ஏக இறைவனின் திருப்பெயரால்…
இமாம் இப்னுல் ஜவ்ஸியின் சைதுல் காதிர் (சிந்தனைக் குவியல்)
புத்தகம் டவுன்லோடு செய்ய
திருமணம் பற்றிய இப்னுல் ஜவ்ஸியின் அறிவுரைகள்
தமிழில்
செய்யது காமித்
இஸ்தப்ரக் பதிப்பகம்
6381653548
அத்தியாயம் 28 - திருமணத்தின் ஞானமும் பண்பாடும்
சந்ததிகளைப் பெருக்குதல்
திருமணம் (நிகாஹ்) என்பதின் அர்த்தங்கள்இ அதன் இயல்புகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றி சிந்தித்தபோதுஇ அதன் இருப்புக்கான முக்கிய காரணம் ‘சந்ததிகளைப் பெறுவதே’ என்பதைக் கண்டறிந்தேன்.
ஏனெனில் இயற்கையாகவே உயிரினங்கள் தொடர்ந்து சிதைவடையும் செயல்முறைக்கு உட்படுகின்றன. அதில் இருந்து ஒரு பகுதி ஊட்டச்சத்துக்களாக மாறுகிறது. மீதமுள்ளவை முடிவுக்கு வருகின்றன.
இந்த உலக வாழ்க்கை (கியாத் நாள் வரையிலும்) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கும் வகையில் (இறைவனால்) அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இவ்வுலகில் வாழும் மனித உடல்கள் மரணமடையக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் இறைவன் சந்ததிகளைக் கொண்டு மூலத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக உயிரினங்களை அமைந்திருக்கிறான். ஜஅதாவது சந்ததியைப் பெருக்குதல் மூலம் மனித வாழ்க்கையின் தொடர்ச்சி கியாமத் நாள்வரையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுஸ.
காமத்தைத் தணித்தல்
உடலுறவு கொள்ளுதல் மற்றும் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருத்தல்இ மறைவான உடல் உறுப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவை மனித இயல்பின்படி வெட்கப்படத்தக்கவையாகக் கருதப்படும் செயல்களைச் சேர்ந்தவை. மனிதனின் கண்ணியமான இயல்பு இவற்றைத் தவிர்க்க விரும்புவதால்இ இப்படிப்பட்ட செயல்களை மனிதன் ஏற்றுக்கொள்ளவும்இ அனுசரிக்கவும் அல்லாஹ் மனிதருக்குள் காமத்தை (விருப்பத்தை) ஏற்படுத்தியுள்ளான். இதன் மூலம் தான் திருமணத்தின் இலக்கை அவர்கள் அடைய முடிகிறது.
விந்து வெளியேற்றமும் அதன் முக்கியத்துவமும்
திருமணத்தின் முக்கிய நோக்கத்தைத் தவிரஇ உடலுறவு கொள்வதால் ஏற்படும் மற்றொரு பயன்களையும் நான் கவனித்தேன். அது ஜஆண் உறுப்பிலிருந்துஸ விந்தணுவை வெளியேற்றுவதாகும். ஏனெனில் அது நீண்ட நேரம் உடலுக்குள் தேங்கி நின்றால் தீங்கு விளைவிக்கும்.
விந்து எனும் இந்திரியத்துளியானது செரிமானத்தின் நான்காவது கட்டத்திலிருந்து அனுப்பப்படுகிறது. எனவே அதன் சாராம்சம் மிகவும் சத்தானதாகவும் தரத்தில் உயர்ந்ததாகவும் உள்ளது. பின்னர் அது சேகரிக்கப்பட்டு அதிகமாக குவிகிறது.
ஏனெனில் உடலானது இரத்தம்இ விந்து மற்றும் உமிழ்நீரை சேமிக்கிறது. இது உடலின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இது உடலின் வலிமையையும் உயிர்வாழ்வையும் பராமரிக்கிறது.
