Wednesday, August 13, 2025

இந்திய சுதந்திர போரில் இஸ்லாமும் இஸ்லாமியர்களும்

 இந்திய சுதந்திர போரில் இஸ்லாமும் இஸ்லாமியர்களும்




புத்தகம் டவுன்லோடு செய்ய

இந்திய சுதந்திர போரில் இஸ்லாமும் இஸ்லாமியர்களும்




செய்யது காமித்

இஸ்தப்ரக் பதிப்பகம்

6381653548





பாகம் 1 - இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த இஸ்லாமிய மார்க்கம்


இந்திய சுதந்திர போராட்டத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பங்கெடுத்தார்கள். 


எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களும் போராட்டக் களத்தில் நின்றார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


ஆனால் இதில் நாம் உணர்ந்து கொள்ளாத இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது என்னவென்றால்இ மனிதர்கள் சுதந்திரத்திற்காக போராடியது போன்று ஒரு மார்க்கமும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது. அதுதான் இஸ்லாமிய மார்க்கமாகும்.


இஸ்லாமிய மார்க்கத்தைப் போன்று வேறு எந்த மார்க்கமும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. அநனத அளவிற்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் இந்திய விடுதலைக்காக தனது பெரும் பங்கை செலுத்தியுள்ளது. 


அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


ஜும்ஆ தொழுகை


இஸ்லாமிய மார்க்கம் பருவ வயதை அடைந்த ஆண்கள் மீது ஜும்ஆ தொழுகையை கடமையாக்கியிருக்கிறது. 


வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிமான ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு வந்து குழும வேண்டும். 


அங்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட சொற்பொழிவுகள் நிகழும். அந்த உரையை கட்டாயமாக முஸ்லிம்கள் கேட்க வேண்டும். இது இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கியமான வழிமுறையாகும்.


முஸ்லிம்கள் இஸ்லாம் கடமையாக்கிய இந்த ஜும்ஆ தொழுகையை சுதந்திர விடுதலைக்காக பயன்படுத்தினார்கள். 


அன்றைய தினத்தில் இந்தியர்கள் சுதந்திர போராட்டத்தில் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் மக்களை பல விதங்களில் திசை திருப்புகின்றனர் திருப்பினார்கள். சுதந்திரத்தைப் பற்றி மக்களை யோசிக்க விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வரிகளை விதித்தார்கள். 


ஆங்கிலேயர்களின் இந்தச் சதிகளை முறியடித்து மக்கள் மனதில் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டே இருப்பது அன்றைக்கு மிகுந்த தேவையாக இருந்தது. அப்போது மிகவும் உதவி செய்த ஒரு காரியம் தான் ஜும்ஆ பிரசங்கம். 


அன்றைய தினத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் ஜும்ஆ பிரசங்கத்தில் உலமாக்கள் அனைவரும் இந்திய சுதந்திரத்தைப் பற்றிதான் பேசினார்கள். சுதந்திர வேட்கையை மக்கள் மனதில் ஜும்ஆ சொற்பொழிவின் மூலம் ஊட்டினார்கள். இது ஆங்கிலேயர்களுக்கு பெரிய குடைச்சலாக இருந்தது. 


அந்த வகையில் ஒருமுறை டெல்லியிலுள்ள ஜும்ஆ மசூதியில் அங்குள்ள உலமா ஒருவர் சுதந்திரத்தைப் பற்றி பிரசங்கம் நிகழ்த்தினார். மக்களெல்லாம் ஆர்வமாக அந்த உரையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அனைவருடைய கண்களிலும் சுதந்திர வெறி அனலாக எரிந்து கொண்டிருந்தது. இதைப் பாெறுக்க முடியாத ஆங்கிலேய அரசு பள்ளிவாசலுக்குள் அத்துமீறி துப்பாக்கிகளைக் கொண்டு முஸ்லிம்களை சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. 


இதில் ஏராளமான முஸ்லிம்கள் வீர மரணமடைந்தனர். 


முஸ்லிம்களின் உடலிலிருந்து தெரித்த ரத்தங்கள் அந்த பள்ளிவாசலின் சுவர்களில் ஒட்டிக்கொண்டன. 


இன்றும் அந்த ரத்தக்கறையை நாம் காணலாம். 


அதனால்தான் அந்த பள்ளிவாசலுக்கு இரத்தக் கறை படிந்த (கூனி) பள்ளிவாசல் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.


இந்திய சுதந்திரப் போரில் ஜும்ஆ பிரசங்கத்தின் பங்களிப்பு அளப்பறியது என்பதை இந்த சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.


ஜிஹாத்


ஜிஹாத் என்பது அநியாயத்திற்கும் அசத்தியத்திற்கும் எதிராக நடத்தப்படும் போராகும். இந்த ஜிஹாதிற்கு இஸ்லாம் மிகப்பெரும் அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. அநியாயத்திற்கு எதிராக போராடுவதை இஸ்லாம் முஸ்லிமின் மீது கடமையாக்கியிருக்கிறது. 


அந்த வகையில் அநியாயக்கார பாவிகளான ஆங்கிலேயர்களை விரட்டுவதில் இந்த ஜிஹாதும் முக்கிய பங்கை வகுத்திருக்கிறது. 


இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்கள் அன்றைய தினத்தில் 'ஆங்கிலேயர்களை எதிர்ப்பது ஜிஹாத்' என்று முழங்கினர். 


ஜும்ஆக்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜிஹாதில் பங்கெடுக்குமாறு முஸ்லிம்கள் அழைக்கப்பட்டனர். 


இந்த ஜிஹாத் என்ற வார்த்தை கொடுத்த உத்வேகம்தான் முஸ்லிம்களை சாரைசாரையாக சுதந்திர போரில் பங்கெடுக்க செய்தது. 


இந்த ஜிஹாதில் மரணித்தால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்று உலமாக்கள் கூறினார்கள். ஷஹீத் என்றால் எவ்வித கேள்வி கணக்குகளும் இல்லாமல் நேரடியாக சொர்க்கம் செல்வதை குறிக்கும்.  முஸ்லிம்கள் மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தாேடு வாழ்பவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெறம் சுதந்திர போரில் வீரமரணமடைந்தால் அவர் நேரடியாக சொர்க்கம் செல்வார் என்று கூறப்பட்டதும் ஏராளமான முஸ்லிம்கள் இந்திய விடுதலைக்காக தனது உயிரை காெடுக்க முன்வந்தனர். 


இந்திய சுதந்திர போரில் தங்களது சதவீதத்தை விட அதிகமாக பங்கெடுத்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களில் இந்த அளப்பெரிய தியாகத்திற்கு முக்கிய காரணம் ஜிஹாத் என்ற இஸ்லாமிய வழிமுறைதான். 

ஃபத்வா ஏற்படுத்திய பயம் 


இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு ஃபத்வா என்று சொல்லப்படும். 


ஃபத்வாக்கள் சட்டங்களுக்கு மூலமாக இருக்கும். 


மார்க்கத்தை நன்கு கற்றுஇ மார்க்க சட்ட விதிமுறைகளை பயின்றுஇ நிபுணத்துவம் பெற்ற உலமாக்கள்தான் ஃபத்வா வழங்குவார்கள். அதற்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். 


இந்த ஃபத்வாக்கள் சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக மிக முக்கிய பங்காற்றியது. 


முஸ்லிம் உலமாக்கள் ஃபத்வா வெளியிட்டிருக்கிறார்கள் என்று ஆங்கிலேயர்கள் கேள்விபட்டால் உடனே அது அவர்களின் வயிற்றில் புளியை கறைக்க ஆரம்பித்துவிடும். ஃபத்வாவை வாசிப்பதற்கு முன்னே பயம் அவர்களை கவ்விக்கொள்ளும். அந்த அளவிற்கு ஃபத்வாவைக் கண்டு பதறுபவர்களாக அன்றைய ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். 


ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஃபத்வா வெளிவரும்போது அது முஸ்லிம்களிடம் சுதந்திர உணர்ச்சியை மிகப்பெரிய அளவில் தூண்டிவிட்டது. 


இதனால் முஸ்லிம்கள் மிகவும் உக்கிரமாக போர் புரிய தொடங்கிவிடுவார்கள். இதுதான் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்திருந்தது. 


ஆகவே சுதந்திர போருக்கு வித்திட்டஇ அதை உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஃபத்வாக்களில் சிலவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.

முதல் பத்வா


இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களது காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காக வந்தபோது அவர்களை எதிர்த்து முதன்முதலில் மிகப்பெரும் போரை நடத்தியவர் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலா. இந்த போர் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் (1756-1763)  நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயர்கள் சில சதித்திட்டங்களை தீட்டி சிராஜ் உத் தௌலாவை வீழ்த்தி தங்களது காலனியாதிக்கத்தை இந்தியாவில் வலுவாக்கினர். 


அதன்பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்து மிகப்பெரும் எதிர்ப்பை காட்டியவர் முதல் விடுதலைப் புலி திப்பு சுல்தான். 


திப்பு சுல்தானின் இந்திய படைகளுக்கும் ஆஙகிலேயர்களுக்கும் இடையில் மைசூர் யுத்தம் நடைபெற்றது. நான்கு மைசூர் யுத்தங்கள் நடைபெற்றன. இதில் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரும் சேதத்தையும் உள்ளத்தில் மிகப்பெரும் பயத்தையும் திப்பு ஏற்படுத்தினார். இறுதியில் நான்காவது மைசூர் போரில் சில சதிச்செயல்களால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு 1799ல் வீரமரணமடைந்தார். 


திப்புவின் மரணத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் நாம் நிம்மதியாக இருக்கலாம். நாம் மிகப்பெரும் எதிர்ப்பை இனிமேல் சந்திக்கப் போவதில்லை. சிறு சிறு எதிர்ப்புகள்தான் கிளம்பும். அதை எளிமையாக அடக்கிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். 


அதன் அடிப்படையில் தங்களது காலனியாதிக்கத்தை இந்தியாவில் விரிவாக்கினர். அதன்பிறகு 1803ல் டில்லியை கைப்பற்றினார். 


அப்போதுதான் ஆங்கிலேயர்களின் நிம்மதியை கெடுக்கும் ஒரு காரியம் நடந்தது. அவர்களுக்கு தலைவலியை மட்டுமல்ல அவர்களது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது வலியை ஏற்படுத்தியது. 


‘இனிமேல் மிகப்பெரும் எதிர்ப்பை சந்திக்கமாட்டோம்’ என்று நினைத்தவர்களுக்கு மிகப்பெரும் பேரிடியாக அந்த காரியம் அமைந்திருந்தது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்களால் வெளியிடப்பட்ட ஃபத்வாக்கள்.


ஆங்கிலேயர்கள் டில்லியை கைப்பற்றிய அதே 1803ல் மௌலவி ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி அவர்கள் ஒரு ஃபத்வாவை வெளியிட்டார்கள். அந்த ஃபத்வாவில்இ


"டெல்லியில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அமர்ந்தது இந்தியாவை அசுத்தப்படுத்திவிட்டது. எனவே வெள்ளையர்களுக்கு எதிராக ஒவ்வொரு முஸ்லிமும் ஜிஹாது செய்ய வேண்டும். இல்லையெனில் ஹிஜ்ரத் செய்து நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இது முஸ்லிம்களின் மீது கடமை"


இந்த ஃபத்வா ஏற்படுத்திய தாக்கம் என்ன? 

இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக முஸ்லிம்களை எவ்வாறு செயல்பட வைத்தது? 


இதைப் பற்றி அமரேஸ் மிஸ்ரா என்ற எழுத்தாளர் தெரிவித்திருக்கிறார்.


அவர் கூறியதாவது : திருக்குர்ஆனை முதன்முதலாக உருதுமொழியில் மொழியாக்கம் செய்தவர் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி.  இவர்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை பெரும் மக்கள் திரள் போராட்டமாக மாற்றியமைத்தார். இதனை அவர் எப்படி செய்தார்? அவர் வெளியிட்ட தாருல் ஹர்ப் (விரோத பூமி) என்ற ஃபத்வாதான் இதற்கு காரணமாக அமைந்திருந்தது. எவ்வித மாச்சரியமுமின்றி ஆய்வு செய்தால் 1799ல் நிகழ்ந்த திப்பு சுல்தானின் வீரமரணம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சமஸ்தானங்களின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவந்ததென்றால் "ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி வெளியிட்ட ஃபத்வா காலனியாதிக்கத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டத்தை தொடங்கி வைத்தது" என்று உறுதியாக கூறலாம்.


