4131
3342. பொறுப்பாளர்கள்
الخلافة في قريش ، والحكم في الأنصار، والدعوة في الحبشة، والجهاد والهجرة في المسلمين، والمهاجرين بعد
உத்பா பின் அப்து அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
கிலாஃபத்து எனும் ஆட்சிப் பொறுப்பு குறைஷிகளுக்குரியது. தீர்ப்பளிக்கும் நீதித்துறை பொறுப்பு அன்சாரிகளுக்குரியது. அழைப்புப் பணி ஹபஷிகளுக்குரியது. ஹிஜ்ரத் எனும் புலம்பெயர்தலும் ஜிஹாது எனும் போரும் முஸ்லிம்களுக்கும் முஹாஜிரீன்களுக்கும் உரியது.
ஆதாரம் : முஸ்னது அஹமது 17654
3343. ஆசிரியரின் சிறப்பு
الخَلقُ كلُّهم يُصَلُّونَ على معلم الخير؛ حتى نينان البحر
உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
சிறந்த ஆசிரியருக்கு அனைத்து படைப்பினங்களும் பிரார்த்தனை புரிகின்றன. கடலின் மீன்கள் கூட அவர்களுக்காக பிரார்த்தனை புரிகின்றன.
ஆதாரம் : இப்னு அதீயின் காமில் 464ஃ2
3344. மதுவின் தீமை
الخمر أم الخبائث، فمن شربها لم تقبل صلاته أربعين يوماً، فإن مات وهي في بطنه مات ميتة جاهلية»
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மதுவானது தீமைகளின் தாயாகும். மது அருந்தியவரின் நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. மதுவானது தனது வயிற்றில் இருக்கும் நிலையில் மரணிப்பவன் அறியாமைக்கால மரணத்தை அடைந்தவன் ஆவான்.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 3667.
ஹஸனன தரத்திலானது
3345. மதுவினால் ஏற்படும் ஒழுக்கக்கேடு
الخمر أم الفواحش، وأكبر الكبائر، من شربها وقع على أُمِّهِ، وخالته، وعمته
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மது என்பது ஒழுக்கக்கேடுகளின் தாயாகும். இதை அருந்துவது மிகப்பெரிய பாவமாகும். மது அருந்துபவன் தனது தாய்இ தனது தாயின் சகோதரி மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோரிடம் தவறிழைக்க முயல்வான்
ஆதாரம் : சுனன் தாரகுத்னி 4612
3346. மதுவின் தயாரிப்பு
الخمر من هاتين الشجرتين : النخلة والعنبة
அபூ ஹூரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மது இரண்டு மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒன்று பேரீச்சை மரம். இரண்டு திராட்சை மரம்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1985
3347. கவாரிஜ்கள்
الخوارج كلاب النار
இப்னு அபீ அவ்ஃப் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
கவாரிஜ்கள் நரக நெருப்பின் நாய்கள் ஆவர்.
ஆதாரம் : திர்மிதீ 3000
3348. நன்மையும் தீமையும்
الخير عادة، والشر لجاجة ، ومَنْ يُرِدِ الله به خيراً يُفقهه في الدين
முஆவியா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நன்மை என்பது (இயற்கையான) பழக்கமாகும். தீமை என்பது (ஷைத்தானின் தீண்டுதல் மூலம் செயற்கையாக ஏற்படும்) பிடிவாதமாகும். அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடினால் அவரை மார்க்கத்தில் விளக்கம் உள்ளவராக மாற்றுவான்.
ஆதாரம் : இப்னுமாஜா 221
3349. ஜிஹாத்
الخير معقود بنواصي الخيل إلى يوم القيامة، والمنفق على الخيل كالباسط كفه بالنفقة لا يقبضها .
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மறுமைநாள் வரையிலும் குதிரைகளின் முன்னெற்றிகளில் நன்மைகள் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் குதிரைகளுக்காக செலவழிப்பவர் செலவழிப்பதில் தனது கையை விரித்து அதை திருப்பப் பெறாதவர் (பாஸித்) போன்றவராவார்.
ஆதாரம் : முஅஜமுல் அவ்ஸத் 3088இ இப்னு ஹிப்பான் 4674
3350. குதிரையின் வகைகள்
الخيل ثلاثة : ففَرس للرحمن، وفرس للشيطان، وفرس للإنسان، فأما فرس الرحمن ؛ فالذي يُرتبط في سبيل الله ؛ فعلفه وروَثُهُ وبوله في ميزانه ، وأما فرس الشَّيطان فالذي يُقامَرُ أو يُراهن عليه، وأما فرس الإنسان فالفرس يرتبطها الإنسان يلتمس بطنها، فهي ستر من الفقر
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
குதிரைகள் மூன்று வகைப்படும். அவைகள் அர்ரஹ்மானிற்கான குதிரைகள்இ ஷைத்தானிற்கான குதிரைகள்இ மனிதர்களுக்கான குதிரைகள் ஆகும். அர்ராஹ்மானிற்கான குதிரைகள் அல்லாஹ்வின் பாதைக்காகப் (ஜஹாது) ஒதுக்கப்பட்டவையாகும். அந்த குதிரையின் உணவுஇ சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றிற்காக உரிமையாளனுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். ஷைத்தானுக்கான குதிரைகள் சூதாடுவதற்காகவும் பந்தயம் கட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படும். மனிதர்களுக்கான குதிரைகள் அவை அவனது வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும். அது அவனது வறுமையிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கும்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 3756இ பைஹகியின் சுனனுல் குப்ரா 19777
3351. குதிரையில் சிறந்தது
الخيل في نواصي شقرها الخير
இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மஞ்சள் கலந்த அழகிய முன்னெற்றியுடைய குதிரையில் நன்மைகள் உள்ளது.
ஆதாரம் : சுனனுந் அபூதாவூது 2545
ஹஸன் தரம்
3352. குதிரையின் மூன்று வகைகள்
الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ وَعَلَى رَجُلٍ وِزْرٌ. فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ، فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، وَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ، كَانَتْ أَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهْرٍ فَشَرِبَتْ، وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا، كَانَ ذَلِكَ لَهُ حَسَنَاتٍ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَسِتْرًا وَتَعَفُّفًا، لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَظُهُورِهَا، فَهِيَ لَهُ كَذَلِكَ سِتْرٌ. وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً، وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهْىَ وِزْرٌ.
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
குதிரைகள் மூன்று வகையினருக்கு மூன்று வகையான கூலிகளை பெற்றுத் தரும். ஒரு வகையான மனிதர்களுக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். மற்றொரு வகையான மனிதர்களுக்குப் (வாழ்வாதாரத்திற்கான) பாதுகாப்பைப் பெற்றுத்தரும். இன்னொரு வகையான மனிதர்களுக்குப் பாவங்களைப் பெற்றுத்தரும்.