விந்து சாதாரண அளவை விட அதிகமாக குவியும் போது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் அதிகமாக உடலில் தேங்கினால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போலவே விந்துவும் அதிக அளவில் தங்குவதால் உடலை தொந்தரவு செய்யும்.
விந்து அதிகப்படியானால் ஏற்படும் எதிர்மறை விளைவானது சிறுநீர் அதிகரிப்பதினால் ஏற்படும் உறுதியான விளைவை விட மிகவும் தொந்தரவாக இருக்கும்.
விந்து தேங்குதல் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் அது நச்சுத்தன்மையுடனும் இருக்கலாம்.
ஒருவர் ஆரோக்கியமான உடல் உறுப்புகளை பெற்றிருந்தால்இ அவரது உடலில் சிறுநீர் சேரும் போதெல்லாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது போலவேஇ விந்து வெளியேற வேண்டும் என்ற உந்துதலையும் உடல் இயல்பாகவே தூண்டும்.
இருப்பினும்இ பாலியல் உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ரீதியலான ஆசைகள் என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் ஜஅதாவது சிலருக்கு விந்து செறிவு குறைவாக இருக்கலாம். எனவே அதை வெளியிடுவதற்கான உந்துதல் குறைவாக இருக்கும்). இதில் மக்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள்
இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும்போது ஆரோக்கியமான பாலியல் உறுப்புகள் உள்ளவர்களிடம் நான் பேசுகிறேன் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் முன்பு விளக்கியது போல்இ உடலில் விந்து சேரும்போதுஇ அதன் தேக்கம் நோய்களை (அம்ராத்) ஏற்படுத்திஇ அசுத்தமான கருத்துக்களை (அஃப்கார்) மனதில் கொண்டு வரும். அதே போல் தீவிரமான காம வேட்கையைத் தூண்டிவிட்டு மறைமுகமான கிசுகிசுப்புகளையும் (வஸ்வாசா) உருவாக்கும்.
அதிக இச்சைக் கொண்டவர்கள்
மறுபுறம்இ ஆரோக்கியமான பாலியல் உறுப்புகளும் பாலியல் ரீதியலான அதிக ஆசைகளும் (னுநளசைந) கொண்டிருக்கும் ஒருவர் விந்துவை வெளியேற்றிவிட்ட பிறகும் காம இச்சையோடு இருப்பதைக் காணலாம். அப்போது அவர் உணவு உண்டும் ஒருபோதும் வயிறு நிரப்பப்படாத ஒரு நபரைப் போல ஆகிவிடுகிறார்.
இந்த நிலைக்கான காரணங்களை நான் ஆராய்ந்து பார்த்தேன். அத்தகைய சூழ்நிலையில்இ யாருடன் அவர் உடலுறவு கொள்கிறார்களோ அவர்களிடமே பிரச்சனை உள்ளது என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஜஅதாவது அவரது அழகின்மைஇ தோற்றத்தில் அருவறுப்புஇ உடல் குறைபாடு அல்லது விருப்பமின்றி இருப்பது..ஸஇ இதற்குக் காரணம் இது விந்தணுவின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிடுகிறது. முழு விந்துவும் வெளியேறுவதில்லை.