பெரும் மக்கள் திரள் போராட்டத்திற்கு காரணமாக அமைந்ததே ஃபத்வாவினால்தான் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.


சிப்பாய் கலகத்திற்கு காரணமான ஃபத்வா


தாருல் உலூம் தேவ்பந்தை நிறுவிய மவ்லானா முஹம்மது காசிம் நானூத்தவிஇ மவ்லானா ரஷீத் அஹமது கங்கோஹிஇ ஹாபிழ் ஜமீன் சஹீத் போன்ற 34 இஸ்லாமிய உலமாக்கள் சேர்ந்து கையொப்பமிட்டு 1857ம் ஆண்டு ஒரு ஃபத்வாவை வெளியிட்டனர். 


இதில் அவர்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போர் புரிவதை வலியுறுத்தி எழுதியிருந்தனர். இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியது.  இதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரும் புரட்சி உக்கிரமாக நடைபெற்றது.


போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலும் உலமாக்கள் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக நிறைய கட்டுரைகளை எழுதினர். 


மவ்லவி பக்கர் அவர்கள் 'டெல்லி உருது அக்பார்' என்ற தனது இதழில்இ 'மாபெரும் அரசர்களான அலக்ஸாண்டர்இ செங்கிஸ்கான்இ ஹலாகு மற்றும் நாதிர் ஷா முதலியோர் காணாமல் போனதுபோல் ஒரு நாள் ஆங்கிலேயர்களும் காணாமல் போவார்கள்' என்று எழுதினார். இது வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வரவழைத்தது.


சிப்பாய்கலகத்தைப் பற்றி ஆங்கிலேய கேப்டன் ஜி.ஹக்கின்சன் குறிப்பிடுவதாவதுஇ 


"ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் எதிர்ப்புக்குரல் மதத்தூண்டுதல் (பத்வா) மூலமாக பைஸாபாத்தில் மவ்லவி ஒருவரால் எழுப்பப்பட்டது. ஆயுதம் தாங்கிய தமது ஆதரவாளர்களுடன் அந்த மவ்லவி நகரத்தில் நுழைந்தார். இந்த அஹமது அலி ஷா தாம் சென்ற இடங்களிலெல்லாம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்யும்படி மக்களைத் தூண்டினார்."


இந்த ஃபத்வாதான் சிப்பாய் கலகத்தை ஆரம்பித்தது என்பதை ஆங்கிலேய அதிகாரி தெரியப்படுத்துகிறார். இந்த சிப்பாய் கலகத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதில் 51இ200 பேர் உலமாக்கள்.  இதன்மூலம் உலமாக்கள் வெறுமனே ஃபத்வாவின் மூலமாக மக்களைத் தூண்டுவதோடு நில்லாமல் களத்தில் இறங்கி போரும் புரிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


ஒத்துழையாமை இயக்கத்திற்கு அடித்தளமிட்ட ஃபத்வா


1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லட்காமணபுரியிலுள்ள பரங்கி மஹல்லா மற்றும் தேவ்பந்த் மதரஸா முதலிய மதரஸாக்களில் பணிபுரிந்து ஐந்நூறு உலமாக்கள் கையொப்பமிட்டு ஒரு ஃபத்வாவை வெளியிட்டனர். அதில்இ


'ஆங்கிலேய அரசாங்களுடன் ஒத்துழைப்பதும். அவர்களுடன் நேசம் கொள்வதும் ஹராம் (தடைசெய்யப்பட்டது). (அவர் நடத்தும்) பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை (பர்ளு அய்ன்). வக்கீல் தொழிலை நடத்துவது தடுக்கப்பட்டவை. கொளரவ பட்டங்களை ஏற்றுக்கொள்வது காபிர்களின் செயல். கிலாபத் இயக்கத்தில் சேராதவர்கள் போர்க்களத்திலிருந்து புறங்காட்டி ஒடுபவர்களுக்கு சமமாக கருதப்படுவார்கள். மேலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிராலும் பொருளாலும் போராடுவது மார்க்கத்தின் அடையாளம் ஆகும்'.


இந்த ஃபத்வா வெளிவந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் தங்களது அரசாங்க பதவிகளை துறந்தனர். பலர் தங்களது படிப்புகளை பாதியிலேயே நிறுத்தினர். பலர் தங்களது கவுரவ பட்டங்களை ஆங்கிலேயரிடமே திருப்பி காெடுத்தனர். ஒத்துழையாமை இயக்கத்தை ஒழுங்காக கடைபித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று கூறுமளவுக்கு முஸ்லிம்கள் இதை சிறப்பாக செய்து காட்டினர்கள். 


இது ஆங்கிலேயர்களுக்கு பெரிய குடைச்சலாக அமைந்தது. ஆகவே ஆங்கிலேய அரசு இந்த ஃபத்வா வெளியிட்ட உலமாக்களை கைது செய்தது. ஏராளமான முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். 


இவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தின் ஜும்ஆத் தொழுகைஇ ஜிஹாத் மற்றும் ஃபத்வா போன்ற வணக்க வழிபாடுகள் சுதந்திர போராட்டத்தை மும்முரமாக முன்னின்று நடத்தியது. 


இதிலிருந்து இஸ்லாமிய மார்க்கம் சுதந்திர போரில் எந்த அளவிற்கு பங்கெடுத்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.


பாகம் 2 - சுதந்திர போரில் இஸ்லாமியர்கள்


ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் முண்ணனியில் நின்றார்கள். அவர்கள் தங்களது சதவீதத்தைவிட அதிகமாகவே சுதந்திரத்திற்காக உழைத்திருக்கிறார்கள். 


எவ்விதமான அடக்குமுறையோஇ ஆசைவார்த்தைகளோ அவர்களை போராட்டங்களிலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. 


சிறுவர் முதல் பெரியவர் வரைஇ சாதாரணமானவர்கள் முதல் மவுலானாக்கள் வரை அனைவரும் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த தியாகத்தின் பயனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.


ஆங்கிலேய நீதிமன்றத்தில் முஸ்லிம் விடுதலை போராட்ட வீரர்களின் விடுதலை முழக்கம்…


இந்திய சுதந்திரத்திற்காக போராடிய இஸ்லாமியர்களின் தியாகங்கள் குறித்து எண்ணற்றப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.


எக்கச்செக்கமான இஸ்லாமியர்கள் இந்திய மண்ணிற்காக தங்களது இன்னுயிரை ஈந்தார்கள். 


அத்தகைய தியாகச் சீலர்களில் இருவர் நீதிமன்றங்களில் மொழிந்த சுதந்திர முழக்கத்தை இப்பகுதியில் காண்போம்.


மவுலானா முஹம்மது அலி


மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரராக மவுலானா முஹம்மது அலி அவர்கள் திகழ்ந்தார்கள்.  


அதனால்தான் காந்தியடிகள்இ முஹம்மது அலியை சிங்கம் என்று வர்ணித்தார்கள். 


'எனது தோளின் மீது இரண்டு சிங்கங்கள் (மவுலானா முஹம்மது அலிஇ மவுலானா சவுக்கத் அலி) இருக்கின்றன' என்ற காந்தியின் கூற்று மவுலானா முஹம்மது அலியின் புகழை பறை சாற்ற போதுமான ஆதாரமாகும். 


முஹம்மது அலி பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியிருக்கிறார்கள். அஞ்சா நெஞ்சம் கொண்டவராக எதற்கும் துணிந்தவராக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றார்கள்.


1921 ஜீலை 8 அன்று கராய்ச்சியிலுள்ள ஈத்காஹ் மைதானத்தில் (ஒருங்கிணைந்த இந்தியா) மவுலானா முஹம்மது அலி தலைமையில் கிலாபத் இயக்கம் நடைபெற்றது. 



21-07-1921 அன்று அம்மாநாட்டில் பேசிய மவுலானா முஹம்மது அலியின் வீரவேசப் பேச்சுக்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வெள்ளையர்களை வெலவெலக்கச் செய்தது. ஏனெனில் அம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரின் நாவுகளிலிருந்தும் ஒத்துழையாமைஇ அகிம்சை என்ற கீதங்கள் வெளிவந்துகொண்டிருந்தது. இது பிரிட்டிஷாரின் உள்ளங்களை பிணி கொள்ளச் செய்தது. இந்த மாநாட்டின் மூலம் அலி சகோதரர்களின் புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.


இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் மவுலானா முஹம்மது அலியை கைதுசெய்தனர். 1921 அக்டோபர் 26ல் இவ்வழக்கு கராச்சி மாஜிஸ்ரேட்டில் விசாரணைக்கு வந்தது.  கோர்ட் ஹாலைச் சுற்றிலும் முள் கம்பி வேலி போடப்பட்டது. நான்கு பக்கங்களிலும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் மற்றும் இராணுவ சிப்பாய்கள் நின்றிருந்தனர். கோர்ட் வளாகத்திற்குள் 250 இந்திய சிப்பாய்களும் 250 ஆங்கில சிப்பாய்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையம் அமைக்கும் அளவிற்கு மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரராக அவர் விளங்கினார்.


காவல் துறையினர் மவுலானா முஹம்மது அலியையும் அவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் போலிஸ் வாகனத்தில் வைத்து கொண்டு வந்தனர். போலிஸ் வாகனம் சாலையில் வந்த போது வழிநெடுக நின்றுகொண்டிருந்த மக்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்கினர். அந்த முழக்கம் விண்ணைப் பிளந்தது. மவுலானா முஹம்மது அலி மிகப்பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரும் ஆதாரம்.


மவுலானா ஒரு கையில் திருக்குர்ஆனையும் மறு கையில் பேனாவையும் ஏந்திக்கொண்டு சிங்கம் போன்று கம்பீரமாக நீதிமன்றதிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் அமரும் வரை நீதிமன்றத்திந்குள் இருப்பவர்கள் யாரும் அமரவில்லை. அவர்கள் தனது ஆசனத்தில் அமர்ந்ததற்குப் பிறகே மற்றவர்கள் அமர்ந்தார்கள். இது மவுலானா மீது மற்றவர்களுக்கு இருந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது.


பிறகு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அதில் மவுலானா பேசிய வீரமிகு பேச்சுக்களில் சிலஇ


“கனவான்களேஇ நீதிபதி எங்களுக்கு ஆயள் தண்டனையோஇ தூக்கு தண்டனையோ அல்லது சிறை தண்டனையோ இவற்றில் ஏதாவதொன்றை அளிப்பார். நான் எனக்காகவும் எனது நண்பர்களுக்காகவும் எதிர் வழக்காடி இவைகளிலிருந்து தப்ப முயற்சித்தால் அது அறவே மன்னிக்க முடியாததாகவே இருக்கும்.


 “எங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைத்தாலும்இ உங்களது தண்டனை சட்டத்தின் எந்த பிரிவின் கீழும் தண்டனை வழங்கப்பட்டாலும் எனக்கு பரவாயில்லை. உங்களது தண்டனை சட்டத்தின் பிரிவுகளுக்குத்தான் குறைச்சலில்லையே. 234இ 235இ 236இ 239இ 123யுஇ 131இ 109இ 505இ 117 ஆகிய ஏராளமான பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகள் எல்லாத்தையும் சேர்த்து எனக்கு எத்தனை வருடங்கள் தண்டனை கிடைக்கும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த ஆயுள் ஒன்றுதான் உள்ளது. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின்படி எனக்கு தண்டனை கிடைத்தால் அத்தனை வருடங்களுக்கும் என் ஆயுள் போதுமா? என்பது எனக்கு விளங்கவில்லை.


மேலும் மவுலானா நீதிமன்றத்தில் பேசும் போதுஇ எனக்கு தரவிருக்கும் தண்டனையை விலக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு சிறைச்சாலைதான் வாசற்படியாகும். பிரிட்டிஷாருக்கு எதிராக யுத்தம் புரிந்ததற்காக நான் தூக்கிலிடப்பட்டால்இ (அந்நியருக்கு எதிராக போரிடுவதுதான்) எனது சட்டம். அதுதான் என் உரிமை என்று நான் சொல்வேன். தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் என் பிரேதம்கூட அதையே கூறுமென நான் நம்புகிறேன். ஆகவே கனவான்களே ஆயள் தண்டனையிலிருந்து என்னை விடுவிக்க எண்ணம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு இறைவன்மீது நம்பிக்கை இருக்குமானால் உங்களது மனசாட்சிப்படி தீர்ப்பளியுங்கள்.