(குதிரையை ஜிஹாத் எனும்) இறைவழியில் பயன்படுத்துவதற்காகஇ நல்ல பசுமையான ஒரு புல் வெளியிலோ அல்லது ஒரு தோட்டத்திலோ நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கிற மனிதர்களுக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரைஇ தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசுமையான புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு இறைவனிடமிருந்து வெகுமதிகள் கிடைக்கும்.
அந்தக் கயிறு அறுந்துஇ அது ஒன்றிரண்டு குதிகுதித்து சென்றாலும் அதனுடைய (பாதத்தின்) சுவடுகளின் அளவிற்கும் அது வெளியேற்றுப் கெட்டிச் சாணத்தின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும்.
(குதிரையை வளர்க்கும் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த) ஒருவர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டி வைப்பவராவார். மேலும்இ அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு இந்த குதிரை(வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.
(குதிரையை வளர்க்கும் மூன்றாவது பிரிவைச் சேர்ந்த) ஒருவர் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வைக்கிறவன் ஆவான். அவனது (மோசமான எண்ணத்தின்) காரணத்தால்இ அது அவனுக்குப் பாவத்தைப் பெற்றுத்தரும்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3646.
3353. குதிரையினால் பெரும் நன்மைகள்
الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ الأَجْرُ وَالْمَغْنَمُ
உர்வா அல் பாரிகீ ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மறுமைநாள் வரை குதிரைகளின் முன்னெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
அந்த நன்மையாவதுஇ அறப்போரினால் கிடைக்கும் மறுமை நன்மை மற்றும் போர்ச்செல்வமாக கிடைக்கும் உலக நன்மைகள் ஆகும்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 2852.
3354. குதிரைகளின் நன்மை
الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
உர்வா இப்னு அபில் ஜஅத் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
குதிரைகளின் முன் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 2850.
3355. குதிரையை பராமரித்தல்
الخيل معقود في نواصيها الخير إلى يوم القيامة، وأهلها معانون عليها، فامسحوا بنواصيها، وادعوا لها بالبركة، وقلدوها، لا تقلدوها الأوتار
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
குதிரைகளின் முன் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. குதிரையை பராமரிக்கும் உரிமையாளனுக்கு இறைவனின் உதவி கிடைக்கும். ஆகவே அவற்றின் முன் நெற்றியை (அன்போடு) தடவிக் கொடுங்கள். அவற்றை நல்ல முறையில் அலங்கரித்து (பராமரித்து) வாருங்கள். அவற்றுக்காக துஆ செய்யுங்கள். அவைகளுக்கு தவறான தையல்கள் போடாதீர்கள்.
ஆதாரம் : தர்கீப் வ தர்ஹீப் 2ஃ235இ அஹமது 14791இ முஅஜமுல் அவ்ஸத் 8982.
ஹஸன் தரம்
3356. குதிரையும் நன்மையும்
الخيل معقود في نواصيها الخير واليمن إلى يوم القيامة، وأهلها مُعانُونَ عليها ، قلدوها، ولا تقلدوها الأوتار
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
குதிரைகளின் முன் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மையும் இறைவனின் அருளும் பிணைக்கப்பட்டிருக்கிறது. குதிரையை பராமரிக்கும் உரிமையாளனுக்கு இறைவனின் உதவி கிடைக்கும். ஆகவே அவற்றை நல்ல முறையில் அலங்கரியுங்கள். ஆனால் தவறான தையல்கள் போட வேண்டாம்.
ஆதாரம் : தர்கீப் வ தர்ஹீப் 2ஃ235இ அஹமது 14791இ முஅஜமுல் அவ்ஸத் 8982
ஹஸன் தரம்
3357. சொர்க்கத்தின் சிறப்பு
الخيمة دُرَّةٌ مُجوّفة ، طولها في السماء ستون ميلاً، في كل زاوية منها للمؤمن أهل لا يراهم الآخرون
அபூ மூஸா அல் அஷ்அரி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் (சொர்க்கத்தில்) உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (சொர்க்கவாதிகளுக்காக ஹூருல் ஈன் எனும்) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.
ஆதாரம் ஸஹீஹ் புகாரி : 4879.
حرف الدال - தால் எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
3358. நோயுற்றால் தர்மம் கொடு
وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ
அபூ உமாமா அல் பாஹிலி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உங்களில் நோயுற்றவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம் சிகிச்சையளியுங்கள்
ஆதாரம் : தபரானி 10ஃ157.
ஹசன் தரத்திலானது.
3359.தோலைப் பதனிடுதல்
دباغ الأديم طهوره»
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
(இறந்த விலங்கினங்களின்) தோல் பதனிடுவதால் தூய்மையாகும்.
ஆதாரம் : தஹாவீயின் ஷர்ஹ் மஆனில் ஆஸார் 2698இ சுனனுந் நஸாயீ 4244இ அபூதாவூது 4125
3360.தோலைப் பதனிடுதல்
دِبَاغُ جُلُودِ الْمَيْتَةِ طُهُورُهاَ
சயீத் இப்னு சாபித் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
இறந்த விலங்கினங்களின் தோலைப் பதனிடுவதால் அது தூய்மையாகும்.
ஆதாரம் : புலூகுல் மராம் 16இ ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1290இ தாரகுத்னி 1ஃ71இ இப்னு அல் முலாக்கின் அல் பத்ர் அல் முனீர் 1ஃ617
3361. தோல் பதனிடும் இயந்திரம்
دِبَاغُ كل إهاب طهوره»
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
தோல் பதனிடும் இயந்திரம் ஒவ்வொரு தோலையும் சுத்திகரிக்கிறது.
ஆதாரம் : இமாம் சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4153இ தாரகுத்னி 1ஃ46இ அஹமது 3521.
3361 (1) ஸலாமை பரப்புதல்
دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ : الْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ حَالِقَةُ الدِّينِ لَا حَالِقَةُ الشَّعَرِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا تدخلوا الجنة حَتَّى تؤمنوا، ولَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا ، أَفَلَا أُنَبِّئُكُمْ بِشَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ.
ஸுபைர் இப்னு அவ்வாம் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகத்தாரை தாக்கிய நோய் உங்களையும் தாக்கியுள்ளது. அது பொறாமை மற்றும் வெறுப்பாகும். இவைகள் உங்கனள மழித்துவிடும். உங்களது தலையை மழிக்காது. மாறாக உங்களது மார்க்கத்தை மழித்துவிடும். (அழித்துவிடும்). முஹம்மதின் உயிர் யாருடைய கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! ஒருவன் முஃமினாகாத வரையில் அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தாவிட்டால் நீங்கள் ஈமான் கொண்டவர்களாகமாட்டீர்கள். உங்களுக்கிடையே அன்பை பெருக்கும் ஒரு காரியத்தை நான் சொல்லட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையே ஸலாத்தைப் (அஸ்ஸலாமு அலைக்கும்) பரப்புங்கள்.