நான்கூறும் இவ்விஷயத்தை நீங்கள் சரிபார்க்க விரும்பினால்இ நீங்கள் நேசிக்கும் ஒருவரிடத்தில் இருக்கும்போது வெளியிடும் விந்தணுவின் அளவையும்இ நேசிக்காத ஒருவரிடத்தில் வெளியிடும் விந்தணுவின் அளவையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
உதாரணமாகஇ உண்மையான உடலுறவின் மூலம் வெளியேற்றப்படும் விந்துவின் அளவையும் உடலுறவு கொள்ளாமல் வெளியேறும் விந்துவின் அளவையும் வித்தியாசப்படுத்திப் பாருங்கள். அதைப்போல் கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கும் கன்னி கழிந்த பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். (அப்போது நீங்கள் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்)
சரியான துணையை தேர்வு செய்வதின் முக்கியத்துவம்
ஆகவே சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது திரட்டப்பட்ட அனைத்து விந்துக்களையும் வெளியிடுவதை உறுதி செய்யும். அதன்மூலம் முழுமையான இன்பம் கிடைக்கும். (இதன்மூலம் விந்து வெளியேற்றிய பிறகு காம இச்சைகள் தணியும்)
(முழுமையான விந்து வெளியேறாமல் இருக்கும்) இந்தப் பிரச்சினை ஒரு நபரின் சந்ததியினரின் தரத்தையும் பாதிக்கலாம். (சுய இன்பம் மூலம் தவறான முறையில் விந்துவை வெளியேற்றாமல்) திருமணத்திற்காக தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களிடமிருந்து பிறக்கும் குழந்தை மற்றவர்களின் குழந்தைகளை விட வலிமையானதாக இருக்கும். குறிப்பாக அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களை விட கட்டுப்படுத்திக் கொண்டவர்களின் குழந்தைகள் வலிமையானவைகளாக இருக்கும்.
உறவினர்களை திருமணம் செய்வது விரும்பத்தக்கதல்ல
இந்தக் காரணத்திற்காகஇ உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் உறவினரை திருமணம் செய்வது ஒருவர் தன்னுடைய ஒரு பகுதிக்குள் கலப்பது போன்ற உணர்வைத் தருவதால் அது காம விருப்பத்தைத் துண்டுவதில்லை. அது கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. ஏனெனில் அது அந்த நபருக்கு அவர் தனது ஒரு பகுதியுடன் தொடர்பு கொள்ளும் உணர்வைத் தருகிறது. எனவேஇ இரத்த சம்பந்தம் இல்லாத பெண்களை திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
இந்தக் உறவுக் கலையின் மூலம்இ ஒருவர் தனது அதிகப்படியான விந்துவின் தீங்கை ரத்த சொந்தமல்லாத இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் தவிர்க்கலாம்.
புதிய துணை கண்ணுக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும் கூடஇ அது சாதாரணமாக கிடைக்காத பலன்களைத் தரக்கூடும்.
இதற்கு உதாரணம்இ வயிறு முட்ட சாப்பிட்டவராகும். அவர் ரொட்டி மற்றும் இறைச்சியை வயிறு நிரம்ப சாப்பிட்டுள்ளார். இனிமேல் ஒரு ரொட்டித் துண்டோ அல்லது இறைச்சியோ சாப்பிடுவதற்கு அவரது வயிற்றில் இடமில்லை. அந்நிலையில் அவருக்கு ஒரு பாலாடைக்கட்டி பரிமாறப்பட்டாலும்இ அவர் அதிலிருந்து சாப்பிடுவார். புதிய பொருட்கள் வழங்கப்பட்டாலும் அவர் அவற்றிலிருந்தும் சாப்பிடுவார்.
(அதாவது ஒருவர் வயிறு நிரம்ப பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதற்குமேல் ஒரு கவள பிரியாணியைக் கூட அவரால் உண்ணமுடியவில்லை. இந்நிலையில் அவரிடத்தில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டால் அவர் அவற்றைப் பருகுவார். அதுபோலத்தான் அறிமுகமற்றத் துணையை திருமணம் செய்வது.)
இதற்குக் காரணம்இ புதியதை விரும்புவது’' என்ற கருத்து கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.
அதாவது மனிதன் தான் பழகியவற்றால் ஈர்க்கப்படுவதில்லை. மாறாக அவனது உள்ளம் அனுபவிக்காததையே தேடுகிறது. அதிலிருந்து ஒரு புதிய மகிழ்ச்சி கிடைக்கும் என்று கருதுகிறது.
மேலும்இ :மனித மனம்’ புதிய பொருளிலிருந்து தான் தேடும் இன்பத்தைப் பெறவில்லை என்றால்இ அத்தகைய தூய இன்பம் வேறு எங்கோ உள்ளது என எண்ணி வேறொரு பொருளில் அதைத் தேடும். அதுதான் புதிதாகத் தேடப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனிதன் கற்பனை செய்யும் ஒன்றாகும்.