மேற்கண்ட வாதங்களின் மூலம் மவுலானா முஹம்மது அலி மிகப் பெரும் வீரர் என்பதை அறிந்து கொள்ளலாம். நீதிமன்றங்களின் சட்டங்களை நீதிமன்றத்தில் வைத்தே தைரியமாக கேலி செய்கிறார்.  அவர்கள் உருவாக்கிய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளை அவர்கள் முன்னிலையிலேயே எள்ளி நகையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் இந்திய சுதந்திரத்திற்காக தனது உயிரை துச்சமாக கருதியிருக்கிறார். அதனால்தான் தனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள்? என்று அறைகூவல் விடுக்கிறார். இந்திய சுதந்திரத்தின் வாசற்படியே சிறைச்சாலைதான். அதனால் என்னை விடுதலை செய்யாதீர்கள் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் என்றால் அவரது உள்ளத்தில் சுதந்திர வேட்கை எந்தளவிற்கு ஊறிப்போயிருக்கும்.


கைர் முஹம்மது


ஒருங்கிணைந்த இந்தியாவின் சிந்து மாகாணத்தில் மக்கள் கூடும் ஒரு தெருமுனையில் சிறுவன் ஒருவன் வீரமாக பேசிக்கொண்டிருந்தான். அந்த சிறுவனின் வயது பதினொன்று. பெயர் கைர் முஹம்மது. வயதோ சிறியதுஇ ஆனால் அவனது உரையைக் கேட்க கூடிய கூட்டடேமா மிகப்பெரிது. அவனது பேச்சு மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை பொங்கியெழச் செய்தது. நாடி நரம்புகள் புடைக்க அவன் பேசுவதை மக்கள் நகராமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சிறுவன்தானேஇ இவன் என்ன செய்துவிடப் போகிறான் என்றெண்ணிய ஆங்கிலேயர்கள் அவனது பேச்சினால் மக்கள் எழுச்சியுறுவதை கண்டதும் சீறிப்பாய்ந்தார்கள். சிறுவனின் கையில் விலங்கினைப் பூட்டி அவனைக் கைது செய்தார்கள்.


இந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. வழக்கு கூண்டில் சிறுவன் கைர் முஹம்மது கொண்டு வந்து நிறுத்தப்படுகிறான். கைர் முஹம்மதைவிட வழக்குக் கூண்டு பெரிதாக இருந்தது. வழக்குக் கூண்டிற்குள் எட்டிப்பார்த்தால்தான் கைர் முஹம்மதுவின் தலை தெரியும். அந்த அளவிற்கு சிறியவனாக கைர் முஹம்மது இருக்கிறான். அங்கு நடந்ந உரையாடல் இதோஇ


நீதிபதி : உன் பெயர் என்ன?


கைர் முஹம்மது : என் பெயர் ஆசாத்.


(நீதிபதி வழக்கு விவரங்கள் அடங்கிய அறிக்கையை உற்றுப்பார்க்கிறார். அதில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் கைர் முஹம்மது என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் கூண்டுக்குள் இருக்கும் சிறுவனோ தனது பெயர் ஆசாத் என்று கூறுகிறான். நீதிபதிக்கு பலத்த சந்தேகம். ஒருவேளை ஆளை மாற்றி கொண்டு வந்துவிட்டார்களோ என்ற குழப்பத்தோடு அடுத்த கேள்வியை கேட்கிறார்.


நீதிபதி : குற்றப்பத்திரிக்கையில் உனது பெயர் கைர் முஹம்மது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே!.


கைர் முஹம்மது : கைர் முஹம்மது என்பது இந்த உலகம் எனக்கு வழங்கிய பெயர். ஆனால் ஆசாத் என்பது என் உணர்வின் பெயர்.


(ஆசாத் என்றால் விடுதலை என்று அர்த்தம். இந்தியா விடுதலைப் பெற வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுவதால் தனது பெயரை ஆசாத் (விடுதலை) என்று நீதிமன்றத்தில் கைர் முஹம்மது முழுங்குகிறான். எவ்வளவு துணிச்சல் பாருங்கள். இச்சிறுவனுக்கு இந்திய விடுதலையின் மீது எவ்வளவு பெரிய வேட்கை இருந்திருந்தால் யாருக்கும் பயப்படாமல் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியிருப்பான்?)


நீதிபதி : உன் தந்தையின் பெயர் என்ன?


கைர் முஹம்மது : (வழக்கு கூண்டின் இரு முனைகளையும் இறுக்கிப் பிடித்து கம்பீரமாக நின்றுகொண்டு) இஸ்லாம்.


நீதிபதி : (எரிச்சலுடன்) நீ எந்த ஜாதியை சேர்ந்தவன்.


கைர் முஹம்மது : நான் ஒத்துழையாமை ஜாதியை சேர்ந்தவன்.


(இச்சிறுவன் ஒத்துழையாமை இயக்கத்தை வெறும் வாயளவில் சொல்லவில்லை. அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான். ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்பதை நீதிமன்றத்திலேயே தனது எடுக்குமடக்கான பதிலின் மூலம் செய்துகாட்டியிருக்கிறான். இதனால் நீதிபதி கடுமையாக கோபமுறுகிறார். என்னடா இது! கேட்ட எல்லா கேள்விகளுக்கும் எடுக்குமடக்காகவே இச்சிறுவன் பதிலளிக்கிறானே என்று சினம் கொள்கிறார்)


நீதிபதி : நீ என்ன வேலை செய்கிறாய்? உன் தொழில் என்ன?


கைர் முஹம்மது : எனது நாட்டில் புகுந்து எங்களை அடிமைப்படுத்த நினைக்கும் அந்நியர்களை விரட்டும் தொழிலை செய்கிறேன். அதை புரட்சி என்று கூட சொல்லலாம்.


நீதிபதி : நீ செய்யும் தொழில் குற்றத்திற்குரியது என்பது உனக்குத் தெரியுமா?


கைர் முஹம்மது : நான் எனது நாட்டில் புகுந்துள்ள அந்நியரை விரட்ட முயல்கிறேன். இது எப்படி குற்றமாகும்? இதை குற்றமாக நான் கருதவில்லை.


நீதிபதி : உனக்கு பிணைத்தொகை தந்து உன்னை வீடுதலை செய்வதற்கு யாராவது தயாராக இருக்கிறார்களா?


கைர் முஹம்மது : ஆம் இருக்கிறார்கள்.


(இப்போது நீதிபதியின் முகத்தில் நிம்மதி பெருமூச்சு. நல்லவேளை இந்த கேள்விக்காவது ஒழுங்காக பதிலளித்தானே என்று ஆசுவாசப்படுகிறார். சிறுவன் யாரை கூறுவான் என்று ஆவலோடு அவனைப் பார்க்கிறார்)


கைர் முஹம்மது : அது என்னைப் படைத்த அல்லாஹ்தான். அவன்தான் எனக்கு பிணைத் தொகை தருவான்.


(நீதிபதி கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்)


நீதிபதி : நீ உன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டால் உன்னை விடுதலைச் செய்ய சொல்லி உத்தரவிடுவேன். மன்னிப்புக் கேட்கிறாயா?


கைர் முஹம்மது : குற்றமே செய்யாத நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் செய்தது எனது உரிமையை நிலைநாட்டும் கடமையை. நான் என் கடமையைத்தான் செய்தேன். நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.


இதன் பின்னர் கைர் முஹம்மதை வெளியே விட்டால் தங்களது அரசிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு பதினோரு வயதான சிறுவனிற்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது.


ஒரே ஒரு வார்த்தைதான். மன்னிப்பு என்று மட்டும் கேட்டால் போதும். சிறைச்சாலை கிடையாது. வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரியலாம். சொந்தபந்தங்களோடு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் கைர் முஹம்மது மன்னிப்பு கேட்கவில்லை. தன்னுடைய சுதந்திரத்தைவிட நாட்டின் சுதந்திரம்தான் முக்கியம் என்று அவன் நினைத்தான். தான் சிறையில் வாடிப்போனாலும் நம் நாடு நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். இந்திய சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை அடைமானம் வைத்தான் அச்சிறுவன். அச்சிறுவனை நினைவு கூர்வது ஒவ்வொரு இந்தியனின் மீது கடமையாக உள்ளது.




பாகம் 3 - தற்காலத்திய இஸ்லாமியர்களின் நிலை


இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து இந்தியாவை சுதந்திரமடையச் செய்வதற்காக தங்களது சதவீதத்தையும்விட அதிகமாக போராடியவர்கள் இஸ்லாமியர்கள்.


பறிக்கப்படும் சுதந்திரம்


இன்று இந்தியா சதந்திரமாக இருக்கிறது. ஆனால் சுதந்திரத்திற்காக போராடிய இஸ்லாமியர்களின் சுதந்திரமோ கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது.


எங்கே ஆடை சுதந்திரம்?


தற்போதைய பாஜக ஆட்சியில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு தாங்கள் விரும்பிய ஆடையை அணிந்து செல்வதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது.


பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மற்ற மதத்தினர் தங்களது மத அடையாளமான பொட்டுஇ கயிறுஇ விபூதி போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அவர்களது மத அடையாளங்களுடன் செயல்பட சதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 


ஆனால் இஸ்லாமியர்களுக்கு இத்தகைய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை தடுக்கிறார்கள். அவர்களது ஆடை சுதந்திரத்தை பறிக்கிறார்கள்.


எங்கே உணவு சுதந்திரம்?


ஒவ்வொரு மதத்தினரும் தாங்கள் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இத்தகைய சுதந்திரம் வழங்கப்படவில்லை. 


மாட்டுக்கறியை உண்பதற்குண்டான சுதந்திரம் சில நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படுகிறது. மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி அஹ்லாக் என்ற முதியவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். அவர் வைத்திருந்தது மாட்டுக்கறி இல்லை என்பது தனி விஷயம். 


காந்தி ஜெயந்தி அன்று மாட்டுக்கறி விற்பதற்கு தடை செய்யப்படுகிறது. இவ்வாறு இஸ்லாமியர்களின் உணவு விஷயத்தில் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது. 


எங்கே இருப்பிடத்திற்கான சுதந்திரம்?


இஸ்லாமியர்களின் இருப்பிடத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக சிஏஏஇ என்ஆர்சிஇ என்பிஆர் போன்ற சட்டங்கள் ஏற்படுத்தப்படுகிறது. 


என்ஆர்சியில் சில கடினமாக கேள்விகளை ஏற்படுத்தி குடியுரிமையை நிரூபிக்க சொல்கிறார்கள். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும். அதில் இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விதமாக சிஏஏ என்ற சட்டம் உள்ளது.


ஆக இதிலிருந்து இஸ்லாமியர்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களது இருப்பிடத்திற்கான சுதந்திரம் இதன்மூலம் பறிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உபியில் யோகி அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து இடித்துவருகிறது. 


வீடு கட்டுவதற்குக்கூட சுதந்திரம் மறுக்கப்படுவது மிகுந்த கவலைக்குரியது.


இவ்வாறு மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவுஇ உடைஇ இருப்பிடம் ஆகிய மூன்றின் சுதந்திரமும் பறிக்கப்படுகிறது. 


இப்படிப்பட்ட அத்தியாவசிய சுதந்திரத்தை பறிகாெடுக்கத்தான் எமது முன்னோர்கள் உயிரையும் உடமையையும் தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றுத்தந்தார்களா? என்ற கேள்வி சுதந்திர தினத்தில் மக்கள் உள்ளத்தில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.


வரலாற்று சோகம்


‘இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தர வேண்டும்’ என்பதற்காக போராடி தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களை கவனிப்பது இந்தியாவின் கடமையாகும். ஆனால் இன்று நிலை அப்படி இல்லை.


இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டு இரண்டு மகான்களின் மகன்கள் கேட்பாரற்று விடப்பட்டுள்ளார்கள். அவர்கள் குறித்து இராமகிருஷ்ணன் தனது மனக் கவலையை வெளிப்படுத்துகிறார்.