ஆதாரம் : முஸ்னது அஹமது 1412இ ஜாமிஉத் திர்மிதீ 2510. அபூதாவூது 5193
3362. தோற்றத்தில் ஒத்தவர்கள்
دحية الكلبِيُّ يُشبه جبريل ، وعُروة بن مسعود الثقفي يُشبه عيسى بن مريم، وعبد العُزَّى يُشبهُ الدَّجَالَ
அல் ஷஅபி அமீர் பின் ஷரஹுல் அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
திஹ்யா அல் கல்பி தோற்றத்தில் ஜிப்ரீலைப் போலவும் உர்வா இப்னு மஸ்வூது ஸகஃபீ தோற்றத்தில் ஈஸா இப்னு மர்யமைப் போலவும் அப்துல் உஸ்ஸா தோற்றத்தில் தஜ்ஜாலைப் போலவும் உள்ளார்கள்.
ஆதாரம் : சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4156இ இப்னு அபீஷைபா 32991இ இப்னு சஅதின் தபகாத்துலா குப்ரா 4ஃ250.
3363. ஜாஃபர் ரலி மற்றும் ஹம்ஸா ரலி
دَخَلْتُ الجَنَّةَ البارِحَةَ فَنَظَرْتُ فِيها فَإِذا جَعْفَرًا يَطِيرُ مَعَ الْمَلاَئِكَةِ، وإذا حمزة مُتَّكِيءٌ على سرير.
இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நேற்று இரவு நான் சாெர்க்கத்திற்குள் நுழைந்து அவற்றைப் பார்த்தேன். அங்கு ஜாஃபர் மலக்குமார்களுடன் சேர்ந்து பறந்துகொண்டிருந்தார். ஹம்ஸா ஒரு கட்டிலில் சாய்ந்திருந்தார்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதி 3763இ தபரானி 2ஃ107இ ஹாகிம் 4890
3364. உமர் ரலியின் தங்க மாளிகை
دَخَلْتُ الْجَنَّةَ فَإِذَا أَنَا بِقَصْرٍ مِنْ ذَهَبٍ، فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا : لِشَابٍّ مِنْ قُرَيْشٍ فَظَنَنْتُ أَنِّي أَنَا هُوَ فَقُلْتُ وَمَنْ هُوَ فَقَالُوا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَلَوْلاَ مَا عَلِمْتُ مِنْ غَيْرَتِكَ لدخلته» .
அனஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்திற்குள் நுழைந்தேன். அங்கு தங்கத்தினாலான அரண்மனையைக் கண்டேன்.
இந்த அரண்மனை யாருடையது? என்று நான் கேட்டேன்.
குறைஷியைச் சேர்ந்த இளைஞருக்குரியது என்று என்னிடம் கூறப்பட்டது.
நான் அவராகத்தான் அது இருக்கும் என்று (என் மனதிற்குள்) நினைத்தேன். (பின்னர்) அந்த (இளைஞர்) யார்? என்று கேட்டேன்.
உமர் இப்னுல் கத்தாப் என்று என்னிடம் கூறப்பட்டது.
(உமரே!) உங்களது ரோஷத்தை மட்டும் நான் அறிந்திருக்காவிட்டால் நான் அதில் (அரண்மனைக்குள்) நுழைந்திருப்பேன்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 3688இ ஸஹீஹ் புகாரி 7024
3365. கவ்ஸர் தடாகம்
دَخَلۡتُ الْجَنَّةَ، فَإِذَا أَنَا بنَهْرٍ حَافَتَاه خِيَامُ اللُّؤلُؤِ ، فَرْبَتَى فَضَرْبَتَى بيَدَ يَجْرِى فيه الْمَاءُ، فَإِذَا مِسْكٌ أَذْفَرُ، فَقُلْتُ: مَا هَذَا يَا جبۡريل؟ قَالَ : الْكَوثَرُ الَّذِى أَعْطَاكَهُ اللَّه".
அனஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு நதியைக் கண்டேன். அதன் கரையில் முத்துக் கூடாரங்கள் இருந்தது. தண்ணீர் ஓடும் இடத்தில் எனது கையால் அடித்தேன். அது கஸ்தூரியைப் போல் நறுமணமிக்கதாக இருந்தது.
அப்போதுஇ ஜிப்ரீலே! இது என்ன? என்று நான் கேட்டேன்.
அதற்கு (ஜிப்ரீல்)இ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கவ்ஸர் (நீர்த் தடாகம்) தான் இது என்று கூறினார்கள்.
ஆதாரம் : அஹமது 12027இ ஸஹீஹ் புகாரி 6581
3366. சைத் இப்னு ஹாரிஸா சொர்க்கவாசி
دَخَلْتُ الْجَنَّةَ فَاسْتَقْبَلَتْنِى جَاريَةٌ شَابَّةٌ، فَقُلْتُ: لمَنْ أَنْتِ ؟ قَالَتْ: لزَيدِ بن حَارِثَة
புரைதா பின் ஹுசைப் அல் அஸ்லமி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு இளம் பெண்ணை என்னை வரவேற்றாள். (நான் அவளிடம்இ) நீ யாருக்குரியவள்? என்று கேட்டேன். அதற்கு அவள்இ சைத் இப்னு ஹாரிஸாவிற்குரியவள் என்று பதிலளித்தாள்.
ஆதாரம் : சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4167இ இமாம் தஹபியின் தாரீகுல் இஸ்லாம் 2ஃ496இ இப்னு அஸாகிர் 371ஃ19.
3367. சைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் சொர்க்கவாசி
دَخَلتُ الْجَنَّةَ فَرَأَيْتُ لزَيْدِ بۡنِ عَمۡرو بۡن نُفَيْل درجتين».
ஆயிஷா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்திற்குள் நுழைந்தேன். அங்கு சைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைலிற்கு இரண்டு அந்தஸ்துகள் இருப்பதைக் கண்டேன்.
ஆதாரம் : ஸன்ஆனியின் ஜாமிஉஸ் ஸகீர் 6ஃ78இ இப்னே அஸாகிரின் தாரீகுத் திமிஷ்க் 19ஃ512
3368. குமைஸா பின்த் மில்ஹான் சொர்க்கவாதி
دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْفَةً بَيْنَ يَدَىَّ ، فَقُلْتُ : مَا هَذِهِ الْخَشْفَةِي؟ فَقِيلَ : الْغُمَيْصَاءُ بِنْتُ مِلْحَانَ .
அனஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடி சப்தத்தை செவியுற்றேன். இது என்ன காலடி சப்தம்? என்று கேட்டேன். அதற்குஇ குமைஸா பின்த் மில்ஹான் (காலடி சப்தம்தான் இது என்று மலக்குகள் பதிலளித்தார்கள்)
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 4851இ அஹ்மத் 12035
3369. பிலால் ரலி சொர்க்கத்திற்குரியவர்
دَخَلۡتُ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْفَةً بَيْنَ يَدَىَّ، فَقُلْتُ: مَا هَذِهِ الْخَشْفَلَى هَذِهِ الْخَشْ بِلَالٌ يَمْشِى أَمَامَك
அபூ உமாமா அல் பாஹிலி ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடி சப்தத்தை செவியுற்றேன். இது என்ன காலடி சப்தம்? என்று கேட்டேன். அதற்குஇ இதோ! பிலால் உங்கள் முன்னால் நடந்து வருகிறார் (அவரது காலடி சப்தம்தான் இது என்று மலக்குகள் பதிலளித்தார்கள்)
ஆதாரம் : அஹமது 2324.