மறுமைக்கான சான்று
இந்தப் புரிதலின் அடிப்படையில்இ ‘மறுமை எனும் உயிர்த்தெழுதல்’ இருப்பதற்கான மறைக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. ஏனென்றால் மனிதர்களை மிக உயர்ந்த இன்பத்தை அடைய வேண்டும் என்ற முயற்சியுடனும் ஆசைகளுடனும் படைத்துவிட்டுஇ அத்தகைய இன்பம் இந்த வாழ்க்கையில் இல்லையென்றால்இ அது பயனற்றதாகவும் வீணானதாகவும் இருக்கும். எனவே இந்த அர்த்தத்தைக் கவனியுங்கள்!
இந்த உலக வாழ்க்கையில் தான் அனுபவிக்கும் விஷயங்களில் குறைகளையும் குறைபாடுகளையும் ‘மனித உள்ளம்’ கண்டுபிடிக்கும் வரைஇ அது ஜசிறந்த சரியானஸ புதியதைத் தேடிக்கொண்டே இருக்கும்.
(அதாவது இந்த உலகத்திலுள்ள இன்பங்களில் சில குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய மனம் ஆவல் கொள்ளும். அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகத்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை அமைத்துள்ளான். இவ்வ்று மறுமையை நோக்கிய உந்துதல் திருமணத்தில் அமைந்துள்ளது)
குறைகளை கண்டுகொள்ளாமல் இருத்தல்
இதன் காரணமாகவே முன்பே அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர் :
'அதீத அன்பு என்பது நீங்கள் நேசிப்பவரின் குறைகளையும் குறைபாடுகளையும் காண முடியாத அளவுக்கு குருடராக இருப்பதாகும். மேலும் தனது சொந்த குறைபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவருக்கு மற்றவர்களிடம் குறைபாடுகளைக் கண்டுபிடிக்க நேரம் இருக்காது'
அளவோடு உடலுறவு கொள்ளல்
இந்தக் காரணத்தினால்இ மனைவி தன் கணவனை அவன் மறக்கும் அளவுக்குத் தன்னிடமிருந்து விலக்கி வைக்கக் கூடாது. அல்லது அவன் அவளிடம் சலிப்படையச் செய்யும் அளவுக்கு அவனைத் தன்னிடம் நெருங்கி இழுக்கக் கூடாது.
இது கணவனுக்கும் பொருந்தும். கணவன் அவளுடன் அதிகமாக உடலுறவில் ஈடுபட்டு சோர்வடைந்து விடக்கூடாது. அதைப்போல் அவளுடைய குறைபாடுகளின் விவரங்களை அறியாதபடி இருக்க வேண்டும்.
உடலுறவில் கவனிக்க வேண்டியவை
மேலும்இ மனைவி தன் கணவன் தன் பிறப்புறுப்புகளைப் பார்க்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் (எப்போதாவது தவிர).
அவன் தனக்கு அருகில் இருக்கும் போது நறுமணமாயிருக்க வேண்டும். தன்னிடமிருந்து நல்ல வாசனை வருவதை உறுதி செய்ய வேண்டும்.
அறிவுள்ள பெண்கள் ஜதங்கள் கணவன்மார்களைக் கவரவும் ஈர்க்கவும் மற்றும் அவரது கவனத்தை தன் மீது தக்க வைத்திருக்கவும்ஸ செய்யும் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும்.
பெண்கள் இயற்கையாகவே இதுபோன்ற முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் அதைப் பற்றி எந்த ஆலோசனையோ அல்லது கல்வியோ பெறத் தேவையில்லை.
இந்த விவரங்களுக்கு கவனம் செலுத்தாத அறியாமையுள்ள பெண்களைப் பொறுத்தவரைஇ அவர்களின் கணவர்கள் விரைவில்இ மற்ற பெண்களைத் தேடத் தொடங்கிஇ அவர்களிடமிருந்து விலகிச் செல்வார்கள்.