இராமக்கிருஷ்ணன் எழுதியதாவது :


வரலாற்று சோகம் என்ற வார்த்தையை இன்று நாம் எளிதாக பயன்படுத்துகிறோம். நம் வரையில் அது ஒரு சொல் மட்டுமே. ஆனால்இ தன்னை பலி காெடுத்து வரலாற்று சோகத்திற்கு ஆளானவர்கள் பற்றி நாம் அதிகம் அக்கறை காெள்வது இல்லை. 


அந்த வகையில் இரண்டு சம்பவங்கள் என் மனதில் அழியாச் சுடரென எரிந்து காெண்டே இருக்கின்றன. 


ஒன்று.... மருது சகோதரர்கள் கொல்லப்பட்டுஇ வெள்ளைக்காரர்களால் பினாங்கு நாடு கடத்தப்பட்ட சின்னமருதுவின் மகன் துரைச்சாமியின் வாழ்க்கை. 


இரண்டு... 3.3 கோடி வராகன்கள் இழப்பீட்டுத் தொகை தரும் வரைஇ பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டுச் சென்ற திப்பு சுல்தானின் பிள்ளைகள் அப்துல் காலிக் மற்றும் மொய்சுதீனின் பிணைய வாழ்க்கை....


திப்புவின் மரணத்திற்கு பிறகு அவரது பிள்ளைகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். 


இன்று திப்புவின் சந்ததிகளில் ஒருவர் கல்கத்தாவில் ஆட்டோமொபைல் ஷாப் நடத்துகிறார் என்ற செயதியை ஒருமுறை பத்திரிக்கையில் வாசித்தேன். 


ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீழ்ந்த திப்புவின் வாரிசுகள் அடையாளம் அற்றவர்களாக ஆக்கப்பட்டு காலத்தில் கரைந்து போய்விட்டார்கள். 


ஆதாரம் : "எனது இந்தியா" - எஸ் ராமகிருஷ்ணன்.


திப்புவின் சந்ததிகள் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவிக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் திப்பு சுல்தானையே அடையாளமற்றவராக மாற்ற முயற்சி செய்கிறது பாஜக அரசு. 


கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திப்பு சுல்தான் நினைவு தினம் கொண்டாட்டத்தை ரத்து செய்தது. 


அதேபோல்இ சுதந்திர போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைப் புரிந்த வீர தீரர்களின் சாகசங்கள் நம் பிள்ளைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதுதான் அடுத்த தலைமுறையினருக்கு நம் நாட்டின்மீதான பற்றை கொடுக்கும். ஆனால் இந்த நடைமுறையிலும் மோசமான நடவடிக்கையை மேற்கொள்கிறது பாஜக. சுதந்திர போராட்டத்தில் புலியாக செயல்பட்ட திப்பு சுல்தானின் வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு முயன்று வருகிறது கர்நாடக பாஜக அரசு.


ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கு பெறுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அலங்கார ஊர்திகள் ஒன்றிய அரசிற்கு அனுப்பப்படும். தற்போதுள்ள பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாடுஇ கேரளாஇ மேற்குவங்கம் போன்ற மாநிலத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்து கர்நாடக ஊர்தியை மட்டும் அங்கீகரித்திருக்கிறது. 


கர்நாடக அலங்கார ஊர்தியில் மைசூர் மாவீரன் திப்பு சுல்தான் இடம்பெறவில்லை. மைசூருக்கு பெருமை சேர்த்தவர் திப்பு சுல்தான். இந்திய சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம் செய்தவர். ஆங்கிலேயரை ஓடஓட விரட்டிய மாவீரன். மக்களிடத்தில் கருணையோடு நடந்த கண்ணியவான். கர்நாடக அரசு அலங்கார ஊர்தியில் அவரை புறக்கணித்திருப்பது நன்றியற்ற செயல்.


அரசான பாஜக ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்ட சாவர்க்கருக்கு ஒன்றிய மரியாதையைக்கூட ஆங்கிலேயரிடம் மண்டியட மறுத்த மாவீரன் திப்பு சுல்தானிற்கு வழங்காதது இந்தியாவிற்கு மாபெரும் இழுக்கு.


"திப்புவின் தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றிருந்தால் இந்தியா என்றைக்கோ விடுதலை பெற்றிருக்கும்" - காந்திஜி யாங் இந்தியா. திப்பு சுல்தானின் பெருமையை பறைசாற்றுவதற்கு காந்திஜியின் இந்த ஒரு வாக்கியமே போதுமானதாகும்.


இவ்வளவு முக்கியமான ஒருவரை வரலாற்றில் இருந்து எடுக்க நினைப்பது வரலாற்று சோகம் மட்டுமல்ல வரலாற்று துரோகமும் கூட. அப்படிப்பட்ட துரோகத்தைதான் பாஜக செய்து வருகிறது. 


உதவி நூல்கள் :

விடுதலைப் போரில் வீரமிகு உலமாக்கள் - பேராசிரியர் எச்.ஜவாஹிருல்லாஹ்.

கிலாஃபத் இயக்கம் - செ. திவான்

உதவி நூல்கள் : இந்திய சுதந்திர போரில் இரு சகோதரர்கள் - வரலாற்றாய்வாளர் செ.திவான்

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட உண்மைகள் - அதிரை. இப்ராஹீம் அன்சாரி ஆ. ஊழஅ


Saturday, August 9, 2025

இஸ்லாமும் வக்ஃபும்

 இஸ்லாமும் வக்ஃபும்





புத்தகம் டவுன்லோடு செய்ய

இஸ்லாமும் வக்ஃபும்

செய்தது காமித்

6381653548

இஸ்தப்ரக் பதிப்பகம்











பாகம் 1 - வக்ஃப் என்றால் என்ன?


வக்ஃப் என்பது ஒரு அறபு வார்த்தை. ஆகவே அதற்கு மொழியியல் ரீதியாக என்ன அர்த்தம் உள்ளது என்பதையும் மார்க்கத்தில் அதற்கான அர்த்தம் என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


மொழியியல் ரீதியான அர்த்தம்


வக்ஃப் என்ற அறபு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு தொடர்புடையதாக உள்ளது.


அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


நிறுத்து


வக்ஃபு என்பது கிஃப் என்ற அரபிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். 'கிஃப்' என்றால் 'நிறுத்து' என்று பொருள்படும். 


அதாவது ஓடக்கூடிய ஒன்றை நிறுத்துவதை கிஃப் என்ற வார்த்தை குறிக்கும்.


சாலைகளில் நில்இ கவனிஇ செல் என்று மூன்று வண்ணங்களில் சிக்னல் வைத்திருப்பார்கள். 


அறபு தேசங்களில் நில் குறிக்கும் சிகப்பு நிறத்திற்கு கஃப் என்று எழுதி வைத்திருப்பார்கள். அதாவது ஓடக்கூடிய வாகனத்தை நிறுத்துவது அதற்கு அர்த்தமாகும்.


அல்லாஹ்வும் இந்த அர்த்தத்தை தனது திருமறையில் பயன்படுத்தியிருக்கிறான்.


மஹ்ஷர் பெருவெளியில் நடைபெறும் அமளிதுமளிக்கு மத்தியில் விசாரணை நடத்துவதற்காக மனிதர்களை ஓரிடத்தில் நிறுத்தி வைக்குமாறு அல்லாஹ் மஹ்ஷர் பெருவெளியில் கட்டளையிடுவான். அதுபற்றி அவன் கூறும் போதுஇ


وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ⭘ 


அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்”. (என்று கூறுவான்)


அல் குர்ஆன் - 37 : 21இ22இ23இ24


கிஃப் என்ற மூலத்திலிருந்து பிறந்த வகிஃபூ (நிறுத்தி வையுங்கள்) என்ற வார்த்தையைத்தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.


அதைப்போல் விசாரணை முடிந்த பின் நரகத்திற்குரியவர்கள் நரகத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள். அவர்களைக் குறித்து இறைவன் கூறும்போதுஇ


மற்றும் بِـَٔايَـٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ⭘ 


நரகத்தின் முன்பு அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்த்தால்இ “நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! பொய்யெனக் கூறாமல் இறைநம்பிக்கையாளர்களாக ஆவோமே!” என்று கூறுவார்கள்.


அல் குர்ஆன் - 6 : 27


நரகவாசிகள் நரகத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு உகிஃபூ என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதுவும் கிஃப் என்ற வேர்ச்சொல்லிவிருந்து பிறந்ததுதான்.


ஆக இதிலிருந்து வக்ஃப் என்பதற்கு நிறுத்தி வைத்தல் என்ற பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


சொத்தைப் பொறுத்தவரை அது பல நபர்களிடம் கைமாறும் உள்ளது. அந்த கைமாறுதலைத் நிறுத்துவதைத்தான் வக்ஃப் என்ற சொல் குறிக்கிறது. 


வக்ஃப் என்ற சொல்லிற்கு 'நிலைக்குக் கொண்டு வருதல்' என்ற பொருளும் உண்டு. 


அதாவது கைமாறும் தன்மையுடைய சொத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து அந்த பயனை மக்களுக்குக் காலகாலமும் தரும் ஒரு நடைமுறைதான் 'வக்ஃபு' ஆகும்.


வக்ஃப் என்பதன் நேரடிப்பொருளில் ஒன்று 'தடுத்து வைத்தல்' என்பதாகும்.


அதாவது வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களை பிறருக்கு விற்கவோ அல்லது நன்கொடையாக வழங்கவோ முடியாது. இவ்வாறு ஒரு சொத்தை பிறர் உடமையாக்குவதை தடுத்து வைப்பதால் இதற்கு வக்ஃப் என்ற பெயர்.


இதற்கு 'தங்குதல்' என்ற பொருளும் உண்டு


இதுபற்றி இந்தியாவின் வக்ஃப் வாரியத் தலைவராக செயல்பட்ட ஜாவீத் அகமது கூறினார்" வக்ஃப் என்பது ஒரு அரபு வார்த்தை. இதன் பொருள் தங்குதல் என்பதாகும். அல்லாஹ்வின் பெயரால் ஒரு சொத்து வக்ஃப் செய்யப்படும்போதுஅது என்றென்றும் அல்லாஹ்வின் பெயரிலேயே தங்கி இருக்கும். பின்னர் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது."


இந்திய உச்சநீதிமன்றம் 1998 ஜனவரியில் வழங்கப்பட்டது அதன் தீர்ப்பில் 'ஒரு சொத்து வக்ஃப் ஆனவுடன்இ அது என்றென்றும் வக்ஃபாகவே இருக்கும்' கூறியது. 


ஆகவே வக்ஃப் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அல்லது யாருக்கும் மாற்றவோ முடியாது என்பதை இந்திய உச்சநிதிமன்றமும் உறுதி செய்துள்ளது.


மார்க்க அடிப்படையில் வக்ஃப் என்பதற்கான வரைவிலக்கணம்


வக்ஃப் என்பதற்கு பல்வேறு மார்க்க அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளார்கள். அவற்றில் சிறந்ததாக இமாம் அபூஸஹ்ரா கூறியது அமைந்துள்ளது.


இமாம் அபூ ஸஹ்ரா (அல்லாஹ் அவர்கள் மீது கருணை காட்டட்டும்) அவர்கள் வக்ஃபிற்கான வரையறை: ஒரு சொத்தை (பிறருக்கு விற்க முடியாதவாறும்இ) நன்கொடை வழங்க முடியாதவாறும்இ வாரிசுரிமையாக மாற்ற முடியாதவாறும்) நிறுத்தி வைத்து அதன் பலன்களைப் பகிர்ந்தளிப்பதுஇ அல்லது ஒரு சொத்தின் வருவாயிலிருந்து பெறப்படுவதை தர்மம் செய்வதற்காக அந்த சொத்தை நிறுத்தி வைத்தல்" என்று கூறியுள்ளனர்.


இந்த வரையறையின் சாராம்சமாவது : 


விற்பனை செய்தல்இ அடைமானம் வைத்தல் அல்லது நன்கொடை மூலம் மற்றும் பரம்பரை மூலம் மாற்ற முடியாத வகையில் நிறுத்தி வைக்கப்படும் சொத்துதான் வக்ஃப் ஆகும். இதன் மூலம் பெறப்படும் நன்மையைப் பொறுத்தவரையில் நன்கொடையாளர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப அறக்கட்டளை நிறுவனங்களுக்கு செலவிடப்படுகிறது.