3370. பிலால் ரலிஇ குமைஸா ரலி சொர்க்கத்திற்குரியவர்கள்
دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْفَةً، فَقُلتُ: مَا هَذِهِ ، قَالُوا: هَذَا بِلَالٌَدَ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْمَةً، لقُلتُ: ما هَذِهِ؟ قَالُوا: هَدهِ الْغُمَيْصَاءُ بِنْ مِلْحَانَ"
அனஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடி சப்தத்தை செவியுற்றேன். இது என்ன (காலடி சப்தம்?) என்று கேட்டேன். அதற்குஇ இது பிலால் (அவர்களின் காலடி சப்தம் என்று பதிலளிக்கப்பட்டது.) பின்னர் நான் சொர்க்கத்தில் (வேனொரு பகுதியில்) நுழைந்தேன். அங்கு ஒரு காலடி சப்தத்தை செவியுற்றேன். இது என்ன (காலடி சப்தம்?) என்று கேட்டேன். குமைஸா பின்த் மில்ஹான் (காலடி சப்தம்தான் இது என்று மலக்குகள் பதிலளித்தார்கள்)
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 4851இ அஹ்மத் 2324.
3371. ஹாரிஸா பின் நுஃமான் சொர்க்கத்திற்குரியவர்
دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ فِيهَا قِرَاءَةً فَقُلْءَةً فَقُلْءَةً قَالُوا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ «كَذَلِكُمُ الْبِرُّ كَذَلِّكُمُ الْبِرُّ
ஆயிஷா ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் சொர்க்கத்திற்குள் நுழைந்தேன். அங்கு குர்ஆன் ஓதும் குரலை செவியுற்றேன். யார் இவர்? என்று கேட்டேன். ஹாரிஸா பின் நுஃமான் (என்று எனக்குப் பதிலளிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்)) அதுவே நன்மை. அதுவே நன்மை (என்று கூறினார்கள்)
ஆதாரம் : ஹாகிமின் முஸ்தத்ரக் அலா ஸஹீஹைன் 5001இ அஹமது 24126இ நஸாஈயின் சுனனுல் குப்ரா 8233இ பகாவீயின் ஷரஹுஸ் ஸுன்னா 3418
3372. பிலால் ரலி சொர்க்கத்திற்குரியவர்
دَخَلتُ الْجَنَّةَ ليْلَةَ أُسْرِى بى فَسَمِعتُ في جَانِبِهَا وَجْسًا ، فَقُلْتُ: يَا جبۡريل؟ ما هَذَا؟ قَالَ: هَذَا بلَالٌ الْمُؤَذِّنُ
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
நான் இஸ்ரா (எனும் மிஃராஜ் பயணம் செய்த) இரவில் சொர்க்கத்தில் நுழைந்தேன். அதன் ஒரு மூலையில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதனால் நான் ஜிப்ரயீலே? இது என்ன (சப்தம்)? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: இது பிலால்இ முஅத்தின் (சப்தமாகும்).
ஆதாரம் : முஸ்னத் அஹ்மது 2324இ பைஹகியின் அல் பஅஸ் வந்நூஷூர் 188இ ழியாஆ வின் அஹாதீஸுல் முக்தாரா 544.
3373. ஹஜ்ஜும் உம்ராவும்
دخلت العُمرةِ في الحجِّ إلى يَومِ القِيَامَةِ.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
மறுமைநாள் வரையில் ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 2390
3374. விலங்கிற்கு நோவினை தந்தால் நரகம்
دخَلَتِ امرَأَةٌ النَّارَ في هِرَّةٍ، ربَطَتْها، فلَمْ تُطْعِمْها، ولم تدعها تأكل مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில் வாழ்ந்த) ஒரு பெண் ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தால் நரகத்தில் நுழைவிக்கப்பட்டாள். அந்தப் பூனையை அவள் கட்டிப் பாேட்டிருந்தால். (அது பசியால் துடித்துச்) சாகும் வரை அவள் அதற்குத் தீனி போடவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை'
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 2365.
3375. வட்டி விபச்சாரத்தை விடக் கொடியது
دِرهمُ ربًا يأكلُه الرَّجلُ وهوَ يعلَمُ ؛ أشدُّ عند الله من سِتةٍ وثلاثين زَنْيَةٍ
அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா (ரலி) அறிவிப்பதாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் தெரிந்தே சாப்பிடும் ஒரு திர்ஹம் வட்டியானது முப்பத்தாறு முறை விபச்சாரம் செய்வதைவிட அல்லாஹ்விடத்தில் மிகக் கொடியது.
ஆதாரம் : முஸ்னது அஹமது 22007இ பஸ்ஸார் 3381
3376. விலங்கினங்கள் மீது கருணை
دَعْ داعيَ اللبنِ
ழிரார் இப்னு அஸ்வர் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பால் கறக்கும் (ஆர்வத்தை) விட்டுவிடு. (அதாவது பால் கறக்கும் போது முழுவதுமாக கறந்து வறண்டுபோகச் செய்யாமல் சிறிது பாலை மடியிலேயே விட்டுவிடு)
ஆதாரம் : தாரமி 88ஃ2இ இப்னு ஹிப்பான் 1999இ ஹாகிம் 3ஃ237
3377. சந்தேகம் தருவதை விட்டுவிடுதல்
دعْ ما يَريبُكَ إلى ما لا يُريبُكَ
ஹசன் இப்னு அலீ இப்னு அபீதாலிப் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு சந்தேகம் தருபவற்றை விட்டுவிடுங்கள். சந்தேகம் தராதவற்றைப் பின்பற்றுங்கள்.
ஆதாரம் : திர்மிதீ 2518இ முஸ்னது அஹமது 1723இ நஸாஈ 5711
3378. உண்மையும் பொய்யும்
دعْ ما يَريبُكَ إلى ما لا يُريبُكَ فإنَّ الصدقَ طُمأنينةٌ وإنَّ الكذبَ رِيبَةٌ
ஹசன் இப்னு அலீ இப்னு அபீதாலிப் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு சந்தேகம் தருபவற்றை விட்டுவிடுங்கள். சந்தேகம் தராதவற்றைப் பின்பற்றுங்கள். ஏனெனில் உண்மை அமைதியைத் தரும். பொய் சந்தேகத்தை உண்டாக்கும்.
ஆதாரம் : திர்மிதீ 2518இ முஸ்னது அஹமது 1723இ நஸாஈ 5711
3379. சகோதரனுக்காக மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை
دعاء الأخ لأخيه بظهر الغيب لا يرد».