மனைவியை தேர்வு செய்வதில் கவனம்
ஒரு நபர் புத்திசாலித்தனமான மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற விரும்பினால்இ அதே நேரத்தில் தன்னையும் மகிழ்விக்க விரும்பினால்இ அவர் தனக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்த அனுமதிக்கும் பெண்ணை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெண் பார்த்தல்
அவர் ஒரு மனைவியைத் தேடினால்இ அவர் அவளைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு இடையே ஒரு ஈர்ப்பு இருப்பதாக உணர்ந்தால்இ அவர் திருமணத்தைத் தொடரலாம்.
அதுமட்டுமல்லஇ அவள் தன் மீது ஏற்படுத்தும் விளைவை அவன் கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனெனில் ‘உச்ச அன்பின் அடையாளம்’ என்னவென்றால்இ அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்து தன் கண்களைப் பிரிக்க முடியாமல் இருப்பதும்இ அவள் தனது கண்களில் இருந்து மறைந்துவிட்டால்இ அவளை மீண்டும் காணும் வரை மனம் கலங்கியும் வருத்தமுற்றும் இருப்பதுமே ஆகும். அதுவே அன்பின் உச்ச நிலை. இதற்குக் கீழே பல நிலைகள் உள்ளன; ஒவ்வொரு நிலையும் வித்தியாசமான விளைவுகளையும் தாக்கங்களையும் உண்டாக்கும்.
ஒருவர் ஒரு பெண் அடிமையை வாங்கவிரும்பினால் அவளை (சுதந்திரமான பெண்ணை) சாதாரணமாகப் பார்ப்பதைவிட அதிகமாகப் பார்ப்பது அவசியம்!
பெண்ணிடம் பேசுதல்
மேலும்இ ஒருவர் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணுடன் பேச முடிந்தால் அல்லது அவள் எப்படிப் பேசுகிறாள் என்பது பற்றிய யோசனையைப் பெறும் வகையில் அவளைப் பேச ஊக்குவிக்க முடிந்தால்இ அவர் அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் அவள் ஜமுகத்தைப்ஸ பார்க்க வேண்டும். ஏனெனில் பெண்களின் அழகு அவர்களின் கண்களிலும் வாயிலும் (பேச்சில்) இருக்கிறது.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள்இ ஒரு பெண்ணிடம் திருமணம் செய்ய முன்மொழியும் ஆண்இ அவளை அவள் முகத்தை விட அதிகமாகப் பார்ப்பது அனுமதிக்கப்படுகிறது என்று கூறினார்கள்.
சில காலம் காத்திருத்தல்
இருப்பினும்இ ஒருவர் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்குமுன்இ அல்லது பெண் அடிமையை வாங்குவதற்குமுன்இ தனது இதயம் அவளுக்காக ஏங்குகிறதா என்பதைச் சோதிப்பதற்காக சில காலம் காத்திருக்க முடிந்தால் அது சிறந்ததாகும். ஏனெனில்இ ஒவ்வொரு அறிவாளியும் அறிந்தது போலஇ நப்ஸ் (மனம்) ஒன்றை விரும்பி அதை அடைய ஏக்கம் கொள்வதற்குக் காரணம்இ அதை இன்னும் அனுபவிக்காததாலோ அல்லது அதன் மீதுள்ள உண்மையான அன்பினாலோ தான். அது அன்பின் காரணமாக இருந்தால்இ அவளை நேசிப்பதாலேயே தனது ஏக்கம் ஏற்பட்டது என்பதை உறுதியாக உணர்ந்த பின் அவர் திருமணம் செய்வதற்கு முன்னேறலாம்.
'காதல் இல்லாத திருமணம் நியாயத்தீர்ப்பு நாள் வரை வருத்தமும் துயரமும் நிறைந்தது என்று தோராவில் எழுதப்பட்டுள்ளது' என்று அதா அல்-கராசானி கூறினார்.