மற்ற வரையறைகளைவிட இந்த வரையறை சிறந்ததாக உள்ளது. இதற்கு ஆதாரமாக உமர் ரலி தொடர்பான சம்பவம் அமைந்துள்ளது. (பார்க்க புகாரி 2737)


ஆகவே இஸ்லாமிய மார்க்கத்தில் வக்ஃப் என்பது அல்லாஹ்வின் பெயரால் அல்லது மார்க்க நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துகள் அனைத்தையும் குறிப்பனவாகும்.


அந்தவகையில் வக்ஃபு ஏற்படுத்துபவர் முதன் முதலில் அச்சத்தில் தன் உரிமையை முழுமையாக இழந்து விடுகிறார். அதன் பின்னர் அச்சொத்துரிமை அல்லாஹ்வுக்கு அளிக்கப்படுகிறது. அச்சோத்தின் பயன் மனித சமுதாயத்திற்காகவும்இ மார்க்க சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.


இதிலிருந்து வக்ஃபு செய்யப்பட்ட சொத்தின் உரிமை மாற்றமும் சொத்துரிமை பாத்தியமும் தடுக்கப்பட்டுஇ வக்ஃபு சொத்து அல்லாஹ்வுக்குரியதாக அர்ப்பணிக்கப்பட்டது காலந்தொறும் மக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ்வுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட சொத்தைஇ அதனை அளித்தவர் திரும்பப் பெறமுடியாது.


இந்தச் சொத்து அமைப்பு இஸ்லாமிய சமூகத்தின் நன்மைக்காக இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது இஸ்லாமிய சமூகத்தின் ஓர் அங்கமாக திகழும். 


பாகம் 2 - வக்ஃபின் வகைகள்


பொறுப்பாளர் அடிப்படையிலான வகைகள்


வக்ஃப் சொத்துக்கான பொறுப்பாளர் யார்? இதை பொறுத்து வக்ஃப் இருவகைப்படும். 


1) குடும்ப வக்ஃப்


அதாவது தனது ஒரு சொத்திலிருந்து வரும் வருமானம் முழுக்க அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் வழங்கப்படும் என்றும் அந்த சொத்து தனது பெயரிலும் தனது மரணத்திற்குப் பிறகு தனது பிள்ளைகளின் பெயரிலும் இருக்கும் என்றும் வக்ஃப் செய்கிறார். இந்த சொத்தின் உரிமை அவரது சந்ததிகளின் பெயரிலும் இருக்கும். ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும்.


இந்த வக்ஃப் சொத்திற்கு அல்லாஹ்வை தவிர வேறு யாரும் உரிமையாளராக இருக்க முடியாது. வக்ஃப் செய்தவரும் அவரது வாரிசுகளும் அதற்கு காப்பாளர்களாக இருக்கமுடியுமே ஒழிய அதன் உரிமையாளராக இருக்கமுடியாது


2) பொதுவான வக்ஃப் 


ஒருவர் ஒரு பொருளை அல்லாஹ்வின் பாதைக்காக முழுமையாக வழங்குகிறார். அவர்களின் உரிமை தன்னிடம்தான் இருக்கும் என்று அவர் நிபந்தனை விதிக்கவில்லை. அப்படிப்பட்ட வக்ஃப் பொதுவான வக்ஃப் ஆகும்.


அந்த பொருள் அவரது பெயரிலோ அல்லது அவரது சந்ததிகளின் பெயரிலோ இருக்காது. அது வக்ஃப் நிறுவனத்தின் உரிமையின் கீழ் வரும். அல்லது இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் வரும்.


பயன்பாட்டு அடிப்படையிலான வகைகள்


சொத்து பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து வக்ஃபை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.



1) நிர்ணயிக்கப்பட்ட வக்ஃப்


ஒரு சொத்தை வக்ஃப் செய்பவர் அதை இந்த நோக்கத்திற்காக நான் வக்ஃப் செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தால் அது நிர்ணயிக்கப்பட்ட வக்ஃப் ஆகும்.


உதாரணம்இ ஒருவர் தனது நிலத்தை பள்ளிவாசலுக்காக வக்ஃப் செய்தால் அது பள்ளிவாசலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.


2) நிர்ணயிக்கப்படாத வக்ஃப்


எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல் அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடி வக்ஃப் செய்கிறேன் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டால் அது நிர்ணயிக்கப்படாது வக்ஃப் ஆகும். அந்த வக்ஃப் சொத்தை ஏழைகள்இ கல்வி நிலையங்கள்இ பள்ளிவாசல்கள்…. போன்ற நன்மையான காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும்.



பாகம் 3 - வக்ஃபில் இடம்பெறும் அம்சங்கள்


வக்ஃபில் நான்கு அம்சங்கள் இடம்பெறும்


வக்ஃப் செய்யும் நபர் (வாகிஃப்)இ

வக்ஃப் செய்யப்படும் சொத்துஇ

என்ன நோக்கத்திற்காக வக்ஃப் செய்யப்படுகிறது 

வக்ஃப் செய்யும் வாசகம்.


வக்ஃப் செய்யப்படுவதற்கு இந்த நான்கு அம்சங்களும் அவசியமாகும்..


வக்ஃப் செய்யும் நபர் :



வக்ஃபை ஏற்படுத்துபவர் வாகிஃப் ஆவார். 


 வாகிஃபாக இருப்பவர் பருவ வயதை அடைந்தவராகவும்இ புத்தி சுவாதீனமுடையவராகவும்இ சுதந்திரமானவராகவும்இ வக்ஃப் வழங்கவிருக்கும் சொத்திற்கு உரிமையாளராகவும் இருக்க வேண்டும். அவர் சுய விருப்பத்துடன் அந்த சொத்தை வழங்குபவராக இருக்க வேண்டும்.


ஆகவே சிறுவர்கள்இ பைத்தியக்காரர்களால் வக்ஃப் செய்ய முடியாது.



தனக்கு சொந்தமில்லாத சொத்தை வக்ஃப் செய்ய முடியாது.


வற்புறுத்துதலின் பெயரில் செய்யப்படும் வக்ஃபும் செல்லாததாகிவிடும்.


வக்ஃப் செய்யப்படும் சொத்து

இல்லாதோருக்கும் ஏழை எளியோருக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பயன்தர வேண்டும் என்பதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம்தான் வக்ஃபாகும். அது தர்மத்தின் ஒரு பகுதியாகும். 

ஆகவே வக்ஃப் செய்யப்படும் சொத்துக்கள் பயன்தரத்தக்கதாகவும் இஸ்லாம் அனுமதித்ததாகவும் இருக்க வேண்டும். 

அதுபோல் அது நீண்ட காலத்திற்கு பயன்தரத்தக்கதாகவும் அழிந்து போகாததாகவும் இருக்க வேண்டும்.


ஆகவே இஸ்லாம் தடை செய்தவற்றை வக்ஃபாக வழங்கக்கூடாது.


உதாரணம் போர்க்களத்திற்கு பயன்பட வேண்டும் என்பதற்காக குதிரைகளை வக்ஃப் செய்யலாம். 


அதைப்போல் இசைக்கருவிகளை வக்ஃபாக வழங்கமுடியாது. ஏனெனில் இசைக்கருவிகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.



என்ன நோக்கத்திற்காக வக்ஃப் செய்யப்படுகிறது


வக்ஃப் செய்பவர் பயன்பாட்டு நோக்கம் குறித்து தெரிவித்திருந்தால் அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


உதாரணம்இ ஒருவர் ஒரு சொத்தை கல்வி நிலையம் அமைப்பதற்காக வழங்குகிறார் வேண்டும்.


வக்ஃப் செய்பவர் பயன்பாட்டு நோக்கத்தை குறிப்பிடவில்லையென்றால் அவற்றை நன்மையான காரியங்களில் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.


உதாரணம்இ ஒருவர் ஒரு சொத்தை வழங்குகிறார்கள். அதை இந்த காரியத்திற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை. ஆகவே அந்த சொத்தை சிறந்த நற்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். பள்ளிவாசல் தேவைப்பட்டால் பள்ளிவாசல் எழுப்பலாம். அநாதை இல்லம்இ கல்வி நிலையம்இ வருமானம் தரத்தக்க வாடகைக் கடைகள் போன்றவற்றில் எது சிறந்ததோ அவற்றிற்கு அந்த சொத்தை பயன்படுத்த வேண்டும்.


அதைப்போல் ஒரு பாவமான நோக்கத்திற்காகவோஇ இஸ்லாம் தடை செய்த காரியங்களுக்கோ வக்ஃப் செய்யக்கூடாது. அவ்வாறு ஒரு வாக்கிஃப் தனது சொத்தை பாவமான காரியத்தில் ஈடுபடுத்துமாறு வக்ஃப் செய்திருந்தால் அதை நிறைவேற்றக் கூடாது.


உதாரணம் ஒருவர் தனது சொந்த தியேட்டர் கட்டுவதற்காக வழங்கினால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. அவற்றை வேறு நல்ல நோக்கங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும்.


வக்ஃப் செய்யும் வாசகம்.


ஒருவர் ஒரு சொத்தை வக்ஃப் செய்தால் 'நான் இந்த பொருளை வக்ஃப் செய்திருக்கிறேன்' என்பது போன்ற வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும். 


தற்காலத்திய அரசு நிர்வாகத்திற்கு ஏற்ற வகையில் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அதுதான் நல்லது. 


 





















பாகம் 4 - இஸ்லாமும் வக்ஃபும்


இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வக்ஃப் எனும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அற்புதமான திட்டமாகும்.


ஏனெனில் வக்ஃப் என்பது இறைவனிடம் நெருங்கிச் செல்வதற்கும்இ ஏழைகளிடம் கருணை காட்டுவதற்கும்இ நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வகையான தொண்டு ஆகும்.


தொண்டு செய்தல் இஸ்லாத்தின் முக்கிய அம்சமாகும்


இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளைக் கற்றுத் தருவதைப் போல பிற மனிதர்களுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தியுள்ளது.


இது எந்தளவிற்கு இஸ்லாத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்றால் ஐந்து கடமைகளில் தொழுகை நோன்பு என்ற வணக்க வழிபாடுகள் இருப்பதுபோல் பிற மனிதர்களுக்கு சேவை செய்யும் ஜகாத் என்ற கடமையும் இடம்பெற்றுள்ளது.


அதுமட்டுமில்லாமல் நோன்பு என்ற வணக்கவழிபாட்டில் கூட இறுதியாக ஸகாத்துல் ஃபித்ர் என்ற கடமையை இஸ்லாம் ஏற்படுத்தியது. நோன்பு பெருநாளுக்கு முன்பாக ஏழை எளியோருக்கு உணவு வழக்க வேண்டும் என்று ஸகாத்துல் ஃபித்ரை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்.


மேலும் ஹஜ் பெருநாளில் குர்பானி பிராணியை அறுக்குமாறு இஸ்லாம் கூறியுள்ளது. அந்த குர்பானிக் கறியை ஏழைகளுக்கும் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. (அல்குர்ஆன் 22:36)


இவ்வாறு ஐம்பெரும் கடமைகளிலும் பிறருக்கு உதவி செய்யும் நற்காரியத்தை இறைவன் ஏற்படுத்தினான்.


அதைப்போல் ஒரு மனிதன் தவறு செய்தால் அதற்கு பரிகாரமாக இஸ்லாம் கூறியிருக்கும் விஷயங்கள் பெரும்பாலும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதாகத்தான் அமைந்திருக்கும்.


உதாரணமாக ஒருவர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டால் அதற்குப் பகரமாக ஒரு நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது.


சத்தியத்தை முறித்தால் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 5 : 89)


இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடினால் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 5:95)


மனைவியை தாயுடன் ஒப்பிட்டுக் கூறியதற்குப் பகரமாக அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 58 : 4)


இவ்வாறு இறைவன் பாவமிட்சிக்குரிய ஒரு காரியமாக உணவளித்தலை ஆக்கியுள்ளான். இவையனைத்தும் தொண்டு செய்தல் இஸ்லாத்தின் முக்கிய அம்சம் என்பதை நிரூபிக்கிறது.


