பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...
இஸ்லாமிய வரலாறு
ஆசிரியர் : அக்பர் ஷா நஜீபாபதி
முழு புத்தகத்தை டவுன்லோடு செய்ய
முன்னுரை
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை
உலக வரலாற்றை உற்றுநோக்கும்போது ஒரு உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.
அது எதுவென்றால்இ உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும்இ ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும்இ சீர்திருத்தவாதிகளும்இ வழிகாட்டிகளும் மற்றும் மத நிறுவனர்களும் ஒரே இறைவனையே நம்பினார்கள் என்பதாகும்.
அவர்கள் அனைவரும் ஒரு உயர்ந்த படைப்பாளனின் இருப்பைப் பற்றி தங்கள் மக்களுக்கு உணர்த்த முழு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆதம்இ நூஹ்இ இப்ராஹீம்இ மூஸா மற்றும் முஹம்மது (அலை) ஆகியோர் ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் வாழ்ந்த போதிலும்இ அவர்களின் போதனைகளில் 'படைப்பாளனின் ஏகத்துவம்' (ஒரே இறைவன் எனும் கொள்கை) பொதுவான காரணியாக இருந்தது.
கிருஷ்ணர்இ ராமச்சந்திரன்இ கௌதம புத்தர் மற்றும் குரு நானக் ஆகியோர் இந்தியாவில் தோன்றினர்; கைகுபாத் மற்றும் ஜோராஸ்டர் ஈரானிலும்; கன்பூசியஸ் சீனாவிலும்; லுக்மான் கிரேக்கத்திலும்; யூசுப் எகிப்திலும்; லூத் சிரியா மற்றும் பாலஸ்தீனத்திலும் தோன்றினர் - ஆனால் இவர்கள் அனைவருடைய போதனைகளின் அடிப்படையிலும் இறைவனின் ஏகத்துவமே அமைந்திருந்தது.
கிட்டத்தட்ட அனைத்து பெரியவர்களும் குழந்தைகளும்இ முதியவர்களும் இளைஞர்களும்இ ஆண்களும் பெண்களும்இ கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் என அனைவரும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை நம்புகிறார்கள்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிலரே இறைவனின் பெயரை உச்சரிக்க மறுக்கலாம். ஆனால் அவர்களின் இதயங்களுக்குள்ளும் ஒரே இறைவனது இருப்பை உணர்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தின் காரணம் மற்றும் விளைவு (உயரளந யனெ நககநஉவ) செயல்முறையானதுஇ ஏதோ ஒரு மகா ஞானம் மிக்க சக்தியால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஞானமிக்க மற்றும் நன்நோக்கம் கொண்ட சக்தியே சர்வவல்லமையுள்ள அல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது.
அறிஞர்களின் ஏகோபித்த நம்பிக்கையையும்இ சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் பிரம்மாண்டமான படைப்பையும் மனநலம் குன்றியவர்களைத் தவிர வேறு யாரும் நிராகரிக்க முடியாது.
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார்
ரோமின் பிரம்மாண்டமான பேரரசு ஏற்கனவே துண்டு துண்டாக உடைந்திருந்தது. அதன் அரை-மிருகத்தனமான சட்டங்களும் அரசியலமைப்பும் சிதைந்துஇ அதிலிருந்த நற்பண்புகள் அனைத்தும் அழிந்து போயின.
பாரசீகப் பேரரசு ஊழல் மற்றும் கொடுமைகளின் களஞ்சியமாக மாறியிருந்தது;
சீனாவும் துர்கிஸ்தானும் இரத்தக் களரி மற்றும் கொடூரத்தின் புகலிடமாகத் தெரிந்தன.
இந்தியாவில் அசோகர் மற்றும் கனிஷ்கரின் ஆட்சிகள் இல்லாமல் போயின. மகாராஜா விக்ரமாதித்யனின் ஆட்சியைப் பற்றி யாரும் நினைக்கக்கூட முடியவில்லை; புத்த மதத்திற்கோ அல்லது பிராமண மதத்திற்கோ அங்கு முன்மாதிரிகள் இல்லை.