இம்ரான் இப்னு ஹுஸைன் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு சகோதரன் தன் சகோதரனுக்காக அவர் இல்லாதபோது செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படாது.
ஆதாரம் : பஸ்ஸார்
3380. சகோதரனுக்காக மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை
دَعْوةُ المرءِ المُسْلِمِ مُسْتَجَاب لأَخيهِ بِظَهْرِ الغَيْبِ، عِنْد رأْسِهِ ملَكٌ مُوكَّلٌ به ؛ كلَّمَا دَعَا لأَخِيهِ بخيرٍ قَال المَلَكُ المُوكَّلُ بِهِ: آمِينَ، ولَكَ بمِثْلٍ
அபூதர்தா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் சகோதரருக்காக அவர் இல்லாத நேரத்தில் செய்யும் பிரார்த்தனை (இறைவனால்) அங்கீகரிக்கப்படுகிறது.
(அவ்வாறு பிரார்த்தனை செய்யும்) அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.
அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம்இ அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர்இ "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்"
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 5281.
3381. சகோதரனுக்காக மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை
دعوة الرجل لأخيه بظهر الغيب مستجابة، وملك عند رأسه يقول : آمين ولك بمثل ذلك .
உம்மு குர்ஸ் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் தன் சகோதரனுக்காக அவன் இல்லாதபோது செய்யும் பிரார்த்தனைக்கு (இறைவனிடத்திலிருந்து) பதில் கிடைக்கும். (அவன் பிரார்த்தனை செய்யும் சமயத்தில்) அவன் தலையில் ஒரு மலக்கு நின்று கொண்டு: ஆமீன் (அப்படியே நடக்கட்டும்)இ உனக்கும் அவ்வாறே (கிடைக்கட்டும் என்று கூறுவார்)
ஆதாரம் : அபூபக்கர் அஷ்ஷாஃபிஈயின் அல் ஃகைலானிய்யாத்
3382. அநீதிக்கு உள்ளாக்கப்பட்டோரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்
دعوة المظلوم مستجابة ، وإن كان فاجراً، فَفُجوره على نَفْسِهِ
அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதிக்கு ஆளாக்கப்பட்டவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும். (அநீதிக்கு உட்பட்ட) அவர் பாவியாக இருந்தாலும்கூட (அவரது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஏனெனில்) அவரது பாவம் அவரது ஆன்மாவுக்கு எதிரானது.
ஆதாரம் : தயாலிஸி 2450இ முஸ்னது அஹமது 8781
ஹஸன் லிகைரிஹி
3383. யூனுஸ் நபியின் பிரார்த்தனை
دَعْوَةُ ذِي النُّونِ - إِذْ دَعَا بها وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ - : لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَஇ لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلَّا اسْتَجَابَ اللَّهُ لَهُ "
சஅது இப்னு அபீவக்காஸ் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன் நூன் (எனும் யூனுஸ் நபி திமிங்கலம் போன்ற) மிகப்பெரும் மீனின் வயிற்றில் இருந்தபோது பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் கூறிய பிரார்த்தனை ‘லாயிலாஹ இல்லா அன்த்த சுபஹானக்க இன்னி குன்து மினல் ழாலிமீன்’ இந்த வார்த்தையைக் கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் எந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் பதிலளிக்காமல் இருப்பதில்லை.
ஆதாரம் : திர்மிதீ 3505
பிரார்த்தனையின் பொருள் : “உன்னைத் தவிர எந்தக் இறைவனும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகி விட்டேன்”
3384. சண்டைக்கு வராதவர்களுடன் போர் புரியக்கூடாது
دَعُوا الْحَبَشَةَ مَا وَدَعُوكُمْ، وَاتْرُكُوا التُّرْكَ مَا تَرَكُوكُمْ ".
அபீ சுகைனா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியர்கள் உங்களைத் (தாக்காமல்) தொந்தரவு செய்யாத வரை நீங்களும் அவர்களைத் (தாக்காமல்) தொந்தரவு செய்யாதீர்கள். துருக்கியர்கள் உங்களைத் (தாக்காமல்) தனிமையில் விட்டுவிடும் வரை நீங்களும் அவர்களைத் (தாக்காமல்) தனிமையில் விட்டுவிடுங்கள்.
ஆதாரம் : சுனன் அபூதாவத் 4302
ஹசன் தரமானது
3385. நல்ல ஆலாேசனை வழங்குதல்
دعُوا النَّاسَ يُصِيبُ بَعضُهُمْ مِنْ بعضٍ ، فَإِذَا اسْتَنْصَحَ أَحدُكُمْ أَخَاهُ فَلْيَنْصَحْهُ .
அபீ சுகைனா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்களில் சிலர் மற்ற சிலரிடமிருந்து (தங்களுக்குத் தேவையான நன்மைகளை) பெற்றுக்கொள்ளட்டும். உங்களில் எவரேனும் தன் சகோதரனிடம் ஆலோசனை கேட்டால்இ அவர் உண்மையாகவும் நேர்மையாகவும் ஆலோசனை கூறட்டும்."
ஆதாரம் : சுயூத்தியின் ஜாமிஉஸ் சகீர் 4205.
3386. சஹாபாக்களை திட்டாதீர்கள்
دعوا لي أَصْحَابِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أنفقتم مِثْلَ أُحُدٍ ذَهَبًا، مَا بلغتم أعمالهم» .
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைப் பற்றி (தீயவிதமாகப் பேசுவதை) விட்டுவிடுங்கள். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ (அந்த அல்லாஹ்வாகிய) அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைத் தானமாக செய்தாலும் அது அவர்களது செயல்களுக்கு ஈடாகாது.
ஆதாரம் : பஸ்ஸார்இ இப்னு அபீ அவ்ஃபா
3387. கடன் கொடுத்துவர் கடினமாகப் பேசு உரிமைப்படைத்தவர்
دَعُوهُ، فإنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا
அபூஹூரைரா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கடன் கொடுத்தவர் கடன்வாங்கியவரிடம் கடுமையாக நடந்துகொள்வதைக் கண்டால் அவரை தண்டித்துவிடாமல்) விட்டுவிடுங்கள். ஏனெனில் கடன் கொடுத்தவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேசுவதற்கு உரிமை பெற்றவராவார்.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 2390
3388. துன்பத்திற்குள்ளானவர் செய்ய வேண்டிய பிரார்த்தனை
دَعَوَاتُ الْمَكْرُوبِ : اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ ".