தர்மம் தலை காக்கும்


இஸ்லாமிய மார்க்கம் பிறருக்கு சேவை செய்வதை சில வணக்க வழிபாடுகள் மூலம் கடமையாக்கியிருப்பது போல் பொதுவான நேரங்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1445)


(தர்மம் கொடுக்கும்) உயர்ந்த கை (அதை வாங்கும்) தாழ்ந்த கையை விடச் சிறந்தது. ஸஹீஹ் புகாரி : 1427 1428. 


உங்களுக்கு ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) "என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்துஇ நல்லோர்களில் ஆகிவிடுவேனே!" என்று அப்போது அவன் கூறுவான்.


அல் குர்ஆன் - 63 : 10


இவ்வாறு தர்மம் கொடுப்பதை வலியுறுத்தி ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபிமாெழிகளும் வந்துள்ளன.


தொடர்ந்து நன்மையை பெற்றுத்தரும் நல்லமல்


இந்த தர்மத்தின் இன்னொரு வடிவம்தான் நிரந்தர நன்மைகளைப் பெற்றுத்தரும் காரியங்கள். இவைகளைத்தான் நாம் வக்ஃப்கள் என்கிறோம்.


இதை வலியுறுத்தி நபிகளார் கூறியுள்ளார்கள்.


ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. 

அவை 

1. நிரந்தர தர்மம். 

2 .பயன் தரும் கல்வி

 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). 

நூல் : முஸ்லிம் (3084)


மேற்கூறிய மூன்று நற்காரியங்களும் காலம்காலமாக பயன்தரத்தக்கவை. 


இம்மூன்றில் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிரந்தர தர்மம் என்பது வக்ஃபாகும். இதை இஸ்லாம் அதிக நன்மைக்குரிய காரியமாக கூறியுள்ளது.


அன்னவகையில் பள்ளிவாசல் கட்டுதல்இ நூலகம் அமைத்தல்இ கல்வி நிலையங்கள் ஏற்படுத்துதல்இ அணைகள் கட்டுதல்இ குளம் வெட்டுதல் போன்றவை நிரந்தர தர்மத்திற்குரிய காரியங்களாகும்.


வக்ஃபையில் அந்த ஏழைகளுக்கு மட்டும் பயன்தருபவையல்ல. மாறாக அது பணக்காரர்களுக்கு பயன்தருபவையாகவும் இருக்கலாம். உதாரணம் பள்ளிவாசல். பள்ளிவாசலில் ஏழைகளும் பணக்காரர்களும் வந்து செல்வர்.


வக்ஃபின் பல வகைகள்


வக்ஃப் செய்யப்பட்டவைகள் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.

மரியம் என்ற மனித வக்ஃப்


இம்ரான் (அலை) அவர்களின் மனைவி தனது வயிற்றில் ஒரு கருவை சமந்தார்கள். வயிற்றிலுள்ள குழந்தையை அவர்கள் வக்ஃப் செய்தார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّاّۡ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ⭘ 


“என் இறைவனே!என் வயிற்றில் இருப்பதை உனக்கு அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துள்ளேன்.என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! செவியேற்பவன்இ நன்கறிந்தவன்” என இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!


அல் குர்ஆன் - 3 : 35


மனிதர்களை வக்ஃப் செய்ததற்கு இந்த குர்ஆன் வசனம் ஆதாரமாகும். இருந்தபோதிலும் பள்ளிவாசலுக்காக மனிதர்களை வக்ஃப் செய்வது முந்தைய சமுதாயத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. நமது சமூகத்தில் இப்படிப்பட்ட வழிமுறையை நபிகளார் காட்டித்தரவில்லை.


வக்ஃப் செய்யப்பட்ட பள்ளிவாசல்


அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பனூ நஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் 'உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். 


அதற்கு அவர்கள் இந்த விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்றனர். 


(அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 428. 


இது குபா என்ற பள்ளிவாசலில் கட்டப்பட்ட மஸ்ஜிதைக் குறிக்கும். இந்த மஸ்ஜிதை பனூ நஜ்ஜார் குலத்தினர் கட்டி அதை வக்ஃபாக ஆக்கினர்.


அதன்பிறகு மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதைப்பற்றிய செய்தி வருமாறு.


நபிகளார் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்குள் வந்ததும் முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள) இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா(ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்து ஸஹ்ல்இ சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர) வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'இன்ஷா அல்லாஹ் இதுதான் (நம்முடைய) தங்குமிடம்' என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும்இ 'இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.


ஸஹீஹ் புகாரி : 3906. 


நபிகளார் (ஸல்) தனது சொந்த பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்கி அதில் பள்ளிவாசலைக் கட்டி அதை வக்தாக ஆக்கியிருக்கிறார்கள்.


பள்ளிக்கூடம்


நபிகளார் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் திண்ணைப் பகுதிகள் ஒரு பல்கலைக்கழகமாக செயல்பட்டது. அதை அரபியில் சுஃப்ஃபா என்று சொல்வார்கள். அந்த பகுதியில் ஏழைஎளியோர்களும் தேவையற்றவர்களும் வசித்து வந்தனர். அது ஆதரவற்றோர் இல்லமாக செயல்பட்டது. அதேசமயம் அது ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தது. அங்குள்ளவர்கள் மார்க்கத்தைக் கற்று மார்க்கக் கல்வியில் சிறந்தவர்களாக மாறினர். இவர்கள் அஸ்ஹாபுஸ் சுஃப்பா திண்ணைத் தோழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.


இது நபிகளாரால் வக்ஃப் செய்யப்பட்ட பள்ளிக்கூடமாகவும் ஆதரவற்றோர் இல்லமாகவும் செயல்பட்டது.


வக்ஃப் செய்யப்பட்ட கிணறு


அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார்கள் :


(கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து)இ 'அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். 'ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறஇ நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் 'பொருளாதார நெருக்கடியில் இருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூறினேன். தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர். 


ஸஹீஹ் புகாரி : 2778. 


இமாம் பகவி அவர்களுடைய அறிவிப்பில் இவ்வாறு வந்துள்ளது: கிஃபார் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவரிடம் சொந்தமாக ஒரு நீரூற்று இருந்தது. அதன் பெயர் ரூமா என்பதாகும். அவர் அதிலிருந்து ஒரு முத் அளவு தானியத்துக்குப் பகரமாக ஒரு தோல் பாத்திரம் தண்ணீர் என்ற அடிப்படையில் தண்ணீரை விற்பனை செய்துவந்தார்.


அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "சுவனத்தில் ஓர் ஊற்றுக்குப் பகரமாக இதை எனக்கு நீர் விற்கின்றீரா?"


அவர் கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் குடும்பத்திற்கும் இதைத் தவிர வேறு எதுவும் (சொந்தமாக) இல்லை." இந்தச் செய்தி உஸ்மான் (ரலி) அவர்கள் அறிந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் அந்த ஊற்றை அவரிடமிருந்து 35000 திர்ஹம் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! அவருக்குத் தருவதாக தாங்கள் அளித்த வாக்கை எனக்குத் தருவீர்களா?" நபி (ஸல்) அவர்கள்இ "ஆம்" என்று கூறினார்கள்.


உஸ்மான் (ரலி): " அவ்வாறெனில் அந்த ஊற்றை நான் முஸ்லிம்களுக்கு தானம் செய்துவிட்டேன்."


இந்த சம்பவங்கள் கிணறை வக்ஃபாக செய்யலாம் என்பதற்கு சான்றாகும். ஏனெனில் கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் காலகாலத்திற்கு பயன்படும். அது நிரந்தர தர்மமாக இருக்கும். ஆகவே அதை வக்ஃப் செய்வது நிறைய நன்மைகளைப் பெற்றுத்தரும்.


தற்போது கிணற்றின் தேவை குறைந்து வருகிறது. இந்நிலையில் நாம் குளத்தை வெட்டலாம். குளத்தை தூர்வாறலாம். நற்காரியங்களில் ஈடுபடலாம்.

நிலத்தை வக்ஃப் செய்தல்


இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் :


(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) கைபரில் ('ஃதம்ஃக்' என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அந்த விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவேஇ அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்களா?' என்று கேட்டார்கள். 


நபி(ஸல்) அவர்கள்இ 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதன் விலையை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். 


அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கப்பட்டது. 


அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும்இ உறவினர்களுக்கும்இ அடிமைகளை விடுதலை செய்வதற்கும்இ அல்லாஹ்வின் பாதையிலும்இ வழிப் போக்கர்களுக்கும் விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். 


அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர் அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல்இ படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.) 

ஸஹீஹ் புகாரி : 2737. 


உமர்(ரலி) வக்ஃபு செய்தபோதுஇ 'இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை' என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆகஇ (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. 


ஸஹீஹ் புகாரி : 2778. 


இஸ்லாத்தில் செய்யப்பட்ட முதல் வக்ஃப்பாக (அறக்கொடை) இதையே பெரும்பாலோர் குறிப்பிடுகின்றனர்.


உமர் ரலி விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில்தான் வக்ஃபின் நிபந்தனைகளை நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம்.


இதேபோல் அலீ (ரலி) தமது வாழ்வில் பல அறக் கொடைகளை (வக்ஃப்) வழங்கினார். யன்புவு என்ற இடத்தில் இருந்த தமது நிலையை அறக்கொடையாக வழங்கும்போது இப்படி எழுதினார்: "இந்தச் சொத்து தொடர்பாக அலீ இப்னு அபூதாலிபின் அறிவுறுத்தலும் தீர்மானமும் இதுவாகும் : யன்புவுஇ வாதில் குராஇ அல் உதைனாஇ ரஹ் முதலிய நிலங்களை அல்லாஹ்வுக்காக அருகிலும் தூரத்திலும் உள்ள உறவினர்களுக்கு அறக்கொடையாக வழங்குகிறேன். நான் உயிருடன் இருக்கும்போதும் இறந்த பிறகும் யாரும் அவருக்கு வாரிசுரிமை கோரவோ தனியுரிமை கோரவோ இயலாது.'


(துராஸுல் குலஃபாவுர் ராஷிதீன்) அலீ ரலி அலீ முஹம்மது அஸ்ஸல்லாபி 234


தமது ஈகையைப் பற்றிக் குறிப்பிடும்போது அலீ (ரலி)இ ''பசியின் காரணத்தால் நான் வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டபோது எனது அறக்கொடைகளின் மதிப்பு நான்காயிரம் திர்ஹம்களை எட்டியிருந்தது" என்றார்.


(உஸ்துல் காபா)


குதிரையை வக்ஃப் செய்தல்


அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக குதிரைகளையும் வக்ஃப் செய்யலாம். இதற்கான ஆதாரம் 


'அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையப் கட்டி வைக்கிறவரிடம் போடுகிற தீனிஇ புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம்இ சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 2853. 


தற்காலத்தில் குதிரையில் போர் செய்யப்படுவது இல்லை. இப்போது விமானங்கள் மற்றும் கப்பல்களில் போர் செய்யப்படுகிறது. இதற்காக போர்விமானம் போர்க்கப்பல்கள் போன்றவற்றை வக்ஃப் செய்யலாம்.


போர்க்கருவிகளை வக்ஃப் செய்தல்


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல்இ காலித் இப்னு வலீத்இ அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனேஇ நபி(ஸல்) அவர்கள்இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஸகாத் தர மறுத்துள்ளார். காலிதை(ரலி)ப் பொருத்தவரைஇ நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரேஇ அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி)இ அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் சகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 1468. 


காலித் பின் வலித் ரலி அல்லாஹ்வின் போர்வாள் ஆவார்கள். அவர்கள் தங்களது போர் ஆயுதங்களை வக்தாக வழங்கியுள்ளனர். 


தற்காலத்தில் போர் ஆயுதங்களாக எண்ணற்ற கருவிகள் வந்துள்ளன. அவற்றை நாம் அல்லாஹ்வுடைய பாதையில் வழங்கலாம்.


இவையெல்லாம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நமக்குகம கிடைத்த ஆதாரங்கள். இவற்றைமட்டும்தான் வக்ஃப் செய்ய வேண்டும் என்பதல்ல. மாறாக வக்ஃபின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் நாம் பிற பொருட்களையும் வக்ஃப் செய்யலாம்.