புத்தரை மதிப்பவர்கள்இ அதிகாரம் மற்றும் உலக இன்பங்களுக்காக அல்லது நம்பிக்கையின் பலவீனத்தால் வெட்கக்கேடான செயல்களைச் செய்தனர்.
கிருஷ்ணரின் ஜபமாலையை ஓதுபவர்கள்இ படைப்புகளிலேயே மிகவும் கண்ணியமான மனிதனைஇ காய்கறிகள் மற்றும் கற்களுக்கு முன்னால் சிரவணக்கம் (pசழளவசயவந) செய்ய வைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை.
ஐரோப்பா ஒரு காடு போலவும்இ அங்கிருந்த மனிதர்கள் இரத்த வெறி பிடித்த மிருகங்களைப் போலவும் இருந்தனர் என்றால்இ அரேபியா முழுவதும் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
சுருக்கமாகச் சொன்னால்இ உலகில் எங்குமே மனித இனம் அதன் தூய மனிதத்தன்மையுடனும் கண்ணியத்துடனும் ஒட்டியிருக்கவில்லை.
உலகம் முழுவதும் இருண்டிருந்த இத்தகையச் சூழலில்இ பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பற்றி சிந்திப்பது இந்திய மக்களின் கடமையாக இருந்தது.
அதில் ஸ்ரீ கிருஷ்ண மகராஜ் கூறுகிறார்:
"அர்ஜுனா! எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோஇ அப்போதெல்லாம் நான் நற்பண்புகளைக் காக்கவும்இ தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் தோன்றுகிறேன்."
ஜோராஸ்டரின் கட்டளைகளின்படி ஒரு வழிகாட்டியைத் தேடி வருவது பாரசீகர்களின் கடமையாக இருந்தது.
'பாரான்' மலைத்தொடரின் சிகரங்களிலிருந்து வெளிச்சம் தோன்றுவதற்காகக் காத்திருப்பதும்இ புறக்கணிக்கப்பட்ட கல்லை மூலைக்கல்லாக (உழசநெசளவழநெ) மாற்றுவதும் யூதர்களின் கடமையாக இருந்தது.
இப்ராஹீமின் பிரார்த்தனையையும்இ இயேசுவின் (ஈஸா) நற்செய்திகளையும் தங்களின் நம்பிக்கையின் மையமாக மாற்றுவது கிறிஸ்தவர்களின் கடமையாக இருந்தது.
ஆனால் உலகளாவிய ஊழலும்இ சீர்குலைவும்இ இருளும் மனிதக் கண்களை மிகக் குருடாக்கிவிட்டன. இதனால் எவருக்கும் தான் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோ அல்லது மருந்து தேடிச் செல்லும் அறிவோ இருக்கவில்லை.
இத்தகையதொரு காலக்கட்டத்தில்இ அரேபியா போன்ற ஒரு நிலப்பரப்பில்இ பலதெய்வ வழிபாடு எனும் சீர்கேடுஇ உருவ வழிபாட்டின் இருள்இ ஊழல் மற்றும் சீர்குலைவு எனும் மாசுஇ மற்றும் தீய பழக்கவழக்கங்கள் மற்றும் வெட்கக்கேடான செயல்களின் அழுக்குகளை அகற்றுவதற்காக முஹம்மது (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற முழக்கத்தை எழுப்பிஇ மனிதர்களைப் போன்ற உருவத்தில் இருந்தவர்களை உண்மையான மனிதர்களாகவும்இ உயரிய ஒழுக்கநெறி கொண்டவர்களாகவும் மாற்றும் புனிதமான கடமையை அவர் ஆற்றினார்.
அத்தகைய மேன்மையான மக்களைஇ இருளை ஒளியாகவும்இ அநீதியை நீதியாகவும்இ குழப்பத்தை அமைதியாகவும்இ நேர்மையின்மையை நேர்மையாகவும் மாற்றும் இறைநேசர்களாக அவர் உருவாக்கினார்; வழிதவறியவர்கள்இ சிலையாராதனை செய்பவர்கள் மற்றும் தீயவர்களிடமிருந்து தீமைகளைக் களைந்து தூய முஸ்லிம்களை செதுக்கினார்.