அபூபக்கர் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன்பத்திற்குள்ளானவர் செய்ய வேண்டிய பிரார்த்தனை : “அல்லாஹும் மர்ஹம்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸி தர்ஃபத அய்னின். வ அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹு லா இலாஹ இல்லா அன்த்த”
ஆதாரம் : அபூதாவது 5090
ஹசன் தரமானது
பிரார்த்தனையின் பொருள் : யா அல்லாஹ்! உன் கருணையையே நான் நம்புகிறேன். ஒரு கணம்கூட என்னை என் (சொந்த) ஆன்மாவிடம் விட்டுவிடாதே. (என்னை என்போக்கில் விட்டுவிடாதே) எனது எல்லா விவகாரங்களையும் நீயே சரிசெய்வாயாக. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
3389. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான். மண்ணிலேயே புதைக்கப்படுவான்
دفن بالطينة التي خُلق منها»
இப்னு உமர் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர் படைக்கப்பட்ட மண்ணில் புதைக்கப்பட்டார்
ஆதாரம் : பஸ்ஸார்
3390. நன்மைக்கு வழிகாட்டுபவர்
دليل الخير كفاعله»
அலீ ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மைக்கு வழிகாட்டுபவர் அதை செய்பவரைப் போன்றவராவார்.
ஆதாரம் : இப்னு நஜ்ஜார்இ திர்மிதீ 2670
ஹசன் தரமானது
3391. வெள்ளை ஆடு விருப்பத்திற்குரியது
دَمُ عَفراءَ أحَبُّ إليَّ الله مِن سَوداوَيْنِ
அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு கருப்புப் ஆடுகளின் (ரத்தத்தை) விட வெள்ளை ஆட்டின் இரத்தம் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது.
ஆதாரம் : முஸ்னது அஹமது 9404
ஹசன் தரமானது
3392. வெள்ளை ஆடு தூய்மையானது
دَمُ عَفراءَ أزكى عند الله مِن دم سَوداوَيْنِ
கஸீரா பின்த் சுஃப்யான் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு கருப்புப் ஆடுகளின் (ரத்தத்தை) விட வெள்ளை ஆட்டின் இரத்தம் அல்லாஹ்விடத்தில் தூய்மையானது.
ஆதாரம் : தபரானி
ஹசன் தரமானது
3393. உரிமையை வென்றெடுத்தல்
دُونَكِ فَانْتَصِرِي
ஆயிஷா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உன்னுடைய உரிமையை நீ வென்றெடு”
ஆதாரம் : சுனன் இப்னுமாஜா 1981
3394. விரல்களுக்கான இழப்பீட்டுத் தொகை
دِيَةِ الْأَصَابِعِ الْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ سَوَاءٌ : عَشْرٌ مِنَ الْإِبِلِ لِكُلِّ أُصْبُعٍ
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கை மற்றும் கால் விரல்களுக்கான இரத்த இழப்பீடு ஒன்றேயாகும். ஒவ்வொரு விரலுக்கும் பத்து ஒட்டகங்கள் (இழப்பீடு) ஆகும்.
ஆதாரம் : திர்மிதீ 1391
3395. திம்மிகளுக்கான இரத்த இழப்பீடு
دِيَةُ الْمُعَاهَدِ نِصْفُ دِيَةِ الْحُرِّ
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ்) உடன்படிக்கை செய்த மனிதனுக்கான இரத்த இழப்பீடு சுதந்திரமான (முஸ்லிம்) மனிதனுக்காக வழங்கப்படும் இரத்த இழப்பீட்டில் பாதியாகும்.
ஆதாரம் : அபூதாவூத் 4583
3396. ஒப்பந்த அடிமைக்கான இழப்பீடு
دِيَةِ الْمُكَاتَبِ بقدر ما عُتق منه دِيَةَ الْحُرِّ، وبقدر ما رَقَّ منه دية العبد
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுத்த ஒப்பந்த அடிமைக்கான இழப்பீடு அவர் சுதந்திரமான அளவுக்கு சுதந்திர மனிதனுக்கு வழங்கப்படும் இழப்பீடு போன்றதாகவும் அவர் அடிமையாக உள்ள அளவுக்கு அடிமைக்குரிய இழப்பீடாகவும் இருக்கும்.
ஆதாரம் : நுக்பத் அல் அஃப்கர் 15ஃ112இ அபூதாவூத் 4581இ திர்மிதீ 1259
3397. காஃபிருக்கான இரத்த இழப்பீடு
دية عَقْلُ الْكَافِرِ نِصْفُ عَقْلِ الْمُؤْمِنِ ".
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காஃபிர் (கொலை செய்யப்பட்டதற்கான) இரத்த இழப்பீடு முஃமின்களுக்கான இரத்த இழப்பீட்டில் பாதியாகும்.
ஆதாரம் : நஸாஈ 4807
3398. குடும்பத்தாருக்காக செலவழிப்பது சிறந்தது
دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا ؛ الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ
அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு தீனார் (பொற்காசு)இ நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசுஇ நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசுஇ நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசுதான் (மற்ற அனைத்தையும்விட) அதிக நற்பலனை உடையதாகும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 1818.
الد எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்
3399. நன்மைக்கு வழிகாட்டுதல்
الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ
இப்னு மஸ்ஊத் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையான காரியங்களுக்கு வழிகாட்டுபவன் அதைச் செய்தவனைப் போன்ற கூலியைப் பெறுவான்.
ஆதாரம் : இப்னு ஹிப்பான்இ ஜாமிஉத் திர்மிதீ 2670இ ஸஹீஹ் முஸ்லிம் 1893
3400. தஜ்ஜாலின் அடையாளம்
الدَّجَّالُ أَعْوَرُ الْعَيْنِ الْيُسْرَى، جُفَالُ الشَّعَرِ ، مَعَهُ جَنَّةٌ وَنَارٌ، فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ نَارٌ ".
ஹுதைபா இப்னு யமான் ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் இடக்கண் குருடானவனும் (சுருளான) தலைமுடி நிறைந்தவனும் ஆவான். அவனுடன் சொர்க்கமொன்றும் நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடம் உள்ள சொர்க்கம் நரகமாகும்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 5623.
3401. தஜ்ஜாலின் கண்கள்
الدَّجَّالُ عَينُه خَضراءُ
அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் பச்சை நிறக் கண்களை உடையவன்
ஆதாரம் : முஸ்னது அஹமது 21146இ அத்தயாலிஸி 546இ இப்னு ஹிப்பான் 6795.
3402. தஜ்ஜால் காஃபிர் ஆவான்
الدَّجَّالُ مَمْسُوحُ العَيْنِ مَكْتُوبٌ بيْنَ عَيْنَيْهِ كافِرٌ، يَقْرَؤُهُ كُلُّ مُسْلِمٍ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"தஜ்ஜால் என்பவன் ஒரு கண் செயலிழந்தவன் ஆவான். அவனுடைய இரு கண்களுக்கிடையே "காஃபிர்" என்று எழுதப்பட்டிருக்கும். அதை ஒவ்வொரு முஸ்லிமும் வாசிப்பார்"
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 5608
3403. தஜ்ஜாலால் நுழைய முடியாத இடம்
الدَّجَّالُ لَا يُولَدُ لَهُ ، ولَا يَدْخُلُ الْمَدِينَةَ، وَلَا مَكَّةَ
அபூசயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தஜ்ஜாலுக்கு குழந்தை இருக்காது. அவன் மதீனாவிற்குள்ளும் மக்காவிற்குள்ளும் நுழையமாட்டான்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 5622.