குணத்தை ஆராய்தல்
திருமணத்தின் இரண்டாவது நிலைஇ திருமணம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட நபரின் குணத்தை (அக்லாக்) ஆராய்வதாகும். ஏனெனில் நற்குணம் என்பது ஒருவரின் மறைந்த அம்சமாகும்.
அவள் நல்ல குணத்தைக் கொண்டிருந்தால் அது அவளுடைய அழகை அதிகரிக்கும்.
மேலும் ‘நல்ல முறையில் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது’ திருமணத்தின் ஒரு நோக்கமாக இருப்பதால்இ குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறவரின் நல்ல குணம் மிகவும் அவசியமாகும்.
திருமணத்தின் மூலம் இதயமும் மனமும் சுத்தமாகும்
இதயத்தையும் மனதையும் (தவறான எண்ணங்களின் மூலமாக ஏற்படும்) கவனச்சிதறல்களிலிருந்து விடுவிப்பதற்காக ஒருவரின் (பாலியல்) விருப்பங்களை ஜசட்டப்பூர்வமாகஸ நிறைவேற்றுவது ஒரு முக்கிய தூணாகும். ஏனெனில் இது ஒருவரின் இதயத்தை மற்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு அர்ப்பணிக்கும். ஒருவர் அடுத்தடுத்த பக்க வேலைகளை முடித்தவுடன்இ அவர் தனது அசல் முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள்இ "ஒரு நீதிபதி கோபமாக இருக்கும்போது இரண்டு நபர்களிடையே ஒருபோதும் தீர்ப்பு வழங்கக்கூடாது" (புகாரி 7158) என்றும்இ "இஷா தொழுகையின் போது இரவு உணவு பரிமாறப்படும்போதுஇ முதலில் உங்கள் இரவு உணவை உண்ணுங்கள்" (புகாரி 673) என்றும் கூறினார்கள்.
கணவன் கடைபிடிக்க வேண்டியவை
ஆகவேஇ ஒருவன் நல்ல குணத்தையும் அழகான தோற்றத்தையும் கொண்ட ஒரு பெண்ணைப் பெற்றால் (அதாவது நன்னடத்தை உடையஇ இன்பமான தோற்றமுள்ள பெண்)இ அவளின் பிற குறைகளையும் குறைபாடுகளையும் அவன் கவனிக்காமல் விட வேண்டும்.
மனைவியின் செயல்பாடுகள்
அதைப்போல் அவள் அவனை மகிழ்விப்பதற்காக முழு முயற்சியும் செய்ய வேண்டும். அதேசமயம்இ அவனுக்கு மறந்து விடும் அளவுக்கு மிக அதிகமாக விலகிவிடாமலும் அவன் சலிப்படையும் அளவுக்கு மிக அதிகமாகவும் இல்லாமல் அவனைக் கவர்வதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
மேலும்இ அவள் தனது கணவன் விரும்பும் விதத்தில் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்; இதனால் இருவரின் பாலியல் தேவைகளும் பூர்த்தியடையும். அதன் விளைவாக அவள் கர்ப்பம் தரித்துஇ ஒரு குழந்தையைப் பெறுவாள்.
நான் முன்பு குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் அத்தகைய உறவுகள் நீடிக்கும். மேலும் ஒவ்வொரு துணையும் வேறு வழிகளைத் தேட வேண்டிய அவசியமின்றி போதுமானதாக இருக்கும்.
பலதாரமணம்
இருப்பினும்இ ஒரு ஆண் வேறொரு பெண்ணை ஜசட்டப்பூர்வ முறையில்ஸ திருமணம் செய்து கொள்ளும் திறனைப் பெற்றிருந்தால்இ மேலும் அது அவரது இதயத்தை அனைத்து கவனச்சிதறல்களிலிருந்தும் விடுவித்துஇ அவரது மற்ற கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த உதவும் என்பதை அறிந்தால்இ அத்தகைய சூழ்நிலையில் இரண்டாவது பெண்ணை திருமணம் செய்வது அவருக்கு நல்லது.