நூஹ் (அலை) அவர்கள்இ ஈராக் மற்றும் அரேபியாவின் வழிதவறிய மக்களை நேர்வழிக்கு கொண்டு வர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இடைவிடாது முயற்சி செய்தும் பலனில்லாத நிலையில்இ "என் இறைவா! பூமியில் நிராகரிப்பாளர்களில் ஒருவரையும் விட்டு வைக்காதே!" (71:26) என்று பிரார்த்தித்துஇ சூழ்நிலை காரணமாக அவர்களை அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மூஸா (அலை) அவர்கள் எகிப்தியர்களுக்கும்இ அந்த அகந்தை கொண்ட ஃபிர்அவ்னிய அரசனுக்கும் நேர்வழியைக் காட்ட கடுமையாக முயன்றார்கள். ஆனால் இறுதியில்இ மூஸாவும் இஸ்ரவேலர்களும் கண்ட காட்சியைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
"...நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் (கடலில்) மூழ்கடித்தோம்." (2:50)
இதற்காகத்தான் மகாராஜா ராமச்சந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து அரக்கர்களுடன் போரிட்டார்; ஸ்ரீ கிருஷ்ண மகராஜ் அர்ஜுனனை குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் போரிடத் தூண்டினார். மேலும் பாண்டவர்களின் கைகளால் கௌரவர்களை அழிக்க வேண்டியிருந்தது.
ஈரானில்இ ஜோராஸ்டர் தனது போதனை மற்றும் மதப் பிரச்சாரத்திற்கு இஸ்பந்தியார் மற்றும் கியானி பேரரசின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டார்.
ஆனால், அறிஞர்களை வந்தடைந்துள்ள பண்டைய வேதங்களும் சமூக மரபுகளும் ஒரு விஷயத்தில் ஏகோபித்து நிற்கின்றன: அதாவது, 25 ஆண்டுகளுக்கும் குறைவான குறுகிய காலத்தில்இ உலகின் மிக மோசமான நாடும்இ அறியாமை கொண்ட முரட்டுத்தனமான மக்களும்இ பூமியின் மிகச்சிறந்த ஆசிரியர்களாகவும்இ நாகரீகமானவர்களாகவும்இ ஒழுக்கம் மிக்கவர்களாகவும் மாறியதற்கு வேறு எந்த மத நிறுவனரோ அல்லது வழிகாட்டியோ முன்மாதிரியாக இல்லை.
நூறு ஆண்டுகளுக்கும் குறைவாகஇ அதாவது 80 ஆண்டுகளில்இ முஹம்மது (ஸல்) கொண்டு வந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரைஇ அதாவது சீனாவின் கிழக்குக் கரை வரை மற்றும் ஒட்டுமொத்த நாகரீக உலகத்தையும் தங்களுக்குள் கொண்டு வந்தனர்.
நமது இந்த உலகம் இத்தகைய அற்புத வெற்றிக்கு வேறு எந்த உதாரணத்தையும் காட்ட முடியாது.
இஸ்லாத்தின் போதனைகள் அதன் உயரிய குணங்களுக்காக மற்ற அனைத்து மதக் கோட்பாடுகளை விடவும் மேலானதாக இருக்கும்போதுஇ மனித இனத்திலேயே மிகச்சிறந்தவராகவும்இ இறைத்தூதர்களின் முத்திரையாகவும்இ அகிலத்தின் அருட்கொடையாகவும் விளங்கும் முஹம்மது (ஸல்) அவர்களின் அந்தஸ்தை யாரால் கேள்வி கேட்க முடியும்?
மேலும், அந்த இறைத்தூதர் கொண்டு வந்த புனிதமான குர்ஆன் ஈடுஇணையற்றது மற்றும் மறுக்க முடியாதது என்ற இறைவனின் கூற்றை சவாலுக்கு உட்படுத்த யாருக்குத் துணிச்சல் வரும்?