3404. தஜ்ஜாலை பின்பற்றுபவர்களின் அடையாளங்கள்
الدَّجَّالُ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا : خُرَاسَانُ. يَتْبَعُهُ أَقْوَامٌ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ ".
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கிழக்குப் பகுதியைச் சேர்ந்த குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான். அவனைப் பின்பற்றி சில மக்கள் செல்வார்கள். அவர்களது முகங்கள் தோலால் செய்யப்பட்ட கேடயங்கள் போன்று இருக்கும்.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 2237
3405. பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரம்
الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ مُستجابٌஇ فَادْعُوا .
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) அங்கீகரிக்கப்படும். (எனவே அந்நேரத்தில்) பிரார்த்தனை செய்யுங்கள்
ஆதாரம் : அபூதாவூத் 521இ ஜாமிஉத் திர்மிதீ 212இ நஸாஈயின் சுனனுந் குப்ரா 9812
3406. பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரம்
الدُّعَاءُ مُستجابٌ بَيْنَ النداء وَالْإِقَامَةِ
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(பாங்கு எனப்படும் தொழுகைக்கான) அழைப்பு மற்றும் இகாமத் ஆகியவற்றிற்கு இடையில் செய்யப்படும் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) அங்கீகரிக்கப்படும்.
ஆதாரம் : முஸ்னது அஹமத் 12221இ அபீயஃலா 3680
ஹசன் தரமானது
3407. பிரார்த்தனைதான் வணக்கமாகும்
الدُّعاءُ هوَ العبادةُ
அந்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிரார்த்தனை என்பதுதான் வணக்கமாகும்.
ஆதாரம் : அபூதாவூத் 1479இ திர்மிதீ 2969இ இப்னுமாஜா 3828
3408. பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரம்
الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படாது.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 212இ அந்நவாஃபிஹுல் அத்ரா 143இ
3409. பிரார்த்தனையின் சிறப்பு
الدُّعاءَ ينفَعُ ممَّا نزَلَ، وممَّا لَمْ ينزِلْ؛ فعليكُمْ عِبادَ اللهِ بالدُّعاءِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பது என்பது ஏற்கனவே இறங்கிவிட்டதற்கும் இன்னும் இறங்காமல் இருப்பதற்கும் பயன்தரத்தக்கதாகும். ஆகவே அல்லாஹ்வின் அடியார்களே! பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆதாரம் : ஹாகிமின் முஸ்தத்ரக் அலா ஸஹீஹைன் 1839இ பைஹகியின் அல் கழாஅ வல் கத்ர் 248இ தஹபியின் ஃபைளுல் கதீர் 542ஃ3இ திர்மிதீ 3548.
ஹசன் தரமானது.
3410. இவ்வுலக வாழ்க்கையைப் பயன்படுத்தும் முறை
الدُّنيا حُلوةٌ خَضِرةٌ، فمَن أخذَها بِحقِّهِا بُورِكَ لهُ فيها، ورُبَّ متخوِّضٍ فيما اشتَهت نفسُه ليسَ لهُ يومَ القيامةِ إلَّا النَّارُ
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இவ்வுலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். எவரொருவர் அதை முறையான வழியில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படும். நிறைய மனிதர்கள் தமது மனம் விரும்பியவாறு (தவறான வழியில்) மூழ்கிவிடுகின்றனர். அவர்களுக்கு மறுமைநாளில் நரகத்தைத் தவிர வேறு எதுவும் வழங்கப்படுவது இல்லை.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் கபீர் 14257இ ஹைஸமியின் முஅஜமுல் ஸவாயித் 10ஃ249
3411. இவ்வுலக வாழ்க்கையின் யதார்த்தம்
الدُّنيا خَضِرةٌ حُلوةٌ
மைமுனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இவ்வுலகம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும்.
ஆதாரம் : இப்னு அபீ ஆஸிமின் அஸ்ஸுஹுத் 241இ தபரானி (24ஃ24) 58இ அபீயஃலா 7099
3412. இவ்வுலகம் முஃமின்களுக்கு சிறைச்சாலை
الدُّنْيا سِجْنُ المُؤْمِنِ، وجَنَّةُ الكافِرِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இவ்வுலகம் முஃமின்களுக்கு சிறைச்சாலை(யைப் போன்றது) ஆகும். மேலும் காஃபிர்களுக்கு சொர்க்கத்தைப் (போன்றதாகும்)
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 5663
3413. நல்லொழுக்கமுள்ள மனைவி
الدُّنيا كلَّها متاعٌ وخيرُ متاعِ الدُّنيا المرأةُ الصَّالحةُ
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இவ்வுலகிலுள்ள ஒவ்வொன்றும் இன்பம் தரத்தக்கதாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது (நல்லொழுக்கமுள்ள) ஸாலிஹான மனைவியாகும்.
ஆதாரம் : நஸாஈ 3232இ இப்னு ஹிப்பான் 4031இ ஸஹீஹ் முஸ்லிம் 2911
3414. இறைவனால் சபிக்கப்படாதவை
الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا، إِلَّا ذِكْرُ اللَّهِ، وَمَا وَالَاهُ، وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இவ்வுலகம் (இறைவனால்) சபிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அனைத்தும் சபிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை நினைவு கூர்தல்இ அதனுடன் தொடர்புடையவைஇ மார்க்க அறிஞர் மற்றும் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் மாணவர் ஆகியவர்களைத் தவிர.
ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 2322இ இப்னுமாஜா 4112இ பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 1580.
ஹசன் தரமானது.
3415. மருத்துவமும் இறைவனின் விதியே
الدَّواءُ من القَدَرِ، وقد ينفَعُ بإذنِ اللهِ تعالى
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மருத்துவம் (இறைவனின்) விதியிலிருந்து வந்ததாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் அது நிச்சயம் நன்மை தரும்.
ஆதாரம் : தபரானியின் அல் கபீர் (12ஃ169) 12784இ முஸ்னது கலீஃபா பின் கய்யாத் 49இ அபூ நயீமின் திப்புந் நபவி 50
ஹசன் தரமானது
3416. மருத்துவத்தில் பலன்
الدَّواءُ من القَدَرِ، وهو ينفع من يشاء بما شاء» .
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மருத்துவம் (இறைவனின்) விதியிலிருந்து வந்ததாகும். மேலும் (அல்லாஹ்) தான் நாடுபவர்களுக்குஇ தான் நாடுபவற்றைக் கொண்டு நன்மை அளிக்கிறான்.