மரண வேளையில் செய்யப்படும் நோயாளியின் வக்ஃப்


மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவர் தனது சொந்த சொத்தை வக்ஃப் செய்தால்இ அதனை மரண வசியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மரண வஸிய்யத்தைப் பொறுத்தவரையில் அவர் இறந்ததற்குப் பிறகே அதை நிறைவேற்ற வேண்டும். அதுபற்றிய ஆதாரம் இதோ…


ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். 


இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவேஇ என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ 'வேண்டாம்' என்றார்கள். பின்னர் நான் 'பாதியைக் கொடுக்கட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள்இ 'வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில்இ உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 1295. 


மேற்கூறிய நபிமொழியின் மூலம் வஸிய்யத்தாக செய்யப்படும்  வக்ஃப் சொத்துக்கள் அவர் இறந்ததற்குப் பிறகு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவரது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகிறது.


Wednesday, August 6, 2025

வயிறு நிரம்ப உண்ணுதல் பற்றி மார்க்கம் கூறுவது என்ன?

 வயிறு நிரம்ப உண்ணாதீர்கள்



புத்தகம் டவுன்லோடு செய்ய

வயிறு நிரம்ப உண்ணாதீர்கள்

இஸ்லாமிய மார்க்கம் ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அது மனிதனுக்கு தேவையானதை கட்டாயமாக்கும். மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதை தடை செய்யும்.


அந்தவகையில் மனித உடலுக்கு உணவு உண்பது அவசியத் தேவையாகும். ஆகவே உண்பதை இஸ்லாம் கட்டாயமாக்குகிறது. 


அதேபோல் வயிறுமுட்ட உண்பது மனித உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிப்பதால் அதை மோசமான ஒரு பண்பாக இஸ்லாம் அறிவிக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு உண்பது சிறந்தது


حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ الْكِنَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ جَابِرٍ الطَّائِيُّ قَالَ : سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ مَعْدِي كَرِبَ الْكِنْدِيَّ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " مَا مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ أُكُلَاتٍ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ لِنَفَسِهِ ".


அல்-மிக்தாம் இப்னு மஅதி கரீப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: "ஆதாமின் மகன் தனது வயிற்றை விட மோசமான எந்தப் பாத்திரத்தையும் நிரப்புவதில்லை. ஆதாமின் மகன் தனது முதுகை நேராக்க ஒரு சில வாய்கள் சாப்பிட்டால் போதும்இ ஆனால் அவன் (வயிற்றை நிரப்ப) வேண்டியிருந்தால்இ மூன்றில் ஒரு பங்கு அவரது உணவுக்கும்இ மூன்றில் ஒரு பங்கு அவரது பானத்திற்கும்இ மூன்றில் ஒரு பங்கு அவரது சுவாசத்திற்கும்." 


முஸ்னது அஹமது 17186


இந்த நபிமொழி வயிறு நிரம்ப சாப்பிடுவதை தடை செய்கிறது. அவ்வாறு வயிறு நிரம்ப சாப்பிடுவது மோசமானது என்பதை சுட்டிக்காட்டுகிறது.


மேலும் வயிறு நிரம்ப சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதிகளை நபியவர்கள் நமக்கு விளக்கியிருக்கிறார்கள்.



மதியின்மையை ஏற்படுத்தும்


அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:


"அறிந்துகொள்ளுங்கள்! எனக்குக் குர்ஆன் எனும் வேதமும் அத்துடன் அதுபோன்ற ஒன்றும் (ஹதீஸும்) கொடுக்கப்பட்டுள்ளது. 


அறிந்துகொள்ளுங்கள்! வயிறு நிரம்ப உண்டு வாழும் ஒருவர் (செல்வச் செருக்காலும்இ மதியின்மையாலும்) தனது சொகுசு இருக்கையில் அமர்ந்தவாறு. "நீங்கள் இந்தக் குர்ஆனை மட்டுமே அவசியம் பின்பற்றுங்கள். அதில் ஹலால் - அனுமதிக்கப்பட்டதாக நீங்கள் காண்பதை (மட்டும் அனுமதிக்கப்பட்டதாக கருதுங்கள்! அதில் ஹராம் - தடை செய்யப்பட்டதாக நீங்கள் காண்பதை (மட்டும்) தடை செய்யப் பட்டதாகக் கருதுங்கள்" என்று கூறும் காலம் நெருங்கிவிட்டது.


உண்மை நிலை யாதெனில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தடை ஆணை பிறப்பிப்பது அல்லாஹ் தடையாணை பிறப்பிப்பது போன்றதாகும்.


அறிந்துகொள்ளுங்கள்! நாட்டுக் கழுதையின் இறைச்சியும்இ கோரைப் பற்கள் உள்ள விலங்குகளும்இ (இஸ்லாமிய ஆட்சிக்குச் கீழ்) ஒப்பந்தம் செய்துகொண்ட (பிற மதத்த)வர்கள் தொலைத்தும் கண்டெடுக்கப்பட்ட பொருளும் உங்களுக்கு ஹலால் - ஆகுமானவை அல்ல. ஆனால் (கண்டெடுக்கப்பட்ட) பொருள் தேவையில்லை எனப் பொருளுக்குச் சொந்தக்காரர் கைவிட்டிருந்தால் அதனை பயன்படுத்தலாம்.


ஒரு சமூகத்தாரிடம் (விருந்தாளியாக) சென்றவருக்கு விருந்தோம்பல் செய்வது அச்சமூகத்தின் மீது கடமையாகும். அவர்கள் அவருக்கு விருந்தோம்பவில்லையானால்இ அச்சமூகத்திடமிருந்த தன்னுடைய விருந்து உபசரிப்பிற்குத் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ள அம்மனிதருக்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள் இதை மிக்தாம் பின் மஅதீ கரிப் அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் (3988)இ இக்கருத்தமைந்த ஹதீஸ் தாரிமீ (1ஃ153 ஹ.எ.586)இ இப்னு மாஜா (12) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. 


மிஷ்காத்துல் மஸாபீஹ் 163


அல்லாஹ்வின் வேதத்தை உயர்த்தி பிடித்து நபிவழியைப் புறக்கணிக்கக்கூடியவன் வயிறுமுட்ட உண்பவனாக இருப்பான் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.


ஹலாலை ஹராமாகவும்இ ஹராமை ஹலாலாகவும் மாற்றுபவன் வயிறுமுட்ட உண்பவனாக இருப்பான் என்பதையும் நபிகளார் தெரியப்படுத்தியுள்ளார்கள்.


ஆக இதிலிருந்து வயிறுமுட்ட உண்பது மார்க்கத்திற்கு முரணாக செல்ல வைக்கும் என்பதை நபிகளார் உணர்த்தியிருக்கிறார்கள்.


மோசமானவர்


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள்இ நான் யாரிடையே அனுப்பப்பட்டுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறிவிட்டுஇ -மூன்றாவது முறையும் அவ்வாறு கூறினார்களாஇ இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்- 


"பிறகு அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள். சாட்சியமளிக்கும்படி கோரப்படுவதற்கு முன்பே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள்" என்று கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4959. 


பிற்காலத்தில் மோசமான மனிதர்கள் தோன்றுவார்கள். அவர்கள் சாட்சியம் விஷயத்தில் தானாக முன்வருவார்கள் என்று நபிகளார் கூறி அவ்வாறு இருப்பவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள் என்று நபிகளார் தெரிவிக்கிறார்கள். இதன்மூலம் உண்டு கொழுப்பது நற்குணங்களை பாதிக்கும் என்பது தெரிகிறது.


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 


இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் 'குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்' அல்லது 'ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்' (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர்இ 'நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். மற்றொருவர்இ 'நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை' என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர்இ 'நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்' என்று கூறினார். 


அப்போது அல்லாஹ்இ '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான். 


ஸஹீஹ் புகாரி : 4817. 


மேற்கூறிய நபிமொழியில் வயிறுகளில் காெழுப்பை அதிகம் சுமப்பவர்கள் தீமையிலிருந்து  திருந்தமாட்டார்கள் என்பதை தெரிவிக்கிறது.


நரகவாசி


ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் 


நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக்கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்இ) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். 


(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர். 


ஸஹீஹ் புகாரி : 4918. 


நரகவாசிகளின் பண்புகளைக் குறித்து நபிகளார் கூறுகையில் அவர்கள் உண்டு கொழுத்திருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே இதன்மூலமும் உண்டு கொழுப்பதை நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.



அல்லாஹ்விடம் மதிப்பிருக்காது


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :


மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். 


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 4729. 


உடல் பருத்த மனிதன் அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பையும் பெற்றிருக்கமாட்டான் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். ஏனெனில் மேலே கூறியது போன்று அவர்கள் மோசமானவர்களாகவும் தவறிலிருந்து திருந்தாதவர்களாகவும் இருப்பார்கள். ஆகவேதான் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் மதிப்பிருக்காது 


காஃபிரின் பண்பு


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :


ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள்இ 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5397. 


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைமறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார்.


பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார்.


மறுநாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடஇ அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோதுஇ அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை.


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்" என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4189. 


இந்த நபிமொழிகள் இறைநம்பிக்கையாளர்கள் குறைவாக சாப்பிடுவார்கள் என்பதையும் இறைமறுப்பாளர்கள்தான் வயிறுமுட்ட சாப்பிடுவார்கள் என்பதையும் அறிவிக்கிறது.


இதற்கு மாற்றமான கருத்து கூறுபவர்கள் பின்வரும் சம்பவத்தை முன்வைக்கிறார்கள்.


அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள் :


(மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி)இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ நஹீக் 'நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே இதில் விதிவிலக்கு உண்டு)' என்று கூறினார். 


ஸஹீஹ் புகாரி : 5395. 


நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்கள் :


இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவேஇ (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச்சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். 


இப்னு உமர்(ரலி) 'நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5393. 


மேலே நாம் கூறிய இரண்டு செய்திகளும் நபிகளார் கூறிய பொன்மாெழிகள். இங்கே இடம்பெற்றிருக்கும் இரண்டு சம்பவங்களும் ஒரு சாதாரண முஸ்லிம் கூறிய வார்த்தைகள். அவரது ஈமானை அல்லாஹ்வே நன்கறிவான். ஒரு முஸ்லிமின் வார்த்தையை வைத்து நபிகளாரின் வார்த்தையை விடமுடியாது.


அதுமட்டுமில்லாமல் அந்த முஸ்லிம் கூறியதை விதிவிலக்காக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதை விதியாக எடுத்துக் கொள்ளமுடியாது.


பொதுவிதியானது ஒரு முஃமின் ஏழு குடலில் சாப்பிடமாட்டான் என்பதுதான் 


அதிகமாக உண்ண வைத்து ஷைத்தான் வழிகெடுப்பான்


வயிறு நிரம்ப உண்ணக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக ஆதம்நபியின் வரலாறு அமைந்துள்ளது 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்துஇ தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


-ஸஹீஹ் முஸ்லிம் : 5089. 


வயிறைப் பொறுத்தவரை முழுவதுமாக அதை நிரப்புவது வெறுக்கத்தக்கது. ஆனாலும் அவ்வாறு நிரப்புமாறு ஷைத்தான் துண்டிவிடுவான். அதிலிருந்து மீள்வது சற்று சிரமம் என்பதை மேற்கண்ட நபிமொழி தெரிவிக்கிறது.

அதிகமாக உண்டதால் தோல்வி


அதேபோல் அதிகமாக உண்பது பலவீனத்தை ஏற்படுத்தும். கோழைத்தனத்தை கொண்டுவரும்.


இதற்கு சான்றாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது.


மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீல் வழித்தோன்றல்களின் தலைவர்களை நீர் அறியவில்லையா? அவர்கள் தமது நபியிடம்இ “எங்களுக்கு ஒரு மன்னரை நியமிப்பீராக! நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று கூறியபோதுஇ “உங்கள்மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போரிடாமல் இருந்துவிடக் கூடும் அல்லவா?” என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள்இ “எங்கள் வீடுகளையும்இ எங்கள் பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கூறினர். அவர்கள்மீது போர் விதிக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் பின்வாங்கி விட்டனர். அல்லாஹ்இ அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.