குர்ஆன் கூறுவது போல:
"நிச்சயமாக நாமே இந்த நற்போதனையை (குர்ஆனை) இறக்கினோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்." (15:09)
சமூகங்களை முன்னேற்றம் மற்றும் செழுமையின் பாதையில் செலுத்துவதற்கும்இ அவமானத்திலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் அவற்றைக் காப்பாற்றுவதற்கும் வரலாறு மிகவும் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க ஆதாரமாகத் திகழ்கிறது. சமூகங்கள் எப்போதெல்லாம் பெரும் உயரங்களை எட்டியுள்ளனவோஇ அப்போதெல்லாம் அவை வரலாற்றிலிருந்துதான் உத்வேகத்தைப் பெற்றுள்ளன.
மனிதனின் கண்ணியத்திற்காகவும்இ இம்மை மற்றும் மறுமை வெற்றிக்காகவும் வரலாற்றைப் படிப்பது மிகவும் அவசியம் என்று திருக்குர்ஆனும் நமக்குக் கூறியுள்ளது.
கடந்த கால சமூகங்களின் நிகழ்வுகள்இ சில சமூகங்கள் தங்கள் தீய செயல்களின் சுமையைத் தாங்கின என்பதையும்இ மற்ற சில சமூகங்கள் தங்களின் நற்செயல்களால் மகத்தான வெற்றியைப் பெற்றன என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா போன்றோரின் நிகழ்வுகளும், பிர்அவ்ன், நம்ரூத், ஆது, சமூது கூட்டத்தினரின் அவலநிலைகளும் திருக்குர்ஆனில் வெறும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது தூக்கத்தை வரவழைப்பதற்காகவோ கூறப்படவில்லை. மாறாகஇ நம்மிடம் நற்செயல்களைச் செய்யும் தைரியத்தை உருவாக்கவும்இ தீமைகளிலிருந்து விலகி இருக்கவும்இ நமது நிகழ்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றவுமே அவை கூறப்பட்டுள்ளன.
மனிதகுலத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைத்தூதர்கள்இ மனிதர்களை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களின் கடந்த கால வரலாற்றை எப்போதும் நினைவூட்டியுள்ளனர்.
உணர்வற்ற நிலையில் இருந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய உலகத் தலைவர்கள் அல்லது சீர்திருத்தவாதிகள் எவரும் கடந்த கால நிகழ்வுகளைப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை.
இதன் காரணமாகவேஇ ஒவ்வொரு சொற்பொழிவாளரும் தனது நேயர்களை ஊக்குவிக்கவும் சுறுசுறுப்பாக்கவும் சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.
கடந்த கால நாயகர்களில் கூடஇ நமது சமூகத்தோடும் மதத்தோடும் நெருங்கிய தொடர்புடையவர்களையே நாம் குறிப்பிடுகிறோம். அவர்களே நமது வாழ்க்கையில் அதிக செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
ருஸ்தம், இஸ்பந்தியார் மற்றும் குஸ்தாப் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் செயல்கள் ஜைனர்கள் அல்லது இந்தியர்களை விட ஈரானியர்களிடமும் பார்சிகளிடமும் அதிக மத ஊக்கத்தையும்இ நீதியையும் தூண்டக்கூடும்.
அதேபோல் பீமன், அர்ஜுனன், விக்ரமாதித்யன் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோரின் கதைகள் கிறிஸ்தவர்களை விட இந்துக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வரலாறு ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தும் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் இன்று மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு சமூகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அதை உயிருடன் வைத்திருக்கவும் இதுவே ஒரே வழி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவேஇ புகழ்பெற்ற வரலாறு இல்லாத நாடுகள் கூடஇ தங்கள் இளைஞர்களின் மனதை நிரப்புவதற்காகவும் அவர்களை நம்ப வைப்பதற்காகவும் புனையப்பட்ட கதைகளையும் கற்பனைகளையும் தங்கள் வரலாறு என்ற பெயரில் முன்வைப்பதை நாம் பார்க்கிறோம்.
தங்கள் மக்களின் கடந்த காலப் பெருமையை உணர்த்துவதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலப் பெருமை இல்லாமல் எந்தவொரு சமூகமும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க மற்றவர்களுடன் போட்டியிட முடியாது.
இதனால்தான் ஒரு சமூகத்திற்கு எதிரானவர்கள்இ அந்த சமூகத்தின் வரலாற்றைத் திரித்துஇ அந்த மக்களைத் தங்கள் வரலாற்றைப் பற்றிய அறியாமையிலும் கவனக்குறைவிலும் வைக்க முயல்கிறார்கள்.