ஆனால்இ இரண்டு பெண்களுக்கிடையில் பொறாமை ஏற்பட்டுஇ அவன் இதயம் மேலும் சிதறிவிடும் அபாயம் இருந்தால் — நாம் மிகுந்த அக்கறையுடன் காக்க விரும்பும் அந்த இதயத்தின் கவனம் குலையும் சூழல் ஏற்பட்டால் — அல்லது புதிய பெண் அவனை மறுமையை நினைவுகூர்வதில் இருந்து திசைதிருப்புவதாக அமைந்தால்இ அல்லது அவனுடைய இறையச்சத்தை சமரசம் செய்ய வேண்டிய நிலை உண்டாக்குவதாகவும் அவன் அஞ்சினால்இ அவன் ஒரே மனைவியிலே திருப்தியடைய வேண்டும்.
நான் மேலும் அறிவுறுத்த விரும்பும் விஷயங்களில் ஒன்றுஇ ஒரு மனிதன் புரிந்துகொள்ள வேண்டியது — இனிமையான அழகைக் கொண்ட பெண்களில் கற்பு (‘அஃபஃப்) இயல்பாக இருப்பது அரிது என்பதே. ஆகையால்இ ஒருவர் இப்படிப்பட்ட பெண்ணை நேசித்திருந்தால்இ அவளைப் பாதுகாத்துஇ அவளின் கற்பை மிகுந்த கவனத்துடன் காக்க வேண்டும்.
ஆனால்இ அவளின் குணத்தில் தனக்கு விருப்பமில்லாததை அவர் கண்டால்இ அவளை மாற்றுவதில் தாமதிக்கக்கூடாது; இல்லையெனில் அவளிடம் பிணைந்துபோய்இ அவளுக்கான உணர்ச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த முடியாமல்இ சிதறலுக்குள் இழுத்துச் செல்லப்படுவார். மேலும்இ ஒரே பெண்ணில் திருப்தியடைய முடிந்தால்இ அதுவே சிறந்ததாகும். ஒருவர் அவளால் திருப்தியடையக்கூடியவரானால்இ அவர் மனநிறைவுடன் இருப்பார்; இல்லையெனில்இ அவர் அவளை விவாகரத்து செய்துஇ மற்றொருத்தியைத் தேடலாம்.
ஒருவர் தான் நேசிக்கும் ஒரு பெண்ணை மணக்கும்போதுஇ அது அவரது திரட்டப்பட்ட விந்து முழுவதையும் இறுதியில் வெளியிடச் செய்யும். இது குழந்தையின் பிரகாசத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதோடுஇ பாலியல் தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்கிறது.
(பலதாரமணம் புரிந்து) மனைவிகளின் பொறாமைக்கு பயப்படுபவர்கள்இ அடிமைப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு அவர் மீது குறைவான பொறாமை இருக்கும். மேலும் அவர்களை மகிழ்விப்பது மனைவிகளை மகிழ்விப்பதை விட எளிதானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு முன்பு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் திருமணம் செய்திருந்த பலர் இருந்தனர். அப்பெண்கள் பொறுமையாக (சபீரா) இருந்து சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாண்டனர். உதாரணமாகஇ நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நூறு பெண்கள் இருந்தனர். நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஆயிரம் பெண்கள் இருந்தனர். மேலும் நமது நபி (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் நபித்தோழர்களுக்கு பல பெண்கள் இருந்தனர். மேலும் விசுவாசிகளின் தலைவர்; அலீ இப்னு அபி தாலிப் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நான்கு மனைவிகளும் பதினேழு அடிமைகளும் இருந்தனர். மேலும் அவரது மகன் அல்-ஹசன் நானூறு பெண்களை மணந்தார்.
மேலே நான் குறிப்பிட்டவற்றை நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டால்இ அல்லாஹ்வின் அனுமதியால் நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள்.
No comments:
Post a Comment