Sunday, October 25, 2020

தூக்கமும் துக்கமும் - ஃபஜ்ர் தொழுகை

 #தூக்கமும்_துக்கமும்


10 நிமிடம் ஃபஜ்ர் தொழாமல் உறங்குபவர் - அந்த "10 நிமிட தூக்கம்" நிம்மதியை தரும் என்று நினைக்கின்றனர்.

இந்த பத்து நிமிட தூக்கம் துக்கத்தையே தரும். நிம்மதியைத் தராது.

மாறாக ஒருவர் 10 நிமிட தூக்கத்தை தியாகம் செய்து ஃபஜ்ர் தொழுதால் அந்த நாள் முழுக்க நிம்மதியாக இருப்பார். நல்ல மனநிலையோடு காணப்படுவார்.


உங்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின் பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், "இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது (நன்றாக உறங்கு)" என்று கூறி ஊதுகிறான். 


அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத்தூய்மை (உளூ) செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. 


அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1425.


அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம்

தூக்கத்தை விட தொழுகை மேலானது.

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...