அவர்களிடம்இ “அல்லாஹ் உங்களுக்கு தாலூத் என்பவரை மன்னராக அனுப்பியுள்ளான்” என்று அவர்களுடைய நபி கூறினார். அதற்கவர்கள்இ “நாங்களே அவரைவிட ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் தகுதியானவர்களாக இருக்கும் நிலையில்இ எங்கள்மீது அவருக்கு எப்படி அதிகாரம் இருக்க முடியும்? மேலும் அவருக்குச் செல்வ வளமும் அளிக்கப்படவில்லையே!” என்று கூறினர். உங்களைவிட அவரையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். அவருக்கு அறிவாற்றலையும் உடல் வலிமையையும் வாரி வழங்கியுள்ளான். அல்லாஹ்இ தான் நாடியோருக்குத் தன்னிடமிருந்து ஆட்சியை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.


“ஒரு பெட்டகம் உங்களிடம் வருவதே அவருடைய ஆட்சிக்கான சான்றாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து அமைதியும்இ மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனின் குடும்பத்தார் விட்டுச் சென்றவற்றில் மீதமிருப்பவையும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்றுள்ளது” என அவர்களிடம் அவர்களுடைய நபி கூறினார்.


தாலூத்இ படைகளுடன் புறப்பட்டபோதுஇ “ஓர் ஆற்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். யார் அதிலிருந்து பருகினாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. தனது கையால் ஒரு தடவை அள்ளியோரைத் தவிர அதை யார் அருந்தவில்லையோ அவரே என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார். அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினர். பின்னர் அவரும்இ அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோது “இன்று ஜாலூத்துடனும்இ அவனது படையுடனும் (மோதுவதற்கு) எங்களிடம் சக்தியில்லை” என்று (ஆற்றில் அதிகமாக நீரருந்தியோர்) கூறினர். அல்லாஹ்வைச் சந்திக்கவிருக்கிறோம் என்று யார் உறுதியாக நம்பினார்களோ அத்தகையவர்கள்இ “எத்தனையோ சின்னஞ்சிறு படைகள் அல்லாஹ்வின் நாட்டப்படி பெரும்படைகளை வெற்றி கொண்டுள்ளன. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினர்.


அவர்கள் ஜாலூத்தையும்இ அவனது படைகளையும் எதிர்கொண்டபோதுஇ “எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினர்.


அவர்கள்இ ஜாலூத்தின் படைகளை அல்லாஹ்வின் நாட்டப்படித் தோற்கடித்தனர். (தாலூத் படையிலிருந்த) தாவூத்இ ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் வழங்கிஇ தான் நாடியதை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா விட்டால் இவ்வுலகம் சீரழிந்து விடும். எனினும் அகிலத்தார்மீது அல்லாஹ் அருளுடையவன்.


அல்குர்ஆன் 2 : 246 - 251


வயிறு நிரம்ப நீர் அருந்தியவர் தங்களது பலத்தை இழந்தனர். கோழைகளாக மாறினர் என்பதை மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கிறது.


உமர் ரலியின் அறிவுரை


இவ்விஷயத்தில் நபிகளாரின் அறிவுறுத்தல்கள் தெளிவாக இருப்பதனால்தான் நபித்தோழர்களும் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.


ஒருமுறை உமர் (ரலி) அபூமூஸாவுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: யார் குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறாரோ அவரே மக்களில் சிறந்தவர். யார் குடிமக்களுக்குச் சிரமம் கொடுக்கிறாரோ அவரே மோசமானவர். சுகபோக வாழ்வு குறித்து உம்மை நான் எச்சரிக்கிறேன். நீர் அவ்வாறு வாழ முற்பட்டால் உமது பணியாளர்களும் அவ்வாறே வாழ நினைப்பார்கள். அவ்வாறெனில்இ நிலத்தில் பச்சைப் புல்லைக் கண்ட கால்நடைகளைப் போன்று உமது நிலையும் ஆகிவிடும். கொழுப்பதை மட்டுமே அவை விரும்பும். கொழுப்பு அதிகரித்தால் அவற்றுக்கு இறுதி நாள்கள் நெருங்கிவிடும். 


(அல்விலாயத் அலல் புல்தான்)


சித்த மருத்துவம் கூறுவது என்ன?


பொதுவாகஇ காலை உணவை அரசன்போலச் சாப்பிட வேண்டும்; மதிய வேளையில் சாமான்யனைப்போலச் சாப்பிட வேண்டும்;

இரவு நேரத்தில் பிச்சைக்காரனைப்போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

காலை வேளையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும். ஏனெனில்இ இரவு எட்டு மணிக்கோ அல்லது ஒன்பது மணிக்கோ நாம் இரவு உணவை முடித்துக்கொள்கிறோம். மறுபடி அடுத்த நாள் காலை எட்டு அல்லது எட்டரை மணிக்குத்தான் சாப்பிடுவோம்.

இடைப்பட்ட காலகட்டத்தில்இ நாம் ஒன்றுமே சாப்பிடுவதில்லை என்பதால் உடலில் சக்தி பெருமளவு குறைந்திருக்கும். அதோடுஇ காலையில் சுறுசுறுப்பாக உடல் ஏகப்பட்ட வேலைகளைக் கவனிக்கவேண்டி இருக்கிறது. அந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றால்இ அதற்கு அதிகப்படியான சக்தி தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில்இ நம் காலை உணவு அமைய வேண்டும்.

காலை உணவைவிடஇ மதிய உணவைக் குறைவாக உண்ண வேண்டும். இரவில் எந்த வேலையும் செய்யப்போவதில்லை. ஓய்வுதான் எடுக்கப்போகிறோம் என்பதால்இ மிகக் குறைந்த அளவு உணவே போதுமானது. அதாவதுஇ நாம் தூங்கினாலும் உடலுக்குள் நடைபெறும் சுவாசம்இ ரத்த ஓட்டம்இ தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரித்தல் போன்ற அடிப்படை வேலைகளுக்கான சக்தி கிடைக்கும் வகையில் சாப்பிட்டுக்கொள்ளலாம்.



அதிக உணவு நோய்க்கு இடமளிக்கும்

மீதூண் விரும்பேல் என்று ஔவையார் கூறியுள்ளார். 


இதற்கு அதிகமான உணவை விரும்பாதே என்று அர்த்தமாகும. 



மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும்  உணவைப் பற்றியே சொல்கிறார் 


மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

தற்றது போற்றி உணின்.


அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 


ஆக அனைத்து ஆதாரங்களும் வயிறு நிரம்ப உண்பதை எச்சரிக்கை செய்கிறது.










மாற்று வாதமும் பதிலும்


முதல் வாதம்


இப்ராஹீமிடம் நமது தூதர்கள் நற்செய்தியைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஸலாம் கூறினர். அவரும் ஸலாம் கூறினார். அவர் சற்றும் தாமதிக்காமல்இ பொறித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.


அல் குர்ஆன் -   11 : 69


இருவருக்காக ஒரு பொறித்த காளைக்கன்றையே இப்றாஹிம் நபி காெண்டு வந்துள்ளார்கள். ஆகவே இது வயிறு முட்ட உண்பதையே குறிக்கும்.


இரண்டாவது வாதம்


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்குஇ "பசிதான் (காரணம்)இ அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டுஇ "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும்இ "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம்இ "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்இ "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டுஇ (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர்இ "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டுஇ (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம்இ "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4143. 


மேற்கூறிய நபிமொழியில் நபி (ஸல்)இ அபூபக்கர் ரலி மற்றும் உமர் ரலி ஆகிய மூவரும் வயிறுமுட்ட உண்டார்கள் என்பது தெரிகிறது. ஆகவே நாம் வயிறுமுட்ட உண்ணலாம்.


இரண்டு வாதத்திற்குமான பதில்


மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் விருந்து தொடர்பானது. இந்த ஹதீஸ்களை வைத்து விருந்தில் வயிறுமுட்ட உண்ணலாம் என்றுதான் சட்டம் எடுக்க வேண்டும். ஏனெனில் மேலே நாம் கூறிய ஏராளமான ஆதாரங்கள் வயிறுமுட்ட உண்பதை எச்சரிக்கை செய்தது.


ஆகவே வயிறுமுட்ட உண்ணக்கூடாது என்பது பொதுவிதி.

விருந்தில் வயிறுமுட்ட உண்ணலாம் என்பது விதிவிலக்கு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.


சந்தோஷ தினங்களில் தஃப் அடிப்பதற்கு அனுமதி இருப்பது போல் விருந்து தருணங்களில் வயிறுமுட்ட உண்பதற்கு அனுமதி உண்டு என்பதையே மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் காட்டுகிறது.



மூன்றாவது வாதம்


“ஆதமே! இச்சொர்க்கத்தில் நீரும்இ உமது மனைவியும் வசியுங்கள். அங்கு நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். இம்மரத்தை நெருங்காதீர்கள். (மீறினால்) நீங்கள் அநியாயக்காரர்களில் ஆகி விடுவீர்கள்” என்று கூறினோம்.


அல்குர்ஆன் 2 : 35


விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள் என்று இறைவன் கூறியுள்ளான். இதில் ரகதன் என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். இது வயிறுமுட்ட உண்பதைக் குறிக்கும்.


பதில்


எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று ஆதம் நபியிடம் இறைவன் கூறியது சொர்க்கத்தில் வைத்துத்தான். 


சொர்க்கத்திற்கு ஒரு சட்டம். உலகத்திற்கு வேறு சட்டம். 


சொர்க்கத்தில் நாம் விரும்பியவாறு உண்ணலாம். அதில் அவ்வித தடையும் இருக்காது. சொர்க்கத்தில் கூறியதை உலக வாழ்க்கைக்கு பொறுத்தக்கூடாது.


நான்காவது வாதம்


“இந்த ஊருக்குள் நுழையுங்கள். அதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். (அதன்) நுழைவாயிலில் பணிந்தவர்களாகச் செல்லுங்கள். ‘ஹித்ததுன்’ (மன்னிப்பாயாக!) என்று கூறுங்கள். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு(க் கூலியை) அதிகப்படுத்துவோம்” என்று நாம் கூறியதை நினைத்துப் பாருங்கள்! 


அல் குர்ஆன் -   2 : 58


இதிலும் ரகதன் என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். இது வயிறுமுட்ட உண்பதையே குறிக்கும்.


பதில்


பனூ இஸ்ரவேலர்களுக்கு கூறியது தனிச்சட்டம். அவர்களுக்குரிய சட்டம் வேறு. நமக்குரிய சட்டம் வேறு. அவர்களுக்குரிய அனைத்து சட்டங்களும் நமக்குப் பொருந்தாது.


அதுமட்டுமல்லாமல் இது மேலே குறிப்பிடப்பட்ட ஊருக்கு இறைவன் வழங்கிய தனி அந்தஸ்தாகும். ஆகவேதான் அந்த ஊர்களில் நுழையும்போது ஹித்ததுன் என்று கூறுங்கள் என்றும் வயிறுமுட்ட உண்ணுங்கள் என்றும் இறைவன் கூறினான். இது அவ்வூருக்கான தனி அனுமதியாகும். 


இந்த வசனத்தை வைத்துக் கொண்டு வயிறு முட்ட சாப்பிடலாம் என்று கூறினால் அனைத்து ஊர்களுக்குள் நுழையும் போது ஹித்ததுன் என்று கூறிக்கொண்டு நுழைய வேண்டும் என்று கூற வேண்டும். ஆக இது தனிச்சட்டம் என்பது இதிலிருந்து விளங்குகிறது.


அதுமட்டுமல்லாமல்இ அந்த ஊர்களில் வைத்து வயிறுமுட்ட உண்ணுங்கள் என்றுதான் இறைவன் அந்த வசனத்தில் கூறியுள்ளான். அனைத்து ஊர்களிலும் வயிறுமுட்ட உண்ணுங்கள் என்று இறைவன் கூறவில்லை. 


ஆக இதிலிருந்து அது பனு இஸ்ரவேலர்களுக்கும் அந்த ஊருக்கும் வழங்கப்பட்ட தனிச்சட்டம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.


மேற்கூறிய அனைத்து ஆதாரங்களையும் கவனிக்கும் போதுஇ விருந்தைத் தவிர மற்ற நேரங்களில் வயிறு முட்ட சாப்பிடுவது கூடாது என்பதை விளங்கிக்கொள்ளலாம.


சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...