Wednesday, September 19, 2018

தக்வா - 3



இஸ்லாத்தின் அடிப்படை

தக்வா தான் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையாக இருககிறது.

ஒரு மனிதனுக்கு மூச்சுக்காற்று, சுவாசக்காற்று எவ்வளவு இன்றியமையாததோ அதைப் போன்று தக்வாவும் ஒரு முஸ்லிமுக்கு மிகவும் இன்றியமையாதது.  ஆக தக்வா என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் உயிரோடும், உணர்வோடும் இரண்டறக் கலந்திருக்க வேண்டிய ஓர் உயரிய அம்சமாகும்.

எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகரித்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.

அதனால் தான் இஸ்லாம் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் தக்வாவை எதிர்பார்க்கிறது.

உதாரணத்திற்கு சில,

ஹஜ் வணக்கம் :

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ

ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத்) 
திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் தக்வாவே (அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் ஹஜ்ஜில் தடுத்த விஷயத்திலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வதுதான்) மிகச் சிறந்தது. அறிவுடையோரே 
!என்னை தக்வா செய்யுங்கள் 

திருக்குர்ஆன்  2:197

இந்த வசனத்தில் ஹஜ்ஜைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூண். மிக முக்கியமான வணக்கவழிபாடு. இந்த ஹஜ் என்ற வணக்க வழிபாடு நம்மீது கடமையாகுவதற்கு இரண்டு நிபந்தனைகள். ஒன்று சென்றுவர பொருளாதார சக்தியை பெற்றிருக்க வேண்டும். மற்றொன்று பிரயாணத்திற்கான உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டையும் பெற்றவர்கள் ஹஜ் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

ஹஜ் என்ற வணக்க வழிபாடு பிரயாணத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் பிரயாணத்திற்கு தேவையானதை திரட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் திரட்டிக் காெள்வதில் மிக முக்கியமானதாக தக்வா தான் இருக்க வேண்டும். ஆடைகளையும் பொருளாதாரத்தையும் திரட்டிவிட்டு தக்வா வை திரட்டாமல் ஹஜ் செய்தால் அதனால் எந்த பலனும் இல்லாமல் போய்விடும். தக்வா இல்லாத ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாத ஹஜ்ஜாக மாறிவிடும். ஆக ஹஜ் என்ற இஸ்லாத்தின் தூணிற்கு தக்வா மிகவும் அவசியம்.

 குர்பானி பிராணியை அறுத்தல்

அதுமட்டுமில்லாமல் குர்பானி பிராணியை அறுப்பது பற்றியும் அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.

لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள தக்வாவே அவனைச் 
.சென்றடையும் 

திருக்குர்ஆன்  22:37

அல்லாஹ் இந்த வசனத்தில் தக்வாவின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்கிறான். நாம் எத்தனை ஆடு மாடு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தாலும், மிகப்பெரிய பிராணிகளை குர்பானி கொடுத்தாலும் அதன் மூலமாக நன்மைகளை பெற வேண்டுமென்றால் தக்வா மிகவும் அவசியம். தக்வா இல்லாத குர்பானிகள் அல்லாஹ்விற்கு தேவையில்லை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

 பிரார்த்தனையில்

பிரார்த்தனை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்க வழிபாடு. 

ஏனென்றால் பிரார்த்தனைகள் மனிதன் அல்லாஹ்விற்கு அடிமை என்பதை தெளிவாக காட்டும். அப்படிப்பட்ட பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் அச்சம் வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.

وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ

பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை 
.செய்வோருக்கு அருகில் உள்ளது

திருக்குர்ஆன்  7:56.

இந்த வசனத்தில் அச்சத்துடன்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லிக்காட்டுகிறான். அச்சம் என்பது தக்வாவின் ஒரு பகுதி என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆக பிரார்த்தனை என்ற முக்கிய வணக்கத்திற்கும் தக்வா அவசியம்.

தொழக்கூடிய பள்ளி

நாம் தொழக்கூடிய பள்ளிவாசலும் தக்வாவின் (அல்லாஹ்விற்கு பயந்து பாவத்திலிருந்து விடுபடுதல்) அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களாக இருக்க வேண்டும். பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கு இணைவைக்கக்கூடிய ஹராமான காரியங்கள் நடந்தால் அந்த பள்ளிவாசல்களில் தொழக்கூடாது.

لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் தக்வாவின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை 
.விரும்புகிறான் 

 திருக்குர்ஆன்  9:108

இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் பேசுகிறான். தக்வாவின் அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தொழ வேண்டும் என்று கட்டளையிடுகிறான். ஆகவே நாமும்  இணைவைக்காத பள்ளிவாசல்களில்தான் தாெழ வேண்டும். 

இந்த வசனம் இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்பதை குறிக்கவில்லை. மாறாக இணைவைப்பு நடக்கும் பள்ளயிலே தொழக்கூடாது என்பதைத்தான் குறிக்கிறது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழ வைப்பார்கள். அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களை தொழக்கூடாது என்று இறைவன் கட்டளையிடுவதிலிருந்த இந்த வசனம் இமாமிற்கு பின்னால் நின்று தொழுவதை குறிக்கவில்லை. மாறாக பள்ளிவாசலில் நின்று தொழுவதைத்தான் குறிக்கிறது என்பது விளங்குகிறது

Tuesday, September 18, 2018

ஆஷுரா கடந்து வந்த பாதை

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 4



31) குர்ஆனில் எத்தனை வகையான வசனங்கள் உள்ளன?

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான்.

♦ அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய்.

♦இரு கருத்தைத் தருகின்ற சில வசனங்களும் உள்ளன.

திருக்குர்ஆன்  3:7

32) இரு கருத்தை தரக்கூடிய வசனங்களை அறிவுடையோர் படித்தால் என்ன செய்வார்கள்?

அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

திருக்குர்ஆன்  3:7

33) இரு கருத்தை தரக்கூடிய வசனங்களை பின்பற்றுவோர் யார்?

உள்ளங்களில் கோளாறு இருப்போர்

♦குழப்பத்தை நாடியும்,
♦அதற்கேற்ற விளக்கத்தைத் தேடியும்

அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்.

திருக்குர்ஆன்  3:7

34) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் முஹம்மது நபியிடம் விதண்டாவாதம் செய்தால் முஹம்மது நபி என்ன சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்?

அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் "என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன்  3:20

35) இம்ரானின் மனைவி குழந்தை பெற்றெடுத்த போது என்ன பிரார்த்தித்தார்?

விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார்

திருக்குர்ஆன்  3:36

36) இம்ரானின் மகளுக்கு உணவு கொடுத்தது யார்?

அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

திருக்குர்ஆன்  3:37

37) ஸக்கரியா நபிக்கு யஹ்யா நபி பிறக்கப் போகும் நற்செய்தியை சொன்ன அல்லாஹ் அதற்காக ஸக்கரியா நபியை என்ன செய்ய கட்டளையிட்டான்?

"இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று நாட்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும்.

♦ உமது இறைவனை அதிகம் நினைப்பீராக!

♦ காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!'' என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன்  3:41

38) ஈஸா நபிக்கு எந்த வேதத்தை அல்லாஹ் கற்றுக கொடுததான்?

அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான்.  

திருக்குர்ஆன்  3:48

39) அல்லாஹ் மண்ணால் படைத்து ஆகு என்று சொன்னவுடன் ஆகியவர் யார்?

அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார். 

திருக்குர்ஆன்  3:59

40) இப்றாகிம் நபி விஷயத்தில் உரிமைப் படைத்தவர்கள் யார்?

இப்ராஹீம் விஷயத்தில் உரிமை படைத்த மக்கள்

♦ அவரைப் பின்பற்றியோரும்,
இந்த நபியும்,
♦ நம்பிக்கை கொண்டோருமே.

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன். 

திருக்குர்ஆன்  3:68

Monday, September 17, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 3


21) கொலையை விடக் கொடியது எது?

கலகம், கொலையை விடக் கடுமையானது. 

திருக்குர்ஆன்  2:191

22) ஹஜ்ஜிற்கு செல்பவர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது?

ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது

♦ உடலுறவு கொள்வதோ,
♦ குற்றம் செய்வதோ,
♦ விதண்டாவாதம் புரிவதோ கூடாது. 

 திருக்குர்ஆன்  2:197

23) இறைத்தூதர்கள் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டார்கள்?

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன்  2:214

24) நாம் விரும்புவதும் வெறுப்பதும் நமக்கு எப்படிப்பட்டதாக இருக்கலாம்?

உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும்.

ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும்.
அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். 

திருக்குர்ஆன்  2:216

25)  எதற்காகவெல்லாம் நம்முடைய சத்தியம் மூலம் அல்லாஹ்வை தடையாக்கக்கூடாது ?