முஸ்லிம்களின் மகத்தான சாதனைகள்
உலக நாடுகளுக்கிடையில்இ மகத்தான செயல்களாலும் அற்புதமான சாதனைகளாலும் நிறைந்திருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமூதாயம் மட்டுமே.
எல்லாவற்றிற்கும் மேலாகஇ அவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் நாயகர்களின் சாதனைகளைப் பற்றி சோதிக்கப்பட்ட மற்றும் நம்பகமான அறிவையும் தகவல்களையும் கொண்டுள்ளனர்; அவை மறுக்க முடியாதவை மற்றும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை.
முஸ்லிம்களுக்கு ஹோமரின் 'இலியட்' (Iliat) மற்றும் 'ஒடிஸி' (odisi) ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே போல் மகாபாரதமும் இராமாயணமும் அவர்களுக்குத் தேவையில்லை.
ஏனெனில், அவர்களின் உண்மையான வரலாற்றில் இலியட், ஒடிஸி, மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகியவற்றில் உள்ளதை விட மிகச்சிறந்த மற்றும் வியக்கத்தக்க முன்மாதிரிகள் நிறைந்துள்ளன.
முஸ்லிம்களுக்கு பிர்தௌசியின் 'ஷாஹ்நாமா' (shahnama) அல்லது ஸ்பார்டன் கதைகளுடனும் எந்தத் தொடர்பும் இல்லை; ஏனெனில் அவர்களின் வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் பல ருஸ்தம்களையும் ஸ்பார்டன்களையும் முன்வைக்க முடியும்.
'நீதிமான்' நுஷர்வான் மற்றும் ஹாதிம் தாயின் கதைகளை முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் அவர்களின் உண்மையான மற்றும் ஆதாரபூர்வமான வரலாற்றில், எண்ணற்ற ஹாதிம்களும் நுஷர்வான்களும் ஒளியையும் பிரகாசத்தையும் வீசிக்கொண்டுத் தோன்றுகிறார்கள்.
முஸ்லிம்களுக்கு அரிஸ்டாட்டில், பேக்கன், தாலமி அல்லது நியூட்டன் போன்றவர்கள் தேவையில்லை; ஏனெனில் அவர்களின் முன்னோர்களின் அவையில்இ அத்தகைய தத்துவஞானிகளும் வானியலாளர்களும் ஏற்கனவே இருப்பது அவர்களுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும்.
உலக நாடுகளுக்கிடையே ஒருவரையொருவர் முந்துவதற்கு கடுமையான போட்டி நிலவும் இந்த நேரத்தில்இ முஸ்லிம்கள் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தும்இ தங்கள் வரலாற்றில் பற்றற்றவர்களாகவும் கவனக்குறைவாகவும் இருப்பது எவ்வளவு பரிதாபகரமானது மற்றும் ஆச்சரியமானது!
முஸ்லிம்களிடையே விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறப்படும் ஒரு வர்க்கம் கூடஇ உயர் ஒழுக்கங்களுக்கோ அல்லது வியக்கத்தக்க சாதனைகளுக்கோ உதாரணம் காட்ட வேண்டிய இடங்களில்இ ஐரோப்பா அல்லது கிறிஸ்தவ உலகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களையே தங்கள் விரிவுரைகள்இ உரைகள்இ கட்டுரைகள் மற்றும் நூல்களில் மேற்கோள் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்களிடையே உள்ள அத்தகைய ஆளுமைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.
முஸ்லிம்களில் உள்ள படித்த வர்க்கத்தினர் காலித் பின் வலீத், சலாஹுத்தீன் அய்யூபி, ஹஸ்ஸான் பின் ஸாபித், பிர்தௌசி, தூஸி, இப்னு ருஷ்த் மற்றும் இப்னு சீனா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுவதை விட ஹன்னிபால், ஷேக்ஸ்பியர், பேக்கன், நியூட்டன் போன்றவர்களின் பெயர்களைத் தங்கள் உரைகளிலும் எழுத்துக்களிலும் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள் என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்?