ஆதாரம் : ஃபைளுல் கதீர் 4288
3417. மார்க்கம் என்பதே நலம் நாடுவதாகும்
الدينَ النصيحةُ
தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மார்க்கம் என்பதே நலம் நாடுவதாகும்
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 95
3418. கடன் வாங்கும் ஒழுங்குகள்
الدَّينُ دَيْنانِ، فمن مات وهو ينوي قضاءَه؛ فأنا وليُّه، ومن مات ولا ينوي قضاءَه؛ فذاك الذي يُؤخَذُ من حسناتِه، ليس يومئذٍ دينارٌ ولا درهمٌ
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடன் இரண்டு வகைப்படும். ஒருவர் திருப்பிச் செலுத்தும் நோக்கத்துடன் கடன் வாங்கி (பின்னர் திருப்பி செலுத்துவதற்குள்) இறந்து போனால்இ ட அவருடைய (கடனிற்கு) நானன பொறுப்பாளர் ஆவேன். ஒருவர் அதை திருப்பிச் செலுத்தும் நோக்கமின்றி வாங்கி (திருப்பி செலுத்தாமல்) இறந்து போனால்இ அவர் செய்த நற்செயல்களிலிருந்து (அவர் வாங்கிய கடன் அளவிற்கு) நன்மைகள் பறிக்கப்படும். (ஏனெனில் மறுமைநாளான) அன்று தீனாரோ திர்ஹாமோ இருக்காது.
ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் கபீர் (336ஃ13) 14146.
3419. இறந்தவரின் கடனை எப்போது அடைக்க வேண்டும்?
الدَّينُ قبلَ الوصيةِ وليس لوارثٍ وصيةٌ
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடனானது வஸிய்யத் எனும் இறுதி விருப்பத்திற்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டும். வாரிசுகளுக்கு வஸிய்யத் இல்லை.
ஆதாரம் : அல் பத்ருல் முனீர் 7ஃ268இ தாரகுத்னி 4152இ பைஹகியின் சுனனுலன குப்ரா 12563
ஹசன் தரமானது
3420. மார்க்கம் எளிதானது
الدينُ يسرٌ ولن يُغالِبَ الدينَ أحدٌ إلا غلبه
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(இஸ்லாமிய) மார்க்கம் எளிதானது. மார்க்கத்தை எவராலும் விஞ்சிடமுடியாது. அவ்வாறு ஒருவர் முயன்றால் அது அவரையே மிகைத்துவிடும்.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 39
3421. பழையதை கொடுத்து புதியதை வாங்குதல்
الدِّينارُ بِالدِّينارِ، و الدِّرْهمُ بالدِّرهمِ، و صاعُ حِنطةٍ بِصاعِ حِنطةٍ، و صاعُ شَعيرٍ بِصاعِ شَعيرٍ، و صاعُ مِلْحٍ بِصاعِ مِلحٍ، لا فضْلَ بين شىءٍ من ذلِكَ
மாலிக் இப்னு ரபீஆ அபூசயீத் சாஅதி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு தீனாருக்கு ஒரு தீனார்இ ஒரு திர்ஹமுக்கு ஒரு திர்ஹம்இ ஒரு சாஉ கோதுமைக்கு ஒரு சாஉ கோதுமைஇ ஒரு சாஉ பார்லிக்கு ஒரு சாஉ பார்லிஇ ஒரு சாஉ உப்புக்கு ஒரு சாஉ உப்பு (என்ற விகிதத்தில் சரிக்கு சரியாகத்தான் மாற்றப்பட வேண்டும்). இவற்றில் எதற்கும் (பழையதுஇ புதியது என்ற) எந்த வித்தியாசமும் இல்லை.
ஆதாரம் : ஹைஸமியின் மஜ்மஉ ஸவாயித் (4ஃ117)இ முஸ்னது அல் ஷாஷி 1519இ தபரானியின் முஅஜமுல் கபீர் (268ஃ19) 595இ முஸ்தத்ரக் ஹாகிம் 2193
3422. பழையதை கொடுத்து புதியதை வாங்குதல்
الدِّينَارُ بِالدِّينَارِ لَا فَضْلَ بَيْنَهُمَا. وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لَا فَضْلَ بَيْنَهُمَا ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தீனார் (எனும் ஒரு தங்க காசை) மற்றொரு தீனார் (எனும் தங்க காசிற்கு) சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம். அதில் கூடுதல் குறைவு இருக்கக்கூடாது). திர்ஹம் (எனும் வெள்ளிக் காசிற்கு) மற்றொரு திர்ஹம் (எனும் வெள்ளி காசை) சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம். அதில் கூடுதல் குறைவு இருக்கக்கூடாது). ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 3236.
3423. பழையதை கொடுத்து புதியதை வாங்குதல்
الدِّينارُ بالدِّينارِ لا فضلَ بَينَهما، والدِّرهَمُ بالدِّرهَمِ لا فضلَ بَينَهما، فمَن كانت له حاجةٌ بوَرِقٍ فليَصطَرِفْها بذَهَبٍ، ومَن كان له حاجةٌ بذَهَبٍ فليَصطَرِفْها بالوَرِقِ، والصَّرفُ هاءٌ وهاءٌ
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"தினார் (எனும் பழைய தங்க காசானது மற்றொரு) தினார் (எனும் புதிய தங்க காசிற்கு) சமம் ஆகும்; அவற்றுக்கு இடையில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. திர்ஹம் (எனும் பழைய வெள்ளி காசானது மற்றொரு) திர்ஹம் (எனும் புதிய வெள்ளி காசிற்கு) சமம் ஆகும்; அவற்றுக்கு இடையில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. எனவேஇ யாருக்காவது வெள்ளியின் (திர்ஹம்) தேவை இருந்தால்இ அவர் அதை தங்கத்திற்கு (தீனார்) மாற்றிக்கொள்ளட்டும். யாருக்காவது தங்கத்தின் (தினார்) தேவை இருந்தால்இ அவர் அதை வெள்ளிக்கு (திர்ஹம்) மாற்றிக்கொள்ளட்டும். அவ்வாறு மாற்றுதல் அங்கேயே (உடனுக்குடன்) நடைபெற வேண்டும்."
ஆதாரம் : ஃபைளுல் கதீர் 555ஃ3இ இப்னுமாஜா 2261இ ஹாகிம் 2308இ தபரானியின் முஅஜமுஸ் ஸகீர் 6347. சுனனுத் தாரகுத்னி 2880.
3424. நாணயங்கள் அனைத்தும் பொக்கிஷமே
الدِّينارُ كَنزٌ، والدِّرهَمُ كَنزٌ، والقيراطُ كَنزٌ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தீனார் (எனும் தங்க காசு) ஒரு பொக்கிஷமாகும். திர்ஹம் (எனும் வெள்ளி காசு) ஒரு பொக்கிஷமாகும். கீராத் (1 தீனார் ஸ்ரீ 24 கீராத்) ஒரு பொக்கிஷமாகும்.
ஆதாரம் : தஹாவியின் ஷர்ஹ் முஷ்கில் அல் ஆசார் 1272.