♦ நன்மை செய்வதற்கும்,
♦ (இறைவனை) அஞ்சுவதற்கும்,
♦ மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்

உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன்  2:224

26) பிள்ளைகளுக்கு எத்தனை ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்?

தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். 

திருக்குர்ஆன்  2:233

26) அல்லாஹ் தாலூதை ஆட்சியாளராக்க என்ன காரணம்?

♦ அவருக்கு கல்வியையும்,
♦ உடலையும் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான்.

திருக்குர்ஆன்  2:247

27) மறுமையில் அல்லாஹ்வை சந்திப்போம் என்று நம்பிய தாலூத் படையினர் என்ன கூறினார்கள்?

அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர், "எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்' என்றனர்.

திருக்குர்ஆன்  2:249

28) ஷைத்தான் எதை பயமுறுத்துகிறான் எதை தூண்டுகிறான்?

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான்.
வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான்.

திருக்குர்ஆன்  2:268

29)  தீமைகளுக்கு பரிகாரமாக எது அமையும்?

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. 

உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன்  2:271

30) வட்டியை உண்போர் எப்படி எழுப்பப்படுவார்கள்?

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.

திருக்குர்ஆன்  2:275

Sunday, September 16, 2018

தக்வா - 3

தக்வாவின் அவசியம் (1)

https://youtu.be/bEFhjuy2wX8

தக்வாவின் அவசியம் (2)

https://youtu.be/iypdUMJ1Bdk

தக்வா - 2




தக்வா எனும் ஆடை


அதனால்தான் அல்லாஹ் தக்வாவை ஆடையுடன் ஒப்பிட்டு சொல்லிக்காட்டுகிறான்.
ஆடைகள் எப்படி நம்மை அசுத்தங்களிளலிருந்து பாதுகாக்குமோ அதைப் போல் தக்வா என்பது பாவம் என்ற அசுத்தத்திலிருந்து நம் உள்ளத்தை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்

يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

ஆதமுடைய மக்களே உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். தக்வா எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது

திருக்குர்ஆன்  7:26

அல்லாஹ் ஆடைகளில் சிறந்ததாக தக்வாவை சொல்லிக்காட்டுகிறான். ஆடை நம்முடை மறைவிடங்களை மறைக்கவும் நம்மை தூசிகளிலிலருந்து பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதே போல் தக்வா நம்முடைய கெட்ட எண்ணங்களை மறைத்து பாவத்திலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வுடைய அச்சம் மிக இன்றியமையாதது.
நமக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதே நாம் பாவங்களிலிருந்து விடுபடுவதைப் பொறுத்துத்தான்.

♥பாவத்தை சொல்லும் போது


அதனால் தான் அல்லாஹ் பாவத்தை சொல்லும்போதெல்லாம் கூடவே தக்வாவையும் சேர்த்து சொல்வான். ஏனென்றால் பாவத்தை விடுவதுதான் தக்வா. உதாரணத்திற்கு சில வசனங்கள் . 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ

நம்பிக்கை கொண்டோரே! தக்வாவை மேற்கொள்ளுங்கள் (அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்) ! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் .  திருக்குர்ஆன்  2:278

வட்டி என்பது இறைவன் தடுத்த பாவமான செயல். ஆகவே வட்டியை சொல்வதற்கு முன்னால் தக்வாவை சொல்கிறான். அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு அவன் தடுத்த விஷயங்களில் வட்டியும் ஒன்று என்பதை சொல்லிக்காட்டுகிறான்.

அதே போல் இன்னொரு வசனத்தையும் பாருங்கள்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் ! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்
திருக்குர்ஆன்  49:12

இதிலேயும் புறம், கோள் போன்ற ஹராமான விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு தக்வாவை சொல்லிக்காட்டுகிறான்.
அதேபோல் நபியின் மனைவிமார்களுக்கு தடுக்கப்பட்டதை சொல்லும் போதும் கூட தக்வாவை சேர்த்து சொல்கிறான்.

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (தக்வாவை) இறைவனுக்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து தவிர்ந்து நரகத்திலருந்து உங்களை காத்துக் கொள்ள விரும்பினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
திருக்குர்ஆன்  33:32

குலைந்து பேசுவது தடுக்கப்பட்ட காரியம் என்று சொல்லும் போது அதனுடன் சேர்த்து தக்வாவையும் சொல்கிறான். இதிலிருந்தும் தக்வாவின் பிரதான அர்த்தமே அல்லாஹ்விற்கு அஞ்சி பாவத்திலிருந்து விடுபடுவதுதான் என்று விளங்கிக்கொள்ளலாம்.