இதற்கு ஒரே காரணம் முஸ்லிம்கள் தங்கள் வரலாற்றைப் பற்றி அறியாமலும் கவனக்குறைவாகவும் இருப்பதே ஆகும்.
இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன:
முதலாவதாகஇ மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களுக்கு அறிவின் மீது ஆர்வம் மிகக் குறைவாக உள்ளது;
இரண்டாவதாகஇ அறிவைப் பெறுவதற்கு அவர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பும் ஓய்வும் கிடைக்கிறது;
மூன்றாவதாகஇ அரசாங்கப் பள்ளிகளும் கல்லூரிகளும் இந்தியாவில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை கிட்டத்தட்ட அழித்துவிட்டன;
நான்காவதாகஇ முஸ்லிம்களிடையே படித்த வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியே வருகிறார்கள். அங்கு இஸ்லாமிய வரலாறு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. அல்லது அப்படி இருந்தாலும் அது உண்மையான இஸ்லாமிய வரலாறு என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை.
கல்லூரிகளில் பட்டம் பெற்ற பிறகுஇ மேலதிகக் கல்வியைப் பெறுவதற்கான வயது கிட்டத்தட்ட கடந்துவிடுகிறது. மேலும் இஸ்லாமியக் கலைகளைப் படிக்க ஒருவருக்குப் போதிய நேரமும் இருப்பதில்லை.
அனைத்துச் சூழல்களிலும்இ நமது படித்த முஸ்லிம் வர்க்கத்தினர்இ முஸ்லிம்களின் எதிரிகளால் ஆங்கிலத்தில் சிதைக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்ட இஸ்லாமிய வரலாறுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இஸ்லாத்திற்கு முன்னால்இ எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு சமூகமும் வரலாற்று எழுத்துக் கலையில் கவனம் செலுத்தவில்லை அல்லது தங்கள் முன்னோர்களின் ஆதாரபூர்வமான வரலாற்றைத் தொகுக்கவில்லை.
இஸ்லாத்திற்கு முன்பு வரலாற்று எழுத்துக் கலையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க முடியும் என்பதை அறிய பைபிள்இ மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நூல்களே போதுமானவை.
அதேசமயம், ஹதீஸ்களைப் (நபிமொழிகள்) பாதுகாப்பதிலும் அறிவிப்பதிலும் முஸ்லிம்கள் காட்டிய எச்சரிக்கை உணர்வுஇ உறுதி மற்றும் தைரியத்திற்கு இவ்வுலகில் ஈடுஇணை எதுவுமே இல்லை.
ஹதீஸ் கலை மற்றும் 'அஸ்மாவுர் ரிஜால்' (அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் கலை) போன்ற கொள்கைகள்இ அனைத்து சவால்களையும் தாண்டி இறைத்தூதரின் பொன்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும்இ சேவை செய்வதற்காகவும் முஸ்லிம்களால் ஒரு தனி அறிவியலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆய்வு மற்றும் நுணுக்கமான படிப்பிற்காக முஸ்லிம்கள் உருவாக்கிய இந்த வலுவான மற்றும் அசைக்க முடியாத கொள்கைகள் ஈடுஇணையற்றவை; உலகம் தனது நீண்ட வரலாற்றில் இதுபோன்ற ஒன்றை இதுவரை கண்டதில்லை.
வரலாறு எழுதும் கலையில் முஸ்லிம்களின் முதல் மறக்க முடியாத பணிஇ ஹதீஸ் அறிவியலை வரிசைப்படுத்துவதும் தொகுப்பதுமே ஆகும். இதைப் பின்பற்றியேஇ அவர்கள் தங்கள் கலீஃபாக்கள்இ பிரபுக்கள்இ அரசர்கள்இ அறிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளின் வரலாறுகளைப் பதிவு செய்தனர். இந்த முழு பொக்கிஷத்தையும் இஸ்லாமிய வரலாறாகவே கருத வேண்டும்.
முஸ்லிம்களின் இந்த வரலாற்று எழுத்துக் கலை என்பது உலகிற்கு ஒரு புதிய மற்றும் விசித்திரமான விஷயமாகவும்இ எதிர்பாராத ஆசீர்வாதமாகவும்இ அத்தியாவசிய சொத்தாகவும் அமைந்தது.