2) அஞசுவதற்கு தகுதியானவன்

அடுத்ததாக நாம் தக்வாவிற்கு உரித்தானவன் யார்? என்பதை அறிந்து காெள்ள வேண்டும். 

அதாவது நாம் அஞ்சுவதற்கு தகுதியானவன். இவையெல்லாம் பாவம் என்று பாவத்தின் பட்டியலை சொல்வதற்கு தகுதியானவன். பாவம் செய்பவர்களை நரகத்தில் போட்டு பொசுக்குவதறகு அதிகாரம் படைத்தவன் யார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை அல்லாஹ் தன் திருமறையில் சாெல்லிக்காட்டுகிறான்.

وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ

அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை
:அவனே தக்வாவிற்கு உரித்தானவன் 
.மன்னித்தல் உடையவன்

திருக்குர்ஆன்  74:56

இந்த வசனத்திலருந்து தக்வா செய்வதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை விளங்க முடிகிறது.

அதாவது
நாம் யாரை அஞ்ச வேண்டும்  - அல்லாஹ்வை.
நாம் யார் தடுத்த விஷயங்களிலிருந்து விலக வேண்டும் - அல்லாஹ் தடுத்த விஷயத்திலிருந்து.
யார் தயாரித்த நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் - அல்லாஹ் தயாரித்த நரகத்திலிருந்து.

ஆகவே அஞ்சுவதற்கு தகுதியானுவனும், ஹலால் ஹராமை உருவாக்கியவனும், நரகத்தை படைத்தவனுமாக அல்லாஹ் இருக்கின்ற காரணத்தினால் அவன் மட்டும் தான் தக்வாவிற்கு உரித்தானவனாக இருக்கின்றான்.

♥ முஃமின் யார்

இந்த அளவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தக்வா இருக்கின்ற காரணத்தினால்தான் முஃமின்கள் என்றாலே தக்வாவை பெற்றவர்கள்தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே 
.சார்ந்திருப்பார்கள்

திருக்குர்ஆன்  8:2.

அல்லாஹ்வை பற்றி நியாபகப்படுத்தப்பட்டவுடன் யாருடைய உள்ளங்கள் நடுங்குகிறதோ அவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவாக சொல்லிக்காடடுகிறான். ஆக தக்வா இருந்தால்தான் நாம் உண்மையான முஃமின்கள்.

அதேபோல் இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.

"மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?'' என்று சீடர்கள் கூறிய போது, "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார்  

திருக்குர்ஆன்  5:112

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 2




11) நாம் ஏன் நடுநிலை சமுதாயமாகக
ப்பட்டோம்?

இவ்வாறே,

♦ நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும்,

♦ இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும்

உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம்.

திருக்குர்ஆன்  2:143

12) வேதம் கொடுக்கப்பட்டோர் (யூத கிறிஸ்தவர்கள்) முஹம்மது நபியை எப்படி அறிந்து கொள்வார்கள்?

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

திருக்குர்ஆன்  2:146

13) நாம் எங்கிருந்தாலும் நம்முடைய முகத்தை எந்த திசையில் திருப்ப வேண்டும்?

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!

எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!  

திருக்குர்ஆன்  2:150

14) அல்லாஹ் யாருக்கு நன்றி பாராட்டுபவன்?

நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்.

திருக்குர்ஆன்  2:158

15) பொறுமையாளர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் என்ன செய்வார்கள்?

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன்  2:156

16) நரகத்தை சகித்துக் கொள்பவர்கள் யார்?

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்.
நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!

திருக்குர்ஆன்  2:175

17) நாம் அல்லாஹ்வை ஏன் பெருமைப்படுத்த வேண்டும்? ஏன் நன்றி செலுத்த வேண்டும்?

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது) 

திருக்குர்ஆன்  2:185

18) பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் யார்?

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி 
பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன்  2:186

19) அல்லாஹ் திருக்குர்ஆனின் ஆயத்துகளை ஏன் விளக்கி தெளிவுபடுத்துகிறான்?

(தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன்  2:187

படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன்  2:221

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன்  3:103

நீங்கள் விளங்குவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன்  2:242

உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன்  13:2

20) ஹஜ்ஜுக்கு காலம் காட்டிகள் எவை?

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக!  

திருக்குர்ஆன்  2:189

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...