மற்ற சமூகங்கள் பைபிள் மற்றும் மகாபாரதம் போன்ற புத்தகங்களை தங்கள் பெருமைக்குரிய சொத்தாகக் கருதும்போதுஇ முஸ்லிம்கள் 'கத்தீப்' போன்றவர்களின் ஆதாரபூர்வமான வரலாற்றுப் புத்தகங்களைக்கூட அலமாரிகளிலிருந்து எடுத்து ஓரம் கட்டி வைத்திருப்பதைப் பார்த்து மனிதன் வியப்படையாமல் இருக்க முடியாது.
இக்காலத்தில் ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் நுணுக்கமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதைக் கண்டு முஸ்லிம்கள் வியந்து பாராட்டுவதோடுஇ அவர்களின் திறமையைத் தங்களின் முழு மனதாரப் புகழ்கிறார்கள்.
ஆனால், வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டு அரபு குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர் 'இப்னு கல்தூன்' எழுதிய 'முகத்திமா' (வரலாற்று முன்னுரை)இ வரலாறு எழுதும் கலையைப் பற்றி உலகிற்கும் ஐரோப்பாவிற்கும் பல தனித்துவமான புள்ளிகளை உணர்த்தியது என்ற உண்மையைக்கூட அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் அத்தனை முயற்சிகளும் இப்னு கல்தூனின் வரலாற்று அறிவிற்கும் நுணுக்கத்திற்கும் முன்னால் நிற்க முடியாது என்று தாராளமாகக் கூறலாம்.
ஆனால், முஸ்லிம்களின் லட்சியமும் ஆர்வமும் எவ்வளவு குறைந்துவிட்டது என்றால்இ இஸ்லாமிய அறிஞர்களின் அவையில்கூடஇ இப்னு கல்தூன் எழுதிய அந்த புகழ்பெற்ற 'முன்னுரையைத்' தவிரஇ அவரது மூல வரலாற்று நூல்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் ஈர்ப்பதில்லை.
இப்னு ஹிஷாம், இப்னுல் அஸீர், தபரி, மஸ்ஊதி முதல் அஹ்மத் பின் கவந்த் ஷா, ஜியா பரணி மற்றும் முஹம்மது காசிம் ஃபரிஷ்தா, முல்லா பதாயூனி வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் வரலாற்றாசிரியர்களின் பாராட்டுக்குரிய முயற்சிகள் இன்றும் பருமனான தொகுதிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த கால இஸ்லாமிய யுகத்தின் வசீகரமான மகத்துவத்தையும் பிரம்மாண்டத்தையும் சித்தரிக்கின்றன.
இஸ்லாமிய வரலாறு குறித்த ஒவ்வொரு புத்தகமும் ஆழமான படிப்பிற்குரியவை; அவற்றிலிருந்து பெறப்படும் பாடங்கள் வாசகர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால்இ நூற்றில் ஒரு முஸ்லிம்கூட தனது இஸ்லாமிய வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்பதும்இ முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதில்லை என்பதும் எவ்வளவு பரிதாபகரமானது!
அதே நேரத்தில், மில் (mill), கார்லைல் (carlyl)இ எலியட் (eliat)இ கிப்பன் (gibbon) போன்றவர்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் கொண்ட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்தும் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் எழுதப்பட்டிருப்பதாலும்இ இந்தியாவில் உள்ள நூற்றில் ஒரு முஸ்லிம்கூட இந்த மொழிகளைத் தெரியாமல் இருப்பதாலும், இஸ்லாமிய வரலாற்றை உருது மொழியில் எழுதுவது ஒரு கடமையாகிறது.
இப்போது நான் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பிப்பதைப் போல, மற்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களும் இந்த எளிய முயற்சியை விடச் சிறந்த முறையில் உருதுவில் இஸ்லாமிய வரலாறுகளை எழுத வாய்ப்பு உள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரவப)
ReplyDeleteஹதீஸ்கள் போஸ்ட் டில் 1,2 இல்லை அந்த இரன்டும் போடுங்க